Jump to content

இரத்தக்காட்டேரி!


Recommended Posts

 

இரத்தக்காட்டேரி!

 

சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன.  மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள்  பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள்  என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத்  தவறவில்லை. 

 மண்ணில் அவள் கால்கள் புதைந்து எழும்போது ஏற்பட்ட இதமான உணர்வு அவளை ஆட்கொண்ட போது அவள் பல வளவுகளைத் தாண்டி, தனியே காட்சியளித்த பிள்ளையார் கோவில் வேவில் குளத்தடிக்கு வந்திருந்தாள். வழமை  போலவே ஆள் அரவமற்ற  குளக்கரையில், பச்சைப் பசேலென செழித்து வளர்ந்திருந்த பற்றைகளின்  பின்னே தன் மாற்று உடைகள், துவாய் போன்றவற்றை தொங்க விட்டாள்.  நீந்திப் பழகுவதற்கு ஏற்றாப்போல்  அம்மாவின் முழுப்பாவாடை ஒன்றை குறுக்குக் கட்டாக அணிந்து, ஒரு சிறு பையை மாத்திரம் தன்னோடு குளக்கரை வரை எடுத்துச் சென்று, அதை எப்போதும் போல  எடுத்துக்   கொள்ள வசதியாக பத்திரப்படுத்தி வைத்து ஒரு சிறு கல்லை அதன் மேல் வைத்தாள்.  குளக்கரையை சுற்றி நோட்டம் விட்டு யாரும் இல்லை என உறுதி செய்தாலும் அவளுக்கு ஏதோ ஒரு உறுத்தல், தன்னை யாரோ கவனிப்பது போன்ற உணர்வு ஒன்று மீண்டும் தோன்றி மறைந்தது.

 மெதுவாகக் கால்களை தண்ணீரில் வைத்து அதன்தட்ப வெப்பங்களை அறிந்து கொண்டபோது,   நிர்ச்சலனமாக இருந்த நீரின் தூய்மையில், குளத்தின் அடியில் இருந்த சின்னச் சின்ன மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்தி விளையாடுவது தெரிந்தது.  பழக்க தோஷத்தில் அவளும் சிறிது நேரத்தில் ஒரு மீனாக மாறி நீரில் அமிழ்ந்து  மூழ்கி எழும்பிய போது  மனதில் ஏற்பட்ட ஒரு வகை அமைதித் தன்மை அவளுக்குப் பிடித்திருந்தது.

மீன்களோடு மீனாக நீந்தி தன்னை மறந்தவளுக்கு நேரம் ஓடியது தெரியவில்லை. தலையை நிமிர்த்தி குளத்துக்கு வெளியே தெரிந்த பால் மணல் காட்டை கண்களால் நோட்டம் விட்ட போது அயல் வளவுக்குள் இருந்து தென்னோலை இழுத்து வந்து கொண்டிருந்த பவளம் மாமியின் கண்களில் பட்டுத்தொலைத்ததில் அவளுக்கு உதறல் எடுத்தது.

 "குமரிக்கு நேரம் கெட்ட நேரத்தில நீச்சல் கேட்குதோ? கொப்பர் ஒழுங்காய் இருந்திருந்தால்  எல்லாத்தையும் பாத்து கீத்து மேய்ச்சிருப்பார். பொறு நான் கொம்மாவைக் காணட்டும், இதுக்கொரு வழி பார்க்கிறன்!"

 "ஏன் மாமி உங்களுக்கு நீந்த முடியேல்லை எண்டு கவலை போல!" நையாண்டி பண்ணியவளை மாமி முறைத்தாள்.

 "நாடு கெட்டுக்கிடக்கு, தட்டம் தனிய வந்து நீந்துறதும் இல்லாமல் குமரிக்கு வாய்க் கொழுப்பும் அகட விகடங்களும் கூடித்தான் போச்சுது! கெதியில வீட்டுக்கு போய்ச்சேருற அலுவலைப்பார்!"

தன் பாரிய உடம்பையும் தென்னோலைகளையும் சேர்த்து இழுத்துப் போகும் மாமியைப் பார்க்க அவளுக்கு பாவமாகவும் அதே நேரம் தன்னை அம்மாவிடம் வத்தி வைப்பா என்பது கோபமாகவும் வந்தது.

 நீந்தி எழுந்து மாமி போய்விட்டா என்று உறுதிப்படுத்தி, தண்ணீரால் உடம்போடு  ஓட்டிப் பிடித்த  தன் உடைகளை சரி செய்த போது யாரோ தன்னை உற்றுப் பார்க்குமாப்போல் ஒரு வித உணர்வு மீண்டும் அவளை ஆட்கொண்டது.  இலகுவில் பயந்து விடாத அவளது சுபாவம் அவளை ஆடாமல் ஒரே இடத்தில நிற்க வைத்தது. அப்படிச் செய்வதன் மூலம் யாராவது  கோவிலுக்கோ குளத்துக்கோ வந்தால் திரும்பவும் குளத்து  நீரில் முங்கி விடுவது என முடிவு செய்தவளுக்கு அடுத்த சில வினாடிகளுக்கு யாரும் அப்படி நடமாடவில்லை என்பது உறுதியாகியது.

