Jump to content

விடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி


Recommended Posts

image_a983882575.jpg
 

40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன். எமது இளமைகாலத்தை தொலைத்து விட்டோம். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.

பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பொறுப்பாளராக செயற்பட்டு, தற்போது இராணுவப்பிடியில் உள்ள கே.பி என அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன்.

கொழும்பு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்திருந்தார்.

கேள்வி: இயல்பு வாழ்வைப் பாதிக்கும் பல சிறிதளவிலான முயற்சிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனப்படும் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் இவற்றுக்குப் பின்னால் இருக்கலாமென நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: வட, கிழக்கிலுள்ள, இளைஞர்கள், பெரும்பான்மையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இப்படியான முயற்சிகளில் இறங்குவதை விரும்புவதில்லை. தமது வாழ்நாள் முழுவதும் , முற்றிலும் பலனற்ற ஒரு விடயத்துக்காக அவர்கள் போராடி நொந்துபோயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வேலையின்மை காரணமாகவும், வறுமை காரணமாகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் பொறிக்குள் வீழ்ந்து இப்படியான முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். இப்படியான சம்பவங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் சட்டபூர்வ இருப்புக்கு உதவி செய்யலாம். வடக்கில் இன்னும் வன்முறை நிகழ்கிறது என்பதை காட்டி, இலங்கைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர்கள் தமது அரசாங்கங்களுக்குக் காட்டவேண்டும்.

ஆனால் இந்த முயற்சிகள் பயனற்றவை. ஏணெனில், அதற்கான ஆதரவோ அல்லது போதுமான சக்தியோ மக்களிடம் இல்லை. இப்படியான முயற்சிகளில் இறங்காமலிருப்பதற்கு இங்குள்ள இளைஞர்களுக்கும், இதர மக்களுக்கும் போதுமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களில் இதுவுமொன்று.

இன்னொரு வகையில், ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சியில், விடுதலைப் புலிகள் மீளுருவாவதற்கான வெளி இல்லை. ஏனெனில் அவர் மிகவும் திறமையோடு கட்டமைத்திருக்கும் பாதுகாப்பு அமைப்பு எதிர்கால ஆபத்துக்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிருடன் வைத்திருப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் நோக்கமாக இருப்பின், அவர்களுக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்னவாகவிருக்கும்?

பதில்: அவர்களது முயற்சிகள் வெற்றிபெறப் போவதில்லை. அவர்கள் வாழும் நாடுகளில் அவர்களின் சுய இருப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இவை. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்பவர்கள் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் ரகசியமல்ல.

இலங்கையில் குழப்பங்களை விளைவிக்காமல் அவர்களால் ஐரோப்பாவில் தொடர்ந்தும் வாழ்வதற்குச் சந்தர்ப்பங்களில்லை. வடக்கு கிழக்கு மக்களின் பரிதாப நிலையை விற்பதனால் தான் அவர்களால் அங்கு சீவிக்க முடிகிறது. அங்கு வாழும் மக்களுக்கு வடக்கு கிழக்கின் கள நிலவரம் தெரியாது. அதனால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்களுக்குத் தானம் செய்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு நான் தரும் செய்தி, அவர்கள் உண்மையிலேயே வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற விரும்பினால், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை உரிய வழிகளில் தானம் செய்யுங்கள். போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களது தானங்களைச் செய்யலாம்.

பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தனிப்பட்ட முறையில், நான் பலருக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்.

போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கோ அல்லது இளையவர்களுக்கோ நல்ல கல்வியைக் கொடுத்தலும், வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு சமூக நல, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்கி அம் மக்கள் தங்கள் கால்களில் நிற்க வழிசெய்தலுமே புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போதைக்குச் செய்ய வேண்டியது என்பதையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன். மக்கள் ஆதரவளிக்காதபோது இன்னுமொரு ஆயுதப்போராடம் பற்றிச் சிந்திப்பது பலனற்றது.

கேள்வி: சென்ற வருடம் இந் நாடு தீவிரவாதத்தின் மிரட்டலை ஒரு தடவை சந்தித்தது. மிகவும் சிரமப்பட்டு இந்நாடு பெற்றுக்கொண்ட சமாதானத்தை அது சீரழித்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் அது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் மட்டும், இந் நாட்டின் பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்துவார். அப்படியான படுகொலைகள் இனிமேல் நடாதவாறு அவர் பார்த்துக்கொள்வார். அது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ இலங்கை என்ற இந்தத் தாய்நாட்டில் ஒருவருக்கும் தீங்கு இழைக்கப்படமாட்டாது. அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.

கேள்வி: நீங்கள் ஏன் அவர் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? அவர் உங்கள் உயிரைக் காப்பாற்றியவர் என்ற வகையிலா?

பதில்: ஆம். நான் அவர் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். மக்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவர் செய்து முடிப்பார். நான் அவரை அவ்வப்போ சந்தித்திருக்கிறேன். எங்கள் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அவர் அடிக்கடி பேசுவார். இந் நாட்டுக்குச் சரியான தலைவர் அவர் தான்.

சரியான பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட சரியான தலைவர் அவர். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.

அவருக்குப் பயப்படும் அரசியல்வாதிகளால் அவரைப் பற்றிய பொய்யான விடயங்கள் பரப்பப்படுகின்றன. இருப்பினும், அக் கதைகளினால் ஏமாற வேண்டாம், அவர் எல்லா சமூகங்களுக்கும் தலைவர் என நான் எனது மக்களுக்குக் கூறி வைத்துள்ளேன். அவர் இந் நாட்டை மிகவும் ஆழமாக நேசிக்கிறார். புதிய வழிகளில் இந்நாட்டை அபிவிருத்தி செய்து இந்நாட்டு மக்களின் வாழ்வை முன்னேற்ற நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

கேள்வி: வடக்குக்கு புதிய அரசியல் தலைமை தேவை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிகம் இளையவர்கள் அரசியலில் பங்குபெறவேண்டுமெந்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா?

பதில்: பல வித்தியாசமான தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள். அதே போன்ற மாற்றங்களை நாம் வடக்கிலும் எதிர்பார்க்கிறோம். பல தசாப்தங்களாக, வடக்கில், தமிழ் மக்கள் ஒரே அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

வடக்கு கிழக்கில் புதிய அரசியல் தலைமைக்காக பாரிய வெற்றிடமொன்று இருப்பதாக நான் நம்புகிறேன். இப் பிரதேசங்களில் இப்போது மக்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அரசியல் விளையாட்டுக்களை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். இதுவரை செய்துவரும் தமிழ்நாட்டு அரசியல் இனிமேலும் இலங்கையில் எடுபடாது என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.

கேள்வி: கடந்த தசாப்தத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணைகள் செய்யப்படவேண்டுமென ஐ.நா. தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறது. இப்படியான குற்றச்சாட்டுகளி விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்று அவசியமென்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: பூகோள அரசியல் தளங்கள் மாற்றமடையும்போது இப்படியான் குற்றங்களை அவர்கள் வித்தியாசமான வடிவங்களில் கொண்டு வருகின்றார்கள். போர்க் குற்றங்கள் இலங்கைக்கு எதிரானவை மட்டுமல்ல. உலகப் போர்களில் ஈடுபட்ட நாடுகளுக்கு எதிராகவும் அவை கொண்டுவரப்பட்டன. எனவே, போர் என்று ஒன்று முடிவுற்றதும் இப்படியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல.

எந்தவிதமான விடயமாகவிருந்தாலும் இலங்கை தனது பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தவறான புரிதலும், நம்பிக்கையீனமும் எங்கள் சிறுபான்மையித்தவரின் மத்தியில்தான், சர்வதேசங்களிடையே அல்ல. ஒரு உள்நாட்டுப் பிரச்சினையி வெளியார் தலையீடு அவசியமற்றதும், காரணமற்றதும் எனவே நான் கூறுவேன்.

கேள்வி: வட மாகாணத்திலுள்ள இராணுவத்தைக் குறைக்கும்படி வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன?

