Jump to content

ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்..

tamilarart.jpg

தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம்.

ஆற்றுப்படை இலக்கியம்

பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்புவோம்’ என்ற கோட்பாட்டைத் தமிழன் பேச்சளவில் அன்றி, வாழ்க்கையில் பின்பற்றி செயல்படுத்தியவன் ஆவான். பொருளின்றி வாடும் வறுமை நிலையிலும் பொருளின்றி வறுமையில் வாடுபவனிடம் பரிவோடு பேசி, தக்க வள்ளலையும் மன்னனையும் குறிப்பிட்டு அவரிடம் சென்றால் உனது வறுமை தீரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறவனாகப் பரிசு பெற்றவன் இருந்திருக்கிறான் என்பதை ஆற்றுப்படை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

தன்னையொத்த சகக் கலைஞனிடம் பொறாமை கொள்ளாமல் அன்பு கொண்டு தானாகவே சென்று பரிசில் கிடைக்கும் இடத்தைக் கூறி, போக வழியும் சொல்லும் பண்பாடும், தான் பெற்ற செல்வத்தைப் பிறரது பசியைத் தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகையையும் காண்கையில் இவர்கள் வள்ளல்களை விட ஒரு வகையில் மேலும் உயர்ந்தவர்கள்; மேன்மைமிக்கவர்கள் என்ற எண்ணத்தை எழச் செய்கிறது.

பழக்கவழக்கங்கள்


‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று மன்னிடம் கூறும் அளவிற்குத் தன்மானம் வாய்க்கப் பெற்றவர்களாக அக்காலப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய மாண்புமிக்க புலவர்களின் இலக்கியப் பதிவில் இடம் பெற்றுள்ள அக்காலத் தமிழர்களின் பழக்க வழக்கங்களைத் தற்பொழுது மறுவாசிப்பு செய்கையில் நிகழ்காலத்திலும் பழக்கத்தில் உள்ள பழங்காலத்தவர்களின் பண்பட்ட செயல்களை அடையாளம் காண முடியும்.

ஒருவரது செயல்பாட்டிலோ அல்லது பின்பற்றலிலோ தொடர்ந்து இருக்கும் ஒன்றைப் பழக்கம் எனலாம். ஒரு கூட்டத்தினர்; ஊரார்; சமூகத்தினர் என குறுகிய வட்டத்தினரின் பின்பற்றலில் இருப்பதை வழக்கம் எனலாம். பெருத்த கூட்டத்தினரின் தொடர்ந்த மற்றும் நெடுங்காலப் பின்பற்றலுக்குரிய செயலைப் பண்பாடு என வரையறுக்கலாம்.

புரவலர்களும் கலைஞர்களும்

‘மக்களைக் காப்பதே கடமை’ என்பதை மனத்தே கொண்டு செயல்படக் கூடியவர்களாக அக்கால மன்னர்களும் நிலக்கிழார்களும் இருந்ததைப் புறநானூறு, பதிற்றுப்பத்து வாயிலாக அறியலாம். அதேபோல் புலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு இல்லாத சான்றோர்களாக வளர்ந்திருக்கின்றனர். பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டுவதும், பெற்ற பரிசில் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதும் வியக்கத்தக்கதாகும். அக்காலப் புரவலர்களிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கலைஞன், ஒரு சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய வரியைப் பெற்றுக் கொண்டு திரும்பும் பெரிய மன்னனைப் போன்று காட்சியளிப்பதாய் இலக்கியப் பதிவு உள்ளது.

கலைஞனைப் போற்றல்


‘வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள்’ என்ற அடைமொழி 21ஆம் நூற்றாண்டிலும்; புழக்கத்தில் நிலைத்ததன் வாயிலாக விருந்தினரை அக்காலப் புரவலர்கள் எங்ஙனம் போற்றிக் காத்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். புரவலன் பொருள் வேண்டி வந்த கலைஞனைக் கண்ணால் பருகி, அண்மையில் அமரச் செய்து, ஊனை வெறுக்கும் அளவிற்கு உண்ணச் செய்து, புத்தாடை வழங்கியதை ஆற்றுப்படை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

“விளங்கு பொற் கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி” (சிறுபாண். 244-245)

“ஈற்றுஆ விருப்பின் போற்றுடி நோக்கிலும்
கையது கேளா அளவை” (பொருநர். 151-152)

“பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூக்கமல் தேறல் வாக்குழ தரத்தர
வைகல் வைகல் கைவி பருகி” (பொருநர் 156-157)

“மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”(பெரும்பாண்.478-479)

மேற்கண்ட ஆற்றுப்படை வரிகளின் வாயிலாகப் புரவலன் கலைஞனை முகமலர்ச்சியுடன் வரவேற்று, அருகிலேயே அமர்ந்து பரிமாறியதோடு, ஊட்டி விடவும் துணிகிறான். கலைஞனே, ‘போதும் போதும்’ என்று கூறும் அளவிற்கும் பல்லின் கூர்மை மழுங்கும் அளவிற்கும் புரவலன் விருந்து அளித்து மகிழ்ந்ததை அறிய முடிகிறது.

இதன் நீட்சியாக, மரபாக இன்றும் தமிழகத்தில் விருந்தினருக்கும், யாசகம் கேட்போருக்கும் அருகிலேயே அமர்ந்து அவர்களின் முகம் மகிழ்வு கொள்ளும் வகையில் உணவு பரிமாறுவதைக் காணலாம். விரும்பும் உணவுப் பொருளை அதிகம் வைத்தும், தவிர்க்கும் பொருளை விடுத்தும் பரிமாறுவதே விருந்தளிப்பின் மரபாக இருப்பது பழந்தமிழனின் விழுமியமாகவும் எச்சமாகவும் கருதலாம்.

