Jump to content

தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா?

கே. சஞ்சயன்   / 2020 ஓகஸ்ட் 01

வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும்  வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது.  

கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  
1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை.  

ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது.  

ஆனால், இந்த முறை, இராணுவச் சூழலும் இருக்கிறது; அதிகார பலமும் கோலோச்சுகிறது. அவற்றுக்கு அப்பால் ஊடக பலமும் பண பலமும் வேறு ஆட்டிப் படைக்கின்றன.  

பண பலம், அதிகார பலம், ஊடக பலம் இருந்தால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகி விடலாம் என்ற கனவுடன், பல வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.  

கடந்தகாலத் தேர்தல்களில் இல்லாதளவுக்கு, இம்முறை பணம் கரை புரண்டு ஓடுகிறது. காரணம், பல முக்கிய கட்சிகளும் குழுக்களும் பணத்தைச் செலவிடக் கூடிய புள்ளிகளை, வேட்பாளர்களாகக் களமிறக்கி விட்டிருக்கின்றன.  

இதற்கு முன்னர், பேரினவாதக் கட்சிகளுக்கு போட்டியில் நிறுத்துவதற்கு, வடக்கில் வேட்பாளர்கள் கிடைப்பதே அரிது.  போட்டியில் நிற்கும் சில முக்கியப் பிரமுகர்கள், ஒப்புக்காக யாரையாவது பிடித்துக் களமிறக்கி வந்தனர்.  

அப்போது, வடக்கின் தேர்தல் செலவுக்கு, பெருமளவு பணம் பேரினவாதக் கட்சிகளால் கொடுக்கப்பட்டு வந்தது.  

இப்போது நிலைமைகள் மாறி விட்டன. இந்தமுறை, பேரினவாதக் கட்சிகளில் களமிறங்கி உள்ளவர்களில் பலர், முக்கியப் புள்ளிகள். பணத்தைத் தண்ணீராகச் செலவிடக் கூடியவர்கள்.   
பணத்தை அள்ளி வீசினால், வாக்குகள் கிடைக்கும்; நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து விடலாம் என்று, அவர்களுக்கு யாரோ நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  

ஏனென்றால், அந்தளவுக்கு அவர்களால் பணம், நீராக வாரி இறைக்கப்படுகிறது.  
இம்முறை, ‘பேஸ்புக்’கில் பிரசாரத்துக்காக அதிகளவில் செலவிட்டுள்ள வேட்பாளர்களில் முதலிடத்தில் உள்ளவர் சஜித் பிரேமதாஸ.  அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அங்கஜன் இராமநாதன்.  

நாட்டின் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகின்ற ஒரு பெரிய அரசியல் கட்சியின், கூட்டணியின் தலைவருக்கு அடுத்த நிலையில், சமூக வலைத்தளப் பிரசாரத்துக்கு இவர் செலவழிக்கிறார்.  
‘பேஸ்புக்’ பிரசாரத்துக்காக, அங்கஜன் இராமநாதன் 12 ஆயிரம் டொலர்களுக்கு மேல் செலவழித்திருக்கிறார்.  இதிலிருந்தே வடக்கில் எந்தளவுக்குப் பணம் செலவிடப்படுகிறது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகிறது.  

யாழ். மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்பாளர்கள் செலவிடும் நிதியைப் பார்த்து, நிலையான வாக்கு வங்கியைக் கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே, மிரண்டு போயிருக்கின்றன.  

ஏனென்றால், சுவரொட்டிகளிலும் அவர்கள் தான் நிற்கிறார்கள்; நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவர்களின் விளம்பரங்கள் தான் நிறைந்து கிடக்கின்றன  
இதைப் பார்த்து மிரட்டு போயுள்ள ஏனைய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் கூட, நாளிதழ் விளம்பரங்கள், சமூக வலைத்தள விளம்பரங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.  
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கொரோனா வைரஸால் இழந்த வருமானத்தை மீட்டு விடுவதென்பதில், ஊடகங்களும் குறியாக இருக்கின்றன.   

வடக்கில், தேர்தல் காலத்தைக் குறிவைத்தே, குறுகிய காலத்துக்குள் புதிது புதிதாகப் பல அச்சு ஊடகங்கள் முளைத்திருக்கின்றமையும் குறிப்பிட வேண்டிய விடயம்.  

வடக்கு அரசியலில், ஊடக பலம், செல்வாக்குச் செலுத்திய முதல் சந்தர்ப்பமாக அமைந்தது, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தான்.  

அப்போது, ஈ.பி.டி.பிக்கும் யாழ்ப்பாண நாளிதழ் ஒன்றுக்கும் இடையில் வெடித்த தீவிர மோதலால், ஐ.தே.க வேட்பாளராக மகேஸ்வரனைக் களமிறக்கி, அவரை வெற்றி பெறச் செய்தது குறித்த ஊடகம். 2001இலும் அதுவே நடந்தது.  

2010இல் குறித்த ஊடகத்தின் உரிமையாளரும் கூட, அந்தப் பலத்தை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றம் சென்று விட்டார். 2015இலும் அதை அவர் தக்கவைத்தார்.  

இப்போது, அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என்று பலவற்றைத் தமது பக்கம் வளைத்துப் போட்டு, வெற்றி பெற்று விடலாம் என்று பெரும் புள்ளிகள் களமிறங்கி இருக்கிறார்கள்.  

வடக்கின் உள்ளூர் ஊடகங்கள் பல, வெளிப்படையாகவே அரசியல் பேசுகின்றன; சார்பு நிலையுடன் தகவல்களைப் பகர்கின்றன.  

