Jump to content

வெள்ளை வேட்டியோடு கொள்ளைக்காரர் வருவார்கள்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 


வெள்ளை வேட்டியோடு 
கொள்ளைக்காரர்கள் 
நாட்டை ஆள வருவார் 
நரிகள் கூட வருவர் 

ஊருக்காய் உழைத்தவன் 
படித்தவன் பண்பாளனை 
பாராளுமன்றம் அனுப்பி வைக்கார் 
படித்தவன் கூட வரான் 

போனவர் அனைவரும் 
பொழுது விடியுமுன்பே
மந்திரியாவார்கள் 
நூறுக்கு மேலே மந்திரிமார் 
பாதிக்கு மேலே வேலை இல்லை 

சிங்கப்பூர் போல் 
சிலோனை மாற்றுவோம் 
என்று  கூடச் சொன்னார் 
ஸ்ரீ லங்காவின் அரைவாசி 
இப்போ சீனாவுக்கு சொந்தம் 
எடுத்த கடன் தலைக்கு மேலே 
திருப்பி கொடுக்கவில்லை 

அரை நூற்ராண்டாய் 
அந்த மலையக மக்கள் 
படுக்குற துன்பம் 
அவன் தேனீருக்குள் தெரியுது 
இவன் இரத்தமும் வியர்வையுமாய் 

அவனுக்கு அங்கே எதுகும் இல்லை 
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்காய் 
அழுது புலம்புறான் ஆண்டுக்கு மேலாக 
அவனுக்கு ஓர் வாழ்வும் இல்லை 

இனப் பிரச்சினை இன்னும் தொடருது 
யுத்தம் முடிந்த கையோட 
எல்லாம் தீர்ப்போம் என்றார்கள் 
ஏதும் தீர்வு வந்ததாய் இல்லை
ஏமாற்றம் தான் கண்டது மிச்சம் 

அடுக்காய் ஆயிரம் பொய்களைச் சொல்லி 
அந்தக் கதிரைக்காக காத்திருப்பர் 
கட்சித் தலைவர்கட்கு எல்லாம் 
இப்போ தள்ளாடும் வயது 
இளசுகளுக்கு இடம் கொடுக்க 
இப்பவும் விருப்பமில்லை  
பதவிக்கும் பணத்துக்கும் 
பாராளுமன்றம் 

சிறு பான்மை மக்களும் 
சில பேர் வருவினம் 
எவருமே கேளான் 
இவர்களின் கதைகளை 

சிலர் மந்திரியாக 
வாய்ப்புகள் கிடைக்கலாம் 
என்னத்தை கண்டோம் 
இது வரை காலம் 

இங்கு போய் என்ன செய்வது 
இவர்களுக்கு தெரியாத 
அரை நூற்ராண்டாய் 
அங்கு தானே இருந்தவ

எதற்காக என்று 
இன்னும் மக்களுக்கு 
தெரியவில்லை 

இதற்காகத் தான் 
இன்றும் அடி பிடி 
நடக்கிறது

நாட்டையே கெடுத்து 
தம் வீட்டை மட்டும் வளத்தவர்
நாளை நம்ம தலைவர் ஆவதா 
நாமும் துணை போவதா

இனியும் நம்புவோம் 
மனிதரைத் தான் 
மக்கள் அனுப்பி வைப்பார்கள் 
மக்களுக்காக மக்களின் ஆட்சிக்காய்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, நாட்டில் நிலவும் தற்போதைய சகல பிரச்சனைகளையும் கவிதை வடிவில் சொல்லிவிட்டீர்கள் அருமை, பாராட்டுக்கள், தொடர்ந்து பகிருங்கள்

சனங்களின் மனதை மாற்ற இனி ஒரு நல்ல தலைமை வேண்டும், ஆனா அப்படியொரு தலைமையை இனி அங்கு தலையெடுக்க இந்தியனும்,  சிங்களவனும், எம்மவரும் விடமாட்டார்கள், எழுத்தளவில் மட்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

நல்ல கவிதை, நாட்டில் நிலவும் தற்போதைய சகல பிரச்சனைகளையும் கவிதை வடிவில் சொல்லிவிட்டீர்கள் அருமை, பாராட்டுக்கள், தொடர்ந்து பகிருங்கள்

உடையாருக்கும் குமாரசாமியாருக்கும் நன்றிகள் .என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ————-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, என்ன செய்வது நாங்கள் ஏதிலிகளாகி விட்டோம் .....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 04:33, uthayakumar said:

வெள்ளை வேட்டியோடு 
கொள்ளைக்காரர்கள் 

நல்லூர்த் திருவிழாவைத் தான் குறி வைத்து எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன்.

Link to comment
Share on other sites

காலத்திற்கு பொருத்தமான கவிதை. நல்ல வரிகள். பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

நல்ல கவிதை, என்ன செய்வது நாங்கள் ஏதிலிகளாகி விட்டோம் .....!   🤔

 

8 hours ago, nige said:

காலத்திற்கு பொருத்தமான கவிதை. நல்ல வரிகள். பாராட்டுக்கள்...

கருத்திட்ட சுவி  ஈழப் பிரியன் நிஜிக்கு நன்றிகள்.ஈழப் பிரியன் நல்லூர் திருவிழாவிலும் வெள்ளை வேட்டிகளை காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, uthayakumar said:

உடையாருக்கும் குமாரசாமியாருக்கும் நன்றிகள் .என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ————-

  ஊரிலையெல்லாம் அந்தக்காலத்திலையே வெள்ளை வேட்டிக்கள்ளர் எண்டு சும்மாவே சொன்னவையள் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தோழர்..👍..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 12:47, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தோழர்..👍..💐

நன்றிகள்  புரட்சித்தமிழனுக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.