Jump to content

ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்..

tamilarart.jpg

தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம்.

ஆற்றுப்படை இலக்கியம்

பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்புவோம்’ என்ற கோட்பாட்டைத் தமிழன் பேச்சளவில் அன்றி, வாழ்க்கையில் பின்பற்றி செயல்படுத்தியவன் ஆவான். பொருளின்றி வாடும் வறுமை நிலையிலும் பொருளின்றி வறுமையில் வாடுபவனிடம் பரிவோடு பேசி, தக்க வள்ளலையும் மன்னனையும் குறிப்பிட்டு அவரிடம் சென்றால் உனது வறுமை தீரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறவனாகப் பரிசு பெற்றவன் இருந்திருக்கிறான் என்பதை ஆற்றுப்படை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

தன்னையொத்த சகக் கலைஞனிடம் பொறாமை கொள்ளாமல் அன்பு கொண்டு தானாகவே சென்று பரிசில் கிடைக்கும் இடத்தைக் கூறி, போக வழியும் சொல்லும் பண்பாடும், தான் பெற்ற செல்வத்தைப் பிறரது பசியைத் தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகையையும் காண்கையில் இவர்கள் வள்ளல்களை விட ஒரு வகையில் மேலும் உயர்ந்தவர்கள்; மேன்மைமிக்கவர்கள் என்ற எண்ணத்தை எழச் செய்கிறது.

பழக்கவழக்கங்கள்


‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று மன்னிடம் கூறும் அளவிற்குத் தன்மானம் வாய்க்கப் பெற்றவர்களாக அக்காலப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய மாண்புமிக்க புலவர்களின் இலக்கியப் பதிவில் இடம் பெற்றுள்ள அக்காலத் தமிழர்களின் பழக்க வழக்கங்களைத் தற்பொழுது மறுவாசிப்பு செய்கையில் நிகழ்காலத்திலும் பழக்கத்தில் உள்ள பழங்காலத்தவர்களின் பண்பட்ட செயல்களை அடையாளம் காண முடியும்.

ஒருவரது செயல்பாட்டிலோ அல்லது பின்பற்றலிலோ தொடர்ந்து இருக்கும் ஒன்றைப் பழக்கம் எனலாம். ஒரு கூட்டத்தினர்; ஊரார்; சமூகத்தினர் என குறுகிய வட்டத்தினரின் பின்பற்றலில் இருப்பதை வழக்கம் எனலாம். பெருத்த கூட்டத்தினரின் தொடர்ந்த மற்றும் நெடுங்காலப் பின்பற்றலுக்குரிய செயலைப் பண்பாடு என வரையறுக்கலாம்.

புரவலர்களும் கலைஞர்களும்

‘மக்களைக் காப்பதே கடமை’ என்பதை மனத்தே கொண்டு செயல்படக் கூடியவர்களாக அக்கால மன்னர்களும் நிலக்கிழார்களும் இருந்ததைப் புறநானூறு, பதிற்றுப்பத்து வாயிலாக அறியலாம். அதேபோல் புலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு இல்லாத சான்றோர்களாக வளர்ந்திருக்கின்றனர். பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டுவதும், பெற்ற பரிசில் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதும் வியக்கத்தக்கதாகும். அக்காலப் புரவலர்களிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கலைஞன், ஒரு சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய வரியைப் பெற்றுக் கொண்டு திரும்பும் பெரிய மன்னனைப் போன்று காட்சியளிப்பதாய் இலக்கியப் பதிவு உள்ளது.

கலைஞனைப் போற்றல்


‘வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள்’ என்ற அடைமொழி 21ஆம் நூற்றாண்டிலும்; புழக்கத்தில் நிலைத்ததன் வாயிலாக விருந்தினரை அக்காலப் புரவலர்கள் எங்ஙனம் போற்றிக் காத்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். புரவலன் பொருள் வேண்டி வந்த கலைஞனைக் கண்ணால் பருகி, அண்மையில் அமரச் செய்து, ஊனை வெறுக்கும் அளவிற்கு உண்ணச் செய்து, புத்தாடை வழங்கியதை ஆற்றுப்படை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

“விளங்கு பொற் கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி” (சிறுபாண். 244-245)

“ஈற்றுஆ விருப்பின் போற்றுடி நோக்கிலும்
கையது கேளா அளவை” (பொருநர். 151-152)

“பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூக்கமல் தேறல் வாக்குழ தரத்தர
வைகல் வைகல் கைவி பருகி” (பொருநர் 156-157)

“மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”(பெரும்பாண்.478-479)

மேற்கண்ட ஆற்றுப்படை வரிகளின் வாயிலாகப் புரவலன் கலைஞனை முகமலர்ச்சியுடன் வரவேற்று, அருகிலேயே அமர்ந்து பரிமாறியதோடு, ஊட்டி விடவும் துணிகிறான். கலைஞனே, ‘போதும் போதும்’ என்று கூறும் அளவிற்கும் பல்லின் கூர்மை மழுங்கும் அளவிற்கும் புரவலன் விருந்து அளித்து மகிழ்ந்ததை அறிய முடிகிறது.

இதன் நீட்சியாக, மரபாக இன்றும் தமிழகத்தில் விருந்தினருக்கும், யாசகம் கேட்போருக்கும் அருகிலேயே அமர்ந்து அவர்களின் முகம் மகிழ்வு கொள்ளும் வகையில் உணவு பரிமாறுவதைக் காணலாம். விரும்பும் உணவுப் பொருளை அதிகம் வைத்தும், தவிர்க்கும் பொருளை விடுத்தும் பரிமாறுவதே விருந்தளிப்பின் மரபாக இருப்பது பழந்தமிழனின் விழுமியமாகவும் எச்சமாகவும் கருதலாம்.

