Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திரும்பினால் நிக்க சொல்லி
வச்சு விடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினால் நெருங்கி வாயேன்
அலை அலையாய்
தொடாமலே அணைக்குறாயே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள
உனை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல கொதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குலுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

இளமையை வருடுவானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகா..
உன் மரக்கட வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கட கட என்று தட தட என்று
இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லைக் கோடு
விடு விடு என்று பட பட என்று
பறந்தவள் நீ தானே

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும்
உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப்
பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும்
தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும்
சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

நான் பேச ....

சொல்லென்றும் மொழியென்றும்
பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை

நான் பேச ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், தேனீ குஞ்சரம்மாள்,

பெபி மணி, கங்கா சித்தரசு மற்றும் ஏ. ஆர். ரஹமான்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : {கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்} (2)

ஆண் : {மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்} (2)

ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

ஆண் : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

குழு : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

குழு : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

பெண் : பந்தாடும் வயசுப்பையா
குழு : பையா
பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
குழு : கைய்யா

பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே
குழு : லே லே லே…
பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா
குழு : ஐய்யா

பெண் : பெண்டாட்டியோட
ஒவ்வொரு நாளும்
குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ டுவல் டைம்ஸ் சொல்லு

பெண் : நித்தம் நீ ஆறு முற
குழு : முற
பெண் : முத்தங்கள் போட்டுவிடு
குழு : விடு

பெண் : நாளுக்கு மூணு முற
குழு : முற..அஹ..ஹா
பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு
குழு : விடு

பெண் : நான் சொன்ன கணக்கு
நாள்தோறும் நடந்தா
குழு : பெண்டாட்டி எப்போதும்
உன் காலக் கட்டிக் கெடப்பா.

பெண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

பெண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : …………………………………….

ஆண் : வயசான சுந்தரியே
குழு : யே
ஆண் : மன்மதன் மந்திரியே
குழு : யே

ஆண் : தாம்பத்யப் பாடத்திலே
குழு : லே லே லே
ஆண் : பீ எச் டீ முடிச்சவளே

ஆண் : அந்நாளில் நாட்டில்
மாதம் மும்மாரி
குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு
சுகம் ஒன்றுதான் பேச்சு

ஆண் : இந்நாளில் மனிதனுக்கு
குழு : க்கு
ஆண் : சோத்துக்கு வழியில்லையே
குழு : ஏ யே

ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க
குழு : யே யே யே
ஆண் : யாருக்கும் பொழுதில்லையே

பெண் : ஊர்க்கதை பேச
நேரங்கள் இருக்கு
குழு : பெண்டாட்டி சேராம
ஒரு வாழ்க்கையும் எதுக்கு

ஆண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

ஆண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

ஆண் மற்றும் குழு :
பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

ஆண் மற்றும் குழு :
ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஅ...
ஆஆஆஆஅ.....ஆஆஆஆஆ....

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும் 

(யென்னைத் தொட்டு)

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்கம் சொர்கம் யென்னை சீராட்ட வரணும்

பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
யென்னை யென்னை நிதம் நீ ஆள வரணும்

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு...

யென்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...

அன்பே ஓடி வா...
அன்பால் கூட வா...

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்


யென்னைத் தொட்டு...
நெஞ்சைத் தொட்டு...

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..


ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...

மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே...
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...

கட்டுக்குள்ள நிர்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...

அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...

யென்னில் நீயடி...
உன்னில் நானடி...

யென்னில் நீயடி...உன்னில் நானடி...
ஓஹ் பைங்கிளி... நிதமும்


யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி...
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா 
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு 
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் 
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும்  தள்ளாடுவேன்
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்


சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

இரவின் போர்வை என்னை சுழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாரயோ விரல்கள் தாரயோ

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அந்த வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமிதேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா ?
அதில் கொள்ளை போனது என் தவறா ?
பிரிந்து சென்றது உன் தவறா ?
நான் புரிந்து கொண்டது என் தவறா ?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா ?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால்
சுசீலா ' வின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும்
தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?