மாற்று ஆடைகளை எடுத்து மாற்றுவதற்காக பற்றையை நோக்கி சில அடிகள்  எடுத்து வைத்த போது யாரோ அவசர அவசரமாக அடர்ந்த மரங்களின் பின்னிருந்து வேகமாக ஓட்டமும் நடையுமாக மறைவது தெரிந்தது. மண் நிறத்தில் ஒரு தொப்பி மட்டும் தெரிந்தது, முகம் தெரியவில்லை.  எதற்காக ஓடி மறைய வேண்டும்? யாராக இருக்கும்? இப்படியான சம்பவம் இத்துடன் மூன்றாவது தரம் நடந்துள்ளதை அவள் எண்ணிப் பார்த்துக்கொண்டாள்.

இரண்டு மாதங்களின் முன்னரும் அவள் உடை மாற்றப் போன வேளையில், அடர்ந்த அந்த காட்டு மரங்களுடனான பற்றைகளின் பின்னே முதல் நாள் பெய்த மழையின் ஈரலிப்பான மணலில் கால் தடங்கள் புதிதாய் ஏற்பட்டிருந்தது.  அதன் பின்னர்  கடந்த மாதத்தில், மீண்டும் ஒரு முறை உடை மாற்ற வந்த போது வழமைக்கு மாறாய் அவ்விடத்தில் ஒரு வித சுருட்டு அல்லது சிகரெட் வாடை அந்த குளிர்ச்சியான காற்றில் கலந்து வந்தது.  தென்னை மரங்களும் பனை மரங்களுமாய் காற்றோடு அசைந்தாடும் போது எல்லா இடங்களிலும் காற்று அசைந்தாடி பால் போன்ற மணற் பரப்பில் எந்த அடையாளங்கள் இருந்தாலும் அதை அழித்து விடும் தன்மை கொண்டதாய் இருந்தது. அப்படியிருக்க புதிதாய் பதிந்த கால் தடங்கள் மட்டுமே ஒரு சில நிமிடங்களுக்கு நின்று பிடிக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆகவே இந்த புதிதாய் தெரிந்த காலடியடையாளம் கூட யாரோ தான் நீந்துவதை நின்று அவதானிக்கிறார்கள் என்பதை அவளுக்கு  மிகவும்  தெளிவாகவே பறை சாற்றியது .  யாரோ நீண்ட நேரமாக தன்னை அவதானித்திருக்கிறார்கள் என்பது அவளுக்கு ஆத்திரத்தை ஊட்டியது.

 இன்றும் அவளுக்கு அது அச்சத்தைக் கொடுக்காமல் ஒரு விதமான கோபத்தையே ஏற்படுத்தியிருந்தது.  இது எனது கிராமம், இது எனது கோவிலடி, என் சுதந்திரமான, ஒரேயொரு பொழுது போக்கு மையத்தையும் குளத்தையும் குழப்பியடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவள் ஆணித்தரமாய் நம்பினாள். அன்றிலிருந்து அவள் தன் தற்பாதுகாப்புக்காய் கோவிலடிக்கு வரும் போதெல்லாம் தன் உடைகளுடன் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் வெங்காயம் உரிக்கும் குட்டிக்கத்தியை கையோடு எடுத்து வந்தாள். அது சரியா பிழையா என எண்ணிப்பார்க்கும் மனநிலையைக் கடப்பதற்கு அவள் சிக்கல் மிகுந்த   வாழ்வின் நடைமுறையே உதவியது போலும். 

அவளுக்கு சிறிதாய் ஆச்சரியமும் ஒரு விதமான அருவருப்பும் முதன் முதலில் ஏற்பட்டது அவளுக்கே வியப்பாய் தான் இருந்தது.  எவ்வளவு நேரம் தன்னை ஒருவர் பார்த்திருக்கக் கூடும் என்ற நினைவு அவளுக்கு ஒரு விதமான சங்கடத்தையும் தோற்றுவித்தது.  இனிமேல் தனியாய் வரக்கூடாது, தன் தோழிகள் சங்கரியை அல்லது லதாவைக் கூட்டி  வரவேண்டும் என எண்ணிக்கொண்டாள். 

