Jump to content

கூட்டமைப்பினை பலப்படுத்துவன் மூலமே தமிழர்கள் வலிமை அடைய முடியும்; கனேடிய தமிழ்ப் பேரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினை பலப்படுத்துவன் மூலமே தமிழர்கள் வலிமை அடைய முடியும்; கனேடிய தமிழ்ப் பேரவை

August 1, 2020

CTC-300x154.jpg
 

நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழர்களையும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

இலங்கையில் ஜனநாயக உரிமைகளிற்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட பல பின்னடைவுகள் இருந்தபோதிலும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் விருப்பம் குறையவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முறைமை பல தசாப்தங்களாக பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது.

 

ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி காந்தீய வழிமுறையில் சாத்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு அரசுடன் ஒத்துழையாமை என்ற திட்டத்துடன் போராட்டத்தை வழிநடத்தியது. தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தோல்விகளும், ஏமாற்றங்களும், உடன்படிக்கை மீறல்களும் அரச வன்முறைகளும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கான ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

தமிழர்களின் வீறுகொண்ட விடுதலைப் போராட்டம் முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போராக வடிவெடுத்தது. மே 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசின் நீதியற்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதுடன்இ இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும் முயன்று வந்துள்ளது.

 

கடந்த பாராமன்றத்தில் தமிழ் அரசியல் தலைமை தெற்கில் உள்ள பிற முற்போக்கான சக்திகளின் ஒத்துழைப்புடனும் சர்வதேச சமூகத்தின் உதவியுடனும் உலகளாவிய மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஐனநாயகத்தை காக்கவல்ல ஆணையங்களை உருவாக்கியதன் மூலம்இ சமத்துவமான சமுதாயத்திற்கான அடித்தளத்தை அமைக்க முயன்றது.

தூரதிர்ஷ்டவசமாக அவற்றை முன்னோக்கிக் கொண்டு செல்வதிலும் செயற்படுத்துவதிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் இந்த சிறிய முன்னோக்கிய நடவடிக்கைகள் தமிழ் மக்களிற்கு ஒரு தற்காலிக சுவாச வெளியை வழங்கியிருந்தாலும் தமிழினத்திற்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வை வழங்கப் போதுமானதாக இருக்கவில்லை.

 

உலகளாவிய மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கையின் கள அரசியல் நிலைமை கடினமான உள்ளது. இலங்கையில் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் சட்டத்தின் ஆட்சி இல்லாதது சமரசத்துக்குள்ளான நீதித்துறை இல்லாமை அடிபணிந்த ஊடகச் சூழல் மற்றும் நிர்வாகத்தின் இராணுவமயமாக்கல் ஆகியனவாகும். பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமைகள் மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே உள்ளன. இது சிறுபான்மைச் சமூகங்கள் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஓரங்கட்டப்பட்ட சமூகமாக உள்ளார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் தேவைகள் மற்றும் அபிலாசைகள் உள்ளன. ஆனால் பாராளுமன்றத்தில் தமிழர்களது வலிமை குறைவாகவே உள்ளது. எனவேஇ தமிழர்களது வாக்குகளும் வீணடிக்கப்படக் கூடாது என்பது விமர்சன ரீதியாக முக்கியமானது.

தேர்தலில் பங்கேற்காததன் மூலமாகவோ அல்லது சுயாதீனக் குழுக்களிற்கும் தென்னிலங்கை பெரும்பான்மையின கட்சிகளிற்கும் வாக்களிப்பதன் மூலமாகவோ தமிழர்களது வாக்குப்பலம் வீணாகித் தமிழ்ச் சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பலவீனப்படுத்தப்படும்.

எனவே வடக்கு மற்றும் கிழக்கு இரண்டிலும் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு கொள்கை ரீதியான மற்றும் சக்திவாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சமூக நலன்களை முன்னேற்றுவதற்கு அவர்களின் கூட்டு வலிமையை திறம்பட பயன்படுத்துவது எமக்குள்ள தேர்வாக அமைய முடியும். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைமையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தக் கூட்டு வலிமையை அடைய முடியும் என்று கனேடியத் தமிழர் பேரவை நம்புகிறது.

இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுள்ளது. தமிழ் மக்களின் கவலைகள் குறைகள் மற்றும் அபிலாசைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனமாகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படுத்தி வந்துள்ளதென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கனடியத் தமிழர் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனுடன் குறிப்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் குறித்து கனடியத் தமிழர் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

எனவே வடக்கு கிழக்கு வாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எங்களது வேண்டுகோள் என்னவென்றால் அவர்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே என்றுள்ளது.
 

http://thinakkural.lk/article/59473

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.