பதில்: வடக்கில் இராணுவ – பொதுமக்கள் உறவு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. இராணுவம் சமூகத்தின் ஒரு பங்காக மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள், தமது அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி கேட்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் தமது பாதுகாப்புக்காக இராணுவம் தேவை என்ற நிலையில் இருக்கிறார்கள்.

மக்கள் அதிகம் வேலை வாய்ப்புகளைப் பெறும் வரை, புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படும்வரை, அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்வரை, இராணுவம் அங்கு இன்னும் சில வருடங்கள் இருக்கவேண்டுமென்பதையே நானும் விரும்புகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்கள் முற்காலத்தை மீள்நோக்கிப் பார்ப்பின், 1970 இளையோர் எழுச்சியில் உங்கள் இடம் என்னவாக இருந்திருக்கும்?

பதில்: வட கிழக்கு மாகாணங்களில் 1970 களில் எழுந்த மாணவர் எழுச்சியில் பங்கெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. எங்கள் அரசியல் தலைவர்கள் இளையோரை நகர்த்தி அதன் மூலம் எழுந்த குழப்பத்தைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்தினார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து வடக்கில் வன்முறையை ஆரம்பித்தார்கள். இளையோர் இவர்களைத் தலைவர்களாகவும் பார்த்தார்கள். நான் அவரைச் (பிரபாகரனை) சந்தித்தபோது, பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அவர் தான் தங்கத்துரையையும் குட்டிமணியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தேன்.

கேள்வி: நீங்கள் முன்னர் வழங்கிய பேட்டியொன்றின்போது, “நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு பொலிஸ் அதிகாரியாக வர விரும்பியிருந்தேன்” எனக் கூறியிருந்தீர்கள்?

பதில்: ஆம், நான் எனது க.பொ.த. உயர்தரக் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, நான் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தபடியால், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டராக வர விரும்பியிருந்ததுண்டு. அதற்கான விணப்பத்தையும் நான் அனுப்பியிருந்தேன். திடீரென்று நான் மனதி மாற்றி அரச் நிர்வாகத் துறையில் சேர விரும்பினேன். பின்னர் இந்தியாவுக்கு ஓடவேண்டி வந்துவிட்டது.

கேள்வி: ஏன் பொலிஸ் சேவையில் சேர விரும்பினீர்கள்?

பதில்: எனது நோக்கம் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமென்பது. பொலிஸ் சேவை, இராணுவ சேவையைப் போன்றது. அப்போது எனது சகோதரர்கள் சிலர் இராணுவத்தில் கடமை புரிந்தார்கள். அவர்களது சீருடைகளினால் கவரப்பட்ட நானும் ஒருநாள் சீருடை தரிக்கும் ஒரு வேலையில் சேர வேண்டுமென விரும்பினேன்.

கேள்வி: ஏன் உங்கள் நிலைப்பாட்டை மாற்றினீர்கள்?

பதில்: அக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் அரசியல் நிலைமை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததும், இளையவர்களிடையே அமைதியின்மை இருந்ததுமே காரணம்.

கேள்வி: உணர்ச்சிகரமான நிலைமை என்று எதைக் குறிப்பிட்டீர்கள்?

பதில்: தமிழ் அரசியல்வாதிகள் இளையவர்களை ஊக்கப்படுத்தியமையால் இளையவர்கள் அவர்களை நம்பத் தலைப்பட்டார்கள். நாங்கள் அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டோம். அவர்கள் உணர்ச்சி எழும் வகையிலான விடயங்களைப் பேசினார்கள். தமிழ் ஈழத்தைப் பற்றி அவர்கள் விளக்கமாகப் பேசினார்கள். இதனால் அவர்களால் வட மாகாண இளையவர்களின் மனங்களையும், இதயங்களையும் தொட முடிந்தது. இறுதியில் இதுவே ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

இதே காலப்பகுதியில் தான் ஜே.வி.பி. தலைவர் றோஹன விஜேவீர தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இளையோராக இருந்தபோது, அரசியல்வாதிகளின் போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலையில் நாம் இருக்கவில்லை. நாங்கள் குருட்டுத் தனமாக அவர்களை நம்பிப் பிந்தொடர்ந்தோம்.

கேள்வி: நாட்டிற்குச் சேவை செய்யவேண்டுமென்று விரும்பிய நீங்கள் ஏன் நாட்டை விட்டு சென்றீர்கள்?

பதில்: நான் பொன்னம்மானுடனும் வேறு இரு நண்பர்களுடனும் மதுரைக்கு (இந்தியா) போனேன். இந்தியாவில் பொருட்கள் வாங்கும் பொறுப்பைப் பார்க்கும்படி பிரபாகரன் என்னிடம் கேட்டிருந்தார்.

நாங்கள் ஒரு வீடில் தங்கி, சிறிதளவில், பொருட்கள் வாங்கும் விடயங்களைக் கவனித்து வந்தோம். பின்னர் சென்னையில் நிரந்தரமாக இருக்கவேண்டி வந்துவிட்டது. பின்னர் இலங்கையில் சில சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக, சிங்கப்பூரில் சில தொலைத் தொடர்பு சாதனங்களை வாங்கிவருமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பணி புரியும் சில புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட படியே அச் சாதனத்தை நான் வாங்கி அனுப்பினேன்.

படிப்படியாக, ஐரோப்பாவிலுள்ள தனது தொடர்புகளை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்து விடுதலைப் புலிகளின் வலையமைப்பை விஸ்தரிக்க உதவி செய்தார். 25 வருடங்களாக நான் விடுதலைப் புலிகளின் கொள்வனவு வேலைகளைச் செய்துவந்தேன். 2003 இற்குப் பிறகு அரசியல் தீர்வொன்றை நோக்கி செல்லுமாறு நான் பிரபாகரனைக் கேட்டேன். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாரிய மாற்றங்களைக் கண்டுவந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் செய்துவந்த கொள்வனவு போலத் தொடர்ந்தும் என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்களும், உறுப்பினர்களும் கணிசமான தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டதால் அவர்களும் விரக்தி நிலையை அடைந்திருந்தார்கள்.

அதே வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போன்றோரின் செயற்பாடுகளால் மக்களிடையே பிரபலமாகி வந்துகொண்டிருந்தது. அந்த நிர்வாகம் மிகவும் சுயநம்பிக்கையுடன் செயற்பட்டது. ஏனைய அரசுகளைப் போலல்லாமல், இந்த அரசு, விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதைகளை உடைத்தது. அதுவே விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம்.

கேள்வி: விடுதலைப் புலிகள் போரில் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா?

பதில்: ஆம். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை என நான் உணர்ந்தேன். அவர்கள் தமது திட்டத்தை மாற்ற வேண்டிய தேவை வந்திருந்தது, ஆனால் அவர்கள் மாறவில்லை.

கேள்வி: போராட்டத்தை நிறுத்துவது உங்கள் திட்டமானால், அதற்கடுத்தான உங்கள் திட்டம் என்ன?

பதில்: நாங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செந்றிருக்க வேண்டும். மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் நான் நல்ல உறவைப் பேணி வந்தேன். அதனால் அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்து அவரது சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்திலிருந்து நான் விலகிச் செல்கிறேன் என அவர்கள் நினைத்தார்கள். பிரபாகரனைச் சூழவிருந்தவர்கள் அவரைப் பிழையான வழிகளில் நடத்திக்கொண்டார்கள். புதிய உலகப் போக்கை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகள் இளம் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அது பற்றி நீங்கள் பிரபாகரனிடம் கூறியது என்ன?

பதில்: 2003 இலிருந்து 2008 வரை பிரபாகரனுடனான எனது தொடர்பு மிகவும் அந்நியமானது. நான் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் இருக்கவில்லை ஆனால், குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என நான் அவருக்குக் கூறியிருக்கிறேன்.