 அவள் சரியான வாயாடியென்பதும் யாருக்கும் அடங்காத தன்மை கொண்டவள் என்பதும் ஊர் எல்லாம் பிரசித்தியான விசயம்.  இருந்த போதிலும், இவ்வளவு நாளும் இருந்த தைரியத்தில் ஒரு பகுதி ஆட்டம் காண வெளிக்கிட்டது அவளுக்குப் பிடிக்கவில்லை .அம்மாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான் , பிறகு இந்தப் பக்கம் வந்த பாடில்லை, அவளுக்கு சொல்லி ஒரு புண்ணியமும் இருக்காது.  பார்க்கலாம், மனதைத் தேற்றிக்கொண்டாள்.

அம்மா பலரது வீடுகளிலும் போய் வேலை பார்க்க வேண்டி வந்ததற்கு காரணமான அப்பாவின் மீது அவளுக்கு கோபமும் அதனால் ஏற்பட்ட விரக்தியும் தான் அவளை இப்படி ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் வைத்திருந்தது. அவள் பாடசாலைக்குப் போய் வரும் நேரம் தவிர வீட்டில் பொழுது போக்கு சாதனங்கள் என எதுவும் இல்லாத பொருளாதார நிலை குறித்து அலட்டிக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை.   பாடசாலை முடித்து வரும் போது அம்மா வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் துரு துருத்த காலும் கையும் சும்மா இருக்க விடாததால் அவள் காலாற கோவில் வளவு தேடி நடப்பதும் குளத்தில் நீந்துவதும் யாராவது தோழிகள் வந்தால் அவர்களுடன் தாயக்கட்டை விளையாடுவதும் தான் அவள் பொழுது போக்கு.  வாசிகசாலை இப்போது தான் மீண்டும் ஏதோ கிடைத்த புத்தங்கங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து அரை மணி நேரம் நடந்து போய் நூலகம் திறக்கப்படாமல் அல்லது தனக்கு விரும்பிய நூல்கள் எல்லாம் அவளுக்கு முதலே எடுக்கப்பட்டு விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்கள் அதிகரிக்க அவளும் அங்கு போவதை குறைத்துக்கொண்டாள் .இப்போது  யாராவது பக்கத்து வீடுகளில் வாங்கிய தினசரி பத்திரிகைகளை ஒரு எழுத்து விடாமல் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

"பள்ளிகூடத்தலாலை வந்த பிள்ளையை இவ்வளவு நேரமும் காணேலை எண்டு பாத்தன்.  எங்க பிள்ளை போனனீங்கள் ?"  வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் வீட்டின் சொந்தகார அம்மா கேள்வி எழுப்பியபடி அவளைப் பாசத்துடன் பார்த்தாள்.

 "நீந்துவம் எண்டு கோவிலடிக்குப் போட்டு வந்தனான் !"

 "நல்ல பிள்ளையடி அம்மா நீ, சொல்லிப்போட்டுப் போக்கூடாதே ?" அந்தம்மா செல்லமாய் கோவித்துக் கொண்டா.

 "இல்லை, அம்மா சொன்னவ , சும்மா சும்மா உங்களோட கதைக்கவோ கரைச்சல் குடுக்கவோ வேண்டாம் எண்டு அது தான் நான் சத்தம் போடாமல் போட்டு வந்திட்டன்."

 வீட்டுக்கார ஐயாவும் எட்டிப் பார்க்க, அவள் பின் கதவால் வீட்டுக்குள் சென்றாள். சும்மா இருந்த வீடு என்று இடப்பெயர்வில் வந்திருந்த அவளையும் அம்மாவையும் இந்த ஊர் விதானையார் அந்த வீட்டில் இருத்தி மூண்டு வருசங்கள் ஓடிப்போன வேளையில் தான் இந்த வீட்டின் சொந்தக்காரர் வெளி நாட்டில் இருந்து வந்திருந்தார்கள்.என்ன செய்வது என்று திகைத்த வேளையில் தான் அவர்கள் மனம் இரங்கி, பின் கதவால் வந்து போகக்கூடிய மாதிரி ஒரு பெரிய அறை, வெளியேயிருந்த சமையல் அறை, கழிவறை போன்றவற்றை பாவிக்கச் சொல்லி இருந்தார்கள்.  இவர்களது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும், அந்த வயதான ஐயாவுக்கும் அம்மாவிற்கும் இவர்கள் இருவரையும் மிகவும் பிடித்துப் போயிற்று.

 அவள் தன் அறைக்குள் போய் ஓய்வு எடுத்த போது அவளுக்கு மீண்டும் கோவிலடியில் நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்து மனதை பிராண்டியது. தன் மனதை மாற்ற நினைத்து தன் உருவத்தை ஒரு முறை அந்த அறையிலிருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.  கண்ணாடியில் தெரிந்த தன்  உருவத்தைப் பார்த்து ரசித்தாள். அவள் பதின்ம வயதுக்கு மீறிய அவளது மனத்திடமும், தைரியமும், உடல் வாகும் அவளுக்கு ஒரு பொலிவைக் கொடுத்திருந்தன.  தன் கட்டிலின் ஓரமாக இருந்தவள், சில நிமிடங்களின் பின் நீந்திய களைப்பில் உறக்கத்தில் வீழ்ந்தாள். 

