Jump to content

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!


Recommended Posts

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!

 
Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி 
 
 Published: 09 July 2014 
 
 Hits: 2585

எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.

அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...

 

 

மேதினம் என்றதும் தங்கள் நினைவில் வருவது....?

முதலில் வருவது தோழர்கள் சண்முகதாஸன், இக்பால், சலீம, கே.டானியல் போன்றவர்களும் மற்றும் அடிக்கடி வந்து பழகிப்போன சிங்களத் தோழர்களும் தான. உண்மையில் அது ஒரு வசந்த காலம். மேதின ஊர்வலத்துக்குப் போகிறோம் என்ற உணர்வை விட ஏதோ ஒரு பெருவிழாவுக்குப் போகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். எனது கணவரும் அவரது தோழர்களும், முதற்கிழமையே எல்லா ஆயத்த வேலைகளையும் ஆரம்பிக்க எல்லாம் களைகட்டிவிடும்.

எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்த சிங்களத் தோழர்களும் எம்மோடு சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள். அத்தோடு அயல் கிராமத்து தோழர் தோழியர்களை பார்க்கப் போகின்றோம் சந்திக்கப் போகின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும்.

யார் அந்தத் தோழர்கள்...?

எனது கணவனின் கட்சியில் இருந்த சில சிங்களத் தோழர்கள் எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்தவர்கள். எப்போதாவது கிடைக்கும் லீவு காலங்களில் மாத்திரம் ஊர் போய் வருவார்கள். அரசியல் வேலை நிமித்தம் காரணமாக எங்களோடு குடும்பமாகவே வந்து வாழ்ந்தவர்கள். இக்பால், சலீம் போன்ற முஸ்லீம் தோழர்களும் எம்மோடு வந்து அரசியல் வேலை செய்தவர்கள்.

பின்னர் தமிழ் இயக்கங்கள் வளரத் தொடங்க, சிங்கள தமிழ் முரண்பாடுகளும் மேலோங்க அந்தத் தோழர்கள் இருக்க முடியாத சூழல் உருவாக..... இப்ப தெரியும் தானே இன்று இந்த இருண்ட நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறம்.

அன்றிருந்த தமிழ் சிங்கள உறவுகள், இன்றிருக்கும் தமிழ் சிங்கள உறவுகள் பற்றி இப்ப என்ன நினைக்கின்றீர்கள்....?

இனிமேல் இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்றவொரு மாயத் தோற்றத்தை சிங்களத் தலைமைப்பீடங்களும் அன்றிருந்த தமிழ்த் தலைமைப்பீடங்கள் தொடக்கம் அழிந்து போன தமிழ் இயக்கங்கள் வரை இந்த மாயையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.

காலம் காலமாக இந்த அரசுகள் எப்படி இந்த தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கி அடக்கி ஆளுகின்றனவோ அப்படித்தான் சிங்கள மக்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன. எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. அன்று ஒரு நாள் ஜே.ஆரின் ஆட்சியை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தின எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய பல தமிழ் தலைவர்கள் ஜே.ஆர் அரசின் விலைவாசி ஏற்றத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் பட்டினியால் துன்புறுகிறார்கள் என்றும், அரசானது தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற கருத்துப்பட பேசிய போது, தோழர் சண்முகதாஸன் அவர்கள் தான் இந்த விலையேற்றமும் பசி, பட்டினிக் கொடுமைகளும் சிங்கள மக்களுக்கும் தான் என்று பேசிய போது அந்தக் கூட்டமே அதிரும்படி எழுந்த சிரிப்பொலியும் கரகோசமும் என்னால் இன்றும் மறக்க முடியாது.

