Jump to content

என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 


என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️


 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, uthayakumar said:

சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

சிங்களவன் போர் முடிந்தவுன் திரும்ப ஒரு மாற்று தலைமை உருவாகாத வகையில் முழு வீச்சுடன் இயங்குகின்றான்.

அவனின் தூர நோக்கு இலங்கை முழுவதும் சிங்களவர்களை குடியேற்றுவது

இனி மெல்ல சாகும் தமிழர் தேசம்

காட்டி கொடுப்பவர்களும் வஞ்சகர்களும் நிறைந்துவிட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

 


என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும்

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

 

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

 

6 hours ago, விசுகு said:

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

சிங்களப் பேரினவாதம் உணரக்கூடிய ஒரு காலம் நிச்சயம் வரும்.அப்போது தான் அனைவரும் அமைதியாக வாழ முடியும் விசுகு.உடையார்ர,புரட்சி தமிழன்,விசுகு  உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

 

5 hours ago, சாமானியன் said:

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

நிலாமதி அக்கா ,சாமானியன் ,ஈழப்பிரியன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

நீங்கள் சொல்லுவது போல் சர்வவல்லமை கொண்ட ஜனாதிபதி அமைப்பு முறையை நேக்கி பயணிப்பதற்காகவே ஒரு புதிய அரசில்அமைப்பை கொண்டு வர இருக்கும் இந்த வேளையிலும் பாராளுமன்ற மக்கள் ஆட்சிலும் நம்பிக்கை கொண்ட மக்களும் 
அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.அதிகாரமும் பணமும் எல்லா வேளைகளிலும் தொடர்ந்தும் மாறாமல் இருக்கப் போவதில்லை.ஆனால் நாம் எம் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஏதோ ஒரு வழியில் போராட்டத் தானே வேண்டும்.தமிழரையும் முஸ்லீம் மக்களையும் ஒரு போதும் தேவை இல்லை என்ற விதி எப்போதும் மாறாமல் இருக்கப் போவதில்லை.பாராளுமன்ற ஆட்சி கூட கடந்த காலத்தில் தமிழ்க் கட்சிகளால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.எந்தவித பேரம் பேசலும் இன்றி.தமிழர் போராட்டத்தில் பல முறை மாற்றங்கள் வந்திருக்கின்றன ஆனால் நாம் தான் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை.இது நம் அரசியல் போராட்டத்தில் இருந்து ஆயுதப் போராட்டம் வரை கண்டிருக்கிறோம்.மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகளும் சரியான பாதையை தெரியவில்லை.எங்கள் அருகில் இருக்கும் இந்தியாவைக் கூட இவர்களாளால் சரியாகப் படிக்க புரிய முடியவில்லை.அதற்காகா இன்னும் ஒரு தலைமை சரியாகாத்தான் பயணிக்கும் என்றும் இல்லை.நிரந்தரமான அரசில் தீர்வை எப்படி சாத்தியமாகும் என்ற பாதையை தேடுவார்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

நிதர்சனம் - நாடகம் நடந்து கொண்டிருக்கு, முடிவுகள் விரைவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

 

Quote

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

கருணாவை எதிர்க்க முஸ்லிம்களே கூத்தமைப்பிற்கு வாக்குப்போட தயார் என்று சொல்லுமளவுக்கு 
அவர்களோடு அனுசரித்து (அவிஞ்சு) போய் அரசியல் செய்திருக்கிறார்கள் , கூத்தமைப்பிற்கு வாக்கு போட்டாலும் ஆளப்போவது அவனுகள் தான் என்பதில் 100 இற்கு 200 வீதம் கன்பார்ம் 
இவர்கள் இருக்கும் வரை வடக்கில் சிங்கள எம் .பீ வருவது பீஸ் ஆப் கேக் , பாடிப்பாடி வருவானுகள் 

05/08/20 அன்று அடித்து   சொல்கிறேன்  நாளைக்கு கூத்தமைப்பு வென்றால் குறித்துவைத்துக்கொள்ளுங்கோ மக்காள் 
 முழு இலங்கை தமிழனின் நிலையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  சேது விக்கிரம் தான் -எங்கே செல்லும் இந்த பாதை யார் தான் அறிவாரோ என்று சங்கிலியையும் தூக்கிக்கொண்டு தெரு தெருவாக உலாத்துவீர்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

எப்பவும் பெப்பேதானே. அதுக்காக பெப்பேக்களை பாராளுமன்றம் அனுப்பினால் யாப்பு வரைபில் என்ன வருகின்றது என்பதையே புரியாமல் முழுப்பார்கள்! எப்படியோ 15 தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து பாராளுமன்றம் போகத்தானே போகின்றார்கள்.  கொஞ்சம் விளக்கமுள்ளவர்கள் போனால் நல்லதுதானே.

விக்கியரும், கஜேந்திரகுமாரும் போனால் அவர்கள் தத்தமது கொழும்பு வீடுகளில் இருக்கவும் வசதியாக இருக்கும். மக்கள் உதவிசெய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கு😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா , கூட்டமைப்பிற்காய் வோட்டு கேக்கும் வீடியோ பார்த்தேன்

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

மஹிந்தவிற்கு அடுத்து நாமல் என்றும் அவர்களின் அசுர பலத்திற்கு முன் யாருமே தாக்கு பிடிக்க முடியாது என்றும் தான் நான் 2015  மைத்திரியை பிரித்தெடுக்கும் வரை எண்ணியிருந்தேன். எத்தனுக்கு எத்தன் என்ற ரீதியில் அவரின் கட்சியிலிருந்தே   ஒருத்தரை அவருக்கு எதிராக  நிறுத்தும் வரை ஒரு ஆடசி மாற்றம் என்பதை யாருமே கனவிலும் நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது சிங்களவரின் 60  வீதத்திற்கு மேலானோரின் ஆதரவு கோத்தா மற்றும் மஹிந்த தரப்பிற்கு உள்ளது.

.இதும் மாறுமே காத்திருப்போம் .. என்ன தான் மாறினாலும் அதற்க்கு ஏற்ப காய் நகர்த்தி எங்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்த எங்கள் தரப்பில்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை என்பது தான் துயரமானது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.