Jump to content

வித்தியாதரன்: ஊருக்கே உபதேசம்… மற்றதெல்லாம் வியாபாரம்!


Recommended Posts

இது தேர்தல்காலம்.

 

625.500.560.350.160.300.053.800.900.160.

 

அரசியல்வாதிகளும், தொண்டர்களும் பரபரப்பாக இருப்பதற்கு ஈடாக- இன்னும் சொல்லப் போனால் அதைவிடவும் அதிகமாக- பரபரப்பாக பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மக்களை பரபரப்பாகவும், சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வைத்திருக்க வேண்டியவர்கள் அவர்களல்லவா.

ஆகவே செய்திகளை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக, அவர்களின் காலடி தேடியே செய்திகள் வந்து கொண்டிருக்கும் காலம்.

இவர்கள் ஒரு வகை பத்திரிகையாளர்கள்.

இன்னொரு வகை பத்திரிகையாளர்களும் இருப்பார்கள். அவர்கள் கல்லாப் பெட்டியை நிறைப்பதில் குறியாக இருப்பார்கள். சாம,தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமிருந்து பிடுங்குவதில் குறியாக இருப்பார்கள். எப்படியோ, ஒரு தேர்தலின் முடிவில் பெட்டியை நிறைத்து, சிறிது காலத்திற்கு செட்டில் ஆகிவிடுவது இலக்கு.

அரசியல்வாதிகள் தேர்தல் விளம்பரம் தரவில்லையென்றால், அவ்வப்போது ஒரு அடி கொடுக்க வேண்டும்… ஓடிவந்த விளம்பரம் தருவார்கள் என்பது அறப்பழசான ஒரு ஊடக உத்தி.

இன்றைய காலைக்கதிர் பத்திரிகையை படித்தபோது, இதை எழுத வேண்டுமென தோன்றியது.

உண்மையில் காலைக்கதிர் பத்திரிகை தமிழ் சூழலில் செல்வாக்கு செலுத்தவதாகவோ, வெற்றிகரமானதாகவோ அமையவில்லை. அப்படியானால், எதற்காக அது பற்றி எழுத வேண்டுமென தோன்றும்.

தன்னை ஊடக ஜாம்பவான் என சொல்லிக்கொள்ளும் வித்தியாதரன் அங்கிருக்கிறாரே! ஆகவே சில விடயங்களை பேச வேண்டும்.

தனக்கு அடையாளம் ஏற்படுத்தி தந்த உதயன் பத்திரிகை பற்றியும், அதன் உரிமையாளர் பற்றியும், தனக்கு ஆசனம் வழங்க மறுத்த மாவை சேனாதிராசா பற்றிய விமர்சனங்களையும் மட்டுமே செய்யும் பத்திரிகையாக தனது ஊடகத்தை மாற்றியிருந்தார்.

ஊடகவியலாளர்கள் பேனா போராளிகள் என்ற கருத்துருவாக்கத்தை வித்தியாதரனும் அங்கம் வகித்த உதயன் குழுமம், தமிழ் சமூகத்தில் அதிகம் உருவாக்கியது. ஆனால், வித்தியாதரன் போராளியாக இருக்கிறாரா என்பதே இதிலுள்ள சுவாரஸ்யமும், முரண்நகையும்.

அரசியல் பற்றியும், அரசியல் ஒழுக்கம் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் ஊடகத்தின் வாயிலாக விளாசும் வித்தியாதரனின், மறுபக்கம் தூயதா என்ற கேள்வியை இன்று எழுப்ப வேண்டியிருந்தது.

இன்றைய காலைக்கதிர் பத்திரிகையில், அவரது பத்தியில் வேட்பாளர் சரவணபவனின் உரையொன்றை முன்னிறுத்தி அவர் எழுதியுள்ள விடயமே இந்த கேள்வியை எழுப்புகிறது.

சரவணபவன் நேற்று பேசிய பேச்சொன்றை மையமாக வைத்து வித்தியாதரன் தனது கருத்துக்களை எழுதியுள்ளார்.

யுத்தகாலத்தில் அரசுடன் இருந்த தரப்புக்களிற்கு வாக்களிக்கப் போகிறீர்களா என சரவணபவன் எழுப்பிய கேள்விதான் விவகாரம்.