அதேநேரத்தில் விடுதலைப்புலிகளின் திண்ணைவேலித் தாக்குதலின் காரணத்தினால் தான் 83 இனக்கலவரம் ஏற்பட்டது என்று பலர் பேசிய போது அதற்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களுக்கு யார் காரணம் என்று கேட்டு முன்னர் நடந்த இனக்கலவரங்களுக்கெல்லாம் எங்கே விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாது இலங்கைக்கு ஆயுதப் போராட்டம் தான் சிறந்த வழி என்ற கருத்தையும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம் பல சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை காப்பாற்றி பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது. அவ்வளவும் நடைபெற்ற பிறகும் திரும்பவும் தமிழ் மக்கள் போய் தெற்கில் மீண்டும் வாழ்கின்றனர் தானே. காரணம் என்ன... நாங்கள் சேர்ந்து வாழலாம் என்ற அந்த நம்பிக்கை தான்.

நிட்சயமாக நாங்கள் சேர்ந்து வாழலாம். நானொரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறீர்களா.......? என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

பதிலொன்றும் பேசாது சிரித்துக் கொண்ட நான் இதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்....,? என்று நானே அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

இல்லை, தமிழ்ப் போராட்டம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்னர் என்னுடைய கணவனும் அவரது பல தோழர்களும் ஆயுதம் எடுத்துப் போராடியது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழருக்கு எதிராக போராடிய போராட்டம் அது. எப்போதாவது கூட்டம் என்றும் சந்திப்புக்கள் என்றும் போய்விடுவார்.... சில நாட்கள் கழித்துத் தான் வருவார். வரும் போது சில தோழர்களும் வந்து தங்குவார்கள். அது பற்றி எனக்கு முதலில் தெரியாது பின்னர் தான் அந்த ரகசியங்கள் எனக்குத் தெரிந்தன.

தமிழர்கள் மத்தியில் திறக்கப்படாத பல கோவில்கள் திறக்கப்பட்டன, பல தேநீர் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டதற்கு அந்தப் போராட்டங்கள் தான் காரணம். ஆனால் இன்று வரையும் அந்தப் பிரச்சினைகள் முடியவில்லை...... ஏன் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் கூட இந்தச் சாதிகளைக் கொண்டு வந்து தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தானே. இன்று இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட நான் பெரிது நீ பெரிது என்று நினைக்கும் இந்த தமிழ் சமூகத்தை நினைக்கும் போது கவலைப்படுவதை விட அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.

இன்று அந்தக் கம்யூனிஸக் கட்சியும் அதன் போராட்டங்களும் பெரிதாக முன்னிலைக்கு வராமல் இல்லாதழிந்து போனது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.

முதலில் எங்கள் கிராமத்திலும் மற்றைய அயல் கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இந்தக் கம்யூனிசவாதிகள் என்றால் கடவுளுக்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள், தெய்வங்கள் இல்லையென்பவர்கள், கோவில்களுக்கு எதிரானவர்கள் போன்ற தப்பான அபிப்பிராயங்கள் சாதாரண பொது மக்களிடத்தில் இருந்தது. வழிக்கு வழி தெருவுக்குத் தெரு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படும் எம்மவர் மத்தியில் இவர்களது செயற்பாடுகளும் வேலைமுறைகளும் எடுபடுவது கஸ்டமான காரியம்தான்.

இரண்டாவதாக யாழ் மண்ணிலே வேரோடியிருக்கும் சாதிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் போது அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கொள்கையை முன்னெடுத்த கட்சியை எப்படி இந்த யாழ் மேட்டுக்குடியினர் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு மிக முக்கிய காரணமாய் இருந்தது.

அடுத்ததாக தமிழீழ இயக்கங்களின் வளர்ச்சி. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அகிம்சை மூலம் தான் தமிழீழம் எடுத்துத் தருவோம் என்ற போது ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இளைஞர்கள் அந்த நேரங்களில் பொலிசையும் ஆமியையும் சுட வெளிக்கிட, எங்கள் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள் என்று மக்களும் நம்பி அவர்களை ஆதரிக்க தமிழ் இயக்கங்கள் வளர இந்தக்கட்சியின் ஆதரவுகள் குறைந்தது உண்மை தான்.

இந்த மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் சர்வதேசப் பிரச்சினைகளால் கட்சிகளில் நிகழ்ந்த மாற்றங்களும் சண் அவர்களின் மறைவும் பெரிய காரணங்களாய் இருந்தது என்று நினைக்கின்றேன்.