உணவு முறைகள்


பொதுவாக உயிரினங்களின் உணவு முறையானது நிலம் சார்ந்ததாகவும், உடல், தட்பவெப்பம் மற்றும் தொழில் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும். தனித்து வாழும் ஆற்றலின்றி கூடி வாழும் சமூகப்பிராணியான மனிதனின் உணவுப் பழக்கமும் அவ்வாறேயாகும். பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் காய்கறியையும் சற்று உயர்வாக இருந்தாலும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் திருவிழா மற்றும் இல்லத்து விழாக்களின் பொழுது மாமிசத்தையும் உணவாக உட்கொள்வது வழக்கமாகும்.

ஆற்றுப்படை நூல்களின் வாயிலாகப் புளியங்கறி, கருவாடு, நெல், வரகு, தினைச்சோறு, வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி, சுட்டமீன், இறைச்சி, நண்டுக் கலவை, மாதுளங்காய் மற்றும் மாவடு ஊறுகாய் போன்றவற்றைத் தமிழன் உணவாக உட்கொண்டதை அறிய முடிகின்றது.

“வாராது அட்டவாடு ஊன், புழுக்கல்” (பெரும்பாண். 100)

“குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி…
அவரை வான்புழுக்கு அட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவீர்” (பெரும்பாண் 193-194)

என்ற பாடல் வரிகள் இன்றும் உணவுப் பழக்கத்தில் உள்ள கருவாடு, வரகுச்சோறு, பருப்புக் குழம்பு போன்றவை அன்றைக்கும் இருந்ததை மெய்ப்பிக்கின்றன.

போக்குவரத்துக் காவல்


சாலைப் போக்குவரத்திற்குச் சுங்கவரி வசூல் செய்யும் முறை சங்க காலத்திலேயே இருந்ததை,

“அணர்ச் செவி; கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்” (பெரும்பாண். 80-82)

என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் வாயிலாக அறியலாம். மேலும் சுங்கப் பொருள் பெறும் இடத்தையும், இடம்பெயரும் விற்பனைப் பொருட்களையும் பாதுகாக்கும் பொருட்டு வில் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. தற்பொழுது ‘நெடுஞ்சாலைக் காவல்’(Highway Patrol) என்று எழுதப்பட்ட வாகனத்தில் காவல் துறையினர் நெடுஞ்சாலையில் திருட்டு, கடத்தல், கொள்ளை, விபத்து போன்றவை நடைபெறா வண்ணம் காத்து வணிகர்களும், மக்களும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்றனர். இந்நடைமுறை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது என்பது வியப்பளிப்பதாகவே உள்ளது.

காவல் காத்தல்

‘சங்க காலம் ஒரு பொற்காலம்’ என்ற சொல்லடையை இலக்கிய வரலாற்றில் பரவலாகக் காணலாம். ஆனால் அக்காலத்தில் வீடு மற்றும் உடைமைகளைக் காக்கும் பொருட்டு வாழ்விடங்களைச் சுற்றி வேலி அமைத்து இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை வழி அறியலாம்.

“... ... ... முன்உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்” (பெரும்பாண்.184-1485)

என்ற வரிகள் மூலம் அக்கால மக்கள் முள்ளுடைய மரங்களை வரிசையாக வளர்த்து வேலி போன்று அமைத்திருந்ததை அறியலாம். இன்றும் கிராமம் மட்டுமின்றி நகரங்களிலும் முட்செடிகளை வேலி போன்று வீடு மற்றும் வயல்வெளியைச் சுற்றி வளர்ப்பதைக் காணலாம். வீடு மற்றும் விளைச்சல் நிலங்களைக் காவல் காப்பதற்கு ஆங்காங்கே நாய்கள் கட்டப்பட்டிருந்தையும், “தொடர்நாய் யாத்த துன்அருங் கடிநகர்” என்ற பாடல் வரிமூலம் அறியலாம். மேலும், மனிதனின் அடிப்படைத் தேவையான நீர் நிலைகளைக் காவல் காப்பதற்கு வீரர்களை நிறுத்தியதையும்,

“கோடை நீடினும் முறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்”

என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

கைக்குற்றல் அரிசி

இயந்திர மயமாகிவிட்ட இக்காலத்தில் ‘நெல்’ ஆலைகளில் இயந்திரங்களின் மூலம் பதப்படுத்தப்பட்டு, அரிசியாகி மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. அரிசியின் முனைகளில் தான் நல்ல சத்து இருக்கிறது. இயந்திரங்களுக்குள் நெல் சுழலும் பொழுது அவை மழுங்கடிங்கப்படுகிறது. அதனால் இன்றும் சிலர் உரலில் உலக்கை கொண்டு கையால் முற்றிய நெல்லில் சமையல் செய்து உண்பதைக் காணலாம். இவ்வழக்கமும் பழங்காலத்தில் இருந்ததை,

“இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்ந்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு”

என்ற ஆற்றுப்படை வரி மூலம் அறியலாம்.

முடிவுரை

சமூகப் பிராணியான மனிதன் ‘போலச் செய்தல்’ பண்பிற்கு உட்பட்டவன் ஆவான். பழங்காலத் தமிழனின் பழக்கத்தில் இருந்த பல செயல்பாடுகள், செயல் முறைகள் அறிவியல் வளர்ச்சி கண்ட நிலையிலும் நாகரீகம் மேன்மை கண்ட பின்னும் தற்பொழுது நடைமுறையில் இருக்கிறது. இது பழங்காலத் தமிழனின் பண்பட்ட வாழ்க்கை முறையையே பறைசாற்றுவதாய் உள்ளது.

http://www.muthukamalam.com/essay/literature/p136.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.