(சக்கரை நிலவே ...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா

சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா

பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்

தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் காவியம்

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே

பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே

மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும்

எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்

நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பாத்திரமாய்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

அரை நொடி தான் என்னை பார்த்தாய்
கோடி யுகமாய் தோன்ற வைத்தாய்
பனி துளியாய் நீயும் வந்தாய்
பாற் கடலாய் நெஞ்சில் தோன்றினாய்

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ப ப

ஆண் : தா தா

பெண் : நி நி

ஆண் : ச ச

பெண் : நி நி நி த ப ம க ரி ஸ நி

ஆண் : க ப ரி ஸ நி ரி க ம ப

பெண் : க ப ரி ஸ நி ரி க ம ப

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 1

பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி
ரகல பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
காத்யயினி பைரவி சாவித்ரி
நவ யெளவன சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...

ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 2

பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்
இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்
இவன் மனம் புரியாலயா

பெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஆண் : ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

ஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தன தத்தன தய்ய்ன தத்தன தனன தத்தன தான தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
லலலலலல லலலலலல லாலலால லாலாலாலா லாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தனனா.. சந்தங்கள்..
நனனா.. நீயானால்
ரீசரி.. சங்கீதம்
ஹ்ம்ஹ்ம்.. நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
(சிப்பியிருக்குது..)

நனனானானா.. Come On say it once again..
நனனானானா .. சிரிக்கும் சொர்க்கம்
தனனானனானானா.. தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தானைதானைதானா.. தேவை பாவை பார்வை..
தத்தனதன்னா.. நினைக்க வைத்து
நனனானானா.. நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
நனனனானானா தனானா லலாலலா நனானா
Beautiful..
மயக்கம் தந்தது யாரு தமிழோ அமுதோ கவியோ
(சிப்பியிருக்குது..)

இப்போ பார்க்கலாம்..
தனனானா தனனானானா
ம்ம்.. மழையும் வெயிலும் என்ன
தன்னானா நானா நானா
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனான தனனான தானா
அம்மாடியோவ்..
தனனான தனனான தானா
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்..
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனேசுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
அ அ அ வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனை தன் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனேசுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்
அ அ அ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அன்னாள் வரக்கூடும்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனேசுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே

கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே

வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல

அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ

உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்...ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்...மாத்துவேன்யா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா

ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா


என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை

இந்த வேதனை யாருக்குதான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை

எதோ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி

சுக ராகம் சோகம் தானே..
சுக ராகம் சோகம் தானே

யாரது போறது

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

இச பாட்டு படிச்சேன் நானே…
இச பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க

அடி நீதானா அந்த குயில்
யார் வீட்டு சொந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான் தானே அந்த குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது 
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா 
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இளமை பொங்கி விட்டதா 
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

கடவுள் இல்லை என்றேன் 
தயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் 
ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் 
உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை 
அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை 
கடலில் சேரும் வரை 
காதல் சுவை ஒன்று தானே 
காற்று வீசும் வரை

நேற்று இல்லாத......

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம் 
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம் 
வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம் 
நேசம் இல்லாமல் போனால் பாசம் உண்டாகுமா


நேற்று இலாத.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
வாசம் ஓசை
இவைதானே எந்தன் உறவே... ஓ
உலகில் நீண்ட
இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
ஏழு வண்ணம்
அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து
பேசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும்
காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள்
மூழ்கிப்போவேன்
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கறையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
எய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேந்து வாழும் காட்சி ஒட்டி பாக்குறேன்
காட்சியாவும் நேசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பாத்து கும்பிடும் போதும் நீ தானே நெஞ்சில் இருக்க
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பாரத்ததாலே
ஊரைவிட்டு எங்கேயோ வேர் அறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூறப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேட்குறேன்
குடு விட்டு குடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா
ஒ மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஹோ …….

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொறியும்
தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபலீயங்கள் காணேனோ
மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ
லய்யலோ முயலோ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆள்வேனோ
ஜனனம் மரணம் அரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ

மூங்கில் காடுகளே
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு,

கரிச காட்டு காடைய

காடு கொடுத்த ஓடையே

ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை,
என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு,

ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு,

அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு,

ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு .

இந்த காடே என் வீடு
என் உறவே எ ஆடு

அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு,

மழை வந்தால் என்ன,.
இடி வந்தால் என்ன,

நீ துணிஞ்சு விளையாடு
நீ துணிஞ்சு விளையாடு

ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

நான் முப்போது முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிசுருக்கேன்,

அட ஆஸ்தியும் இல்லை
அவஸ்தையும் இல்லை

ஆன்னாடம் சிரிச்சுருக்கேன்,

ஒரு குருவிக்கு கூடு இருக்கு,
இந்த குமரிக்கு வீடுருக்கா,

அந்த ஆத்துக்கு கிளை இருக்கு
ஒரு அடிக்கலாம் எனக்கிருக்க,

வெயில் வந்தாலென்ன
இருள் வந்தாலென்ன

என் சந்தோசம் கொரைஞ்சுருக்க
சந்தோசம் கொரைஞ்சுருக்க...

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு,

கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே

ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை,

என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .

ஒ ஒ ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்ச பாவக்கா
பளபளங்க
பழனி பச்ச
மினுமினுங்க
செங்கருட்டி
செவத்தபுள்ள
கின்னாவந்தா
கினுகட்டி.

உடும்பு துடுப்பு மகா சுகா
பா பரங்கி எட்டு மண் குண்டு மண்.


ஓடக் கார மாரி முத்து
ஓட்ட வாயி மாரி முத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க
சௌக்கியமா.

ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு
ஆப்பக் காரி அன்னம்மா பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா.

பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா.

பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா.

பட்டணத்து ஸ்டைலக் கண்டா
பட்டிக் காடு கசந்திடுமா.

பள்ளிக் கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா.

பட்டுப் பாவாடக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது.


ஓடக் கார மாரி முத்து
ஓட்ட வாயி மாரி முத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க
சௌக்கியமா.

ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு
ஆப்பக் காரி அன்னம்மா பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா.

குண்டுப் பொண்ணு கோமல வள்ளி
என்னானா என்னானா.

ரெட்டப்புள்ள பொறந்ததுமே
நூலானா நூலானா.

குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ
பார்வையில பச்ச மொளகா.

மேற் படிப்பு படிக்கப் போனா
மேற் கொண்டு என்ன ஆனா.

மொத்தத்துல மூணு மார்க்கில்
ஃபெயிலானா ஃபெயிலானா.

ஒல்லிக் குச்சி ராஜ மீனா
ஓடிப்போனா என்ன ஆனா.

பூசணிக்கா வயிறு வாங்கி
திரும்பி வந்தாளே.


ஓடக் கார மாரி முத்து
ஓட்ட வாயி மாரி முத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க
சௌக்கியமா.

ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு
ஆப்பக் காரி அன்னம்மா பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா.

அம்மன் கோயில் வேப்பமரம்
என்னாச்சு என்னாச்சு.

சாதிச் சண்ட கலவரத்துல
ரெண்டாச்சு ரெண்டாச்சு.

மேலத்தெரு கருப்பையாவும்
கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில
ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு.

மூத்த பொண்ணு வயசுக்குத்தான்
வந்தாச்சு வந்தாச்சு.

மத்த கதை எனக்கெதுக்கு
எங்குருவி எப்படி இருக்கு.

தாவிச் செல்லும் குருவி
இன்னிக்கு தாவணி போட்டிருக்கு.


ஓடக் கார மாரி முத்து
ஓட்ட வாயி மாரி முத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க
சௌக்கியமா.

ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு
ஆப்பக் காரி அன்னம்மா பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு

பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடிப் பார்த்தேன்
எங்கும் இன்பம்

அன்பென்னும் ஆற்றில்
நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் எண்ணும்

இன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்

மெல்லிய நூலிடை வாடியதேன்
மன்மதக் காவியம் மூடியதேன்

அள்ளியும் கிள்ளியும்
ஆயிரம் ஆசைகள்
அன்பெனும் கீர்த்தனை
பாடியதேன்

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு

தாய் தந்த பாசம் 
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே

காலங்கள் போற்றும்
கை தந்து காக்கும்
என் பிள்ளை தன்னை
இங்கே இங்கே

வீட்டுக்கும் நாட்டுக்கும்
நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும்
என் இன்பக் கூட்டுக்கும்

என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே

வாடிய பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் மானிடன் 
என் மகனே

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு..."

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ........

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.