தமிழீழ விடுதலை இயக்கங்கள் பற்றிய உங்கள் கருத்து....?

இயக்க ஆரம்ப காலங்களில் பல இயக்கத்தினர், என் கணவனுடனும் அவரது மற்றைய தோழர்களுடனும் வந்து கதைப்பார்கள், பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எங்கள் தோழர்கள் இந்தத் தமிழீழப் போராட்டம் பிழையானது என்றும் இது ஒரு பாரிய அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்றும் எடுத்துக் கூறினார்கள். ஆனால் எனக்கு அது அந்த நேரத்தில் விளங்கவில்லை. காலம் அதை இப்போது எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது.

அவர்கள் இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்த தருணங்களில் இந்தியா எமக்கு நட்பு நாடெல்ல என்றும் இவர்கள் தான் இந்த தமிழினத்துக்கே எதிரியாக இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறியது மட்டுமல்ல 1971 களில் ஜே.வீ.பியை அழித்தொழிக்க சிறிமா அரசுக்கு எவ்வாறு இந்திய அரசு பக்கபலமாக நின்றதோ அதே போல் இந்திய அரசும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி அரசை உருவாக விடாது என்று சொன்ன பொது ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எனது கணவனின் பள்ளித் தோழன், மாத்தையா எனது பள்ளித் தோழன். ஒரு நாள் மாத்தையா அவர்களும் அவரது தோழர்கள் சிலரும் எங்கள் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது சமுதாயத்தில் அந்த நேரங்களில் இடம்பெற்ற சமூகத்துரோகிகள் ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெற்ற அநியாய கொலைகள் பற்றியும் அவையெல்லாம் போராட்டத்திற்கு, மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தாது என்று எனது கணவர் கூறிய போது தனித்தமிழன் இருக்கும் வரை போராடியே தீருவோம் என்று ஆவேசப்பட்டார் மாத்தையா.

அதே காலகட்டத்தில் இவரது தம்பியார் உட்பட வேறு சிலர் ஏற்கனவே தோன்றிய தமிழ் அமைப்புக்கள் பிழையென்று புதிய இயக்கத்தை ஆரம்பித்த போது அதுவும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும் என்று அவரது தம்பியாருடன் வாதிட்டது எனக்குத் தெரியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு இன்று என்ன நினைக்கின்றீர்கள்.....?

ஊரில் இருந்த நேரத்தில் எனது கணவனும் இவரது சில தோழர்களும் இயக்கப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த சகல உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இறுதிக் காலங்களில இருக்க முடியாத சூழல் உருவான போது அவரை இயக்கத்தினர் தான் இந்தியா கொண்டு வந்து விட்டார்கள். இந்தியாவிலும், பிறகு வெளிநாடு என்று வந்த பின்னரும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்குள் இருந்தது.

சில காலங்களின் பின்னர் வெளிநாடு வந்த எனது கணவரும் இறந்து விட்டார். இப்ப இயக்கப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது. மீண்டும் முன்பு தமிழ் தலைவர்களும் இயக்கங்களும் மக்களை ஏமாற்றியது போல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் எடுத்துத் தருவோம். புலம்பெர் தமிழர் இருக்கும் வரை எமது தமிழினத்துக்கு அழிவேயில்லை என்று பசப்பு வார்த்தைகளை கூறி; தமிழ் மக்களைப் பேக்காட்டி மேலும் மேலும் ஏமாற்றாமலும் சீமானும் வைக்கோவும் நெடுமாறனும் வந்து தமிழீழம் எடுத்துத் தருவார்கள் என்று நம்பி இன்னொரு அழிவுப்பாதைக்கு மக்களை இட்டுச் சொல்லாமலும் ஏற்கனவே சண்முகதாசன் போன்ற தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ ஒரு அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் சாலச்சிறந்தது.