கூட்டமைப்பை ஆதரிக்கும் ஊடகங்களும் உள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை ஆதரிக்கும் ஊடகங்களும் இருக்கின்றன. அதுபோன்று, பேரினவாதக் கட்சிகளும் கூட, பல ஊடகங்களைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றன.  

பண பலத்தை வைத்துக் கொண்டும் ஊடக பலத்தை வைத்துக் கொண்டும் நாடாளுமன்றக் கதிரையில் அமர்ந்து விடலாம் என்று, பல வேட்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

அதற்காக அவர்கள், விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை ஒத்த மெட்டுகளில், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பாடல்களை வெளியிட்டு, செய்கின்ற அலப்பறைகள் தாங்கிக் கொள்ள முடியாதவையாக உள்ளன. இவையெல்லாம் தமிழ் மக்களைப் பெரிதும் சலிப்படையச் செய்திருக்கின்றன.  

நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்காக, இந்தளவுக்குப் பணத்தைக் கொட்டும் அரசியல்வாதிகளுக்கு, இவை எங்கிருந்து கிடைத்தன என்ற கேள்வி, மக்கள் மத்தியில் உள்ளது. அத்துடன், பிரசாரத்துக்காக இவ்வளவு செலவழிப்பவர்கள், இதனை எவ்வாறு ஈடுகட்டப் போகிறார்கள் என்பது, மக்கள் மத்தியில் உள்ள நியாயமான கேள்வி.  

ஏனென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சட்டரீதியாகக் கிடைக்கக் கூடிய ஊதியம், சலுகைகள், அவர்களின் வாழ்க்கைச் செலவுக்குத் தான் போதுமானதாக இருக்கும்  
வாகன இறக்குமதி அனுமதியின் மூலம் கொஞ்சம் பணத்தைச் சம்பாதிக்கலாம். அதற்கும் இப்போது பல கட்டுப்பாடுகள் வந்து விட்டன.  

அவ்வாறாயின், இவர்கள் செலவிடுகின்ற பணத்தை, எப்படி மீளப்பெறப் போகிறார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது.  

பல வேட்பாளர்களுக்குப் பின்னால், உள்ளேயும் வெளியேயும் பலர் இருக்கிறார்கள். அவர்களே, அவர்களின் செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.  

பல புத்திசாலித் தலைவர்களும் வேட்பாளர்களும், சொந்தக் காசைப் போட்டு பிரசாரம் செய்வதில்லை.  

சி.வி. விக்னேஸ்வரனை, வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட கூட்டமைப்பு அழைத்த போது, ஓய்வூதியப் பணத்தை கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தான், அரசியலில் செலவு செய்ய முடியாது என்று மறுத்தார் என்றும் புலம்பெயர் தமிழர்களே அவரது வெற்றிக்காகப் பணத்தைச் செலவிட்டனர் என்பதும் பழங்கதை.  

இப்போதும் கூட, அவருக்கும் அவரது அணியினருக்கும் துணையாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள் தான்.  

தமிழ்த் தேசிய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு, புலம்பெயர் தமிழர்களின் நிதி தான் பலம்.  

உள்ளூர் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், இவர்களும் பிரசாரங்களுக்குச் செலவழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  

பேரினவாதக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரசாரச் செலவுகள் குறைவு தான்.  ஆனாலும், சில சுயேட்சைக் குழுக்கள், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இணையாகப் பிரசாரங்களுக்குச் செலவழிக்கத் தொடங்கியிருக்கின்றன.  

இந்தத் தேர்தல் செலவுகளையும் பிரசாரங்களையும் வைத்துத் தான், வடக்கில் உள்ள மக்கள், தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யப் போகின்றனரா? அல்லது, கொள்கைகளின் அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்யப் போகிறார்களா? இல்லை, தமது தேவைகளின் அடிப்படையில் தெரிவை மேற்கொள்ளப் போகிறார்களா?  

முடிவெடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.   
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-வெற்றியைத்-தீர்மானிப்பதற்கு-பணபலமும்-ஊடக-பலமும்-மட்டும்-போதுமா/91-253898

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தத் தேர்தல் செலவுகளையும் பிரசாரங்களையும் வைத்துத் தான், வடக்கில் உள்ள மக்கள், தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யப் போகின்றனரா? அல்லது, கொள்கைகளின் அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்யப் போகிறார்களா? இல்லை, தமது தேவைகளின் அடிப்படையில் தெரிவை மேற்கொள்ளப் போகிறார்களா?  

முடிவெடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.   
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-வெற்றியைத்-தீர்மானிப்பதற்கு-பணபலமும்-ஊடக-பலமும்-மட்டும்-போதுமா/91-253898

யாருக்கு என்ன கொள்கை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

யாருக்கு என்ன கொள்கை இருக்கு.

கொள்ளை அடிப்பதும், மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதும் சிங்கள தேசியக் கட்சிகளுக்கு கூறுபோட்டு விற்பதும், தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று தாங்கள் நம்பாததையே திரும்பத் திரும்பச் சொல்வதும், விருப்பு வாக்குக்காக ஒரே கட்சிக்குள் ஒருவரை ஒருவர் காலை வாருவதும் கொள்கைகள் என்று அம்மணமாகத் தெரிகின்றதே.

தமிழ்நாட்டு அரசியல் ஆக்கிவிட்டார்கள். ஆனால் தமிழ்மக்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.