Jump to content

என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 


என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️


 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, uthayakumar said:

சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

சிங்களவன் போர் முடிந்தவுன் திரும்ப ஒரு மாற்று தலைமை உருவாகாத வகையில் முழு வீச்சுடன் இயங்குகின்றான்.

அவனின் தூர நோக்கு இலங்கை முழுவதும் சிங்களவர்களை குடியேற்றுவது

இனி மெல்ல சாகும் தமிழர் தேசம்

காட்டி கொடுப்பவர்களும் வஞ்சகர்களும் நிறைந்துவிட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

 


என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும்

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

 

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

 

6 hours ago, விசுகு said:

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

சிங்களப் பேரினவாதம் உணரக்கூடிய ஒரு காலம் நிச்சயம் வரும்.அப்போது தான் அனைவரும் அமைதியாக வாழ முடியும் விசுகு.உடையார்ர,புரட்சி தமிழன்,விசுகு  உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

 

5 hours ago, சாமானியன் said:

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

நிலாமதி அக்கா ,சாமானியன் ,ஈழப்பிரியன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

நீங்கள் சொல்லுவது போல் சர்வவல்லமை கொண்ட ஜனாதிபதி அமைப்பு முறையை நேக்கி பயணிப்பதற்காகவே ஒரு புதிய அரசில்அமைப்பை கொண்டு வர இருக்கும் இந்த வேளையிலும் பாராளுமன்ற மக்கள் ஆட்சிலும் நம்பிக்கை கொண்ட மக்களும் 
அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.அதிகாரமும் பணமும் எல்லா வேளைகளிலும் தொடர்ந்தும் மாறாமல் இருக்கப் போவதில்லை.ஆனால் நாம் எம் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஏதோ ஒரு வழியில் போராட்டத் தானே வேண்டும்.தமிழரையும் முஸ்லீம் மக்களையும் ஒரு போதும் தேவை இல்லை என்ற விதி எப்போதும் மாறாமல் இருக்கப் போவதில்லை.பாராளுமன்ற ஆட்சி கூட கடந்த காலத்தில் தமிழ்க் கட்சிகளால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.எந்தவித பேரம் பேசலும் இன்றி.தமிழர் போராட்டத்தில் பல முறை மாற்றங்கள் வந்திருக்கின்றன ஆனால் நாம் தான் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை.இது நம் அரசியல் போராட்டத்தில் இருந்து ஆயுதப் போராட்டம் வரை கண்டிருக்கிறோம்.மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகளும் சரியான பாதையை தெரியவில்லை.எங்கள் அருகில் இருக்கும் இந்தியாவைக் கூட இவர்களாளால் சரியாகப் படிக்க புரிய முடியவில்லை.அதற்காகா இன்னும் ஒரு தலைமை சரியாகாத்தான் பயணிக்கும் என்றும் இல்லை.நிரந்தரமான அரசில் தீர்வை எப்படி சாத்தியமாகும் என்ற பாதையை தேடுவார்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

நிதர்சனம் - நாடகம் நடந்து கொண்டிருக்கு, முடிவுகள் விரைவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

 

Quote

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

கருணாவை எதிர்க்க முஸ்லிம்களே கூத்தமைப்பிற்கு வாக்குப்போட தயார் என்று சொல்லுமளவுக்கு 
அவர்களோடு அனுசரித்து (அவிஞ்சு) போய் அரசியல் செய்திருக்கிறார்கள் , கூத்தமைப்பிற்கு வாக்கு போட்டாலும் ஆளப்போவது அவனுகள் தான் என்பதில் 100 இற்கு 200 வீதம் கன்பார்ம் 
இவர்கள் இருக்கும் வரை வடக்கில் சிங்கள எம் .பீ வருவது பீஸ் ஆப் கேக் , பாடிப்பாடி வருவானுகள் 

05/08/20 அன்று அடித்து   சொல்கிறேன்  நாளைக்கு கூத்தமைப்பு வென்றால் குறித்துவைத்துக்கொள்ளுங்கோ மக்காள் 
 முழு இலங்கை தமிழனின் நிலையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  சேது விக்கிரம் தான் -எங்கே செல்லும் இந்த பாதை யார் தான் அறிவாரோ என்று சங்கிலியையும் தூக்கிக்கொண்டு தெரு தெருவாக உலாத்துவீர்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

எப்பவும் பெப்பேதானே. அதுக்காக பெப்பேக்களை பாராளுமன்றம் அனுப்பினால் யாப்பு வரைபில் என்ன வருகின்றது என்பதையே புரியாமல் முழுப்பார்கள்! எப்படியோ 15 தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து பாராளுமன்றம் போகத்தானே போகின்றார்கள்.  கொஞ்சம் விளக்கமுள்ளவர்கள் போனால் நல்லதுதானே.

விக்கியரும், கஜேந்திரகுமாரும் போனால் அவர்கள் தத்தமது கொழும்பு வீடுகளில் இருக்கவும் வசதியாக இருக்கும். மக்கள் உதவிசெய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கு😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா , கூட்டமைப்பிற்காய் வோட்டு கேக்கும் வீடியோ பார்த்தேன்

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

மஹிந்தவிற்கு அடுத்து நாமல் என்றும் அவர்களின் அசுர பலத்திற்கு முன் யாருமே தாக்கு பிடிக்க முடியாது என்றும் தான் நான் 2015  மைத்திரியை பிரித்தெடுக்கும் வரை எண்ணியிருந்தேன். எத்தனுக்கு எத்தன் என்ற ரீதியில் அவரின் கட்சியிலிருந்தே   ஒருத்தரை அவருக்கு எதிராக  நிறுத்தும் வரை ஒரு ஆடசி மாற்றம் என்பதை யாருமே கனவிலும் நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது சிங்களவரின் 60  வீதத்திற்கு மேலானோரின் ஆதரவு கோத்தா மற்றும் மஹிந்த தரப்பிற்கு உள்ளது.

.இதும் மாறுமே காத்திருப்போம் .. என்ன தான் மாறினாலும் அதற்க்கு ஏற்ப காய் நகர்த்தி எங்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்த எங்கள் தரப்பில்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை என்பது தான் துயரமானது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.