Jump to content

என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 


என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️


 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, uthayakumar said:

சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

சிங்களவன் போர் முடிந்தவுன் திரும்ப ஒரு மாற்று தலைமை உருவாகாத வகையில் முழு வீச்சுடன் இயங்குகின்றான்.

அவனின் தூர நோக்கு இலங்கை முழுவதும் சிங்களவர்களை குடியேற்றுவது

இனி மெல்ல சாகும் தமிழர் தேசம்

காட்டி கொடுப்பவர்களும் வஞ்சகர்களும் நிறைந்துவிட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

 


என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும்

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

 

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

 

6 hours ago, விசுகு said:

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

சிங்களப் பேரினவாதம் உணரக்கூடிய ஒரு காலம் நிச்சயம் வரும்.அப்போது தான் அனைவரும் அமைதியாக வாழ முடியும் விசுகு.உடையார்ர,புரட்சி தமிழன்,விசுகு  உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

 

5 hours ago, சாமானியன் said:

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

நிலாமதி அக்கா ,சாமானியன் ,ஈழப்பிரியன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

நீங்கள் சொல்லுவது போல் சர்வவல்லமை கொண்ட ஜனாதிபதி அமைப்பு முறையை நேக்கி பயணிப்பதற்காகவே ஒரு புதிய அரசில்அமைப்பை கொண்டு வர இருக்கும் இந்த வேளையிலும் பாராளுமன்ற மக்கள் ஆட்சிலும் நம்பிக்கை கொண்ட மக்களும் 
அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.அதிகாரமும் பணமும் எல்லா வேளைகளிலும் தொடர்ந்தும் மாறாமல் இருக்கப் போவதில்லை.ஆனால் நாம் எம் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஏதோ ஒரு வழியில் போராட்டத் தானே வேண்டும்.தமிழரையும் முஸ்லீம் மக்களையும் ஒரு போதும் தேவை இல்லை என்ற விதி எப்போதும் மாறாமல் இருக்கப் போவதில்லை.பாராளுமன்ற ஆட்சி கூட கடந்த காலத்தில் தமிழ்க் கட்சிகளால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.எந்தவித பேரம் பேசலும் இன்றி.தமிழர் போராட்டத்தில் பல முறை மாற்றங்கள் வந்திருக்கின்றன ஆனால் நாம் தான் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை.இது நம் அரசியல் போராட்டத்தில் இருந்து ஆயுதப் போராட்டம் வரை கண்டிருக்கிறோம்.மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகளும் சரியான பாதையை தெரியவில்லை.எங்கள் அருகில் இருக்கும் இந்தியாவைக் கூட இவர்களாளால் சரியாகப் படிக்க புரிய முடியவில்லை.அதற்காகா இன்னும் ஒரு தலைமை சரியாகாத்தான் பயணிக்கும் என்றும் இல்லை.நிரந்தரமான அரசில் தீர்வை எப்படி சாத்தியமாகும் என்ற பாதையை தேடுவார்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

நிதர்சனம் - நாடகம் நடந்து கொண்டிருக்கு, முடிவுகள் விரைவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

 

Quote

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

கருணாவை எதிர்க்க முஸ்லிம்களே கூத்தமைப்பிற்கு வாக்குப்போட தயார் என்று சொல்லுமளவுக்கு 
அவர்களோடு அனுசரித்து (அவிஞ்சு) போய் அரசியல் செய்திருக்கிறார்கள் , கூத்தமைப்பிற்கு வாக்கு போட்டாலும் ஆளப்போவது அவனுகள் தான் என்பதில் 100 இற்கு 200 வீதம் கன்பார்ம் 
இவர்கள் இருக்கும் வரை வடக்கில் சிங்கள எம் .பீ வருவது பீஸ் ஆப் கேக் , பாடிப்பாடி வருவானுகள் 

05/08/20 அன்று அடித்து   சொல்கிறேன்  நாளைக்கு கூத்தமைப்பு வென்றால் குறித்துவைத்துக்கொள்ளுங்கோ மக்காள் 
 முழு இலங்கை தமிழனின் நிலையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  சேது விக்கிரம் தான் -எங்கே செல்லும் இந்த பாதை யார் தான் அறிவாரோ என்று சங்கிலியையும் தூக்கிக்கொண்டு தெரு தெருவாக உலாத்துவீர்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

எப்பவும் பெப்பேதானே. அதுக்காக பெப்பேக்களை பாராளுமன்றம் அனுப்பினால் யாப்பு வரைபில் என்ன வருகின்றது என்பதையே புரியாமல் முழுப்பார்கள்! எப்படியோ 15 தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து பாராளுமன்றம் போகத்தானே போகின்றார்கள்.  கொஞ்சம் விளக்கமுள்ளவர்கள் போனால் நல்லதுதானே.

விக்கியரும், கஜேந்திரகுமாரும் போனால் அவர்கள் தத்தமது கொழும்பு வீடுகளில் இருக்கவும் வசதியாக இருக்கும். மக்கள் உதவிசெய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கு😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா , கூட்டமைப்பிற்காய் வோட்டு கேக்கும் வீடியோ பார்த்தேன்

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

மஹிந்தவிற்கு அடுத்து நாமல் என்றும் அவர்களின் அசுர பலத்திற்கு முன் யாருமே தாக்கு பிடிக்க முடியாது என்றும் தான் நான் 2015  மைத்திரியை பிரித்தெடுக்கும் வரை எண்ணியிருந்தேன். எத்தனுக்கு எத்தன் என்ற ரீதியில் அவரின் கட்சியிலிருந்தே   ஒருத்தரை அவருக்கு எதிராக  நிறுத்தும் வரை ஒரு ஆடசி மாற்றம் என்பதை யாருமே கனவிலும் நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது சிங்களவரின் 60  வீதத்திற்கு மேலானோரின் ஆதரவு கோத்தா மற்றும் மஹிந்த தரப்பிற்கு உள்ளது.

.இதும் மாறுமே காத்திருப்போம் .. என்ன தான் மாறினாலும் அதற்க்கு ஏற்ப காய் நகர்த்தி எங்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்த எங்கள் தரப்பில்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை என்பது தான் துயரமானது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.