எத்தனை  நிமிடங்கள் தூங்கியிருப்பாள் எனத் தெரியவில்லை ஆயினும் அவளுக்கு தூக்கக்  கலகத்திலும் தன்னை யாரோ பார்ப்பது போன்ற அதே உணர்வோடு தூக்கிவாரிப் போட எழுந்தவளுக்கு அம்மா வேலையால் வந்து முன் முற்றத்தில் நின்றபடியே வீட்டுக்கார  அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்தது கேட்டு  அவளுக்கு சிறிதே ஆறுதலாகப் பட்டது.  அம்மாவின் நிலவரம் பார்த்து அவளுக்கு பதினெட்டு வயதாக முன்னம் அவளை தத்தெடுக்க விரும்புவதாக அந்த வயோதிபத் தம்பதி கூறியதாலோ என்னவோ அம்மாவுக்கு அவர்களை அப்படிப் பிடித்திருந்தது.  அவளுக்கும் மற்றைய வெளிநாட்டினர் போலல்லாத, தாம் பிறந்த நாட்டை அந்நியமாகப் பார்க்காத அவர்களை பிடித்துத் தான் போயிற்று. 

 "அருமையான சனங்கள், ஏதோ கடவுள் செயல், அதுகள் எங்களோட பழக நாங்கள் குடுத்து வைச்சிருக்க வேணும். ஏதோ காசுக்காக என்ற செல்லத்தை நான்  வெளிநாட்டுக்கு அனுப்ப ஓமென்ன மாட்டன்.  என்ன செய்யிறது இந்த பாவி மனுஷன் தன்ர மனுசி, மகள், குடும்பம்  எண்டு பார்க்காம எங்களை விட்டிட்டு ஓடினதால தானே நாங்கள் இப்பிடி அலைய வேண்டியிருக்கு ." அம்மா கவலையோடு அலுத்துக்  கொண்டாள்.

"அம்மா அதைப் பற்றி எல்லாம் இப்ப யோசிக்க வேண்டாம், களைச்சு போய் வந்திருப்பீங்கள். தேத்தண்ணி ஒன்று போட்டு தரவோ?"

 "என்ர ராசாத்தி, நான் போட்டு குடிக்கிறன், வேளைக்கு சாப்பிட்டிட்டு நித்திரைக்கு போங்கோ.  விடிய பள்ளிக்கூடம் போக வேணும் எல்லோ?" அம்மா சொல்லியபடியே குளிக்கப் போனாள்.

 " இல்லை, நான் சாப்பாடெல்லாம் சூடாக்கி எடுத்து வைக்கிறன், நீங்கள் குளிச்சிட்டு வாங்கோ, இரெண்டு பேருமாய் சாப்பிடுவம்!" அம்மாவை குளிக்க அனுப்பி விட்டு, காலையில் சமைத்து வைத்த சோறையும் கறியையும் சூடாக்க ஆயத்தமானாள்.

 மகளுக்கு பதினாறு வயது தான் ஆகிறது, இருந்தாலும் அவள் சிந்தனைகளிலும் செயல்களிலும் இருந்த முதிர்ச்சி அவள் தாயைப்  பெருமைப்பட வைத்தது.

 அம்மா குளிக்கப் போய் பத்தே நிமிடங்களில் வந்து விட்ட மெல்லிய காலடிச் சத்தம் கேட்டது.

  " அம்மா என்ன  அதுக்கிடையில  வந்தாச்சோ, போனதும் வந்ததுமாய் இருக்கு?"

 சிரிப்புடன் கேட்டவளுக்கு எந்தப் பதிலும் இல்லாதது கண்டு ஆச்சர்யத்துடன் அந்த சிறிய சமையல் அறையிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.  யாரும் வெளியே  இல்லாததும், தூரத்தில் அம்மா இன்னும் குளிக்கும் சத்தமும் கேட்டு மனம் திடுக்குற எல்லாத் திசைகளிலும் உற்று நோக்கினாள்.   அமாவாசை இருட்டில் முற்றம் முழுவதும் இருண்டு போய் எந்த சலனமும் இன்றி நிசப்தமாய் இருக்க, அவளுக்கு ஏதோ ஒரு கலக்கம் திரும்பவும் மனதில் எழுந்து ஆரவாரித்தது.

 மனப்பிரமையாக இருக்க வழியில்லை எனத் தீர்மானித்து, வீட்டின் மறு புறம் வந்து வீட்டுக்கார ஐயாவும் அம்மாவும் இருக்கும் பக்கம் எட்டிப்பார்த்தாள். அவர்கள் நல்ல நித்திரையில் இருப்பதை  மின் விளக்குகள் அனைத்துமே அணைக்கப்பட்டு அவர்கள் இருந்த வீட்டுப்பக்கம் இருட்டில் விழுங்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தியது.  அம்மா அதற்கிடையில் குளித்து விட்டு வந்து விட, அவளைக் கலவரப்படுத்த விரும்பாமல் இயல்பாய் இருக்க முயற்சித்தாள். 