கேள்வி: போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. வடக்கின் நிலைமை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: போர் முடிந்து 5 வருடங்களில் எனக்கு நல்ல திருப்தி. வடக்கில் பல துரித அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவும் 12,500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் இதர வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆனால் அந்த முன்னேற்றம் ஆட்சி மாற்றத்துடன் சடுதியாக நிறுத்தப்பட்டு வடக்கு மாகாணத்தவர் கடுமையான சூழலில் கைவிடப்பட்டனர். அங்கு அபிவிருத்தி எதுவும் நடைபெறவில்லை. பலர் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

கேள்வி: நீங்கள் இலங்கையில் வந்திறங்கியபோது சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவையும், தற்போதுள்ள ஜனாதிபதி ராஜபக்சவையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நான் மலேசியாவிலிருந்தபோது அவரை ஒரு கடுமையான இராணுவ அதிகாரியாகவே பார்த்தேன். அவர் என்னைத் தூக்கிலிடுவார் என்றே  எதிர்பார்த்தேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது வாழ்வின் கடைசி நிமிடங்களை நான் அனுபவிக்கிறேன் எனவே நான் எண்ணினேன்.

அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றபோது, அவரின் பின்னால் ஒரு சாந்தமான புத்தர் சிலை இருப்பதைக் கண்டேன். அது எனக்கு ஒருவிதமான அமைதியைத் தந்தது. பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச என்னை வரவேற்று கைகளைக் குலுக்கினார். ஒரு மணித்தியாலம் பேசிய பின்னர், அவர் என்னை வரவேற்ற முறையிலிருந்து நான் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன் என உணர்ந்தேன்.

இலங்கையின் ஜனாதிபதியாக, அவர் நாட்டிற்குப் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவார். உதாரணமாக, லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவைக் கட்டீயெழுப்பியது போலவும், அவர் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவார். பல நாடுகளில் பல பிரபலமான தலைவர்கள் அவ்வப்போது பொற்காலங்களைப் படைத்திருக்கின்றனர். ஜனாதிபதி ராஜபக்ச, இலங்கையை ஒரு சிங்கப்பூர் மாதிரி மாற்றுவார் எனவே நான் நம்புகிறேன்.

கேள்வி: உங்களைப் பாதுகாக்கவென நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைப் பற்றிய உங்களது ஆரம்ப அபிப்பிராயங்களென்ன?

பதில்: என்னிடம் பயம் குடிகொண்டிருந்த படியால், நான் அவர்களைச் சந்தேகத்துடனேயே பார்த்தேன். ஆனால் படிப்படியாக அவர்கள் என்னுடன் நல்ல உறவை அபிவிருத்தி செய்ததுடன், என்னை மிகவும் கண்ணியத்துடன் நடத்தினர். இந்த இளம் இரானுவ அதிகாரிகள் விடுமுறைக்குப் போய் வரும்போது, அவர்கள் வீட்டில் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களைக் கொண்டுவந்து தருவார்கள். நாங்கள் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக்கொண்டுள்ளோம். இப்போது நாங்கள் ஒரு குடும்பம் மாதிரி.

கேள்வி: வடக்கில் தற்போதுள்ள அரசியல் நிலமை எப்படி இருக்கிறது?

பதில்: எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்களையும் இருப்பையும் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அரசியல்வாதிகள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உதாசீன்ம் செய்துவிட்டனர். அவர்களது இரட்டை வேடம் கலைந்துகொண்டு போவதால் அவர்களால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.

கேள்வி: மூன்று தசாப்தங்களாக நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டிருந்தீர்கள். தமிழரது குறைகள் என்னவென்று கருதுகிறீர்கள்?

பதில்: இனப்பாகுபாடுகளுக்கு அப்பால், வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் சிறந்த பொருளாதார, கல்வி அபிவிருத்தியையும், வேலை வாய்ப்புக்களயுமே எதிர்பார்க்கிறார்கள். வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் அதே வேளை, வறுமை ஒழிப்பு அத்தியாவசியமானது. புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி ராஜபக்ச மீது அவர்கள் அளப்பரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள். வடக்கிலும், கிழக்கிலும் பல படித்த அரசியல்வாதிகள் வருகின்றபோது அங்கும் கல்வி, பொருளாதாரத் துறைகளில் எதிர்கால பிரகாசமானதாக மாறும்.

கேள்வி: திரும்பிப் பார்க்கில், நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றிக் கவலைப் படுவீர்களா?

பதில்: ஆம். நான் கவலைப்படுகிறேன். எனக்கு இப்போது 64 வயது. எனது வயதின், ஏறத்தாள, 40 வருடங்களைப் பிரயோசனமற்ற பாதையில் தொலைத்து விட்டேன். ஜனாதிபதி ராஜபக்சவின் தயவில், இப்போதாவது நான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறேன். நம்பிக்கையை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் உன்னதமான பாதையில் அவர் என்னைப் பயணிக்கச் செய்திருக்கிறார். நாங்கள் இளமையாக இருக்கும்போது எதையும் எங்களால் மாற்ற முடியும் என நாம் நம்புகிறோம். அதனால் தான் இளம் பராயத்தில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தோம். அப்போது எங்கள் பாதை வெற்றிபெறக்கூடிய ஒன்று என நம்பினோம். ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல, 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் போராட்டத்தை விட்டு ஒரு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமெனவே நான் விரும்பினேன். நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நாங்கள் எங்கள பாதையை மாற்றிக்கொள்ளாமையால் எல்லோரும் வருந்துகிறார்கள்.

 

கேள்வி: சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செஞ்சோலை அனாதைகள் இல்லத்தைக் கிளிநொச்சியில் ஆரம்பித்தீர்கள். இப் பெண்கள் இல்லத்தின் முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது?

பதில்: பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கைது செய்யப்பட்டபோது நான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போவதாக உத்தேசித்துள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச கேட்டார். 2009 இல் போர் முடிவிற்கு வந்த பிறகு, வன்னியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவித பாதுகாப்பும், எதிர்காலத்துக்கான எந்தவித திட்டங்களும் இல்லாது இருந்தனர். நான் அவர்களுக்கு உதவப் போகிறேன் என அனது திட்டத்தைக் கூறி அதற்கான ஆதரவையும் அவரிடம் கேட்டேன். அவரின் உதவியினால் கிளிநொச்சியில் இந்த ஆதரவற்றவர்கள் இல்லத்தைத் தொடங்கி நடத்தி வருகிறேன்.

கடந்த 8 வருடங்களாக நான் கிளிநொச்சியில் இருந்துகொண்டே இக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறேன். வறுமையான குடும்பங்களிலிருந்து வந்த, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாம் பராமரித்து வருகிறோம். பெரும்பாலான குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திருந்தே வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவது முதலாவது கடமை. போரின்போது தந்தையையோ அல்லது தாயையோ இழந்த பிள்ளைகளே அநேகமாக இங்கு உள்ளார்கள். தந்தையை இழந்த குடும்பங்களில் இருந்து, தாயாரின் வறுமை காரணமாகப் பிள்ளைகளை இங்கே கொண்டுவந்து விடுகிறார்கள். வீடுகளில் இப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை. தாய்மார் சில வேளைகளில் கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். தற்போது நாங்கள் நான்கு சிறுவர் இல்லங்களைப் பராமரித்து வருகிறோம். கிளீநொச்சியிலுள்ள செஞ்சோலை அனாதைகள் இல்லம், முல்லைத் தீவிலுள்ள பாரதி சிறுவர் இல்லம், முல்லைத்தீவிலுள்ள அண்ட்றூ சிறுவர் இல்லம், கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை ஆண்கள் இல்லம் ஆகியவற்றை நாங்கள் பராமரித்து வருகிறோம். இந்த நான்கு இல்லங்களிலும் 300 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளார்கள். பாடலைக் கல்வியோடு, பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்கைகளையும் நாம் வழங்குகிறோம். சிலர், கராத்தே, குத்துச் சண்டை, உதைபந்தாட்டம் போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் எமது மாணவர் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சியால் கடந்த 6 வருடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிகவும் நம்பிக்கையுடன், சமூகத்தை எதிர்கொள்ளும் வாழ்வுத் தகமைகளுடன் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் உயர் கல்வியை நோக்கிப் பயணிக்கிறார்கள். சிலர் கிளிநொச்சிக்கு வெளியே வேலை வாய்ப்புகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். சிலர் சுய தொழில்களை மேற்கொண்டு சிறப்பாக வாழ்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. உயர் கல்வியை முடித்தவர்கள் சரியான தொழில்களைப் பெறுமட்டும் நாம் அவர்களுக்கான ஆதரவை வழங்குகிறோம்.

