Jump to content

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம்


Recommended Posts

4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், AFP

 

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 

2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. 

இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

கொலை வழக்கு

2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கை ஐ.நா தீர்ப்பாயம் விசாரித்தது. 

இதன் தீர்ப்பு வர இருக்கும் சூழலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இந்த வழக்கில் இரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர். 

இரண்டாம் வெடிப்பு ஹரீரி வீடு அருகே நிகழ்ந்திருக்கலாம்.

பலர் காயம் அடைந்துள்ளதாக, மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் லெபனான் சுகாதார துறை அமைச்சர்.
 

https://www.bbc.com/tamil/global-53657095

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 பேருக்கு மேல் பலி எனவும் 3000 பேருக்கு மேல் காயம் எனவும் ஜேர்மன் ஊடகம் தெரிவிக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் நாட்டை உலுக்கிய மிகப் பயங்கர வெடிப்பு! – பெருமளவானோர் பலி!

IMG_20200804_223611-960x549.jpg?189db0&189db0

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (04) சற்றுமுன் இடம்பெற்ற அதிபயங்கர வெடிச் சம்பவத்தில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளதுடன் 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
 

 

பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சிறிய வெடிப்பு ஏற்பட்டதை தொடர்த்து சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் பெரும் வெடிப்பாக இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த அனர்த்தத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் துறைமுகத்துக்கு அருகே இருந்த பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரச செய்தி தளம் தெரிவித்துள்ளது.

இப்பாரிய வெடிச்சம்பவத்தால் தேசிய கோதுமை குழிகள் பாரிய அழிவை சந்தித்திருக்கும் என்றும், பல மைல்கள் தூரம் வரை இதனால் ஏற்பட்ட சேதகம் காணப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

பின்னிணைப்பு

சோடியம் நைட்ரேட் உள்ளிட்ட அதியுயர் வெடி பொருட்கள் சேமிக்கப்பட்ட கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பே இப்பாரிய அனர்த்தத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சம்வம் தொடர்பில் பேசிய பெய்ரூட் ஆளுநர், “சேதத்தின் அளவு மிகப் பெரியது. ஹிரோஷிமா நாஹசாகி போன்ற அழிவை ஒத்தது” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

  • IMG_20200804_224554-1024x768.jpg?189db0&
  • IMG_20200804_224552.jpg?189db0&189db0
  • IMG_20200804_224550-1024x575.jpg?189db0&
  • IMG_20200804_224548.jpg?189db0&189db0
  • IMG_20200804_234932.jpg?189db0&189db0
  • IMG_20200804_233609-1024x683.jpg?189db0&
  • IMG_20200804_233606-1024x683.jpg?189db0&
  • IMG_20200804_233305.jpg?189db0&189db0
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bomb.jpg

லெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது.

லெபனான் தலைநகரை உலுக்கிய குறித்த சம்பவத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 4000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து படிப்படியாக மீண்டு வந்த லெபனானில் ஏற்பட்டுள்ள குறித்த சம்பவமானது, அந்நாட்டினை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேவேளை,  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் ஒளன், குறித்த தொழிற்சாலைக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமற்று ஆறு ஆண்டுகளாக உர வகைகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரைட் வேதிப்பொருட்கள் ஏறக்குறைய 2750 டண் அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயற்பாடானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/லெபனானில்-பாரிய-வெடிப்பு/

Link to comment
Share on other sites

லெபனான் சம்பவத்தில் இரு இலங்கையர் காயமடைந்துள்ளனர்

 

 
 

லெபனானின் தலைநகரத்தில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று (4) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளனரென, லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கைத் தூதரகமும் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. 

 

image_632ade3cb5.jpg

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/லபனன-சமபவததல-இர-இலஙகயர-கயமடநதளளனர/175-253984

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெபனானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த மிகப்பெரிய வெடிவிபத்து: 70 பேர் பலி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்: என்ன காரணம்?

massive-beirut-blast-kills-more-than-70-injures-thousands பெய்ரூட் நகரில் நடந்த வெடிவிபத்தில் நகரமே உருக்குலைந்து கிடக்கும் காட்சி: படம் உதவி | ட்விட்டர்.

பெய்ரூட்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை 78க்கும் மேல் என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 4000 என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

வெடிவிபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. போரின்போது ஏதோ மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது போன்று நகரமே கோரமாக காட்சியளிக்கிறது.