 இன்று சனிக்கிழமை, பாடசாலை வார விடுமுறை. அவள் ஏற்கனவே தன் தோழிகளை மூன்று மணியளவில் கோவிலடியில் சந்திப்பதாய் ஏற்பாடு செய்திருந்தாள். நிறைய கதைக்கலாம். நிறைய பாடலாம், இறுதியில் சின்னதாக நீந்திப் பின்னர் கோவில் கிணற்றில் குளிக்கலாம் எனவும் திட்டம் போடப்பட்டிருந்தது. 

இவளைக் கண்டதும் வீட்டுக்கார அம்மாவும் ஐயாவும் பழையபடி இவளைத் தாங்கள் தம்முடன் வெளிநாட்டுக்கு கூட்டிப்போவதற்கான ஆதரவு விண்ணப்பம் கொடுப்பது சம்பந்தமாகப் பேச ஆரம்பித்ததில் இவள் வீட்டிலிருந்து கோவிலடிக்குப்  போவதற்கு சிறிது தாமதமாகி விட்டது.

 பால் மணலில் கால்கள் புதையப் புதைய ஓடி நடந்தவளுக்கு மூச்சு வாங்கிற்று. கோவிலடியை அடைந்த போது எவரையும் காணாதது அவளுக்கு பெரியதொரு ஆதங்கத்தையும் சின்னதாய் கோபத்தையும் தோற்றுவித்தது.  இப்படித்தான் கடந்த மாதத்தில் ஒரு தடவையும் வருவதாகச் சொல்லிவிட்டு இரண்டு பேருமே வராமல் விட்டிருந்தார்கள். சங்கரியின் தாய் சிறிது காலமாகவே படுத்த படுக்கையாய் இருப்பதில் அவள் அப்பா வேலையாள் வர பிந்தினால் அவள் தாயை தனியே விட்டுவிட்டு வரமாட்டாள்.  லதா அவளுடைய சிறிய தங்கை. அக்கா வராவிட்டால் அவளும் வர மாட்டாள். அவர்களைக் குறை சொல்ல முடியாது.

என்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு திடீரென அவர்கள் வீடு ஒரு இருபது நிமிட நடையில் போய் விடலாம் என்பது ஞாபகம் வர, நீச்சல் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் வீட்டுக்கு நடக்க எத்தனித்த வேளை திடீரென யாரோ அவளை பின்புறம் இருந்து கட்டிப்பிடிக்க அவள் நிலை தடுமாறினாள். அதிர்ச்சியை உள்வாங்கிப் பின் சுதாகரித்து தன் பையிலுள்ள குட்டிக்கத்தியை எடுக்க எத்தனித்த போது தன் முகத்தை யாரோ முழுவதுமாக ஒரு சாக்கைப் போட்டு கட்டுவதை உணர்ந்து கொண்டாள். 

அந்த உருவம் அவளை பற்றைக்கு பின்னால் இழுத்து செல்ல முற்படுவதை உணர்ந்து தன்  பலம் எல்லாம் சேர்த்து மனப்பலத்தையும் உபயோகித்து ஒருவாறு தன் குட்டிக்கத்தியை கையில் எடுத்துக் கொண்டாள். அம்மாவை ஒரு கணம் அவள் மனதில் இருத்தியபோது அவளுக்கு வந்த அந்த அசுர பலத்தில் அவள் கைகள் தாமாகவே அந்த உருவத்தை குட்டிக்கத்தியால் ஓங்கிக் குத்தியது.

அதை அங்கு எதிர்பார்க்காத அந்த உருவத்தின் வலி மிகுந்த குளறல் ஒரு காட்டு விலங்கின் அவலமாக கோவில் வளவெங்கும் எதிரொலிக்க. தன் முகம் முழுவதுமாகக் கட்டப்பட்ட நிலையில் அவளுக்கு அதிர்ச்சியும் பயமும் கலவையாய் எழுந்து, அம்மா அம்மா என்று கத்த  முயற்சிக்க, எந்த சத்தமுமே அவள் தொண்டையிலிருந்து வர மறுத்தது.

மீண்டும் மீண்டும் சில தடவைகள் குத்திய போது அவ்வுருவம் அவளைத் தள்ளி விட்டுவிட்டு பற்றையின் பின் பக்கமாக விழ அவள் அதைத் திரும்பிப் பார்க்காமல்,  தன் முகத்திலிருந்த சாக்கைக் கூட எடுக்க மறந்து கால் போன திசையில் ஓடினாள் .

