Jump to content

கோடை (காலம்) இங்கு - நிழலி


Recommended Posts

கோடை (காலம்) இங்கு
--------------------

கோடை கால இரவுகள்
அழகானவை
பகலில் உருகிய
வெயிலை
இருட்டின் போது
கசிய விடுபவை

நிலவு எறிக்கும்
கோடை இரவொன்றில்
சாலை கடக்கும்
ஒரு பூனையை போல
கவனமாக மழையும்
வந்து போகும்

மழை வந்த சுவடுகளில்
புல்கள் முழைக்கும்
புல் வந்த வேர்களை பற்றி
மண் புழுக்கள் மேலே
வரும்
பின் அதை உண்ண
மைனாக்கள் அலைந்து
திரியும்
அதை பிடிக்க வரும்
பிறாந்துகளால்
வானம் அதிரும்

குருவிகள் கூடு கட்டும்
குலவும்
மழைக் குளிரில்
ஒன்றை ஒன்று கூடும்
முத்தமிடும்
முட்டையிடும்
குஞ்சு பொரிக்கும்
அவற்றின் கீச்சிடலில்
என் காலை
உதிக்கும்

பின் வளவில்
எப்பவோ நட்டு வைத்த
மரக் கன்று பூக்கும்.
குளிருக்குள் புதைந்து கிடந்த
காலத்தை
பற்றி விண்ணாளம்
சொல்லும்.
மண்ணுக்குள் மூவாயிரம்
அறைகளும்
ஒவ்வொரு அறையிலும்
தங்க முட்டைகள்
உள்ளதென்றும் அதைக்
காக்க முயல்கள்
மீசையுடன் திரியும்
என்றும் அவை
சொல்லும்

ஒவ்வொரு வாசலிலும்
மனுசர்கள் நிற்பர்
தம் நிழல் நிலத்தில்
வீழும் அழகை
கொண்டாடுவர்
பின் தாகம் தீர
மதுக் குடிப்பர்

ஒவ்வொரு வீதியிலும்
அரை ஆடை உடுத்திய
தேவதைகள்
உலாச் செல்வர்
கடைக் கண்ணில்
காமம் சொருகி
பார்க்கும் என்னை
நடுச் சாமம்
ஒன்றில் நினைத்து
சிரித்துக் கொள்வர்

கோடை என்பது யாதெனில்
அது ஒரு
மதுக் கிண்ணம்
அழகியின் உதடுகள்
அழுத்தி தரும் முத்தம்
பசி ஆறா காமம்
கால பைரவனின்
கடைக்கண்ணில்
கிடைக்கும் வரம்

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்
மூன்றே மூன்று
மாதம் வரும்
மகரந்தம்

---------------

நிழலி

(July 29, 2020)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகாலம் அழகிய கவிதையும் சிறப்பான வர்ணனைகளும்........!  👍

 

கோடை கால இரவுகள்
அழகானவை
பகலில் உருகிய
வெயிலை
இருட்டின் போது
கசிய விடுபவை.....!

 

கோடைகால இரவுகள்தான் கடுப்பானவை, புழுக்கம் நிறைந்தவை.......பக்கத்திலும் படுக்கேலாது  தள்ளியும் போகேலாது........!     😘

நன்றி நிழலி ......! 

 

Link to comment
Share on other sites

ஒரு கோடை கால முழு அழகையும் இந்த கவியில் கொண்டு வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையும்

அதன் தொழிற்பாடுகளும் அற்புதமானவை

அதிசயங்களை நடாத்துபவை

ரசிக்க ருசிக்க மனமிருந்தால்  போதும்

நன்றி  ரசிப்புக்கும் அதை இங்கே  விதைத்ததற்கும்...

(என் தம்பி கடைக்கண், தேவதைகள், முத்தம், இரவு,..... பற்றி  எல்லாம்  எழுதாமல் விட்டால்தான்  அதிசயம்)😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடையை ரசித்து ருசித்து தனக்கே உரிய பாணியில் கவிவடித்த நிழலிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 15:06, நிழலி said:

கோடை (காலம்) இங்கு
--------------------

கோடை கால இரவுகள்
அழகானவை
பகலில் உருகிய
வெயிலை
இருட்டின் போது
கசிய விடுபவை

நிலவு எறிக்கும்
கோடை இரவொன்றில்
சாலை கடக்கும்
ஒரு பூனையை போல
கவனமாக மழையும்
வந்து போகும்

மழை வந்த சுவடுகளில்
புல்கள் முழைக்கும்
புல் வந்த வேர்களை பற்றி
மண் புழுக்கள் மேலே
வரும்
பின் அதை உண்ண
மைனாக்கள் அலைந்து
திரியும்
அதை பிடிக்க வரும்
பிறாந்துகளால்
வானம் அதிரும்