பெய்ரூட் நகரில் இருந்த ஒரு கோட்டை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. பெய்ரூட் நகரில் நடந்த இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது.

1596596550756.jpg வெடிவிபத்துக்குப் பின் ஆரஞ்சு நிறத்தில் வானில் சென்ற புகை.

ஏற்கெனவே கரோனா வைரஸ் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபனான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வந்து சாலையிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களைக் கொண்டு சென்றவாறு இருந்தன.

சிறிது நேரத்தில் மருத்துவமனைகளில் அனைத்து இடங்களும் நிரம்பியதால், காயமடைந்தவர்களைச் சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1596596875756.jpg

பெய்ரூட் நகரில் நடந்தது வெடிவிபத்தா அல்லது இஸ்ரேல் நடத்திய தாக்குதலா என்ற கேள்வி வெடிச்சத்தம் கேட்டதும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், தாங்கள் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை, எங்கள் விமானம் அங்கு செல்லவில்லை என்று இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், பெய்ரூட் நகரில் உள்ள பழையான கோட்டையில் இருந்து ஆரஞ்சு நிறத்தில் புகை மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டம் போல் வெடிச்சத்தம் கேட்டபின் மேலே எழுந்தது என்று அதைப் பார்த்த மக்கள் தெரிவித்தனர், பல்வேறு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

1596596812756.jpg காயமடைந்த மக்கள் சாலையில் ஓடிய காட்சி.

இந்த வெடிச் சத்தம் கேட்டபின் நகரில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிக் கதவுகள் பல கி.மீ. தொலைவுக்குத் தூக்கி வீசப்பட்டன.

இந்த வெடிவிபத்துக்கு உண்மையான காரணம் இதுவரை அந்நாட்டு அரசால் முழுமையாகக் கண்டுபிடித்து வெளியிடப்படவில்லை.

ஆனால், முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பெய்ரூட் நகரில் உள்ள பழமையான கோட்டையில் மிகப்பெரிய வெடிமருந்து கிட்டங்கியை அரசு செயல்படுத்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கடற்பகுதியில் ஒரு கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது, அதில் இருந்த ஏராளமான ஆபத்தான வெடிமருந்துகள் இந்தக் கோட்டையில் சேமித்து வைக்கப்பட்டன. இந்த வெடிமருந்து வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

1596596587756.jpg

பெய்ரூட்டில் உள்ள தொலைக்காட்சி சேனல் எல்பிசி வெளியிட்ட செய்தியில், “வெடித்தவுடன் மஞ்சள் நிறத்தில் புகை மேலே எழும்பியது. இது சோடியம் நைட்ரேட் போன்று இருந்தது. அதன் மணம் நச்சுத்தன்மை கொண்ட நைட்ரஜன் டைஆக்ஸைடு போன்று இருந்தது” எனத் தெரிவித்தது.

இஸ்ரேல், ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கு இடையே தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வெடிவிபத்து நடக்க சில நிமிடங்களுக்கு முன் வானில் ஒரு விமானம் பறந்து சென்றதால், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவிட்டதாக மக்கள் பதற்றம் அடைந்தனர். ஆனால், இஸ்ரேல் இதை மறுத்துவிட்டது.

பெய்ரூட்டில் இதற்கு முன் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போர், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் , இஸ்ரேல் தாக்குதல் என பல நடந்துள்ளன. ஆனால், அனைத்தையும் மிஞ்சும் வகையில் இந்த வெடிவிபத்து இருக்கிறது என்று நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

1596596779756.jpg காயமடைந்த மக்கள் சாலையில் கிடத்தப்பட்டுள்ள காட்சி.