உயர் கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் எங்கள் திட்டங்களில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் அளிக்கிறோம். செஞ்சோலை இல்லங்களில், குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நாங்கள் வழங்கினாலும், அவர்களது கல்வி வளர்ச்சியே எங்கள் முக்கிய குறிக்கோள். சர்வதேச தரத்தில் ஒரு ஆங்கில மொழியிலான கல்விக்கூடமொன்றை ஆரம்பிக்கும் திட்டமொன்று என்னிடம் உள்ளது.

எதிர்காலத்தில் எங்களுக்கு அதிக நிதி தேவைப்படும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அக்கறையானவர்கள், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் பயனற்ற திட்டங்களில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை விரயம் செய்யாது, இந்த உன்னதமான பணிக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 

https://www.pagetamil.com/137610/#

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் திட்டத்தை ...

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனின்.. 
நம்பிக்கைக்கு, பாத்திரமாக இருந்தவர் வாயால்...
இப்படியான வார்த்தைகளை, எதிர் பார்க்கவில்லை.

ஆனாலும்... தேர்தல் காலம் என்ற படியால்...
கோத்த பாய... ஜனாதிபதியாக, இருக்கும் கால கட்டத்தில்...
இப்படியான... வாக்கு மூலத்தை, 
கே.பி. கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதனையும்... 
புரிந்து கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

கேபியின் கூற்றுக்கள் நூறு வீதம் உண்மையானவை என்று கூற முடியாது. ஏனெனில் அவர் கோத்தாவின் கட்டுப்பாட்டில் இலங்கையில் வாழ்பவர்.  ஆனால் அவரின் அரசியல்  கருத்துக்களில்  முற்றாக நிராகரிக்க முடியாத உண்மைகள் உள்ளன.  2001 ம் ஆண்டின் பின்னர்விடுதலை புலிகள் தமது  திட்டங்களை மாற்ற வேண்டியிருந்த‍து என்ற அவரின் கூற்று நியாயமானதே.  அந்த மாற்றங்களை அவர்கள் செய்திருந்தால் இன்று விடுதலை புலிகளின் ஆளுமை ஜனநாய ரீதியில் இப்போதும் இருந்திருக்கும்.  நிச்சயமாக இன்றைய நிலையை விட  மேலான நிலமை தமிழருக்கு இருந்திருக்கும் என்றதை மட்டும் உறுதியாக கூறமுடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் காட்டிக்கொடுத்தவர் கே பி. உள்ளூரில் காட்டிக்கொடுத்தவர் கருணா. 

காலத் துயரம்.🤥

கே பியை பேட்டியெடுக்க pagetamilக்கு என்ன தேவை வந்தது ? பினாமிகளிள் ஒன்று என்பதனாலா ? 

இவர்களுடன் ஒப்பிடும்போது கருணா ஒப்பீட்டளவில் பறவாயில்லை. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் காட்டிக்கொடுத்தவர் கே பி. உள்ளூரில் காட்டிக்கொடுத்தவர் கருணா. 

காலத் துயரம்.🤥

கே பியை பேட்டியெடுக்க pagetamilக்கு என்ன தேவை வந்தது ? பினாமிகளிள் ஒன்று என்பதனாலா ? 

இவர்களுடன் ஒப்பிடும்போது கருணா ஒப்பீட்டளவில் பறவாயில்லை. 😂😂

அதானே.... pagetamil  இப்ப ஏன்.. குறுக்க, மறுக்க ஓடுது
சும்மா கிடக்கிற.... குட்டையை  
(குளம்) குழப்பி.. 
மீன்
(காசு) பிடிக்கிற, திட்டமாக... இருக்குமோ.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியாவின் திட்டத்தை ...

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனின்.. 
நம்பிக்கைக்கு, பாத்திரமாக இருந்தவர் வாயால்...
இப்படியான வார்த்தைகளை, எதிர் பார்க்கவில்லை.

ஆனாலும்... தேர்தல் காலம் என்ற படியால்...
கோத்த பாய... ஜனாதிபதியாக, இருக்கும் கால கட்டத்தில்...
இப்படியான... வாக்கு மூலத்தை, 
கே.பி. கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதனையும்... 
புரிந்து கொள்கின்றோம்.

முரளீதரனின் நிலை மட்டும் வேறுபட்டதோ 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

முரளீதரனின் நிலை மட்டும் வேறுபட்டதோ 😏

யார்.... அது, முரளீதரன். 😎
நாங்கள், மாட்டைப்  பற்றி கதைத்தால்...
நீங்கள், மாடு கட்டியிருக்கிற மரத்தைப் பற்றி கதைக்கிறீர்கள். :grin:
இது, ரொம்ப... தப்புங்க. 🤪  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பிடியில் இருக்கும் கே பியிடம் கேள்வி கேட்டது.. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.. எல்லாம் செளக்கியமே..  காலம் சொன்னது..

இத்தனை ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றவனை.. போராளிகளைக் கொன்றவனை.. மக்களை.. போராளிகளை காணமல் போகடிக்கச் செய்தவனை.. இன்றும் தமிழர் நிலத்தை இராணுவ மற்றும் தொல்பொருள் துறை ஆக்கிரமிப்பில் வைச்சிருப்பவனை.. நம்மால மன்னிக்கவே மறக்கவோ முடியவில்லை.

இவரால்.. இதுகளை நம்பி தலைவர் இருந்தார் என்பதை நினைக்கும் போது.. அந்தாள் கத்தி முனையில் நடந்தே தமிழ் மக்களின் உரிமைப் போரை நடத்தி இருக்கிறது. அசாத்தியத்தில் இருந்து சாத்தியத்தை செய்திருகிறார் தேசிய தலைவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ நடக்குது நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யார்.... அது, முரளீதரன். 😎
நாங்கள், மாட்டைப்  பற்றி கதைத்தால்...
நீங்கள், மாடு கட்டியிருக்கிற மரத்தைப் பற்றி கதைக்கிறீர்கள். :grin:
இது, ரொம்ப... தப்புங்க. 🤪  😂

நான் இரண்டுமே மாடுதான் என்கிறேன். ஒன்று வடக்கன் மாடு மற்றையது கிழக்கன் மாடு. ஆனால் இரெண்டு மாட்டுக்கும் ஒரே ஜீன் என்கிறேன். 😎

நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கேபியின் கூற்றுக்கள் நூறு வீதம் உண்மையானவை என்று கூற முடியாது. ஏனெனில் அவர் கோத்தாவின் கட்டுப்பாட்டில் இலங்கையில் வாழ்பவர்.  ஆனால் அவரின் அரசியல்  கருத்துக்களில்  முற்றாக நிராகரிக்க முடியாத உண்மைகள் உள்ளன. 

உண்மை.

அதனால் வெளிநாடுகளில் பாதுகாப்பாக வசதியாக வாழ்ந்து கொண்டு இலங்கையில் உசுப்பு ஏற்றி விடுகிறவர்கள்  சொல்பவை சரியாகிவிட முடியாது. குமரன் பத்மநாதன் சொல்வதில்  உண்மைகளும் உண்டு.

4 hours ago, பகலவன் said:

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்களையும் இருப்பையும் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அரசியல்வாதிகள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உதாசீன்ம் செய்துவிட்டனர்.

நூறுவீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

நான் இரண்டுமே மாடுதான் என்கிறேன். ஒன்று வடக்கன் மாடு மற்றையது கிழக்கன் மாடு. ஆனால் இரெண்டு மாட்டுக்கும் ஒரே ஜீன் என்கிறேன். 😎

நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் 😀

இரண்டுமே.... ஒரு கூடையில்,  வைத்து... அடை காத்த, கூழ் முட்டைகள்.
பாவம்.... தேசியத் தலைவரும், ஈழத்துக்காக போராடி மாண்ட, போராளிகளும். 
வேறை... என்னத்தை, சொல்ல. ஹ்ம்ம்..... 

Link to comment
Share on other sites

கக்கா போக கோட்டாவிடம் முன் அனுமதி கேக்கும் கேபீயிடம் , வேறு எதை எதிர்பாக்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகலவன் said:

image_a983882575.jpg
 

40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன். எமது இளமைகாலத்தை தொலைத்து விட்டோம். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.

பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பொறுப்பாளராக செயற்பட்டு, தற்போது இராணுவப்பிடியில் உள்ள கே.பி என அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன்.

கொழும்பு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்திருந்தார்.

கேள்வி: இயல்பு வாழ்வைப் பாதிக்கும் பல சிறிதளவிலான முயற்சிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனப்படும் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் இவற்றுக்குப் பின்னால் இருக்கலாமென நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: வட, கிழக்கிலுள்ள, இளைஞர்கள், பெரும்பான்மையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இப்படியான முயற்சிகளில் இறங்குவதை விரும்புவதில்லை. தமது வாழ்நாள் முழுவதும் , முற்றிலும் பலனற்ற ஒரு விடயத்துக்காக அவர்கள் போராடி நொந்துபோயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வேலையின்மை காரணமாகவும், வறுமை காரணமாகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் பொறிக்குள் வீழ்ந்து இப்படியான முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். இப்படியான சம்பவங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் சட்டபூர்வ இருப்புக்கு உதவி செய்யலாம். வடக்கில் இன்னும் வன்முறை நிகழ்கிறது என்பதை காட்டி, இலங்கைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர்கள் தமது அரசாங்கங்களுக்குக் காட்டவேண்டும்.

ஆனால் இந்த முயற்சிகள் பயனற்றவை. ஏணெனில், அதற்கான ஆதரவோ அல்லது போதுமான சக்தியோ மக்களிடம் இல்லை. இப்படியான முயற்சிகளில் இறங்காமலிருப்பதற்கு இங்குள்ள இளைஞர்களுக்கும், இதர மக்களுக்கும் போதுமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களில் இதுவுமொன்று.

இன்னொரு வகையில், ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சியில், விடுதலைப் புலிகள் மீளுருவாவதற்கான வெளி இல்லை. ஏனெனில் அவர் மிகவும் திறமையோடு கட்டமைத்திருக்கும் பாதுகாப்பு அமைப்பு எதிர்கால ஆபத்துக்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிருடன் வைத்திருப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் நோக்கமாக இருப்பின், அவர்களுக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்னவாகவிருக்கும்?

பதில்: அவர்களது முயற்சிகள் வெற்றிபெறப் போவதில்லை. அவர்கள் வாழும் நாடுகளில் அவர்களின் சுய இருப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இவை. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்பவர்கள் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் ரகசியமல்ல.

இலங்கையில் குழப்பங்களை விளைவிக்காமல் அவர்களால் ஐரோப்பாவில் தொடர்ந்தும் வாழ்வதற்குச் சந்தர்ப்பங்களில்லை. வடக்கு கிழக்கு மக்களின் பரிதாப நிலையை விற்பதனால் தான் அவர்களால் அங்கு சீவிக்க முடிகிறது. அங்கு வாழும் மக்களுக்கு வடக்கு கிழக்கின் கள நிலவரம் தெரியாது. அதனால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்களுக்குத் தானம் செய்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு நான் தரும் செய்தி, அவர்கள் உண்மையிலேயே வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற விரும்பினால், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை உரிய வழிகளில் தானம் செய்யுங்கள். போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களது தானங்களைச் செய்யலாம்.

பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தனிப்பட்ட முறையில், நான் பலருக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்.

போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கோ அல்லது இளையவர்களுக்கோ நல்ல கல்வியைக் கொடுத்தலும், வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு சமூக நல, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்கி அம் மக்கள் தங்கள் கால்களில் நிற்க வழிசெய்தலுமே புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போதைக்குச் செய்ய வேண்டியது என்பதையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன். மக்கள் ஆதரவளிக்காதபோது இன்னுமொரு ஆயுதப்போராடம் பற்றிச் சிந்திப்பது பலனற்றது.

கேள்வி: சென்ற வருடம் இந் நாடு தீவிரவாதத்தின் மிரட்டலை ஒரு தடவை சந்தித்தது. மிகவும் சிரமப்பட்டு இந்நாடு பெற்றுக்கொண்ட சமாதானத்தை அது சீரழித்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் அது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் மட்டும், இந் நாட்டின் பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்துவார். அப்படியான படுகொலைகள் இனிமேல் நடாதவாறு அவர் பார்த்துக்கொள்வார். அது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ இலங்கை என்ற இந்தத் தாய்நாட்டில் ஒருவருக்கும் தீங்கு இழைக்கப்படமாட்டாது. அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.

கேள்வி: நீங்கள் ஏன் அவர் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? அவர் உங்கள் உயிரைக் காப்பாற்றியவர் என்ற வகையிலா?

பதில்: ஆம். நான் அவர் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். மக்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவர் செய்து முடிப்பார். நான் அவரை அவ்வப்போ சந்தித்திருக்கிறேன். எங்கள் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அவர் அடிக்கடி பேசுவார். இந் நாட்டுக்குச் சரியான தலைவர் அவர் தான்.

சரியான பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட சரியான தலைவர் அவர். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.

அவருக்குப் பயப்படும் அரசியல்வாதிகளால் அவரைப் பற்றிய பொய்யான விடயங்கள் பரப்பப்படுகின்றன. இருப்பினும், அக் கதைகளினால் ஏமாற வேண்டாம், அவர் எல்லா சமூகங்களுக்கும் தலைவர் என நான் எனது மக்களுக்குக் கூறி வைத்துள்ளேன். அவர் இந் நாட்டை மிகவும் ஆழமாக நேசிக்கிறார். புதிய வழிகளில் இந்நாட்டை அபிவிருத்தி செய்து இந்நாட்டு மக்களின் வாழ்வை முன்னேற்ற நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

கேள்வி: வடக்குக்கு புதிய அரசியல் தலைமை தேவை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிகம் இளையவர்கள் அரசியலில் பங்குபெறவேண்டுமெந்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா?

பதில்: பல வித்தியாசமான தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள். அதே போன்ற மாற்றங்களை நாம் வடக்கிலும் எதிர்பார்க்கிறோம். பல தசாப்தங்களாக, வடக்கில், தமிழ் மக்கள் ஒரே அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

வடக்கு கிழக்கில் புதிய அரசியல் தலைமைக்காக பாரிய வெற்றிடமொன்று இருப்பதாக நான் நம்புகிறேன். இப் பிரதேசங்களில் இப்போது மக்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அரசியல் விளையாட்டுக்களை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். இதுவரை செய்துவரும் தமிழ்நாட்டு அரசியல் இனிமேலும் இலங்கையில் எடுபடாது என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.

கேள்வி: கடந்த தசாப்தத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணைகள் செய்யப்படவேண்டுமென ஐ.நா. தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறது. இப்படியான குற்றச்சாட்டுகளி விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்று அவசியமென்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: பூகோள அரசியல் தளங்கள் மாற்றமடையும்போது இப்படியான் குற்றங்களை அவர்கள் வித்தியாசமான வடிவங்களில் கொண்டு வருகின்றார்கள். போர்க் குற்றங்கள் இலங்கைக்கு எதிரானவை மட்டுமல்ல. உலகப் போர்களில் ஈடுபட்ட நாடுகளுக்கு எதிராகவும் அவை கொண்டுவரப்பட்டன. எனவே, போர் என்று ஒன்று முடிவுற்றதும் இப்படியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல.

எந்தவிதமான விடயமாகவிருந்தாலும் இலங்கை தனது பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தவறான புரிதலும், நம்பிக்கையீனமும் எங்கள் சிறுபான்மையித்தவரின் மத்தியில்தான், சர்வதேசங்களிடையே அல்ல. ஒரு உள்நாட்டுப் பிரச்சினையி வெளியார் தலையீடு அவசியமற்றதும், காரணமற்றதும் எனவே நான் கூறுவேன்.

கேள்வி: வட மாகாணத்திலுள்ள இராணுவத்தைக் குறைக்கும்படி வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன?

பதில்: வடக்கில் இராணுவ – பொதுமக்கள் உறவு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. இராணுவம் சமூகத்தின் ஒரு பங்காக மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள், தமது அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி கேட்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் தமது பாதுகாப்புக்காக இராணுவம் தேவை என்ற நிலையில் இருக்கிறார்கள்.