சரா எந்த தரப்பையும் குறிப்பிடாத போதும், அவர் ஈ.பி.டி.பியை குறிப்பிடுவதை போல புளொட்டை அடிக்கிறார் என சொல்லி, தனது கற்பனை குதிரையையும் தட்டிவிட்டு, மானே தேனே போட்டு எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகள் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை இணைத்தபோதும் புளொட்டை இணைக்கவில்லையென ஒரு தவறான தகவலை எழுதியிருந்தார்.

தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் என குறிப்பிடுபவர்களின்- விடுதலைப் புலிகள் பற்றிய மிகப்பெரிய பலவீனமே இதுதான். அவர்கள் நினைப்பார்கள் விடுதலைப் புலிகளை பற்றி தாமே அதிகமாக தெரிந்திருப்போம் என. ஆனால், புலிகளின் கட்டமைப்பை புரிந்தவர்களிற்கு, அவர்கள் சிறு துளியென்பது தெரியும்.

புலிகளின் அரசியல்துறை பிரமுகர்களிற்கு இயல்பாக விழுந்த ஊடக வெளிச்சம் காரணமாக, அவர்கள் அமைப்பின் முடிவெடுக்கவல்ல பிரதிநிதிகள் என பொதுப்புத்தியில் அபிப்பிராயம் தோன்றும். ஆனால், அமைப்பின் கட்டமைப்பு ரீதியாக- உள்ளார்ந்த விபரங்களை அறிந்தவர்களாக- இருக்க மாட்டார்கள்.

வன்னியிலிருந்த அரசியல் ஆய்வாளர்களிற்கும், வன்னிக்கு வெளியிலுள்ள பத்திரிகையாளர்களிற்கும் நேர்ந்த விபத்திது. அதில் வித்தியாதரனும் விதிவிலக்கல்ல. அவர் தனது விடுதலைப் புலிகள் தொடர்பு பற்றி பேசிவது, சீமானிற்கு அடுத்ததாக புலிகளை பற்றி அடித்து விடுவது அவராகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, புளொட்டையும் இணைக்க புலிகள் முயன்றார்கள். ஆனால் புளொட் அப்போது அதற்கு சம்மதிக்காததற்கு வேறு காரணமிருந்தது. விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகள் என்ற கோசத்தை முன்னிறுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பை புளொட் கோரியது. ஒருவகையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்தடைந்துள்ள இடமும் அதுதான். அப்படிப் பார்த்தால் இன்றைய கூட்டமைப்பில்- புத்திசாலித்தனமான- நடைமுறை சாத்தியமான அணுகுமுறையை கையாண்ட தரப்பாக புளொட் இருந்தது என்பதல்லவா உண்மை!

அதன் பின்னரும் புளொட் அமைப்பிற்கும், புலிகளிற்குமான பல்வேறு தொடர்புகள் இருந்தன. அதையெல்லாம் “விசயமறிந்தவர்கள்“ அறிவார்கள். இப்பொழுது, புளொட் ஏன் கூட்டமைப்பிற்குள் வரவில்லை, புளொட் என்ன செய்தது என்பதை விளக்குவதல்ல நமது நோக்கு. அந்த தேவையும் நமக்கில்லை.

அதைச் சொல்ல வித்தியாதரனிற்கு தகுதியுண்டா என்பதே கேள்வி!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புளொட் சார்பில் போட்டியிட ஆசனம் தருமாறு, அந்த கட்சியினரை விரட்டி விரட்டி கேட்டார் என்பதை பொறுப்புடன் பதிவு செய்கிறோம்.

கலாநிதி ஆறுதிருமுருகனிற்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனிற்கும் நல்ல உறவுண்டு. அதை பயன்படுத்தி, ஆறுதிருமுருகனை அணுகி, புளொட்டில் தற்போது கஜதீபனிற்கு வழங்கப்பட்டுள்ள ஆசனத்தை தனக்கு ஒதுக்கித் தருமாறு வித்தியாதரன் கேட்டார். வெற்றியடைந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி மாறி தமிழ் அரசு கட்சியிடமோ அல்லது வேறு கட்சிகளிடமோ போக மாட்டேன் என்றும் உத்தரவாதம் கொடுத்தார். ஆறு திருமுருகனும் அந்த கோரிக்கையை சித்தார்த்தனிடம் தெரிவித்தார். எனினும், கட்சிக்குள்ளிருந்த வளர்க்கப்பட்ட கஜதீபனிற்கு ஆசனம் வழங்குவதில் உறுதியாக இருந்தார் சித்தார்த்தன்.

