Jump to content

யாழ் இளம்குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை.!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இளம்குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை.!!

maxresdefault.jpg

ஜெர்மனி நாட்டில் வசித்து வந்த வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் 02. 08.2020 நேற்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. ஜெர்மனி நாட்டில் பிறந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் விபரீத முடிவு எடுத்துள்ளார். இச்சம்பவத்தில் வேதகுரு கண்ணன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தை இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

https://www.todayjaffna.com/204196

Link to comment
Share on other sites

சமூகப் பொருளாதார, தனிப்பட்ட சிக்கல்களினால் புலம் பெயர் நாடுகளில் எமது மக்கள் (ஆண்களை விடப் பெண்களுக்களிற்கான பாதிப்பு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன ) மத்தியில் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உள நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கிறது. இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.  அதிகமான தற்கொலைகள் தனிமையாலும் தமது உளப் பிரச்சனைகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடியாமையினாலும் , அது குறித்த சமூக அச்சம் காரணமாகவுமே நடப்பது துயரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தோழி said:

சமூகப் பொருளாதார, தனிப்பட்ட சிக்கல்களினால் புலம் பெயர் நாடுகளில் எமது மக்கள் (ஆண்களை விடப் பெண்களுக்களிற்கான பாதிப்பு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன ) மத்தியில் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உள நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கிறது. இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.  அதிகமான தற்கொலைகள் தனிமையாலும் தமது உளப் பிரச்சனைகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடியாமையினாலும் , அது குறித்த சமூக அச்சம் காரணமாகவுமே நடப்பது துயரம்.

இவர் இறந்ததிற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?

ஆண்களுக்கும் பெண்களைப்போல் மன அழுத்தங்கள் மன உளைச்சல்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றது.

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

இவர் இறந்ததிற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?

ஆண்களுக்கும் பெண்களைப்போல் மன அழுத்தங்கள் மன உளைச்சல்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றது.

ஆண்களுக்கு மன அழுத்தம் இல்லை என்று என் பதிவில் நான் குறிப்பிடவில்லை, இருப்பினும் ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தத்தின் பாதிப்புக்கள் அதிகம் என்பது ஆய்வுகளின் முடிவு.
தற்கொலைகளைக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்புகள் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2020 at 07:05, குமாரசாமி said:

ஆண்களுக்கும் பெண்களைப்போல் மன அழுத்தங்கள் மன உளைச்சல்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றது.

இவருடைய மரணத்திற்கான காரணம் எதுவென்று தெரியாது ஆனால் நீங்கள் ஆண்களுக்கும் மன உளைச்சல் இருக்கும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் அவர்கள் அதனை குணப்படுத்துவதற்காக நாடும் வழிகளிலேயே பெண்களும் ஆண்களும் வேறுபடுகிறார்கள்..

அவர்கள் பெண்களைப்போல வெளியே சொல்வதில்லை..அதனால் அவர்களின் பாதிப்புகள் வெளியே அட்டவனைப்படுத்தப்படுவதில்லை. தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை வெளியே கூறினால், சமூகத்தின் பார்வையில் அவர்கள் எவ்வாறு நோக்கப்படுவார்களோ என்ற பயத்தில் வெளியே கூறாமல், ஒன்றில் அதிக குடிபோதை பழக்கத்திற்கு அடிமையாகி அல்லது மனதிற்குள்ளே வைத்து புழுங்கி இளவயதிலேயே மரணமடைந்துவிடுவார்கள், இல்லை வேறு வகையான உறவுகளை வெளியே தேடி சம்பந்தப்பட்ட எல்லோருடைய வாழ்க்கையையும் கெடுத்துவைப்பார்கள். அதுவும் இல்லை என்றால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மன உளைச்சல் உள்ளவர்கள் அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கெளரவம், சமூக என்ன சொல்லும் என பார்க்காமல் தன் குடும்பம், தன்னை சுற்றியுள்ள உறவுகளை பற்றி நினைத்து முறையான வழிகளை நாடினால் தற்கொலைகளையோ, தேவையில்லாத அசம்பாவிதங்களையோ குறைத்து கொள்ளமுடியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.