 பல அடிகள் ஓடிய பின், சிரமத்தின் மத்தியில் தான்சாக்கை எடுத்துவிட்டுப் பார்த்த போது  தான் அவளுக்குத்  தான் இன்னொரு தென்னம் வளவின்  பின்புறம் நிற்பது தெரிந்தது.  மூச்சிறைக்க மூச்சிறைக்க நின்றவளுக்கு அம்மா தேடுவாள் என்ற ஆதங்கமும் எழுந்தாலும், அவளுக்கிருந்த அதிர்ச்சியில் அயர்ந்து போனாள்.  சூரியன் மங்கி மறையும் போது, பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க வந்தவர்கள் அடித்த மணிச்சத்தம் கேட்டு விழித்த போது தான் அவளுக்கு வீட்டை நோக்கி நகர முடிந்தது. கையிலிருந்த இரத்தம் தோய்ந்த கத்தியை அந்தத் தென்னம் வளவின் அடியிலிருந்த கேணிக்குள் வீசி எறிந்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினா ள் .

ஏன் இவ்வளவு கூட்டம் வீட்டில் என்று அதிர்ந்தவளுக்கு, அதை விடப் பெரிய அதிசயம் ஒன்று காத்திருந்தது .வேப்பம் மரத்தின் கீழே வீட்டுக்கார ஐயாவை சாக்குக் கட்டிலில்  கிடத்தி இருந்தார்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் இருக்க யாரோ கார் பிடித்து வர போயிருப்பதாய் கதைப்பது இவளுக்கும் கேட்டது.  அவர் கைகளிலிருந்து வடிந்த இரத்தத்தைப் பார்த்து அவர் மனைவியான வீட்டுக்கார அம்மா மயங்கிச் சாய்ந்து விழுந்து விட்டதாய் சொன்ன பவளம் மாமி இவளைக் கண்டதும் குரலெடுத்து திட்டத் தொடங்கினாள்.

 "இந்தக் குமரியும் அந்த அத்துவானாக் காட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு நீச்சலடிக்க போறதெல்லோ!  சொல்வழி கேட்க மாட்டாள்! இங்க பாத்தியே கோயிலுக்கு தனியாய்க் கும்பிடப் போன இந்த ஐயாவை எப்பிடி முனியடிச்சிருக்கு! முனியெண்டால்அடிச்சிப் போட்டு போயிருக்கும் இது வேற ஒண்டு, இன்னும் மோசமானது. இரத்தக்காட்டேரி!"

 அம்மாவும் மாமியுடன் சேர்ந்து கொண்டாள், "நல்லவைக்கு காலமில்லை, என்ன ஒரு அருமையான சீவன் தெரியுமே?  இந்தப் பிள்ளையைத் தத்தெடுத்துக் கொண்டு போய்  வளர்க்கப் போறன் எண்டு வாய் வாயாய் சொல்லி மாளும்!"

அதிர்ச்சியில் உறைந்து திரும்பியவளுக்கு வீட்டுக்கார ஐயாவின் கட்டிலோடு விழுந்திருந்த ஒரு மண் நிறத்தொப்பியும் இரத்தத்தில் தோய்ந்திருந்தது எல்லா வினாக்களுக்கும் விடை சொன்னது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக எழுதியுள்ளீர்கள் தோழி என்னால் உங்களைப்போல் எழுத முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கமாக இருக்கு. மிக நன்று.

Link to comment
Share on other sites

25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையாக எழுதியுள்ளீர்கள் தோழி என்னால் உங்களைப்போல் எழுத முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கமாக இருக்கு. மிக நன்று.

மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் தாமே எழுதுபவர்களுக்கு பலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கை தேர்ந்த எழுத்துகாரர் மாதிரி இருக்கு, தெய்வில்லாமல் போகின்றது, இடைவிடாமல் வாசிக்க தூண்டுகின்றது.

நீச்சல் அடிப்பது அப்படியே கண் முன்னே விரிகின்றது நேரில் பார்ப்பது போல், தொடர்ந்து எழுதுங்கள்.

எனக்கு நீச்சலென்றால் காணும்

Link to comment
Share on other sites

12 minutes ago, உடையார் said:

நீங்கள் கை தேர்ந்த எழுத்துகாரர் மாதிரி இருக்கு, தெய்வில்லாமல் போகின்றது, இடைவிடாமல் வாசிக்க தூண்டுகின்றது.

நீச்சல் அடிப்பது அப்படியே கண் முன்னே விரிகின்றது நேரில் பார்ப்பது போல், தொடர்ந்து எழுதுங்கள்.