மக்கள் அதிகம் வேலை வாய்ப்புகளைப் பெறும் வரை, புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படும்வரை, அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்வரை, இராணுவம் அங்கு இன்னும் சில வருடங்கள் இருக்கவேண்டுமென்பதையே நானும் விரும்புகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்கள் முற்காலத்தை மீள்நோக்கிப் பார்ப்பின், 1970 இளையோர் எழுச்சியில் உங்கள் இடம் என்னவாக இருந்திருக்கும்?

பதில்: வட கிழக்கு மாகாணங்களில் 1970 களில் எழுந்த மாணவர் எழுச்சியில் பங்கெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. எங்கள் அரசியல் தலைவர்கள் இளையோரை நகர்த்தி அதன் மூலம் எழுந்த குழப்பத்தைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்தினார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து வடக்கில் வன்முறையை ஆரம்பித்தார்கள். இளையோர் இவர்களைத் தலைவர்களாகவும் பார்த்தார்கள். நான் அவரைச் (பிரபாகரனை) சந்தித்தபோது, பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அவர் தான் தங்கத்துரையையும் குட்டிமணியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தேன்.

கேள்வி: நீங்கள் முன்னர் வழங்கிய பேட்டியொன்றின்போது, “நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு பொலிஸ் அதிகாரியாக வர விரும்பியிருந்தேன்” எனக் கூறியிருந்தீர்கள்?

பதில்: ஆம், நான் எனது க.பொ.த. உயர்தரக் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, நான் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தபடியால், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டராக வர விரும்பியிருந்ததுண்டு. அதற்கான விணப்பத்தையும் நான் அனுப்பியிருந்தேன். திடீரென்று நான் மனதி மாற்றி அரச் நிர்வாகத் துறையில் சேர விரும்பினேன். பின்னர் இந்தியாவுக்கு ஓடவேண்டி வந்துவிட்டது.

கேள்வி: ஏன் பொலிஸ் சேவையில் சேர விரும்பினீர்கள்?

பதில்: எனது நோக்கம் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமென்பது. பொலிஸ் சேவை, இராணுவ சேவையைப் போன்றது. அப்போது எனது சகோதரர்கள் சிலர் இராணுவத்தில் கடமை புரிந்தார்கள். அவர்களது சீருடைகளினால் கவரப்பட்ட நானும் ஒருநாள் சீருடை தரிக்கும் ஒரு வேலையில் சேர வேண்டுமென விரும்பினேன்.

கேள்வி: ஏன் உங்கள் நிலைப்பாட்டை மாற்றினீர்கள்?

பதில்: அக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் அரசியல் நிலைமை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததும், இளையவர்களிடையே அமைதியின்மை இருந்ததுமே காரணம்.

கேள்வி: உணர்ச்சிகரமான நிலைமை என்று எதைக் குறிப்பிட்டீர்கள்?

பதில்: தமிழ் அரசியல்வாதிகள் இளையவர்களை ஊக்கப்படுத்தியமையால் இளையவர்கள் அவர்களை நம்பத் தலைப்பட்டார்கள். நாங்கள் அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டோம். அவர்கள் உணர்ச்சி எழும் வகையிலான விடயங்களைப் பேசினார்கள். தமிழ் ஈழத்தைப் பற்றி அவர்கள் விளக்கமாகப் பேசினார்கள். இதனால் அவர்களால் வட மாகாண இளையவர்களின் மனங்களையும், இதயங்களையும் தொட முடிந்தது. இறுதியில் இதுவே ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

இதே காலப்பகுதியில் தான் ஜே.வி.பி. தலைவர் றோஹன விஜேவீர தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இளையோராக இருந்தபோது, அரசியல்வாதிகளின் போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலையில் நாம் இருக்கவில்லை. நாங்கள் குருட்டுத் தனமாக அவர்களை நம்பிப் பிந்தொடர்ந்தோம்.

கேள்வி: நாட்டிற்குச் சேவை செய்யவேண்டுமென்று விரும்பிய நீங்கள் ஏன் நாட்டை விட்டு சென்றீர்கள்?

பதில்: நான் பொன்னம்மானுடனும் வேறு இரு நண்பர்களுடனும் மதுரைக்கு (இந்தியா) போனேன். இந்தியாவில் பொருட்கள் வாங்கும் பொறுப்பைப் பார்க்கும்படி பிரபாகரன் என்னிடம் கேட்டிருந்தார்.

நாங்கள் ஒரு வீடில் தங்கி, சிறிதளவில், பொருட்கள் வாங்கும் விடயங்களைக் கவனித்து வந்தோம். பின்னர் சென்னையில் நிரந்தரமாக இருக்கவேண்டி வந்துவிட்டது. பின்னர் இலங்கையில் சில சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக, சிங்கப்பூரில் சில தொலைத் தொடர்பு சாதனங்களை வாங்கிவருமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பணி புரியும் சில புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட படியே அச் சாதனத்தை நான் வாங்கி அனுப்பினேன்.

படிப்படியாக, ஐரோப்பாவிலுள்ள தனது தொடர்புகளை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்து விடுதலைப் புலிகளின் வலையமைப்பை விஸ்தரிக்க உதவி செய்தார். 25 வருடங்களாக நான் விடுதலைப் புலிகளின் கொள்வனவு வேலைகளைச் செய்துவந்தேன். 2003 இற்குப் பிறகு அரசியல் தீர்வொன்றை நோக்கி செல்லுமாறு நான் பிரபாகரனைக் கேட்டேன். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாரிய மாற்றங்களைக் கண்டுவந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் செய்துவந்த கொள்வனவு போலத் தொடர்ந்தும் என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்களும், உறுப்பினர்களும் கணிசமான தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டதால் அவர்களும் விரக்தி நிலையை அடைந்திருந்தார்கள்.

அதே வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போன்றோரின் செயற்பாடுகளால் மக்களிடையே பிரபலமாகி வந்துகொண்டிருந்தது. அந்த நிர்வாகம் மிகவும் சுயநம்பிக்கையுடன் செயற்பட்டது. ஏனைய அரசுகளைப் போலல்லாமல், இந்த அரசு, விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதைகளை உடைத்தது. அதுவே விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம்.

கேள்வி: விடுதலைப் புலிகள் போரில் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா?

பதில்: ஆம். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை என நான் உணர்ந்தேன். அவர்கள் தமது திட்டத்தை மாற்ற வேண்டிய தேவை வந்திருந்தது, ஆனால் அவர்கள் மாறவில்லை.

கேள்வி: போராட்டத்தை நிறுத்துவது உங்கள் திட்டமானால், அதற்கடுத்தான உங்கள் திட்டம் என்ன?

பதில்: நாங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செந்றிருக்க வேண்டும். மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் நான் நல்ல உறவைப் பேணி வந்தேன். அதனால் அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்து அவரது சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்திலிருந்து நான் விலகிச் செல்கிறேன் என அவர்கள் நினைத்தார்கள். பிரபாகரனைச் சூழவிருந்தவர்கள் அவரைப் பிழையான வழிகளில் நடத்திக்கொண்டார்கள். புதிய உலகப் போக்கை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகள் இளம் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அது பற்றி நீங்கள் பிரபாகரனிடம் கூறியது என்ன?

பதில்: 2003 இலிருந்து 2008 வரை பிரபாகரனுடனான எனது தொடர்பு மிகவும் அந்நியமானது. நான் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் இருக்கவில்லை ஆனால், குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என நான் அவருக்குக் கூறியிருக்கிறேன்.

கேள்வி: போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. வடக்கின் நிலைமை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: போர் முடிந்து 5 வருடங்களில் எனக்கு நல்ல திருப்தி. வடக்கில் பல துரித அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவும் 12,500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் இதர வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆனால் அந்த முன்னேற்றம் ஆட்சி மாற்றத்துடன் சடுதியாக நிறுத்தப்பட்டு வடக்கு மாகாணத்தவர் கடுமையான சூழலில் கைவிடப்பட்டனர். அங்கு அபிவிருத்தி எதுவும் நடைபெறவில்லை. பலர் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

கேள்வி: நீங்கள் இலங்கையில் வந்திறங்கியபோது சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவையும், தற்போதுள்ள ஜனாதிபதி ராஜபக்சவையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நான் மலேசியாவிலிருந்தபோது அவரை ஒரு கடுமையான இராணுவ அதிகாரியாகவே பார்த்தேன். அவர் என்னைத் தூக்கிலிடுவார் என்றே  எதிர்பார்த்தேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது வாழ்வின் கடைசி நிமிடங்களை நான் அனுபவிக்கிறேன் எனவே நான் எண்ணினேன்.

அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றபோது, அவரின் பின்னால் ஒரு சாந்தமான புத்தர் சிலை இருப்பதைக் கண்டேன். அது எனக்கு ஒருவிதமான அமைதியைத் தந்தது. பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச என்னை வரவேற்று கைகளைக் குலுக்கினார். ஒரு மணித்தியாலம் பேசிய பின்னர், அவர் என்னை வரவேற்ற முறையிலிருந்து நான் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன் என உணர்ந்தேன்.

இலங்கையின் ஜனாதிபதியாக, அவர் நாட்டிற்குப் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவார். உதாரணமாக, லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவைக் கட்டீயெழுப்பியது போலவும், அவர் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவார். பல நாடுகளில் பல பிரபலமான தலைவர்கள் அவ்வப்போது பொற்காலங்களைப் படைத்திருக்கின்றனர். ஜனாதிபதி ராஜபக்ச, இலங்கையை ஒரு சிங்கப்பூர் மாதிரி மாற்றுவார் எனவே நான் நம்புகிறேன்.

கேள்வி: உங்களைப் பாதுகாக்கவென நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைப் பற்றிய உங்களது ஆரம்ப அபிப்பிராயங்களென்ன?

பதில்: என்னிடம் பயம் குடிகொண்டிருந்த படியால், நான் அவர்களைச் சந்தேகத்துடனேயே பார்த்தேன். ஆனால் படிப்படியாக அவர்கள் என்னுடன் நல்ல உறவை அபிவிருத்தி செய்ததுடன், என்னை மிகவும் கண்ணியத்துடன் நடத்தினர். இந்த இளம் இரானுவ அதிகாரிகள் விடுமுறைக்குப் போய் வரும்போது, அவர்கள் வீட்டில் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களைக் கொண்டுவந்து தருவார்கள். நாங்கள் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக்கொண்டுள்ளோம். இப்போது நாங்கள் ஒரு குடும்பம் மாதிரி.

கேள்வி: வடக்கில் தற்போதுள்ள அரசியல் நிலமை எப்படி இருக்கிறது?

பதில்: எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்களையும் இருப்பையும் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அரசியல்வாதிகள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உதாசீன்ம் செய்துவிட்டனர். அவர்களது இரட்டை வேடம் கலைந்துகொண்டு போவதால் அவர்களால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.

கேள்வி: மூன்று தசாப்தங்களாக நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டிருந்தீர்கள். தமிழரது குறைகள் என்னவென்று கருதுகிறீர்கள்?

பதில்: இனப்பாகுபாடுகளுக்கு அப்பால், வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் சிறந்த பொருளாதார, கல்வி அபிவிருத்தியையும், வேலை வாய்ப்புக்களயுமே எதிர்பார்க்கிறார்கள். வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் அதே வேளை, வறுமை ஒழிப்பு அத்தியாவசியமானது. புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி ராஜபக்ச மீது அவர்கள் அளப்பரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள். வடக்கிலும், கிழக்கிலும் பல படித்த அரசியல்வாதிகள் வருகின்றபோது அங்கும் கல்வி, பொருளாதாரத் துறைகளில் எதிர்கால பிரகாசமானதாக மாறும்.

கேள்வி: திரும்பிப் பார்க்கில், நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றிக் கவலைப் படுவீர்களா?

பதில்: ஆம். நான் கவலைப்படுகிறேன். எனக்கு இப்போது 64 வயது. எனது வயதின், ஏறத்தாள, 40 வருடங்களைப் பிரயோசனமற்ற பாதையில் தொலைத்து விட்டேன். ஜனாதிபதி ராஜபக்சவின் தயவில், இப்போதாவது நான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறேன். நம்பிக்கையை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் உன்னதமான பாதையில் அவர் என்னைப் பயணிக்கச் செய்திருக்கிறார். நாங்கள் இளமையாக இருக்கும்போது எதையும் எங்களால் மாற்ற முடியும் என நாம் நம்புகிறோம். அதனால் தான் இளம் பராயத்தில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தோம். அப்போது எங்கள் பாதை வெற்றிபெறக்கூடிய ஒன்று என நம்பினோம். ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல, 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் போராட்டத்தை விட்டு ஒரு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமெனவே நான் விரும்பினேன். நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நாங்கள் எங்கள பாதையை மாற்றிக்கொள்ளாமையால் எல்லோரும் வருந்துகிறார்கள்.

 

கேள்வி: சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செஞ்சோலை அனாதைகள் இல்லத்தைக் கிளிநொச்சியில் ஆரம்பித்தீர்கள். இப் பெண்கள் இல்லத்தின் முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது?

பதில்: பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கைது செய்யப்பட்டபோது நான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போவதாக உத்தேசித்துள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச கேட்டார். 2009 இல் போர் முடிவிற்கு வந்த பிறகு, வன்னியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவித பாதுகாப்பும், எதிர்காலத்துக்கான எந்தவித திட்டங்களும் இல்லாது இருந்தனர். நான் அவர்களுக்கு உதவப் போகிறேன் என அனது திட்டத்தைக் கூறி அதற்கான ஆதரவையும் அவரிடம் கேட்டேன். அவரின் உதவியினால் கிளிநொச்சியில் இந்த ஆதரவற்றவர்கள் இல்லத்தைத் தொடங்கி நடத்தி வருகிறேன்.

கடந்த 8 வருடங்களாக நான் கிளிநொச்சியில் இருந்துகொண்டே இக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறேன். வறுமையான குடும்பங்களிலிருந்து வந்த, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாம் பராமரித்து வருகிறோம். பெரும்பாலான குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திருந்தே வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவது முதலாவது கடமை. போரின்போது தந்தையையோ அல்லது தாயையோ இழந்த பிள்ளைகளே அநேகமாக இங்கு உள்ளார்கள். தந்தையை இழந்த குடும்பங்களில் இருந்து, தாயாரின் வறுமை காரணமாகப் பிள்ளைகளை இங்கே கொண்டுவந்து விடுகிறார்கள். வீடுகளில் இப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை. தாய்மார் சில வேளைகளில் கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். தற்போது நாங்கள் நான்கு சிறுவர் இல்லங்களைப் பராமரித்து வருகிறோம். கிளீநொச்சியிலுள்ள செஞ்சோலை அனாதைகள் இல்லம், முல்லைத் தீவிலுள்ள பாரதி சிறுவர் இல்லம், முல்லைத்தீவிலுள்ள அண்ட்றூ சிறுவர் இல்லம், கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை ஆண்கள் இல்லம் ஆகியவற்றை நாங்கள் பராமரித்து வருகிறோம். இந்த நான்கு இல்லங்களிலும் 300 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளார்கள். பாடலைக் கல்வியோடு, பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்கைகளையும் நாம் வழங்குகிறோம். சிலர், கராத்தே, குத்துச் சண்டை, உதைபந்தாட்டம் போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் எமது மாணவர் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சியால் கடந்த 6 வருடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிகவும் நம்பிக்கையுடன், சமூகத்தை எதிர்கொள்ளும் வாழ்வுத் தகமைகளுடன் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் உயர் கல்வியை நோக்கிப் பயணிக்கிறார்கள். சிலர் கிளிநொச்சிக்கு வெளியே வேலை வாய்ப்புகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். சிலர் சுய தொழில்களை மேற்கொண்டு சிறப்பாக வாழ்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. உயர் கல்வியை முடித்தவர்கள் சரியான தொழில்களைப் பெறுமட்டும் நாம் அவர்களுக்கான ஆதரவை வழங்குகிறோம்.