வித்தியாதரன் அத்துடன் நிற்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் முக்கிய ஊடகமொன்றின் முதலாளியிடம் ஓடினார். (அவரது பெயரை அவர் விரும்பாமல் வெளியிடுவது முறையல்ல என்பதால் முதலாளி என்பதுடன் நிறுத்தி விடுகிறோம். ஆனால், அந்த முதலாளி யாரென்பது வித்தியாதரனிற்கு தெரியும்) புளொட் அமைப்பின் இரண்டாவது ஆசனத்தை தனக்கு தருமாறு சித்தார்த்தனிடம் பேசிப்பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

இவையெல்லாம் 90களில் நடந்ததல்ல. 3,4 மாதங்களின் முன்னர் நடந்தது. புளொட் மீது வித்தியாதரன் வைத்த விமர்சனங்கள் எல்லாம் அந்த 3,4 மாதங்களின் பின்னர் நடந்ததா?

வித்தியாதரன் அரசியல் பதவியொன்றை பெற ஆலாய் பறக்கும் துயர வரலாறு நெடியது. அது கிட்டாத மனக்கிலேசம் அவது எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு பத்திரிகையை அச்சிட்டு, தனது மனக்கிலேசங்களை கொட்டிக் கொண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கு நல்லதல்ல.

வித்தியாதரன், தனது நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் வாய்ப்பை சரவணபவன் தட்டிப்பறித்து விட்டார் என கூறுவது உண்மையில்லாதது. அதை அண்மையில் மாவை சேனாதிராசாவே பகிரங்கமாக தெரிவித்திருந்தார். “மச்சானை வேட்பாளராக போடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை“ என வித்தியாதரன் தன்னிடம் சொன்னதை மாவை சேனாதிராசா பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

சரவணபவனிற்கும்- வித்தியாதரனிற்குமான பிரச்சனை எம்.பி ஆசனமல்ல. அப்படி வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையதுவல்ல.

2010ஆம் ஆண்டு சரவணபவன் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியபோது, வித்தியாதரன் அதை ஆதரித்தார். சரவணபவன் அரசியலுக்குள் நுழைந்தால், உதயன் நிறுவனம் தன்னிடம் வருமென ஒரு கணக்குப் போட்டார். அது நடக்கவில்லை. அதுதான் இரு தரப்பிற்குமான மோதல்.

தனிப்பட்ட விவகாரங்களை எழுதுவது முறையல்ல. ஆனால், குடும்பரீதியாக சரவணபவன் செய்த உதவிகளும், கடமையும் மிகப்பெரியது.

உதவி செய்வதையும் சரியானவர்களிற்கு செய்ய வேண்டுமென்பதை சரா இப்பொழுது புரிந்திருப்பார்.

ஆனால், வடக்கு முதலமைச்சர் பதவி போன்ற பதவிகளை வித்தியாதரன் எதிர்பார்ப்பது நியாயமல்ல. அதற்கு பொருத்தமானவர்களையே நியமிக்கலாம். தன்னை முதலமைச்சராக்கவில்லையென்றும், மாவையில் அவர் காய்வது நியாயமற்றது.

ஆனால், இன்று சம்பந்தன் புராணம் பாடும் வித்தியாதரனின் கதிரை கனவை உண்மையில் கலைத்தவர் சம்பந்தன்தான். இந்த தேர்தலில் வித்தியாதரனை களமிறக்கலாமென, சீ.வீ.கேயும் மாவையும் திருகோணமலைக்கு சென்று சம்பந்தனிடம் சொன்னார்கள். “அவருக்கு அதற்கான தகுதியில்லை“ என சம்பந்தன் ஒரே வசனத்தில் கதையை முடித்தபோது, பக்கத்தில் எம்.ஏ.சுமந்திரனும், துரைராசசிங்கமும் மௌனமாக இருந்தார்கள். ஒரு வார்த்தை பேசவில்லை.

2010 நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை, 2013 மாகாணசபை தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை, 2015 நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை. இந்த துயர வரலாறு தொடர்ந்த கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் யாழ் மாநகரசபையிலும் ஆசனம் கிடைக்கவில்லை.

இதைதவிர, அவர் ஆசனத்திற்காக ஒரே கட்சியில் போட்டியிட முயற்சித்தவருமல்ல.