குருவிகள் கூடு கட்டும்
குலவும்
மழைக் குளிரில்
ஒன்றை ஒன்று கூடும்
முத்தமிடும்
முட்டையிடும்
குஞ்சு பொரிக்கும்
அவற்றின் கீச்சிடலில்
என் காலை
உதிக்கும்

பின் வளவில்
எப்பவோ நட்டு வைத்த
மரக் கன்று பூக்கும்.
குளிருக்குள் புதைந்து கிடந்த
காலத்தை
பற்றி விண்ணாளம்
சொல்லும்.
மண்ணுக்குள் மூவாயிரம்
அறைகளும்
ஒவ்வொரு அறையிலும்
தங்க முட்டைகள்
உள்ளதென்றும் அதைக்
காக்க முயல்கள்
மீசையுடன் திரியும்
என்றும் அவை
சொல்லும்

ஒவ்வொரு வாசலிலும்
மனுசர்கள் நிற்பர்
தம் நிழல் நிலத்தில்
வீழும் அழகை
கொண்டாடுவர்
பின் தாகம் தீர
மதுக் குடிப்பர்

ஒவ்வொரு வீதியிலும்
அரை ஆடை உடுத்திய
தேவதைகள்
உலாச் செல்வர்
கடைக் கண்ணில்
காமம் சொருகி
பார்க்கும் என்னை

நடுச் சாமம்
ஒன்றில் நினைத்து
சிரித்துக் கொள்வர்

கோடை என்பது யாதெனில்
அது ஒரு
மதுக் கிண்ணம்
அழகியின் உதடுகள்
அழுத்தி தரும் முத்தம்
பசி ஆறா காமம்
கால பைரவனின்
கடைக்கண்ணில்
கிடைக்கும் வரம்

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்
மூன்றே மூன்று
மாதம் வரும்
மகரந்தம்

---------------

நிழலி

(July 29, 2020)

நிழலி,  மிக மிக அருமையாக.... ரசித்து, இந்தக் கோடை காலத்துக் கவிதையை... எழுதியுள்ளீர்கள். எதனை, வித்தியாசமாக  மேற்கோள் காட்டி, எழுதுவது என்று நான், தடுமாறியதால்... மொத்தக் கவிதையையும் ரசித்தேன். :)

நீல  நிறம்,  அடித்த வரிகளில்.. ஒரு துயரச்  சம்பவம், 
எனக்கு, நிகழ்ந்ததை... இன்றும் மறக்க  முடியாது.    🤩

33 வருடங்களுக்கு, முன்பு... நான், திருமணம் செய்யாத காலத்தில்...
கோடை காலத்தில்... நகரத்து  உள்ளூர் வீதியில்... 
கார் ஓடிக்  கொண்டு இருக்கும் போது....
வீதியின் கரையில்..   பாதசாரிகள், நடந்து செல்லும் பாதையில்...
ஒரு அழகி..  "மினி  ஸ்கேட்டுடன்"  அழகிய நடையுடன் செல்வதை... 💖
ஒரு வினாடிக்கும், குறைவான நேரத்தில் தான்... 🙃 திரும்பிப் பார்த்தேன். 

அப்ப.... "டமார்"  💥 என்று ஒரு சத்தம் கேட்டது.  
என்ரை.. கார், முன்னுக்குப் போனவரின்... 
புது  "போர்ஷே"  காரை அடித்து விட்டது.

அதுக்குப் பிறகு... கார் ஓடும் போது... 
பெண்களைப்  பார்க்கப் படாது, என்ற முடிவுக்கு வந்து...
இன்று வரை.. அதனை கடைப் பிடிக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 21:06, நிழலி said:

கோடை (காலம்) இங்கு
--------------------

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்
மூன்றே மூன்று
மாதம் வரும்
மகரந்தம்

நல்ல கவிதை, பாராட்டுக்கள்👍

நீங்கள் கொடுத்து வைத்த து அவ்வளவுதான், அவுஸ் வருங்கள் வருடமுழுக்க ரசிக்கலாம்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நிழலி,  மிக மிக அருமையாக.... ரசித்து, இந்தக் கோடை காலத்துக் கவிதையை... எழுதியுள்ளீர்கள். எதனை, வித்தியாசமாக  மேற்கோள் காட்டி, எழுதுவது என்று நான், தடுமாறியதால்... மொத்தக் கவிதையையும் ரசித்தேன். :)

நீல  நிறம்,  அடித்த வரிகளில்.. ஒரு துயரச்  சம்பவம், 
எனக்கு, நிகழ்ந்ததை... இன்றும் மறக்க  முடியாது.    🤩

33 வருடங்களுக்கு, முன்பு... நான், திருமணம் செய்யாத காலத்தில்...
கோடை காலத்தில்... நகரத்து  உள்ளூர் வீதியில்... 
கார் ஓடிக்  கொண்டு இருக்கும் போது....
வீதியின் கரையில்..   பாதசாரிகள், நடந்து செல்லும் பாதையில்...
ஒரு அழகி..  "மினி  ஸ்கேட்டுடன்"  அழகிய நடையுடன் செல்வதை... 💖
ஒரு வினாடிக்கும், குறைவான நேரத்தில் தான்... 🙃 திரும்பிப் பார்த்தேன். 