வேறு பல விடையங்களும் கதைத்து முடிந்தவுடன் இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் சிங்கள தமிழ் உறவுகளும் ஒற்றுமைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருவதை எண்ணி மனம் மகிழ்வதாக திருமதி சாந்தா சிவநாதன் குறிப்பிட நன்றியுடன் விடைபெற்று வந்தேன்.

முற்றும்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9077:2014-07-09-13-15-58&catid=320&Itemid=238

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 19:31, கற்பகதரு said:

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!

 
Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி 
 
 Published: 09 July 2014 
 
 Hits: 2585

எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.

அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...

 

 

மேதினம் என்றதும் தங்கள் நினைவில் வருவது....?

முதலில் வருவது தோழர்கள் சண்முகதாஸன், இக்பால், சலீம, கே.டானியல் போன்றவர்களும் மற்றும் அடிக்கடி வந்து பழகிப்போன சிங்களத் தோழர்களும் தான. உண்மையில் அது ஒரு வசந்த காலம். மேதின ஊர்வலத்துக்குப் போகிறோம் என்ற உணர்வை விட ஏதோ ஒரு பெருவிழாவுக்குப் போகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். எனது கணவரும் அவரது தோழர்களும், முதற்கிழமையே எல்லா ஆயத்த வேலைகளையும் ஆரம்பிக்க எல்லாம் களைகட்டிவிடும்.

எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்த சிங்களத் தோழர்களும் எம்மோடு சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள். அத்தோடு அயல் கிராமத்து தோழர் தோழியர்களை பார்க்கப் போகின்றோம் சந்திக்கப் போகின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும்.

யார் அந்தத் தோழர்கள்...?

எனது கணவனின் கட்சியில் இருந்த சில சிங்களத் தோழர்கள் எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்தவர்கள். எப்போதாவது கிடைக்கும் லீவு காலங்களில் மாத்திரம் ஊர் போய் வருவார்கள். அரசியல் வேலை நிமித்தம் காரணமாக எங்களோடு குடும்பமாகவே வந்து வாழ்ந்தவர்கள். இக்பால், சலீம் போன்ற முஸ்லீம் தோழர்களும் எம்மோடு வந்து அரசியல் வேலை செய்தவர்கள்.

பின்னர் தமிழ் இயக்கங்கள் வளரத் தொடங்க, சிங்கள தமிழ் முரண்பாடுகளும் மேலோங்க அந்தத் தோழர்கள் இருக்க முடியாத சூழல் உருவாக..... இப்ப தெரியும் தானே இன்று இந்த இருண்ட நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறம்.

அன்றிருந்த தமிழ் சிங்கள உறவுகள், இன்றிருக்கும் தமிழ் சிங்கள உறவுகள் பற்றி இப்ப என்ன நினைக்கின்றீர்கள்....?

இனிமேல் இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்றவொரு மாயத் தோற்றத்தை சிங்களத் தலைமைப்பீடங்களும் அன்றிருந்த தமிழ்த் தலைமைப்பீடங்கள் தொடக்கம் அழிந்து போன தமிழ் இயக்கங்கள் வரை இந்த மாயையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மனைவியே ஒரு சிங்களவர்தான் 
மக்கள் இணைந்து வாழ்வதில் இந்த உலகத்தில் எப்போதும் பிரச்சனை இருந்ததில்லை. இரு வேறு தத்துவங்கள் 
இரு வேறு முரண்பாடுகள் இணைந்து வாழ்வதில்தான் போர்கள் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கின்றது. 
மக்களின் மனங்களை உருவாக்குவதே ஆதிக்க சக்திகள்தான். ஆதிக்க சக்திகள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் தேவையானது .......மக்களின் மனங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை. 

காலம் காலமாக இந்த அரசுகள் எப்படி இந்த தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கி அடக்கி ஆளுகின்றனவோ அப்படித்தான் சிங்கள மக்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன.

இதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏன் எதற்கு என்ற தெளிவும்  வேண்டும்.

எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. அன்று ஒரு நாள் ஜே.ஆரின் ஆட்சியை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தின எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய பல தமிழ் தலைவர்கள் ஜே.ஆர் அரசின் விலைவாசி ஏற்றத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் பட்டினியால் துன்புறுகிறார்கள் என்றும், அரசானது தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற கருத்துப்பட பேசிய போது, தோழர் சண்முகதாஸன் அவர்கள் தான் இந்த விலையேற்றமும் பசி, பட்டினிக் கொடுமைகளும் சிங்கள மக்களுக்கும் தான் என்று பேசிய போது அந்தக் கூட்டமே அதிரும்படி எழுந்த சிரிப்பொலியும் கரகோசமும் என்னால் இன்றும் மறக்க முடியாது.

அதேநேரத்தில் விடுதலைப்புலிகளின் திண்ணைவேலித் தாக்குதலின் காரணத்தினால் தான் 83 இனக்கலவரம் ஏற்பட்டது என்று பலர் பேசிய போது அதற்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களுக்கு யார் காரணம் என்று கேட்டு முன்னர் நடந்த இனக்கலவரங்களுக்கெல்லாம் எங்கே விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாது இலங்கைக்கு ஆயுதப் போராட்டம் தான் சிறந்த வழி என்ற கருத்தையும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம் பல சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை காப்பாற்றி பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது.

அவ்வளவும் நடைபெற்ற பிறகும் திரும்பவும் தமிழ் மக்கள் போய் தெற்கில் மீண்டும் வாழ்கின்றனர் தானே. காரணம் என்ன... நாங்கள் சேர்ந்து வாழலாம் என்ற அந்த நம்பிக்கை தான்.

சிங்கள மக்களுடன் இனிது வாழலாம் என்று யாரும் போகவில்லை வேறு தெரிவு இல்லாமல்தான் போனார்கள்.
ஒரு முதலை வாழும் குளத்தில் மீன்கள் பெருக்க பெருக்க அந்த முதலை கொன்று உணவாக்கினாலும் மீன்கள் அங்குதான் வாழவேண்டும் பஸ் பிடித்த்து வேறு குளத்துக்கு போகமுடியுமா?  இன்னமும் உள்நோக்கி பார்த்தால் விமான குண்டு வீச்சு செல் வீச்சு என்று உயிராபத்து இங்குதான் அதிகமாக இருந்தது. பொருளாதார முடக்கம் கல்வி முடக்கம் என்ற இன படுகொலையின் வடிவம் இங்குதான் இருந்தது. அதில் இருந்து தற்காலிக பாதுகாப்பு தேடி போனார்களே தவிர சிங்களவருடன் உறவாடலாம் என்ற எண்ணத்தில் போனார்கள் என்பது தவறானது 

 

நிட்சயமாக நாங்கள் சேர்ந்து வாழலாம். நானொரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறீர்களா.......? என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

தமிழர்களுக்கு இடையேயான முரணப்பாடும் ஒற்றுமையும் வேறு தளம் அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் 
தமிழ் குடி இருக்கும். சிங்களவரின் முரண்பாடே தமிழ் குடியை அழிப்பதில் தொடங்குகிறது. 

 

பதிலொன்றும் பேசாது சிரித்துக் கொண்ட நான் இதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்....,? என்று நானே அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

இல்லை, தமிழ்ப் போராட்டம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்னர் என்னுடைய கணவனும் அவரது பல தோழர்களும் ஆயுதம் எடுத்துப் போராடியது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழருக்கு எதிராக போராடிய போராட்டம் அது. எப்போதாவது கூட்டம் என்றும் சந்திப்புக்கள் என்றும் போய்விடுவார்.... சில நாட்கள் கழித்துத் தான் வருவார். வரும் போது சில தோழர்களும் வந்து தங்குவார்கள். அது பற்றி எனக்கு முதலில் தெரியாது பின்னர் தான் அந்த ரகசியங்கள் எனக்குத் தெரிந்தன.