விக்னேஸ்வரன் அணியில் தலைகீழாக நின்று பார்த்தார். ரில்கோ விடுதியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு. விக்னேஸ்வரனிற்கு அருகில் காலியாக இருந்த கதிரையில் உட்கார்ந்த வித்தியாதரன், “ஐயா.. நாங்களும் இப்பிடியே எவ்வளவு நாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறது. இதுக்குள்ள (அரசியலுக்குள்) வர வேண்டாமா? ஏதாவது வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்“ என தெரிவித்தார். விக்னேஸ்வரன் சிரித்து சமாளித்து விட்டார்.

பின்னர், தனக்கு நெருக்கமானவர்களிடம், “ஐயாவை சந்தித்தேன். இப்படியே எழுதிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? அரசியலுக்கு வாருங்கள்“ என அழைத்தார் என சொல்லித்திரிந்தார். விக்னேஸ்வரனிடமிருந்து எந்த சமிக்கையும் வராததையடுத்து, விக்னேஸ்வரனிற்கு நெருக்கமான ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விக்னேஸ்வரன் தன்னை அரசியலுக்கு அழைத்தார், இப்பொழுது எனக்கு வாய்ப்பு தருவாரா என கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

அந்த இடைத்தொடர்பாளரும் விக்னேஸ்வரனை அழைத்து, அவரை அரசியலுக்கு அழைத்தீர்களா?, அவர் காத்திருக்கிறார் என்றார்.

விக்னேஸ்வரன் பெரிதாக சிரித்துவிட்டு, “ஐயா.. நாங்களும் இப்பிடியே எவ்வளவு நாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறது. இதுக்குள்ள (அரசியலுக்குள்) வர வேண்டாமா? ஏதாவது வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்“ என வித்தியாதரன் கேட்டதை குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்னொரு தொடர்பாளர் மூலம் விக்னேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகவும், தான் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிடும் ஐடியாவையும் வித்தியாதரன் கொடுத்தனுப்பினா்.

ஆனால், விக்னேஸ்வரன் அணியில் வித்தியாதரனிற்கு கதவு திறக்கவில்லை.

மீண்டும் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பில்- சுமந்திரன் அணியாக- செயற்பட்டு வருகிறார்.

இடையில் கோட்டாவின் சிலந்தியாக- ஜனநாயக போராளிகள்- செயற்பட்டது ஊரறிந்தது.

இன்றைய பத்திரிகையில், ஈ.பி.டி.பி கொலைகளை புரிந்தது என நினைத்து சரா பேசியதாக, சரா சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் கண்டுபிடித்திருந்தார் வித்தியாதரன்.

ஈ.பி.டி.பி- வித்தியாதரன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களுமுள்ளது.

காலைக்கதிர் அச்சிடப்பட்ட அச்சு இயந்திரம் ஈ.பி.டி.பியினுடையது. தினமுரசு பத்திரிகை நிறுத்தப்பட்ட பின்னர், அந்த அச்சு இயந்திரம் சும்மா இருந்தது. வித்தியாரன் அதை வாங்குவதாகவும், குறிப்பிட்ட தவணையில் பணம் தருவதாகவும் கூறி, சுமார் 75 இலட்சம் ரூபா மதிப்புள்ள காசோலையை கொடுத்தார். இது நடந்து வருடங்கள் கழிந்து விட்டது. ஒரு சதம் பணம் கொடுக்கப்படவில்லை. டக்ளஸ் தேவானந்தா கேட்கவுமில்லை. அந்த காசோலை இன்னமும் டக்ளசிடமே உள்ளது.

எல்லா தமிழ் அரசியல்வாதிகள் மீதும் ஏதோவொரு விமர்சனமுள்ளது. டக்களஸ் தேவானந்தா மீதும் உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகளில் ஆயுத இயக்கங்களின் வழிவந்த அரசியல் தலைவர்களிடம் மட்டுமே உள்ள இயல்பு- உதவி தேவைப்படுபவர்களிற்கு பிரதியுபகாரம் பாராமல் வழங்குவது. அது டக்ளசிடமும் உள்ளது. சித்தார்த்தனிடமும் உள்ளது. பலருக்கு கசப்பென்பதால், உண்மை இல்லாமலாகி விடாதல்லவா.

இன்றைய வலம்புரி பத்திரிகைக்கும் டக்ளஸ் உதவினார். அதேபோல, வித்தியாதரனிற்கு பிறிதொரு உதவியும் செய்தார்.

