Jump to content

வடக்கில் வாக்கு மோசடிக்கு முயற்சியா? வெளிக்கிளம்பும் குற்றச்சாட்டுக்களும் அதற்கான வலுவான காரணங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வாக்கு மோசடிக்கு முயற்சியா? வெளிக்கிளம்பும் குற்றச்சாட்டுக்களும் அதற்கான வலுவான காரணங்களும்

August 2, 2020
  • தாயகன்

லங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு தினங்களே உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக மக்களின் வாக்குகளையும் பாராளுமன்றக் கதிரைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இனவாத,மதவாத,கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க பிரசாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டன. இந்த ஒருமாதமும் வேட்பாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ,எதிர்காலத் திட்டங்கள்,மக்கள்சேவைகள், தொடர்பில் நன்றாக சிந்தித்து தமது வாக்கை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கவே வாக்காளர்களாகிய மக்களுக்கு இந்த இருநாள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.

000-2-1024x640.jpgஆனால் தமது வாக்குகள் யாருக்கு என்பதை மக்கள் தீர்மானித்தாலும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வகையிலான ”மறைமுக கரங்கள்” குறிப்பாக வடக்கு,கிழக்கில் அதிலும் குறிப்பாக வடக்கில் அதிகார சக்தியினால் களமிறக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர் பகுதியின் தேர்தல் முடிவுகளில் எதிர்பாராத,விரும்பப்படாத, நியாயத்துக்கு முரணான, மக்கள் விரோதமான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான அல்லது வெற்றி பெற வைப்பதற்கான சூழலை கட்டியம் கூறி நிற்கின்றன.

 

2015 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலை போன்று இம்முறை தேர்தலிலும் மோசடியான, பிழையான சம்பவங்கள் நடைபெறலாம் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமாக க.வி.விக்னேஸ்வரனே முதலில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். இந்த குழறுபடிக்காகவே அன்று மோசடியான,பிழையான சம்பவங்களுக்கு துணைபோனதாகக் குற்றஞ்சாட்டப்படும் அப்போது பிரதித்தேர்தல் ஆணை யாளராகவிருந்த மொகமட் தற்போது இளைப்பாறிய நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று அவர் தனது எச்சரிக்கைக்கு காரணம் கூறியிருந்தார்.

 

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் தெரிவித்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வாக்கு மோசடி சம்பவம் பொய்யானதல்லவென்றே பல தமிழ் அரசியல்வாதிகளினாலும் அப்போதும் இப்போதும் தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. தோல்வியடைந்த ஒரு வேட்பாளர் அப்போது அதிகாரத்திலிருந்து அரசின் தேவைக்காக மோசடியான முறையில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதாக அப்போது எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பின. முக்கியமாக தேர்தல் முடிவுகள் முழுநாளும் தாமதித்து மறுநாள் பிற்பகலே வெளியிடப்பட்டதுடன் பின்தங்கிய வெற்றி நிலையிலிருந்த குறிப்பிட்ட வேட்பாளர் திடீரென முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டு அரசின் தேவைக்காகவும் கட்சித்தலைமையின் தேவைக்காகவும் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கட்சியிலிருந்து கூட இந்தத் தகவல்களும் எதிர்ப்புக்களும் வெளிப்படுத்தப்பட்டன .

 

இவ்வாறான வாக்கு எண்ணிக்கை மோசடியில் அந்த நேரத்தில் தேர்தல்கள் பிரதி ஆணையாளராகவிருந்த மொகமட் என்பவர் மீதே பல தரப்பினராலும் விரல் நீட்டப்பட்டது.ஏனெனில் அந்த தேர்தலின் போது தேர்தல்கள் பிரதி ஆணை யாளராகவிருந்த மொகமட் விசேடமாக யாழ்ப்பாணத்துக்கு அரசினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக தேர்தல்கள் ஆணையாளரோ பிரதி ஆணையாளரோ அவ்வாறு எந்த இடத்துக்கும் செல்வதில்லை. எனினும் வாக்கு எண்ணிக்கையில் அரசின் ஆதரவோடு, வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தோல்விகண்ட வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தை நாடாததால் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் அரசும் அக்கறை காட்டவில்லை.

 

இவ்வாறான நிலையில்தான் இந்த மோசடியுடன் தொடர்புபட்டவராக சில தரப்புக்களினால் குற்றம் சாட்டப்படும் மொகமட் தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலேயே வடக்கில் மீண்டும் மோசடியான ஒரு தெரிவுக்கு அரசு முயற்சிக்கின்றதென்ற கடும் எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பின. 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் மோசடி நடைபெற்றதற்கு முக்கியமாக இருந்த நபரான மொகமட்டை திரும்பவும் இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? அதுவும் அவர் இளைப்பாறிய பின்னர் அவரை தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? தேர்தல் திணைக்களத்தில் உள்ள யாராவது ஒரு சிரேஸ்ட தமிழ் அதிகாரியை இங்கு அனுப்பாமல் மொகமட்டை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.

அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு மட்டும்தான் இவ்வாறு அதிகாரி ஒருவரை அனுப்ப முயற்சிக்கின்றனர். ஏனைய மாவட்டங்களுக்கு இது போன்ற அதிகாரிகள் எவரையும் தேர்தல் ஆணைக்குழு அனுப்பவில்லை.எனவே இதற்கு பின்னால் அரசாங்கம் எவ்வகையான எண்ணங்களை வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நடந்த வாக்கு எண்ணிக்கை மோசடியைப் போன்று இம்முறை தேர்தலிலும் மோசடி சம்பவங்கள் நடைபெறலாம் என்ற சந்தேகங்கள் வடக்கு அரசியல் கட்சிகளினாலும் அரசியல் தலைவர்களினாலும் அண்மையில் முன்வைக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க ஏ 9 வீதியிலே சுமார் 20 வீதித் தடைகள் இராணுவத்தினரால் போடப்பட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களை அச்சுறுத்தி தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு போகாமல் வைப்பதற்காகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென்ற கருத்துக்களும் வடக்கில் முன்வைக்கப்படுகின்றன.

பாதுகாப்பை ஒட்டி தேர்தல் காலத்திலே இராணுவத்தினரை வெளிக் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல் . இம் முறை 5 ஆம் திகதி தேர்தலை நடத்தி 6ஆம் திகதியே வாக்கெண்ணுதல் நடைபெறவிருக்கின்றது. இரு நாட்களுக்கும் இடையில் இரவிலே வாக்குப் பெட்டிகளுக்கு என்ன நடக்குமோ என்று ஒரு சந்தேக நிலை எழுந்துள்ளது. இவற்றிற்கு இராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு அழைத்தால் கட்டாயம் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும் என்று எண்ண இடமுண்டு. ஆகவே ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக ?

இராணுவத்தினரை வட மாகாணத்திற்குள் இதுவரை அழைத்திருப்பது கொரோனா காரணமாக என்று கூறப்பட்டாலும் இராணுவத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களை அச்சுறுத்தி தேர்தலுக்குப் போகாமல் வைத்துவிட்டு பின்னர் கொரோனாவிற்குப் பயந்தே மக்கள் வாக்களிக்க செல்லவில்லையென்ற காரணம் கூறப்படலாமெனவும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

மைத்திரி -ரணில் அரசின்போது அவர்கள் வடக்கு வேட்பாளர் ஒருவரின் வெற்றியை விரும்பியிருக்கலாம் .ஆனால் தற்போது ராஜபக்சக்கள் தலைமையிலான அரசு அமையும் சூழல் உள்ள நிலையில் அவ்வாறு வடக்கிலிருந்து தமக்கு தேவையான ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டிய தேவை ராஜபக்சக்கள் அரசுக்கு ஏன் எழுகின்றது என்ற கேள்வி எழுவது நியாயமானது. ஆனால் 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரி -ரணில் அரசுக்கிருந்த அதே தேவை தற்போது அமையுமென எதிர்பார்க்கப்படும் ராஜபக்சக்கள் அரசுக்கும் இருக்கின்றது என்பதே உண்மை.