சாலையில் சென்றோர், வாகனத்தில் சென்றோர், வீடுகளில் ஓய்வு எடுத்தோர், கடைகளில் குழுமி இருந்த மக்கள் அனைவரும் இந்தத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். ரத்தமும், சதையுமாகவும், உடைந்த கை கால்களுடன், சாலையில் மக்கள் கிடத்தப்பட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் ஹமாத் கூறுகையில், “இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு அவசர மீட்புக் குழுக்கள் பெய்ரூட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. காயமடைந்தவர்கள் வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

1596596849756.jpg

இந்த மோசமான வெடிவிபத்தால் பெய்ரூட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளும் மோசமாகச் சேதமடைந்தன. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க முடியாத நிலையில் வேறு நகரத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

பெய்ரூட் கடற்கரையில் கரோனா வைரஸ் சூழலில் உதவுவதற்காக ஐ.நா. அமைதிக்குழுவின் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வெடிவிபத்தில் அந்தக் கப்பலும், கப்பலில் இருந்த ஏராளமான பணியாளர்களும் மோசமாகக் காயமடைந்துள்ளனர் .

https://www.hindutamil.in/news/world/568240-massive-beirut-blast-kills-more-than-70-injures-thousands-4.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

bomb.jpg

லெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உந்த வெடி விசயத்திலை பக்கத்து கடுகு நாட்டின்மேலை எனக்கு ஒரு சிமோல் டவுட்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உந்த வெடி விசயத்திலை பக்கத்து கடுகு நாட்டின்மேலை எனக்கு ஒரு சிமோல் டவுட்😎

 நிச்சயமாக அவர்கள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உந்த வெடி விசயத்திலை பக்கத்து கடுகு நாட்டின்மேலை எனக்கு ஒரு சிமோல் டவுட்😎

 

3 minutes ago, உடையார் said:

 நிச்சயமாக அவர்கள் தான்

இஸ்ரேல்... தான், இதனை செய்திருக்கும் என்பதில், மாற்றுக்  கருத்து இல்லை.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன வெடி சம்பவம். வெடிப்பு சம்பவம் என்பதுதான் சரியானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வாதவூரான் said:

அதென்ன வெடி சம்பவம். வெடிப்பு சம்பவம் என்பதுதான் சரியானது

திணறடிக்கும் தீபாவளி பட்டாசு விலை ...

விலை குறைந்த பசுமைப் பட்டாசுகள் ...

வாதவூரான்... 
இண்டைக்கு இரவு, இலங்கைத் தேர்தல் முடிவுகள் வர இருக்கும் போது...
யார் தோற்றது.. யார் வெண்டது... என்று,  வெடி கொளுத்துற  பிளானில் இருக்கும் போது...
வெடி சம்பவம் என்று, எழுதியதில்... தப்பே இல்லை.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

திணறடிக்கும் தீபாவளி பட்டாசு விலை ...

விலை குறைந்த பசுமைப் பட்டாசுகள் ...

வாதவூரான்... 
இண்டைக்கு இரவு, இலங்கைத் தேர்தல் முடிவுகள் வர இருக்கும் போது...
யார் தோற்றது.. யார் வெண்டது... என்று,  வெடி கொளுத்துற  பிளானில் இருக்கும் போது...
வெடி சம்பவம் என்று, எழுதியதில்... தப்பே இல்லை.  :grin:

சிறி அண்ணா,
அதுக்கு வெடி சம்பவம் என்று எழுதினால் சரி தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

பயங்கரமாக இருக்கு... அப்படா

 

பெய்ரூட் வெடி விபத்து; 3 இலட்சம் பேருக்கு வீடில்லை!

568355.jpg?189db0&189db0

லெபனான் – தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெய்ரூட் நகர ஆளுநர் அப்பவுட் கருத்து தெரிவித்தபோது, “பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்து காரணமாக 3.5 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டொன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 100 பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1596590618595128-0-1024x1024.jpg?189db0&

வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கட்டார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

 

https://newuthayan.com/பெய்ரூட்-வெடி-விபத்து-3-இல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

EenmPEzUMAATuwD_571_855-720x450.jpg

பெயிரூட் வெடிப்பு சம்பவம்: 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தூண்டியுள்ளது என்று ஜேர்மனியின் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடலில் 200 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் சைப்ரஸ் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நகரின் துறைமுகத்தில் சுமார் 2,700 டன் என மதிப்பிடப்பட்ட ஒரு பெரிய அம்மோனியம் நைட்ரேட், சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 4,000 பேர் காயமடைந்தனர்,

https://athavannews.com/பெயிரூட்-வெடிப்பு-சம்பவம/

7 hours ago, ரதி said:

 

ஒரு அணுகுண்டு வெடித்த மாதிரி... காளான் வடிவில், புகை மேலே எழும்புகின்றது. 😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது? - விரிவான தகவல்கள்

5 ஆகஸ்ட் 2020
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

EPA

லெபனான் மீட்பு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பெய்ரூட் துறைமுகம் அருகே நடந்த வெடிப்பில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெடிப்பில் குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளனர்; 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

அந்த வெடிப்பின் பெய்ரூட் நகரமே குலுங்கியது. காளான் கொடை வடிவத்தில் புகை மேலே எழுந்தது.

கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.

விவசாயத்தில் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

இன்றிலிருந்து (புதன்கிழமை) நாடு முழுவதும் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என லெபனான் அதிபர் ஆன் தெரிவித்துள்ளார்.

"நேற்று இரவு பெய்ரூட் எதிர்கொண்ட பேரச்சத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது பெய்ரூட்டை பேரழிவு தாக்கிய நகரமாக மாற்றிவிட்டது," என்று அவசர அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ஆன் தெரிவித்தார்.

புகை, இடிபாடுகள் அனைத்தையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

என்ன நடந்தது?

 

இந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு துறைமுக பகுதியில் நடந்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

தான் நெருப்பை நேரில் பார்த்ததாகவும், ஆனால் வெடிப்பு சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்ட ஹதி நஸ்ரல்லா கூறுகிறார்.

அவர், "நான் கேட்கும் திறனை சில நிமிடங்களுக்கு இழந்துவிட்டேன். ஏதோ தவறாக நடக்கிறது என்று புரிந்தது. என் அருகே இருந்த காரின் கண்ணாடிகள், கடைகள், வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.


 

 

பிபிசி நிருபரின் அனுபவம்

 

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தின் போது பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் மரியம் ஒரு காணொளி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த காணொளியில் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு பதிவாகி உள்ளது.

பிபிசியில் பணியாற்றும் லினா சின்ஜாபும் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்து இருக்கிறார். துறைமுக பகுதி அருகே ஐந்து நிமிட பயண தொலைவில் அவர் வீடு இருக்கிறது. 

அவர், "எங்கள் கட்டடம் கீழே சரிந்து விழுவது போல அதிர்ந்தது. எல்லா ஜன்னல்களும் திறந்தன," என்கிறார்.

ஹெலிகாப்டரை கொண்டு தீ அணைக்கப்படுகிறது

Getty Images

 

ஹெலிகாப்டரை கொண்டு தீ அணைக்கப்படுகிறது

இந்த வெடிப்பு, 240 கி.மீ தொலைவில், கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் தீவிலும் உணரப்பட்டு இருக்கிறது.

நிலநடுக்கம் என்று கருதியதாக சைப்ரஸ் தீவு மக்கள் கூறுகிறார்கள்.

இதனை மாபெரும் பேரழிவு என வர்ணிக்கிறார் லெபனான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜார்ஜ். "எங்கும் பாதிக்கப்பட்டவர்களை, காயமடைந்தவர்களைக் காண முடிகிறது," என்கிறார் அவர்.

 

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு

Reuters

பிணவறை அமைக்கும் பணியில் லெபனான் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து ஈட்டுப்பட்டிருப்பதாகச் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. காணாமல் போன 100 பேரை தேடி வருவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

லெபனானில் காயமடைந்தவர்களைக் குணப்படுத்த போதுமான படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என பொதுச் சுகாதார அமைச்சர் ஹமத் ஹசன் கூறினார்.

ஏராளமான குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரம் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அச்சமாக உள்ளது என அவர் கூறினார்.

 

எதனால் அமோனியம் நைட்ரேட் வெடித்தது?

 

2013ஆம் ஆண்டு ஒரு கப்பலிலிருந்து அமோனியம் நைட்ரேட் தரையிறக்கப்பட்டதாகவும், கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த கிடங்கில் இருப்பதாகவும் கூறும் விசாரணை அதிகாரிகள், எப்படி வெடித்தது என்பதை விசாரித்து வருவதாகக் கூறுகின்றனர்.

லெபனான்

Reuters

பிபிசியிடம் பேசிய பிரிட்டனின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி பிலிப் இன்கிராம், குறிப்பிடத்தக்க சில சூழ்நிலைகளில்தான் அமோனியம் நைட்ரேட் வெடிப் பொருளாக மாறும் என தெரிவித்தார்.

எரிபொருளுக்கான எண்ணெய் ஆகியவையுடன் கலக்கும் போது இது வெடிக்கலாம் என தெரிவித்தார்.