உயர் கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் எங்கள் திட்டங்களில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் அளிக்கிறோம். செஞ்சோலை இல்லங்களில், குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நாங்கள் வழங்கினாலும், அவர்களது கல்வி வளர்ச்சியே எங்கள் முக்கிய குறிக்கோள். சர்வதேச தரத்தில் ஒரு ஆங்கில மொழியிலான கல்விக்கூடமொன்றை ஆரம்பிக்கும் திட்டமொன்று என்னிடம் உள்ளது.

எதிர்காலத்தில் எங்களுக்கு அதிக நிதி தேவைப்படும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அக்கறையானவர்கள், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் பயனற்ற திட்டங்களில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை விரயம் செய்யாது, இந்த உன்னதமான பணிக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 

https://www.pagetamil.com/137610/#

இணைப்புக்கு நன்றி! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும், அங்கும் சொகுசாய் வாழ்பவரால் அல்லது உயிர் அச்சத்தால் இப்பிடி ஒரு  பேட்டி கொடுக்கலாம், புகழாரம் சூட்டலாம்.  அவ்வளவு நல்லவர்கள், இவரை தாராளமாக நடத்துபவர்கள் ஏன் இன்னும் அரசியல் கைதிகள் என்று தமிழ் இளைஞர்களின் எதிர்காலம், இளமையை  வீணாக்கி சிறையில் அடைத்து வைத்து  இனிமை காண்கிறார்கள்?  முன்னாள் போராளிகளை சந்தேகத்துடன் நாட்டில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள், வறுமையில் வாழுகிறார்கள். போராட்டத்தின் முக்கிய காரணத்தை கண்டு தீர்த்திருக்கலாமே? இதுதான் ஒரு நல்ல அரசியற் தலைவர் செய்ய வேண்டியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

இவர்களுடன் ஒப்பிடும்போது கருணா ஒப்பீட்டளவில் பறவாயில்லை. 😂😂

கேபியும் லிஸ்டில் சேர்கிறார் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்குத்தெரியும்

போராட்டத்தை 1977 இல் நிறுத்தினாலும்

2020 இல் நிறுத்தினாலும்

தமிழர்க்கும்

அதன் வழிகாட்டிகளுக்கும் இரண்டு தேர்வு தான்

ஒன்று போராடிச்சாவது

அல்லது  பத்மநாதன்  போல்  வாழ்வது?

காவல்த்துறை அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருக்கும் 

காந்தி  படம் மற்றும்  குற்றவாளிகள்  படம்  போல...

பத்மநாதன்  மிக  மிக  திறமையாக நடிக்கவும்  அதன்படி  வாழவும்  கற்றுக்கொண்டு  விட்டார்

இவர் அனுப்பிய சயனற்களை உண்டு  மரணித்தவர்கள்

உண்மையில்  இந்த பூமியில் வாழ  தகுதியற்றவர்கள்  தானே???

 

Link to comment
Share on other sites

10 minutes ago, விசுகு said:

தலைவருக்குத்தெரியும்

போராட்டத்தை 1977 இல் நிறுத்தினாலும்

2020 இல் நிறுத்தினாலும்

தமிழர்க்கும்

அதன் வழிகாட்டிகளுக்கும் இரண்டு தேர்வு தான்

ஒன்று போராடிச்சாவது

அல்லது  பத்மநாதன்  போல்  வாழ்வது?

காவல்த்துறை அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருக்கும் 

காந்தி  படம் மற்றும்  குற்றவாளிகள்  படம்  போல...

பத்மநாதன்  மிக  மிக  திறமையாக நடிக்கவும்  அதன்படி  வாழவும்  கற்றுக்கொண்டு  விட்டார்

இவர் அனுப்பிய சயனற்களை உண்டு  மரணித்தவர்கள்

உண்மையில்  இந்த பூமியில் வாழ  தகுதியற்றவர்கள்  தானே???

 

இவர் ஏன் விலை போனார்...? இவர் விலை போனது 30 வருட போராட்டத்தையே அழித்து விட்டதே ...!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

இவர் ஏன் விலை போனார்...? இவர் விலை போனது 30 வருட போராட்டத்தையே அழித்து விட்டதே ...!!!!

போராட்டம் அழிக்கப்பட்டதற்கு இவர் காரணமல்ல

செத்த பாம்பை  நான்  கொன்றேன் நான்   கொன்றேன்  என்பது  போல்  பலரும்  வருவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் இரண்டு மத்திய குழு உறுப்பினர்கள் நெடுஞ்சாண் கிடையாக மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்கும் முன்னால் தமது உயிரைக் காப்பாற்ற விழுந்து கிடக்கும் இலட்சணத்தில் தமிழ்த்தேசியம் செழிக்கும், தமிழீழம் மலரும் என்ற கனவு கானல்நீராகவே இருக்கும்.

2009 மே 18 க்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மொத்தமாகவும், சில்லறயாகவும் கூறுபோட்டு பிரித்து ஆளாளுக்கு லாபம் பார்த்தவர்கள் பலர். ஒன்றும் இல்லாமல் அல்லாடும் போராளிகளும் பலர். உயிரோடு இருக்கும் போராளிகளை சிங்களப்படைகள் ஒருபக்கம் ஒடுக்க, மற்றைய பக்கத்தில் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புக்களும் அவர்களை தமது உள்நோக்கத்திற்காக பாவிக்கின்றார்கள்.

இந்த புலம்பெயர் அமைப்புக்களின் உச்சியில் இருப்பவர் கோத்தபாயவாக இருக்கக்கூடும்.😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

விடுதலைப் புலிகளின் இரண்டு மத்திய குழு உறுப்பினர்கள் நெடுஞ்சாண் கிடையாக மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்கும் முன்னால் தமது உயிரைக் காப்பாற்ற விழுந்து கிடக்கும் இலட்சணத்தில் தமிழ்த்தேசியம் செழிக்கும், தமிழீழம் மலரும் என்ற கனவு கானல்நீராகவே இருக்கும்.

2009 மே 18 க்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மொத்தமாகவும், சில்லறயாகவும் கூறுபோட்டு பிரித்து ஆளாளுக்கு லாபம் பார்த்தவர்கள் பலர். ஒன்றும் இல்லாமல் அல்லாடும் போராளிகளும் பலர். உயிரோடு இருக்கும் போராளிகளை சிங்களப்படைகள் ஒருபக்கம் ஒடுக்க, மற்றைய பக்கத்தில் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புக்களும் அவர்களை தமது உள்நோக்கத்திற்காக பாவிக்கின்றார்கள்.

இந்த புலம்பெயர் அமைப்புக்களின் உச்சியில் இருப்பவர் கோத்தபாயவாக இருக்கக்கூடும்.😮

உங்களது கதைக்கு  எந்தளவு ஆதாரம்  கிடையாதோ

அதேபோல் மறுக்கவும்  எம்மிடமும்  ஆதாரம்  கிடையாது

திருடராக  பார்த்து திருந்தாவிட்டால்????

(-ஆதாரம்  தெரிந்தவர்களும் மௌனிகளாக இச்செய்தியை  இணைத்தவர்  உட்பட)

Link to comment
Share on other sites

விடுதலைப்போராட்டம் தோற்றுப்போய் இன்றய அவலநிலை உருவானதற்கு  உண்மையான காரணத்தை வெளிப்படையாக ஆராய ஆவல் இல்லாததால்  யார் மீதாவது பழியை போட வேண்டும் என்பதில் தால் பலரும் குறியாக உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கேபியும் லிஸ்டில் சேர்கிறார் போல

ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லையா 😂 அல்லது இதிலும் கிழக்குடன் வடக்கும் கூடவே வருகிறது என்று கவலையோ 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரமுனவின் பிரச்சாரத்தில் கேபி – சம்பிக்க தெரிவிப்பு

champika-ranawaka.jpg?189db0&189db0

அரசாங்கம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கே.பி எனும் குமரன் பத்மநாதன பயன்படுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற எம்பி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். மேலும்,

“கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கே.பி முன்னெடுத்துச் எெல்வது முறையற்றது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இந்தியாவினால் கே.பி மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

அவ்வாறிருக்கையிலேயே கே.பியும் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி கருணாவும் பொதுஜன பெரமுனவிற்காகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள்” – என்றார்.

https://newuthayan.com/பெரமுனவின்-பிரச்சாரத்தி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.