2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்தனர். அப்போது அவர்கள் தமக்கு தேவையான ஒருவரை, சர்வதேசத்திடமிருந்து தமது அரசை பாதுகாக்கக்கூடிய ஒருவரை தமிழ் மக்களை பிரதிநிதிதித்துவப்படுத்தும் கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்ய விரும்பியிருந்தனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் மைத்திரி -ரணில் விரும்பியதைப்போலவே சர்வதேசத்திடம் அவர்களின் அரசை பிணை எடுத்ததுடன் மைத்திரி -ரணில் மோதலின்போது ரணிலின் பிரதமர் பதவியையும் அரசையும் பாதுகாத்துக்கொடுத்து தனது நன்றிக்கடனை தீர்த்திருந்தார். அதே தேவைக்காவே ராஜபக்சக்கள் அரசும் குறிப்பிட்ட அந்த தமிழ் அரசியல் கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென விரும்புகின்றது . எதிர்காலத்தில் ராஜபக்சக்கள் அரசாங்கம் சர்வதேச பொறியில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச பொறியிலிருந்த தப்பிக்க, அந்த தமிழ் கட்சி வழங்கிய ஒத்துழைப்பும் அந்த உறுப்பினர் காட்டிய அர்ப்பணிப்பும் உதவியதைப் போல, எதிர்காலத்தில் ராஜபக்சக்கள் அரசும் ,அவரது கட்சியினரும் கூட்டமைப்பின் உதவியை பெற்றுக்கொள்ள விரும்புவதாலேயே வாக்கு மோசடிகளுக்கு வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கையின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடக்கவிருந்த நிலையில், பொருளாதார தடைகள், பயணத்தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் எப்படி இலங்கையை பாதுகாத்தது என்பதை பற்றி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார்.குறிப்பிட்ட அந்த தமிழ் கட்சியின் ஒத்துழைப்பில்லாமல் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து நல்லாட்சி அரசு தப்பித்திருக்கவே முடியாது என்பதை அந்த பேட்டியிலிருந்து அறிந்து கொள்ள முடியும் .எனவே , ராஜபக்சக்கள் அரசும் சர்வதேச நெருக்கடியிருந்து தப்பிக்க , அந்தக் கட்சியினதும் அந்த வேட்பாளரினதும் வெற்றி அவசியமாக உள்ளது. அதனாலேயே மொகமட் போன்றவர்கள் மீண்டும் தேர்தல் பணிக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தப்பும் விதமாகவே ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 2 தடவைகள் ஆதரவு கோரி ராஜபக்சக்கள் என்னை தொடர்பு கொண்டனர். நான் கொடுத்த பதிலின் மூலம் அவர்கள் என்னை அறிந்திருப்பார்கள்.அதனால்தான் குறிப்பிட்ட அந்த தமிழ் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் செயற்படவுள்ளது. அந்த தமிழ் கட்சிக்கு அமைச்சு பதவியை கொடுத்து தம்முடன் வைத்திருக்க பெரமுன விரும்புகிறது. அதன் எதிரொலிதான் அண்மையில் அந்த தமிழ் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் அமைச்சு பதவியை பற்றி தெரிவித்த கருத்து” என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பில் குழப்பங்கள், தடைகள், வாக்கு எண்ணிக்கை மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறான சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் வெளிக்கிளம்பியுள்ள நிலையில்தான் 2015 ஆம் ஆண்டில் பிரதித்தேர்தல் ஆணை யாளராகவிருந்து ஓய்வு பெற்ற மொகமட் தற்போது மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் அதனை ஏற்பதற்கு பின்னடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் அவரை மீண்டும் இணைத்து யாழ் மாவட்டத்துக்கு அனுப்ப சிலர் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்-கிளிநொச்சி இணைந்த தேர்தல் மாவட்டம்,வன்னி தேர்தல் மாவட்டம் என இரண்டு தேர்தல் மாவட்டங்களே உள்ளன. இதில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள் , 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 571,848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 28 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 287,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இந்த இரு மாவட்டங்களுக்குமான 13 ஆசனங்களை தமதாக்கிக் கொள்வதற்காகவே 735 வேட்பாளர்கள், 858872 வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமது பிரசாரங்களை முடித்துள்ள நிலையிலேயே தற்போது வாக்களிப்பு குழப்ப நிலை, வாக்கு எண்ணிக்கை மோசடிகள் இடம்பெறலாமென்ற குற்றச்சாட்டுக்களும் சந்தேகங்களும் வெளிக்கிளம்பியுள்ளன.

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலின்போது வெளிநாட்டுக்கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடமாட்டார்கள் என்பதும் இந்த மோசடிகளுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து விடுமெனவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் தேர்தல் வன்முறைகளை வடக்கில் அதிகம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்பாளர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தலில் எந்தவித மோசடிகளுக்கும் குழப்ப நிலைகளுக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. எனவே வழக்கம்போலவே இம்முறையும் வடக்கு மாகாண தேர்தல் களம் அனைவரினதும் கவனத்தையும் ஈர்க்கப் போகின்றது.
 

http://thinakkural.lk/article/59511

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோசடிகளின் மூலம் தமது பங்காளிகளை இம்முறை உள்ளீர்க முயற்சி நடக்கும். மூன்று நான்காக வாக்குகள் பிரிபட்டு ஒரு புறமும் சுயேட்சைகள் ஊடாக மறுபுறமும்  கூத்தமைப்புக்குத் தேய்வுநிலை ஏற்பட்டு பறிபோனால் என்ன செய்வது எனவே எதிர்பார்க்கக்கூடியதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன தேர்தலில்... கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,
75 கள்ள வாக்கு போட்டதாக, அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந்த முறை எப்படியும்,  அவர் தனிய... 150 போடுவார் என்று எதிர் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமங்கள் தோறும் ராணுவம்.மக்கள் என்ன தான் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.