எனக்கு நீச்சலென்றால் காணும்

நன்றி உடையார் ! எனக்கும் நீச்சல் என்றால் போதும்.  சிறு வயதில் அம்மா இல்லாது போன காரணத்தால் அப்பா தான் கீரிமலைக் கடலில் நீந்தும் போது நானும் சேர்ந்து நீந்திப் பழகி விட்டது. இன்று அதுவும் என்னுடைய மனத்தையும் உடலையும் நெறிப்படுத்த உதவுகிறது என்றால் மிகையாகாது.  தொடர்ந்து நீந்துவோம் !😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தக்காட்டேரி நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.......தொடர்ந்து நல்ல ஆக்கங்களைத் தாருங்கள்.......!   😁

Link to comment
Share on other sites

மிக சிறப்பாக கதை கருவை நகர்த்தி இருக்கிறீங்கள். 

ஒரு குறும்படம் பார்த்த உணர்வை உங்கள் எழுத்துகளால் வடிவமைத்து இருக்கிறீங்கள்.

வசன நடையும் காட்சி விபரிப்பும் அருமை.

Link to comment
Share on other sites

காட்ச்சிகளை விபரித்த விதமும் சுவாரிசியமாக கதையை நகர்த்தியுள்ளதும் அருமை. நன்றாக எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் தோழி.

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழினி said:

காட்ச்சிகளை விபரித்த விதமும் சுவாரிசியமாக கதையை நகர்த்தியுள்ளதும் அருமை. நன்றாக எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் தோழி.

 

 

நன்றி ! காத்திரமான பாராட்டுக்கள் எழுத்திற்கு பலம் சேர்க்கும் .

4 hours ago, suvy said:

இரத்தக்காட்டேரி நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.......தொடர்ந்து நல்ல ஆக்கங்களைத் தாருங்கள்.......!   😁

நன்றி ! நிச்சயமாக  முயற்சி செய்வேன்.  காத்திரமான பாராட்டுக்கள் எழுத்திற்கு பலம் சேர்க்கும் 

1 hour ago, தமிழினி said:

காட்ச்சிகளை விபரித்த விதமும் சுவாரிசியமாக கதையை நகர்த்தியுள்ளதும் அருமை. நன்றாக எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் தோழி.

 

 

நன்றி ! நிச்சயமாக  முயற்சி செய்வேன்.  காத்திரமான பாராட்டுக்கள் எழுத்திற்கு பலம் சேர்க்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழி,
அருமையான குட்டிக்கதை. நல்ல தலைப்பு.
உங்கள் முதல் பந்தியிலே கைதேர்ந்த எழுத்தாளரின் பக்குவம் தெரிகிறது.
"சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன"
மிகவும் மென்மையான ரசனை உள்ள வரிகள். 
வாழ்க்கையின் இப்படியான சின்ன சின்ன விஷயங்கள், மிகவும் ரம்மியமானவை இவற்றை பெரும்பாலானோர் காணத் தவறுகின்றனர். இதை பதிவு செய்த உங்களுக்கு நன்றிகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
யாழ்களம் நல்ல பல புதிய எழுத்தாளர்களை உள்வாங்கிக்கொண்டு பரிணாமிப்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

விமர்சனத்திற்கு அன்பும் நன்றியும். தொடர்ந்து எழுத உங்கள் பாராட்டுக்கள் உதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

வணக்கம் தோழி,
அருமையான குட்டிக்கதை. நல்ல தலைப்பு.
உங்கள் முதல் பந்தியிலே கைதேர்ந்த எழுத்தாளரின் பக்குவம் தெரிகிறது.
"சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன"
மிகவும் மென்மையான ரசனை உள்ள வரிகள். 
வாழ்க்கையின் இப்படியான சின்ன சின்ன விஷயங்கள், மிகவும் ரம்மியமானவை இவற்றை பெரும்பாலானோர் காணத் தவறுகின்றனர். இதை பதிவு செய்த உங்களுக்கு நன்றிகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
யாழ்களம் நல்ல பல புதிய எழுத்தாளர்களை உள்வாங்கிக்கொண்டு பரிணாமிப்பதில் மகிழ்ச்சி.

கைதேர்ந்த எழுந்தாளர் யாழுடன் இணைத்துள்ளார்👍

Link to comment
Share on other sites

3 hours ago, உடையார் said:

கைதேர்ந்த எழுந்தாளர் யாழுடன் இணைத்துள்ளார்👍

நன்றியும் அன்பும் !

Link to comment
Share on other sites

சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.நல்ல மொழிநடை.விறுவிறுப்பான கதையோட்டம்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்....

Link to comment
Share on other sites

On 31/7/2020 at 16:32, nige said:

சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.நல்ல மொழிநடை.விறுவிறுப்பான கதையோட்டம்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்....

