Jump to content

அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில்

IMG-20200801-WA0000.jpg

ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு எத்தகைய தேர்தலாக இருக்கும்?’’

“வட கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேர்தலை ஒரு போராட்டமாகத்தான் அணுகிவந்துள்ளனர். இந்த முறையும் அப்படித்தான். நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான, உரிமை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடையிலான தேர்தலாகத்தான் இது இருக்கும். மக்கள் நீதியையும், தர்மத்தையும், உரிமையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு.”

“இலங்கை தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வளவு பிளவுபட்டு நிற்பது ஏன்?’’

“எல்லோரும் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், கொள்கை தவறுகிறவர்களுடன் எவ்வாறு சேர்ந்து பயணிக்க முடியும்? அது சாத்தியமே இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் சேராது. தன்னலமான அரசியலையும், மக்களை ஏமாற்றுகின்ற போக்கையும், வெளிப்படைத்தன்மை இல்லாத இயல்பையும் கொண்ட ஒரு சில தமிழ்த் தலைவர்களால்தான் இத்தகைய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. வட கிழக்கில் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள மிகப்பெரிய கூட்டணி எங்களுடைய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிதான். மக்கள் எம்மை ஏற்பார்கள். பிளவுகள் இல்லாதொழிந்துவிடும் என்பது எமது நம்பிக்கை.”

“குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய மூன்று அணிகள் தனித் தனியாகப் போட்டியிடுவது ஏன்?’’

“ஒவ்வொருவரும் சுயநல எண்ணங்களில் அமிழ்ந்திருப்பதை நான் காண்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயநல அரசியலை நடத்தியதால் அவர்கள் மாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீது அதிருப்திகொண்ட, அதேநேரம் தமிழ்த் தேசிய உணர்வுகொண்ட அனைவரும் ஒரே அணியில் நின்று ஒரு மாற்று அணியை உருவாக்குவது அப்போது எங்கள் நோக்கமாக இருந்தது. நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்தோம். சிலர் அதற்குத் தயாராக இல்லை. அதனால் உடன்பாடுகள் எட்டாமல் போயின. இப்போது தேர்தலில் எங்கள் கொள்கையை மக்கள் முன்னால் வைத்துள்ளோம். அதே நேரம் தமிழ்த் தலைவர்கள் என்று கூறப்படுபவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறோம். மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள். மூன்று அணிகளுக்கு இடையே கொள்கை அளவில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு இருந்தாலும், அணுகுமுறைகள் மற்றும் அந்தக் கொள்கைகள் மீதான பற்றுறுதி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன. தனித்து வாழ்வது சேர, சோழ, பாண்டியர் காலத்திலிருந்து பேணப்பட்ட தமிழர்களின் சிறப்பியல்புதானே!’’

“நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியது ஏன்?’’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்னை வற்புறுத்தியே அரசியலுக்கு அழைத்துவந்தார்கள். நான் தெற்கில் வாழ்ந்து வந்திருந்தாலும், பத்து வருடங்கள் வட கிழக்கில் நீதிபதியாகக் கடமையாற்றியவன். வடக்குக்கு வந்ததும் அந்தப் பகுதி மக்களின் மனங்களைப் புரிந்துகொண்டேன். ஆனால், என்னைக் கூட்டி வந்தவர்களோ வட கிழக்கில் வாழ்ந்தாலும் கொழும்பு மனநிலையில்தான் இருந்தார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தடையாக இருந்தார்கள். வடமாகாண சபையில் இனப்படுகொலை எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது உள்ளிட்ட பல காரியங்களுடன் அவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஏனென்றால், சுயநல காரணங்களுக்காக அவர்கள் இலங்கை அரசைக் காப்பாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில், எனக்கெதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து எனது பதவியைப் பறிக்க முற்பட்டார்கள். ஆனால், மக்கள் அதற்கு வாய்ப்பு தரவில்லை. தமிழ் மக்களின் கூட்டு நலன்களுக்கு எதிராக முழுமையாக மாறிவிட்ட அவர்களுடன் நான் எப்படிப் பயணிப்பது?’’

“ராஜபக்சேவின் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?’’

“தெற்கில் இனவாதம் கடுமையாக இருக்கிறது. போர் வெற்றியையும் இனவாதத்தையும் அங்கு அவர்கள் தூண்டுகிறார்கள். நாங்கள் எங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள்பற்றிப் பேசினால்கூட அதை, தமிழீழம் கோருகிறோம் என்று சொல்லியே அரசியல் செய்கிறார்கள். எம்மை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கிறார்கள்.

தெற்கில் யார் வென்றாலும் எங்களுக்கு ஒன்றுதான். அப்படித்தான் கடந்தகால வரலாறு முழுவதும் இருந்திருக்கிறது.’’

“ராஜபக்சே சகோதரர்கள் நாட்டை மேலும் ராணுவமயப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறதே?’’

“வட கிழக்கு ராணுவமயப்பட்டே இருக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இப்போது `கொரோனா தடுப்புத் திட்டங்கள்’ என்ற பெயரில் வடக்கு மேலும் ராணுவமயப்படுத்தப் படுகிறது. பாகிஸ்தானின் பழைய ஆட்சிமுறை இங்கு நிறுவப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை.’’

நன்றி – ஜூனியர் விகடன்

https://vanakkamlondon.com/one-min-interview/2020/08/79264/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.