Jump to content

சிறீதரனின் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று மாலை தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரனின் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று மாலை தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம்

 
August 2, 2020

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது சுயேச்சைக் குழு ஒன்றின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற கூட்டம் நேற்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர்.

 

பளையில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்துக்காக சிறிதரன் புறப்பட்டுச்சென்ற பின்னர் அந்தக் குழு உள்ளே புகுந்து பரப்புரையில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

 

http://thinakkural.lk/article/59559

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலை லெக்சன் அலுவல் பாக்கேக்கை வாங்காத அடியே?🤣
 இல்லை நான் குடுக்காத இருட்டடியே  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறிதரனே  செட்டப் செய்த விளையாட்டு .

உண்மையில் அடிப்பது என்றால் சிறிதரனுக்கு போட்டு கைகால் முறித்து விட்டு இருக்கணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.சிறீதரனின் சுவரொட்டி மீது சரமாரி துப்பாக்கி சூடாம்..! படித்துவிட்டு கடுப்பானால் நாம் பொறுப்பில்லை..

kandaavalai-1-.jpg

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின்  அமைப்பாளர்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரனின் தேர்தல் விளம்பர பதாதைக்கு சட்டவிரோத துப்பாக்கியை பாவித்து சூட்டுள்ளமை அப் பகுதியில் பெரும் அச்ச நிலமையை தோற்றுவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நேற்று பிற்பகல் 7 மணியளவில்  கண்டாவளைப் பகுதியில்  முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது

இதன் போது   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய ஆதர்வாளர்கள் என கூறிய சிலரும் அப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை காரணமாக கொண்டு  சந்திரகுமாரின்  கண்டாவளை பிரதேச அமைப்பாளர் ரவி என்பவர் அப்பகுதி  சி.சிறீதரன் அவர்களுடைய  அமைப்பாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இப் பகுதி எங்களூடையது எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்ய முடியும்.?

ஆகவே என்னிடம் உள்ள துபாக்கியைக் கொண்டு   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய விளம்பரப் பதாதைகளை சுட்டுத் தள்ளப் போகின்றேன்  வந்து பாருங்கள் என தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததுடன்,

அதன் பின்னர் விளம்பர பதாதை மீது சட்டவிரோத துப்பாக்கி (சொற்கண் துப்பாக்கி)  கொண்டு துப்பாக்கி பிரயோகம்  பிரயோகம் செய்துள்ளார் இதனால் குறித்த பகுதியில் சில மணி நேரம் அச்ச நிலமை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் தொலைபேசி மூலம் வினவிய பொழுது அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதாக எனது அமைப்பாளர் மூலமாக அறிந்தேன் அதன் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள் ஒரு வேட்பாளராக இருக்கும் போதே சந்திரகுமார் சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்துகின்றார்.

அதன் மூலம்  மூலம் என் விளம்பர பதாதைகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்கின்றார்கள் எனில் இவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கினால் எம் மக்களின் நிலமை என்னாகும் என்று நீங்களே யோசித்து செய்தியை பிரசுரியுங்கள் என கூறிய வாறு தொடர்பை துண்டித்துள்ளார்.

https://jaffnazone.com/news/19697

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.