Jump to content

போர்க் குற்றங்கள் – தமிழர்கள் பெருமளவில் படுகொலை- வன்னியில் போட்டியிடும் முன்னாள் இராணுவஅதிகாரியின் கருத்து என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றங்கள் – தமிழர்கள் பெருமளவில் படுகொலை- வன்னியில் போட்டியிடும் முன்னாள் இராணுவஅதிகாரியின் கருத்து என்ன?

 
August 1, 2020

இலங்கை இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது என தெரிவித்துள்ள வன்னிமாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கீழ் போட்டியிடும் முன்னாள் இராணுவ அதிகாரி ரத்னப்பிரிய பந்து தமிழர்கள் பாரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் நிராகரித்துள்ளார்.
ஆங்கில நாளிதழிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகளை நாட்டின் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யவேண்டும் என தெரிவித்துள்ள ரத்தினப்பிரிய பந்து நாங்கள் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ratnapriya-bandu1-300x197.jpg

படையிலிருந்த சிலர் இன்னமும் சிறைகளில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களை தண்டிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் சமாதானம்,ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக குரல்கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் நான் அதற்காக எனது உயிரை தியாகம் செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் மோசமான அநீதிகளை எதிர்கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

 

அவர்கள் சில அநீதிகளை எதிர்கொண்டார்கள் என்றால் மூன்றாம் தரப்பினால் உருவாக்கப்பட்ட சமூக பதட்டங்களே அதற்கு காரணம் என முன்னாள் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரண்டு சமூகங்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவேளை அது அவர்களுக்கு உதவியது எனவும் தெரிவித்துள்ள அவர் வெளிநாட்டு தலையீடுகள் இதனை தீவிரப்படுத்தின எனவும் குறிப்பிட்டுள்ளார்.

rathinapriya-bandu-300x293.jpeg

1983 ம் ஆண்டு இனக்கலவரத்திற்கும் தமிழர்கள் பாரியளவில் படுகொலை செய்யப்பட்டமைக்கும் அச்சுறுத்தப்பட்டமைக்கும் சிங்கள அரசியல்வாதிகளே காரணம் என கருதுகின்றீர்களா?

நான் அதனை பாரிய படுகொலை என ஏற்றுக்கொள்வில்லை என குறிப்பிட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ரத்திணப்பிரிய சில அரசியல் வாதிகள் உள்நோக்கம் கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் ஒருபோதும் யுத்தத்தை கோரவில்லை என குறிப்பிட்டுள்ள அவர்கள் ஐக்கியத்துடன் வாழவே விரும்பினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் வெளிநாடுகளின் சின்னத்தனமான வெளிநாட்டு நிகழ்ச்சிநிரலை எதிர்கொண்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

http://thinakkural.lk/article/59364

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.