அப்ப.... "டமார்"  💥 என்று ஒரு சத்தம் கேட்டது.  
என்ரை.. கார், முன்னுக்குப் போனவரின்... 
புது  "போர்ஷே"  காரை அடித்து விட்டது.

அதுக்குப் பிறகு... கார் ஓடும் போது... 
பெண்களைப்  பார்க்கப் படாது, என்ற முடிவுக்கு வந்து...
இன்று வரை.. அதனை கடைப் பிடிக்கின்றேன். :grin:

😂🤣

அப்ப கார் ஓட்டாத போது உங்கடை வேலைகள் கன கச்சிதமாக நடக்கின்றது போலும் 33 வருடங்களாக😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 15:06, நிழலி said:

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்

இயற்கை எமது நண்பன் போலே அழகிய கவிதை நிழலி.

Link to comment
Share on other sites

பின்னூட்டம் இட்ட, பாராட்டிய மற்றும் ஊக்குவிப்பு புள்ளிகளை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. இங்கு கோடை தன் இறுதிச் சுற்றிற்கு அண்மித்துக் கொண்டு இருக்கின்றது. மழையும் முகிலும் மப்பும் மந்தாரமுமாக கடந்த இரண்டு நாட்கள் கழிகின்றன. இலையுதிர்காலத்துக்குள் எல்லா உணவையும் வேர்களுக்குள் சேகரித்து வைத்து விட வேண்டும் என மரங்களும் இலைகளும் வேகமாக சரசரவென இயங்கிக் கொண்டு இருக்கின்றன. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2020 at 10:56, தமிழ் சிறி said:

நீல  நிறம்,  அடித்த வரிகளில்.. ஒரு துயரச்  சம்பவம், 
எனக்கு, நிகழ்ந்ததை... இன்றும் மறக்க  முடியாது.    🤩

33 வருடங்களுக்கு, முன்பு... நான், திருமணம் செய்யாத காலத்தில்...
கோடை காலத்தில்... நகரத்து  உள்ளூர் வீதியில்... 
கார் ஓடிக்  கொண்டு இருக்கும் போது....
வீதியின் கரையில்..   பாதசாரிகள், நடந்து செல்லும் பாதையில்...
ஒரு அழகி..  "மினி  ஸ்கேட்டுடன்"  அழகிய நடையுடன் செல்வதை... 💖
ஒரு வினாடிக்கும், குறைவான நேரத்தில் தான்... 🙃 திரும்பிப் பார்த்தேன். 

அதுக்கு ஏன் திருமணத்தின் முன் என்கிறீர்கள்.

இப்ப பார்த்தாலும் தப்பே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகும் எழிலுமாய் கடந்து செல்லும் கோடை காலம் . காட்சிகள் நாமும் கடந்து எம்மையும் கடந்து கலந்து இயற்கையின் விளையாட்டின் அற்புதம். எளிமையும் அழகுமாய் கவிதை நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 06:06, நிழலி said:

கோடை என்பது யாதெனில்
அது ஒரு
மதுக் கிண்ணம்
அழகியின் உதடுகள்
அழுத்தி தரும் முத்தம்
பசி ஆறா காமம்
கால பைரவனின்
கடைக்கண்ணில்
கிடைக்கும் வரம்

ஏசியில் இருந்து வேலை செய்தா இப்படித் தான் சொல்லத் தோன்றும்.

எத்தனை பேர் நெருப்பில் போட்ட மசுக்குட்டி மாதிரி துடித்துப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுமாதம் உறைபனிக்குள் இருந்து கோடைக்காக ஏங்குவதும், கோடை முடியும்போது மீண்டும் மனம் அடுத்த கோடைக்காக தயாரிப்பதும் என்று காலம் உருள்கின்றது.

சூரியன் எறி(ரி)க்கும் நாட்களில் வீட்டினுள் நானும் இருப்பதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்களிற்கு இந்த கோடைகாலம் ஒரு மகிழ்ச்சியான காலம். வருடம் முழுவதும் பனியில் இருக்கும் இவர்களுக்கு சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படும் சுகம் இதமாக இருக்கும்.
ஆனால் இன்னொரு பகுதியில் வாழுபவர்களுக்கோ எப்பொழுது இந்த வெப்பம் எங்களை கடந்துபோகும் என்று தவிப்போம். 
வாகனத்தில் இருக்கும் வெப்பமானி 47c. அல்லது 48c ஐ காட்டுகின்றது. இதைவிட கொடுமையானது வாளியில் இருக்கும் ஈரப்பதன். ஒரு 5 நிமிடம் நடந்தாலே வியர்வையினால் உடலில் உள்ள உப்புக்கள் / நீர்தன்மை என்பன ஆவியாகி போகின்றன.     

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.