தனக்கு வாழ்க்கை நெருக்கடியாக இருப்பதாக இன்னொரு சந்தர்ப்பத்தில் டக்ளசை அணுகினார் வித்தியாதரன். அப்போது டக்ளஸ் ஆளுந்தரப்பில் இல்லை. தனது கையறு நிலையை சொன்னார். அதைவிட சோகக்கதையை வித்தியாதரன் சொன்னார்.

யாழ் நகரத்தில் கஸ்தூரியார் வீதியில் கட்டப்பட்ட மாடிக்கட்டட தொகுதியில் ஒரு கடையை வித்தியாதரனிற்கு டக்ளஸ் வழங்கினார். அதை வேறு யாரும் வெளியாருக்கு நீண்ட வாடகைக்கு வழங்காமல், குறுகிய வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தை வாழ்க்கைச் செலவிற்கு பயன்படுத்தும்படி. அவ்வளவுதான். டக்ளஸ் அதன்பின்னர் அந்த விடயத்தில் தலையிடவில்லை. ஓரிரு மாதத்தில், வித்தியாதரன் அந்த கடையை 99 வருட குத்தகைக்கு வழங்கிய தகவல்தான் டக்ளசிற்கு வந்தது!

இப்படி நீண்ட கதைகள் உள்ளன.

அண்மையில் வடக்கு ஆளுனர் பதவியை பெற முயன்றது லேட்டஸ்ட் தகவல். ஜனாதிபதி தேர்தல் வரை கோட்டா புரளியை பத்திரிகையில் செய்து கொண்டிருந்து விட்டு, தேர்தல் முடிவு வெளியான ஓரிரு நாளில் வடக்கு ஆளுனர் பதவியை குறிவைத்தார். ஆளுனர் பட்டியலில் தனது பெயரும் உள்ளதாக ஒரு செய்தியை அவரே உலாவவிட்டு, அதை மஹிந்தரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதற்காக கோட்டாவை சந்திக்க முயன்றது, கூட்டமைப்பு பிரமுகர் தூது சென்றதெல்லாம் பெரிய கதைகள்.

இன்னும் சுவாரஸ்யமாக, ஹால்டனிலிருந்து மாதாந்தம் வந்த பணம் தொடக்கம் இப்போது பாயும் பணம் வரையான தகவல்களும் உள்ளன.

சரவணபவனின் பெயர் குறிப்பிடாமல் ஊடக வியாபாரியென வித்தியாதரன் குறிப்பிடுவதுண்டு. ஆனால், உண்மையான ஊடக வியாபாரி யார்?

 

http://www.pagetamil.com/137537/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் ஊடக வியாபாரி இல்லை எனச் சொல்ல வருகிறதா pagetamil ?😀

இந்தக் கட்டுரை மட்டும் என்ன ஊடக தர்மம் கருதி எழுதப்பட்டதா 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்திக்கு எதிராக எழுதும் போர்வையில், 

புளொட்டிற்கும் வெள்ளையடிச்சாசு டக்கிளசுக்கும் அடிச்சாச்சு...

புளொட் 2009 வரை இராணுவ கைக்கூலியாக ஒட்டுக்குழுவாக செயற்பட்டது   அனைவருக்கும் தெரிந்ததே.

புளொட் விடுதலை புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்க மாட்டினம் ஆனால் புலிகளுடன் பல்வேறு தொடர்பில்...  அதை வியசமறிந்தவர்கள் வேறு அறிவார்கள்..

யாருக்கையா காது குத்துகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

வித்திக்கு எதிராக எழுதும் போர்வையில், 

புளொட்டிற்கும் வெள்ளையடிச்சாசு டக்கிளசுக்கும் அடிச்சாச்சு...

புளொட் 2009 வரை இராணுவ கைக்கூலியாக ஒட்டுக்குழுவாக செயற்பட்டது   அனைவருக்கும் தெரிந்ததே.

புளொட் விடுதலை புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்க மாட்டினம் ஆனால் புலிகளுடன் பல்வேறு தொடர்பில்...  அதை வியசமறிந்தவர்கள் வேறு அறிவார்கள்..

யாருக்கையா காது குத்துகிறீர்கள்

இப்ப புலிகள்  நல்லவர்களா  கெட்டவர்களா?

புலிகள்  செய்தது சரியா பிழையா?

புலிகள் ???

புலிகள் ???

இது  தான் கேள்விகளாக

மற்றவர்கள்  அனைவரும்  புனிதர்கள்

காவல்  தெய்வங்கள்

அவை தான் அப்பவே  சொல்லிட்டினம்  இல்ல???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.