Jump to content

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.

இந்நிலையில்  அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில்  கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

90 வயதை கடந்த பிரமுகர்கள்,  அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை. சதுர்மாக்கள்,  முனிவர்கள்,  சங்கராச்சாரியார்,  துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/ராமர்-கோவில்-அடிக்கல்-நா-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கள் மறவன் புலவு சச்சியர் உள்ளடங்குகிறாரா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இதில் எங்கள் மறவன் புலவு சச்சியர் உள்ளடங்குகிறாரா 😂

மறவன் புலவு.. சச்சிதானந்தம்  அவர்களுக்கு, 
ஊரில் நிறைய, தேர்தல் வேலைகள் இருப்பதால்.. 
அவர் கலந்து கொள்ள மாட்டார் என நினைக்கின்றேன். :grin:

116267772_3244826878944744_4978120601508589230_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=lqT8zbAJwoUAX_uVJmR&_nc_ht=scontent-frx5-1.xx&oh=bd1c262605a9e18d6eaec44d439e238a&oe=5F4E970C

//கோயில் கட்டுற சம்பந்தமா, ஜோஸியக்காரன் என்னமோ பரிகாரம் இல்லாத ஒரு வசமான குண்ட தூக்கி போட்டுருக்கான். 🤔🤔🤔
அதனாலதான் குடும்பம், புள்ளகுட்டி உள்ளவனெல்லாம் ஜகா வாங்குறானுக..//
 
ராமர் கோவில்,  அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டால்... குடும்பத்துக்கு தீங்கு வரும் என்று,  யாரோ ஒரு சாத்திரி சொல்லி விட்டதால், பல ஆட்கள்... மெதுவாக "காய் வெட்டு" கிறார்களாம்.  :grin:
 
 
Link to comment
Share on other sites

42 minutes ago, Kapithan said:

இதில் எங்கள் மறவன் புலவு சச்சியர் உள்ளடங்குகிறாரா 😂

ஆம் நிச்சயமாக உள்ளடங்குவார்.  பட்டாபிஷேகத்திற்கு அரியணை தாங்க.

அரியணை அனுமன் தாங்க,
    அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
    இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
    வசிட்டனே புனைந்தான் மௌலி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு!

இந்த நாடு திருந்த வாய்ப்பே இல்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இந்த நாடு திருந்த வாய்ப்பே இல்லை. :grin:

இலங்கையும் அந்த வரிசையில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை (பிக்குகளின் நியமனம்) ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இலங்கையும் அந்த வரிசையில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை (பிக்குகளின் நியமனம்) ☹️

பிக்குகள் இப்பவே ஒரு மார்க்கமாய்த்தானே திரியினம்.நான் நினைக்கிறன் லெக்சன் முடிய நிறைய கூத்துக்கள் பார்க்கலாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

பிக்குகள் இப்பவே ஒரு மார்க்கமாய்த்தானே திரியினம்.நான் நினைக்கிறன் லெக்சன் முடிய நிறைய கூத்துக்கள் பார்க்கலாம். :grin:

நிச்சயமாக. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழாக்கோலம் பூண்டது அயோத்தி; ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

விழாக்கோலம் பூண்டது அயோத்தி; ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை:  பிரதமர் மோடி பங்கேற்கிறார்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 05,  2020 05:56 AM
அயோத்தி,

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும்.

அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.

பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி ஆகஸ்டு 5-ந்தேதி (இன்று) ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பங்கேற்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தநிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே மிக மிக முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் தொடர்ச்சியாக ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் ராமஜென்மபூமியில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கின. தொடர்ந்து நடந்து வரும் இந்த சடங்குகளின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ கிளம்புகிறார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பும் அவர் 11.30 மணியளவில் அங்குள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார்.

பின்னர் நேராக அனுமன்ஹார்கி கோவிலுக்கு செல்லும் அவர், சுமார் 10 நிமிடங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து 12 மணியளவில் ராமஜென்மபூமிக்கு சென்று அங்கு ராம்லல்லா (குழந்தை ராமர்) கோவிலில் வழிபாடு செய்கிறார். அத்துடன் அங்கு மரக்கன்று ஒன்றையும் பிரதமர் நட்டு வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் 12.30 மணியளவில் ராமர் கோவில் பூமி பூஜையில் இணைகிறார். அத்துடன் பிரமாண்ட ராமர் கோவிலுக் கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார். பின்னர் விழாவின் நினைவாக சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு அவர் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

சுமார் 1½ மணி நேரம் அங்கு தங்கியிருக்கும் பிரதமர் மோடி, பின்னர் மீண்டும் சாகேத் கல்லூரிக்கு திரும்புகிறார். அங்கிருந்து பிற்பகல் 2.20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் லக்னோ திரும்புவார்.

மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே தேர்தல் நேரங்களில் பலமுறை அயோத்தி சென்றிருந்தாலும் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக அங்கு சாமி தரிசனம் செய்வதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், துணைத்தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோர் நேற்று மாலையிலேயே அயோத்தி சென்றடைந்தனர். அவர்கள் இருவரும் இன்று பிரதமருடன் விழாவில் பங்கேற்கின்றனர்.

இவர்களை தவிர மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜனதா தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்கள்.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வை அயோத்தி மக்கள் தீபாவளி போல கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தங்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், வாசலில் கோலமிட்டும், இனிப்புகள் பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சரயு நதிக்கரை, நகர வீதிகள், ராமஜென்மபூமி சுற்றுவட்டாரங்கள் என மாவட்டம் முழுவதும் ராமாயண காட்சிகள், ராமபிரானின் படங்கள் சுவர்களில் வரையப்பட்டும், வீதி முழுவதும் கோலமிட்டும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இரவில் வண்ண விளக்குகளால் ஒளியேற்றியும், அகல் விளக்கேற்றியும் வருவதால் அயோத்தி முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அயோத்தி முழுவதும் மிகத்தீவிர தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஏராளமான சுகாதார அதிகாரிகள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

இதைப்போல பிரதமர் மோடி மற்றும் ஏராளமான முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் அயோத்தியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தி மாவட்டம் முழுவதுமே ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் அயோத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுவதையொட்டி நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் அயோத்தியை நோக்கியே இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை நேரில் காண இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களும் ஏங்கினர்.

ஆனால் கொரோனா தொற்றால் நேரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ராமபக்தர்களின் இந்த ஏக்கத்தை தணிப்பதற்காக இன்றைய நிகழ்வுகளை டி.வி.க்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் பா.ஜனதாவின் மற்றுமொரு முக்கியமான தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி நீக்கப்பட்டதன் மூலம் ஏற்கனவே முக்கியமானதொரு தேர்தல் வாக்குறுதியை பா.ஜனதா நிறைவேற்றி இருந்தது.

அதன் முதலாம் ஆண்டு தினத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் இந்துக்களின் கனவும் நனவாகிறது. இந்த நிகழ்வை பல்வேறு எதிர்க்கட்சிகளும் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராமர் கோவிலுக்கு இன்று பிரதமர் மோடியின் முன்னிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்குகிறது. அங்கு அமைய உள்ள பிரமாண்ட கோவிலின் கருவறையில் 3 ஆண்டுக்குள் பக்தர்கள் வழிபட முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/05055654/The-festival-was-held-in-Ayodhya-Bhoomi-Pooja-at-Ram.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம் தனக்கென இராமர் கோவில் கட்ட முனைந்தால் நிலமை என்னாகும் ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இந்த நாடு திருந்த வாய்ப்பே இல்லை. :grin:

⬇️ கீழே.... புது, பஞ்சாயத்து ஒண்டு... தொடங்கியிருக்கு.⬇️  :grin:

ram-temple-sambha-1596485693.jpg

//அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால்... என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி தெரிவிப்பு.
அயோத்தியில், கட்டப்பட உள்ள கோவிலில்... உள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று, இந்துத்துவா அமைப்பின் தலைவர்... சம்பாஜி பிதே, திங்களன்று தெரிவித்தார்.//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0027534_janmashtami-iskcon-prasad-large_ நான் நினைக்கிறேன் இது பெங்களூர் இஸ்கான் கோவிலின் மன்னிக்கவும் சொப்பிங் காம்லெக்சின் மறுவடிவமாக இருக்கும் . ராமரை ஒரு மூலையில் வைத்துவிட்டு ராமர் பிரான்ட் புராடக்ஸ் , ஊதுபத்தி , சாம்பிராணி , ராமர் றி சொர்ட் , வில் & அம்பு ,கேடயம் ,லட்டு ,மிக்சர் காரா சேவு   எல்லாம் விற்க போகினம். .👍 மோடி ஒரு பிசினஸ் மேன்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம்கள்..😢 தமிழ் நாட்டு சனம் ரெண்டு ஓட்டாவது போட்டு விடுங்கப்பா ..👌

117244897_1905099972980235_2058272574769

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.