தமிழர்கள் மத்தியில் திறக்கப்படாத பல கோவில்கள் திறக்கப்பட்டன, பல தேநீர் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டதற்கு அந்தப் போராட்டங்கள் தான் காரணம். ஆனால் இன்று வரையும் அந்தப் பிரச்சினைகள் முடியவில்லை...... ஏன் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் கூட இந்தச் சாதிகளைக் கொண்டு வந்து தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தானே. இன்று இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட நான் பெரிது நீ பெரிது என்று நினைக்கும் இந்த தமிழ் சமூகத்தை நினைக்கும் போது கவலைப்படுவதை விட அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.

உண்மைதான் 

இன்று அந்தக் கம்யூனிஸக் கட்சியும் அதன் போராட்டங்களும் பெரிதாக முன்னிலைக்கு வராமல் இல்லாதழிந்து போனது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.

முதலில் எங்கள் கிராமத்திலும் மற்றைய அயல் கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இந்தக் கம்யூனிசவாதிகள் என்றால் கடவுளுக்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள், தெய்வங்கள் இல்லையென்பவர்கள், கோவில்களுக்கு எதிரானவர்கள் போன்ற தப்பான அபிப்பிராயங்கள் சாதாரண பொது மக்களிடத்தில் இருந்தது. வழிக்கு வழி தெருவுக்குத் தெரு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படும் எம்மவர் மத்தியில் இவர்களது செயற்பாடுகளும் வேலைமுறைகளும் எடுபடுவது கஸ்டமான காரியம்தான்.

இரண்டாவதாக யாழ் மண்ணிலே வேரோடியிருக்கும் சாதிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் போது அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கொள்கையை முன்னெடுத்த கட்சியை எப்படி இந்த யாழ் மேட்டுக்குடியினர் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு மிக முக்கிய காரணமாய் இருந்தது.

அடுத்ததாக தமிழீழ இயக்கங்களின் வளர்ச்சி.

அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அகிம்சை மூலம் தான் தமிழீழம் எடுத்துத் தருவோம் என்ற போது

அவருடைய மகனை வைத்து இயக்கம் உருவாக்கியது என்ன வகையான அகிம்சை? 

ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இளைஞர்கள் அந்த நேரங்களில் பொலிசையும் ஆமியையும் சுட வெளிக்கிட, எங்கள் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள் என்று மக்களும் நம்பி அவர்களை ஆதரிக்க தமிழ் இயக்கங்கள் வளர இந்தக்கட்சியின் ஆதரவுகள் குறைந்தது உண்மை தான்.

இந்த மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் சர்வதேசப் பிரச்சினைகளால் கட்சிகளில் நிகழ்ந்த மாற்றங்களும் சண் அவர்களின் மறைவும் பெரிய காரணங்களாய் இருந்தது என்று நினைக்கின்றேன்.

தமிழீழ விடுதலை இயக்கங்கள் பற்றிய உங்கள் கருத்து....?

இயக்க ஆரம்ப காலங்களில் பல இயக்கத்தினர், என் கணவனுடனும் அவரது மற்றைய தோழர்களுடனும் வந்து கதைப்பார்கள், பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எங்கள் தோழர்கள் இந்தத் தமிழீழப் போராட்டம் பிழையானது என்றும் இது ஒரு பாரிய அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்றும் எடுத்துக் கூறினார்கள். ஆனால் எனக்கு அது அந்த நேரத்தில் விளங்கவில்லை. காலம் அதை இப்போது எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது.

அவர்கள் இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்த தருணங்களில் இந்தியா எமக்கு நட்பு நாடெல்ல என்றும் இவர்கள் தான் இந்த தமிழினத்துக்கே எதிரியாக இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறியது மட்டுமல்ல 1971 களில் ஜே.வீ.பியை அழித்தொழிக்க சிறிமா அரசுக்கு எவ்வாறு இந்திய அரசு பக்கபலமாக நின்றதோ அதே போல் இந்திய அரசும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி அரசை உருவாக விடாது என்று சொன்ன பொது ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எனது கணவனின் பள்ளித் தோழன், மாத்தையா எனது பள்ளித் தோழன். ஒரு நாள் மாத்தையா அவர்களும் அவரது தோழர்கள் சிலரும் எங்கள் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது சமுதாயத்தில் அந்த நேரங்களில் இடம்பெற்ற சமூகத்துரோகிகள் ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெற்ற அநியாய கொலைகள் பற்றியும் அவையெல்லாம் போராட்டத்திற்கு, மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தாது என்று எனது கணவர் கூறிய போது தனித்தமிழன் இருக்கும் வரை போராடியே தீருவோம் என்று ஆவேசப்பட்டார் மாத்தையா.

