Jump to content

இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது – சீ.யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது – சீ.யோகேஸ்வரன்

இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது –  சீ.யோகேஸ்வரன்

மிகவும் இனவாதம்கொண்ட ஜனாதிபதி தமிழ் மக்களின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத்திற்கு சில ஆதரவுகளை வழங்கியதன் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செயற்பாடு புதிய ஜனாதிபதியின் வரவின் பின்னர் தடைசெய்யப்பட்டுள்ளது.தேசிய கீதமும் தமிழில் பாடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தனிச்சிங்களத்தில் பாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.மத பீடங்கள் நல்ல போதனை மக்களுக்கு வழங்கவேண்டும்.ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது.இவ்வாறானவர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டு தமிழ் மக்களுக்கான எந்த உரிமையினையும் வழங்காத வகையில் இந்த பீடங்கள் செயற்படுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தங்களது சிங்கள சமூகத்தில் கோரிவருகின்றார்.நாடு பிளவுபடப்போகின்றது அதனை பாதுகாக்க எங்களுக்கு வாக்களிங்கள் என்றே மொட்டுக்கட்சி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றது.நாங்கள் நாடு பிளவுபடுத்துமாறு கூறவில்லை.ஒன்றுபட்ட நாட்டுக்குள்ளேயே தீர்வினைக்கோரிவருகின்றோம்.அனைத்து சிங்கள தலைவர்களிடமும் இதனை நாங்கள் வலியுறுத்தியுள்ளொம்.ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கிவிடக்கூடாது என்பதிலும் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராக திரட்டு தமது சுயநலத்தினைப்பேணுவதற்காக சிங்கள பகுதிகளில் மொட்டுக்கட்சி தீவிரமான பிரசாரங்களை தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவருகின்றது.

இந்த இடத்தில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமடைந்து பாராளுமன்றத்தில் குரல்கொடுக்ககூடாது என்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பல கட்சிகளை பலகோடி நிதிகளை வழங்கி களமிறக்கியுள்ளார்.அதில் முதலாவது மொட்டுக்கட்சி.அந்த கட்சியில் ஏனைய சமூகத்தினை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.தற்போது வியாழேந்திரன் மூலமாக அதனை தனி தமிழ் கட்சியாக காட்டி அதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.இரண்டாவதாக மகிந்தராஜபக்ஸவின் செல்லப்பிள்ளையான பிள்ளையான் தலைமையிலான படகுக்கட்சி.அது மொட்டுக்கட்சியின் நிழல்கட்சி.தாங்கள் சிங்கள கட்சியுடன் இணையவில்லை,தனியாக கேட்கின்றோம் என்று தமிழர்களின் வாக்குகளை பிரிக்கசெயற்படுகின்றது.இவர்கள் யாரும் ஓரு பிரதிநிதியைக்கூட பெறமாட்டார்கள்.

பௌத்த பீடத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினையும் இணைத்துக்கொண்டதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு தொல்பொருள் செயலணியை உருவாக்கி அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 56இடங்களை பிரகடனப்படுத்தி அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும் அதன் மூலம் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கையெடுத்துவருகின்றார்.மத பீடங்கள் நல்ல போதனை மக்களுக்கு வழங்கவேண்டும்.ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை,மகிழடித்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/இந்த-நாட்டில்-இருக்கின்ற/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.