பாராட்டுகளும் காத்திரமான விமர்சனங்களும் எழுதத் துடிக்கும் என் போன்றவர்களை நிச்சயம் மேலும் மேலும் எழுதத் தூண்டும். மிக்க நன்றி !🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் உருவாக்கமோ உண்மையோ யானறியேன் உங்கள் எழுத்து நடை மூச்சுவிடாமல் வாசிக்க வைத்தது. ரத்தக் காடடேறி .  யாழ் களத்துக்கு நல்ல ஒரு  திறமையான  தோழி ..கிடைத்துள்ளார் . .ரொம்ப பொருத்தமான தலைப்பு "ரத்தக் காடடேறி  ".  அந்தப் பெண்ணின் துணிச்சல்  அருமை

Link to comment
Share on other sites

1 hour ago, நிலாமதி said:

சம்பவம் உருவாக்கமோ உண்மையோ யானறியேன் உங்கள் எழுத்து நடை மூச்சுவிடாமல் வாசிக்க வைத்தது. ரத்தக் காடடேறி .  யாழ் களத்துக்கு நல்ல ஒரு  திறமையான  தோழி ..கிடைத்துள்ளார் . .ரொம்ப பொருத்தமான தலைப்பு "ரத்தக் காடடேறி  ".  அந்தப் பெண்ணின் துணிச்சல்  அருமை

அழகான விமர்சனத்திற்கு நன்றி சகோதரி. இது புனைவு தான், இருந்தாலும் இப்போது இப்படியான விடயங்கள் நடப்பது புதிதல்லவே. இது குறித்த, குழந்தைகளுக்கான விழிப்புணர்வு, ஆண் பெண் வேறுபாடின்றி வழங்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 17:44, தோழி said:

 

ஒரு கிழமையாக காணவில்லை, நலமாக இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி என்னைத் தேடிப் பார்த்தமைக்கு! வேறு சில காரணங்களால் யாழ் இணையத்துடன் இணைய முடியவில்லை. நீங்களும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலத்திற்கு அழைத்துச் சென்ற விவரணைகள்.👍🏾
மோசமான கிழவர்கள் நல்லவர்கள் மாதிரி வேஷம் போட்டு செய்யும் துஷ்பிரயோகங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றது.

இரத்தக்காட்டேரி உயிரையும் எடுத்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

தங்கள் விமர்சனத்துக்கு நன்றி! இவை எம் சமுதாயத்தின் பேசாப்பொருட்கள், இலை மறை காயாக சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறவே செய்கின்றது. விழிப்புணர்வுகள் கொண்டு வரப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 03:51, தோழி said:

 

 

 

சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன.  மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள்  பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள்  என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத்  தவறவில்லை. 

 

 

 

எல்லாம் ஓகே அக்கா 
இந்த பந்தி அப்படியே மருதங்கேணியை அச்சடித்து பதிந்த மாதிரி இருக்கு 
நாங்கள் சொந்தகாரர்கள் என்று நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இது எனது கிராமம், இது எனது கோவிலடி, என் சுதந்திரமான, ஒரேயொரு பொழுது போக்கு மையத்தையும் குளத்தையும் குழப்பியடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவள் ஆணித்தரமாய் நம்பினாள்."

அசத்தலான வரிகள். 

 

Link to comment
Share on other sites

15 hours ago, Maruthankerny said:

எல்லாம் ஓகே அக்கா 
இந்த பந்தி அப்படியே மருதங்கேணியை அச்சடித்து பதிந்த மாதிரி இருக்கு 
நாங்கள் சொந்தகாரர்கள் என்று நினைக்கிறன் 

😀நன்றி !அப்பிடி இருக்குமோ ?  நாங்கள் சாவகச்சேரிப் பக்கம், தெல்லிப்பளை, நீர்கொழும்பு என பல பகுதிகளிலும் இருந்திருக்கிறேன். மருதங்கேணியும் இப்படியான அழகான இடங்களில் ஒன்றாக இருக்கலாம்.

48 minutes ago, theeya said:

"இது எனது கிராமம், இது எனது கோவிலடி, என் சுதந்திரமான, ஒரேயொரு பொழுது போக்கு மையத்தையும் குளத்தையும் குழப்பியடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவள் ஆணித்தரமாய் நம்பினாள்."

அசத்தலான வரிகள். 

 

நன்றி தீயா!  சில விடயங்களை உரத்துச் சொல்வது வழக்கம்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தோழி said:

😀நன்றி !அப்பிடி இருக்குமோ ?  நாங்கள் சாவகச்சேரிப் பக்கம், தெல்லிப்பளை, நீர்கொழும்பு என பல பகுதிகளிலும் இருந்திருக்கிறேன். மருதங்கேணியும் இப்படியான அழகான இடங்களில் ஒன்றாக இருக்கலாம்.

 

நீங்கள் எழுதிய எந்த சூழலும் அழகும் நீங்கள் குறிப்பிடும் 
சாவச்சேரி தெல்லிப்பளை நீர்கொழும்பில் இல்லையே? 

மருதங்கேணியின் அழகை அப்படியே வர்ணித்து உங்கள் எழுத்து இருக்கிறது 
அதுவும் குறிப்பாக சோழகாற்றை குறிப்பிடறீர்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.