இதற்குக் காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என லெபனான் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி கூறினார்.

 

லெபனான் நிலை

 

ஏற்கெனவே லெபனான் கொரோனாவுடன் போராடி வருகிறது. 

லெபனான் மருத்துவமனைகள் கோவிட் 19 நோயாளிகளால் நிரம்பி உள்ளன. 

இதற்கு மத்தியில் அங்குப் பொருளாதார பிரச்சனைகளும் நிலவி வருகின்றன. 

தங்களது உணவு தேவையை பெரும்பாலும் லெபனான் இறக்குமதியே செய்கிறது. அவை துறைமுக பகுதியில் உள்ள கிடங்குகளில்தான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இப்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் அவையும் அழிந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 

இந்த வெடிப்பினால் பாதிக்கப்படாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமூக ஊடகங்களின் மூலமாக உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
 

https://www.bbc.com/tamil/global-53667885

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சேதங்களைப்  பார்க்கும் போது.... 
100 பேர் உயிரிழந்தார்கள் என்று செய்திகள் வருவது நம்பும் படியாக இல்லை.
பல ஆயிரக் கணக்கில்... உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவுகள் எந்த ரூபத்தில் எப்படி வரும் என்று தெரியாது.....இந்த வருடம் அதிக அழிவுகளைக் கொண்ட வருடமாக வந்திருக்கின்றது......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ரூட் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு!

568355.jpg?189db0&189db0

 

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கும்போது,

“லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டொன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது.

இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு நேற்று(05) வரை 70 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் பலி எண்னிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து உள்ளனர்” என்று தெரிவித்தது.

1596590618595128-0-1024x1024.jpg?189db0&

இந்த நிலையில் துறைமுக கிடங்கில் அமோனியம் நைட்ரேட் வைத்திருந்தது தொடர்பாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெய்ரூட் நகர அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கட்டார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையும் லெபனான் அரசுக்கு உதவ முன்வந்துள்ளது.

https://newuthayan.com/பெய்ரூட்-வெடிவிபத்து-பல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நேற்று (04-08-2020) இரவு மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த இரசாயணக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டு வெடிப்புகள் உலகத்தையே உலுக்கி உள்ளது.  25 கிமீ  சுற்றளவு வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய  இந்த விபத்தின் சத்தம் 250 கிமீ வரை உணரக்கூடியதாய் இருந்திருக்கிறது. உள்ளத்தை நடுநடுங்க செய்யும் வெடிப்புக் காட்சிகள் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மனம் மீளவில்லை.

விபத்து ஏற்பட்ட இரசாயணக் கிடங்கில் ஏறத்தாழ 3000 டன் நிறையுள்ள அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய அம்மோனியம் நைட்ரேட் இரசாயணத்தைப் பாதுகாப்பற்ற முறையில், பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து இருந்ததுதான் விபத்திற்கான காரணம் என்கிறார்கள். இந்த மோசமான விபத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாகவும் 4 ஆயிரம் பேர்வரை காயம் அடைந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் மனதை கணக்கச்செய்கிறது.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து குணமாக வேண்டும் என்று உளமாற விழைகிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து லெபனான் விரைந்து மீண்டு வரவேண்டும்.

மேலும் தமிழகத்திலிருந்து பணிபுரிவதற்காக லெபனான் சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலை என்னவானதென்று இதுவரை தெரியவில்லை. குறிப்பாக வெடிவிபத்து நிகழ்ந்த தலைநகர் பெய்ரூட்-ல் வசித்துவந்த தமிழர்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் நேற்றிரவு முதல் பெரும் பயத்துடனும், பதற்றத்துடனும் உள்ளனர்.

எனவே தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை மூலம் லெபனானில் உள்ள இந்தியத் தூதகரத்தை உடனடியாகத் தொடர்புகொண்டு அங்குச் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும். மேலும் அவர்களது நிலை தற்போது எவ்வாறு உள்ளதென்பதனை கண்டறிந்து அது குறித்தான தகவல்களை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும்,  குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வழிவகைச் செய்துதரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/central-and-state-govt-should-take-swift-action-to-rescue-tamils-trapped-in-beirut/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் தலைநகர் பெய் ரூட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் | சீமான் கோரிக்கை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.