உணவு முறைகள்


பொதுவாக உயிரினங்களின் உணவு முறையானது நிலம் சார்ந்ததாகவும், உடல், தட்பவெப்பம் மற்றும் தொழில் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும். தனித்து வாழும் ஆற்றலின்றி கூடி வாழும் சமூகப்பிராணியான மனிதனின் உணவுப் பழக்கமும் அவ்வாறேயாகும். பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் காய்கறியையும் சற்று உயர்வாக இருந்தாலும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் திருவிழா மற்றும் இல்லத்து விழாக்களின் பொழுது மாமிசத்தையும் உணவாக உட்கொள்வது வழக்கமாகும்.

ஆற்றுப்படை நூல்களின் வாயிலாகப் புளியங்கறி, கருவாடு, நெல், வரகு, தினைச்சோறு, வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி, சுட்டமீன், இறைச்சி, நண்டுக் கலவை, மாதுளங்காய் மற்றும் மாவடு ஊறுகாய் போன்றவற்றைத் தமிழன் உணவாக உட்கொண்டதை அறிய முடிகின்றது.

“வாராது அட்டவாடு ஊன், புழுக்கல்” (பெரும்பாண். 100)

“குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி…
அவரை வான்புழுக்கு அட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவீர்” (பெரும்பாண் 193-194)

என்ற பாடல் வரிகள் இன்றும் உணவுப் பழக்கத்தில் உள்ள கருவாடு, வரகுச்சோறு, பருப்புக் குழம்பு போன்றவை அன்றைக்கும் இருந்ததை மெய்ப்பிக்கின்றன.

போக்குவரத்துக் காவல்


சாலைப் போக்குவரத்திற்குச் சுங்கவரி வசூல் செய்யும் முறை சங்க காலத்திலேயே இருந்ததை,

“அணர்ச் செவி; கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்” (பெரும்பாண். 80-82)

என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் வாயிலாக அறியலாம். மேலும் சுங்கப் பொருள் பெறும் இடத்தையும், இடம்பெயரும் விற்பனைப் பொருட்களையும் பாதுகாக்கும் பொருட்டு வில் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. தற்பொழுது ‘நெடுஞ்சாலைக் காவல்’(Highway Patrol) என்று எழுதப்பட்ட வாகனத்தில் காவல் துறையினர் நெடுஞ்சாலையில் திருட்டு, கடத்தல், கொள்ளை, விபத்து போன்றவை நடைபெறா வண்ணம் காத்து வணிகர்களும், மக்களும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்றனர். இந்நடைமுறை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது என்பது வியப்பளிப்பதாகவே உள்ளது.

காவல் காத்தல்

‘சங்க காலம் ஒரு பொற்காலம்’ என்ற சொல்லடையை இலக்கிய வரலாற்றில் பரவலாகக் காணலாம். ஆனால் அக்காலத்தில் வீடு மற்றும் உடைமைகளைக் காக்கும் பொருட்டு வாழ்விடங்களைச் சுற்றி வேலி அமைத்து இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை வழி அறியலாம்.

“... ... ... முன்உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்” (பெரும்பாண்.184-1485)

என்ற வரிகள் மூலம் அக்கால மக்கள் முள்ளுடைய மரங்களை வரிசையாக வளர்த்து வேலி போன்று அமைத்திருந்ததை அறியலாம். இன்றும் கிராமம் மட்டுமின்றி நகரங்களிலும் முட்செடிகளை வேலி போன்று வீடு மற்றும் வயல்வெளியைச் சுற்றி வளர்ப்பதைக் காணலாம். வீடு மற்றும் விளைச்சல் நிலங்களைக் காவல் காப்பதற்கு ஆங்காங்கே நாய்கள் கட்டப்பட்டிருந்தையும், “தொடர்நாய் யாத்த துன்அருங் கடிநகர்” என்ற பாடல் வரிமூலம் அறியலாம். மேலும், மனிதனின் அடிப்படைத் தேவையான நீர் நிலைகளைக் காவல் காப்பதற்கு வீரர்களை நிறுத்தியதையும்,

“கோடை நீடினும் முறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்”

என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

கைக்குற்றல் அரிசி

இயந்திர மயமாகிவிட்ட இக்காலத்தில் ‘நெல்’ ஆலைகளில் இயந்திரங்களின் மூலம் பதப்படுத்தப்பட்டு, அரிசியாகி மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. அரிசியின் முனைகளில் தான் நல்ல சத்து இருக்கிறது. இயந்திரங்களுக்குள் நெல் சுழலும் பொழுது அவை மழுங்கடிங்கப்படுகிறது. அதனால் இன்றும் சிலர் உரலில் உலக்கை கொண்டு கையால் முற்றிய நெல்லில் சமையல் செய்து உண்பதைக் காணலாம். இவ்வழக்கமும் பழங்காலத்தில் இருந்ததை,

“இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்ந்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு”

என்ற ஆற்றுப்படை வரி மூலம் அறியலாம்.

முடிவுரை

சமூகப் பிராணியான மனிதன் ‘போலச் செய்தல்’ பண்பிற்கு உட்பட்டவன் ஆவான். பழங்காலத் தமிழனின் பழக்கத்தில் இருந்த பல செயல்பாடுகள், செயல் முறைகள் அறிவியல் வளர்ச்சி கண்ட நிலையிலும் நாகரீகம் மேன்மை கண்ட பின்னும் தற்பொழுது நடைமுறையில் இருக்கிறது. இது பழங்காலத் தமிழனின் பண்பட்ட வாழ்க்கை முறையையே பறைசாற்றுவதாய் உள்ளது.

http://www.muthukamalam.com/essay/literature/p136.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.