அதே காலகட்டத்தில் இவரது தம்பியார் உட்பட வேறு சிலர் ஏற்கனவே தோன்றிய தமிழ் அமைப்புக்கள் பிழையென்று புதிய இயக்கத்தை ஆரம்பித்த போது அதுவும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும் என்று அவரது தம்பியாருடன் வாதிட்டது எனக்குத் தெரியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு இன்று என்ன நினைக்கின்றீர்கள்.....?

ஊரில் இருந்த நேரத்தில் எனது கணவனும் இவரது சில தோழர்களும் இயக்கப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த சகல உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இறுதிக் காலங்களில இருக்க முடியாத சூழல் உருவான போது அவரை இயக்கத்தினர் தான் இந்தியா கொண்டு வந்து விட்டார்கள். இந்தியாவிலும், பிறகு வெளிநாடு என்று வந்த பின்னரும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்குள் இருந்தது.

சில காலங்களின் பின்னர் வெளிநாடு வந்த எனது கணவரும் இறந்து விட்டார். இப்ப இயக்கப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது. மீண்டும் முன்பு தமிழ் தலைவர்களும் இயக்கங்களும் மக்களை ஏமாற்றியது போல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் எடுத்துத் தருவோம். புலம்பெர் தமிழர் இருக்கும் வரை எமது தமிழினத்துக்கு அழிவேயில்லை என்று பசப்பு வார்த்தைகளை கூறி; தமிழ் மக்களைப் பேக்காட்டி மேலும் மேலும் ஏமாற்றாமலும் சீமானும் வைக்கோவும் நெடுமாறனும் வந்து தமிழீழம் எடுத்துத் தருவார்கள் என்று நம்பி இன்னொரு அழிவுப்பாதைக்கு மக்களை இட்டுச் சொல்லாமலும் ஏற்கனவே சண்முகதாசன் போன்ற தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ ஒரு அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் சாலச்சிறந்தது.

வேறு பல விடையங்களும் கதைத்து முடிந்தவுடன் இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் சிங்கள தமிழ் உறவுகளும் ஒற்றுமைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருவதை எண்ணி மனம் மகிழ்வதாக திருமதி சாந்தா சிவநாதன் குறிப்பிட நன்றியுடன் விடைபெற்று வந்தேன்.

முற்றும்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9077:2014-07-09-13-15-58&catid=320&Itemid=238

இவருடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் எதிர்ப்பது எனது நோக்கமல்ல 
இது ஒரு காலம் கடந்த ஞானம் போல இறுதியில் இவ்வாறு ஆகியிருந்தால்? என்று எண்ணி தேடும் ஒரு ஆறுதல்தான். ஆனால் திட்டமிட்ட இன அழிப்பு நீங்கள் யாரும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நடந்துகொண்டுதான் இருக்கும். இனி சிங்கள அரசுகள் ஒருவேளை அசோகனாகி அமைதி வேண்டினாலும் 
பிராந்திய ஆதிக்க போட்டி அரசுகளுக்கு தாம் அடைய வேண்டியதை அடைவதுக்கு சிங்கள அரசுகளுக்கு தடவி கொடுப்பதுபோல  இன அழிப்பை எவ்வாறு பக்காவாக செய்வது என்று திட்டம் கொடுத்துதான் தங்களை சிங்கள அரசின் நண்பர்கள் என்று அறிமுகமாகும் வரை தமிழ் இருப்புக்கு அழிவுதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.