Jump to content

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!

1575455004-Court-2.jpg?189db0&189db0

 

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இது தொடர்பான கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை வத்திவைத்தது.

இதன்படி வழக்கு இன்று கட்டளைக்காக பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

“கடற்தொழில் பிணக்குத் தொடர்பில் தீர்த்து வைக்கும் அதிகாரம் முழுமையாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு உண்டு.

மேலும் வடமராட்சியைச் சேர்ந்த மூன்று சங்கங்கள் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபட அனுமதியை வழங்கியுள்ளன.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை மீறி தொழில் இடம்பெறுவது தொடர்பில் விசாரணைகள் சாட்சியங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் விண்ணப்பத்தை நிராகரித்தது.

 

https://newuthayan.com/கடலட்டை-பிடிக்க-தடை-கோரி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

இங்கு பிரச்சனை 
வெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு பிரச்சனை 
வெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

தகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

தமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில்  இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vanangaamudi said:

அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

இதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

நில்மினி அவர்களே,

நீங்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என யாழ் இணையம்மூலம் தெரிந்துகொண்டேன்.

 இலங்கைத்தீவில், கடலட்டை விடையத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் அரசியல்ரீதியிலான வேறுபாடான கண்ணேட்டத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்,

மனிதன் எனும் விலங்கின் பரிணாம வளர்ச்சிக்கு முதலேயே கடலட்டை உட்பட நிறைய உயிரினங்கள் பூமியில் தோன்றிவிட்டன, ஆரம்பத்தில் அவை இப்போது உள்ள வடிவத்தில் இருந்திருக்குமா என்பதற்கான கேள்விக்கு ஆராட்சியாளர்கள்தான் பதில்கூறவேண்டும்.

இந்தப்பூமிச்சூழலில் அனைத்து உயிரினமும் தொடர்ந்தும் உயிர்புடன் இருப்பதற்கான சூழலை அவைகள் அனைத்தும் இணைந்தே தகவமைத்துக்கொளளுகின்றன மனிதனைத் தவிர.

கடலட்டை கடலின் படுகைகளில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கைச் சூளலை சமமாக வைத்திருப்பதற்கான காரணிகளில் ஒன்றாகவும் இருக்கலாம். அவைகளது தொகையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தினால் கடல்வாழ் உயிரிகளது வாழ்க்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்படும் தவிர பவளப்பாறைகளது அழிவுக்கும் கடலட்டை பிடிப்பதற்காகப் பயன்படுத்தும் தற்கால முறைமைகள் காரணமாக இருக்கலாம்.

கடலட்டை பிடிப்பது யாழ் குடாநாட்டு மீனவர்களுக்கு நீண்டகாலமான வாழ்வாதாரமாக இருந்தது உண்மையே ஏன் நீங்கள் படித்த சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிக்கு அருகாமையில் உள்ள கிட்டங்கி அல்லது பறங்கித்தெரு அல்லது பிரதான வீதியின் இருமருங்கிலும் கடலட்டைகள் வெயிலில் காயவைத்ததை அவதானித்திருப்பீர்கள். கரயூர் பாசையூர் நாவாந்துறை ஆகிய பகுதிகளிலுள்ள மீனவர்காக "கடலட்டை பிடிப்போர் சங்கம்" எனும் பெயரில் ஒரு சங்கம் இருந்ததாகவும் நினைவு.

பாரம்பரிய மீன்பிடி முறைகள் வழக்கொளிந்துபோய் இப்போது இலங்கைத்தீவில் நவீனங்கள் புகுத்தப்பட்டுவிட்டன, மேற்குலக நாடுகளில் மீன்பிடி முறைகளில் நவீனம் புகுத்தப்பட்டாலும் அதற்கீடாக சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் சாமாந்தரமாகப் பயணம்செய்து அவை நடைமுறைப்படுத்தப்பட்டு மீறுவோர்மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது ஆனால் இலங்கை அப்படி இல்லையே ........

மேற்குலக நாடுகளில் சாதாரணமாகக் காணப்படும் தெருக்களைப்போல் புதிதாக காப்பற் வீதிகளை அமைத்துவிட்டு இருமருங்கிலும் குண்டும் குழியுமாகக் மதகுகளையும் தெரு ஓரங்களையும் பராமரிக்காது  அந்தத் தெருக்களில் மக்கள் நடமாட்டத்துக்குள் இயல்பான வாகனங்களை மட்டும் அனுமதிக்காது வலு கூடிய வாகனங்களை குறுப்பாக மேட்டார் சைக்கிள்களை ஓடவிடும் இப்போதைய சூழலைப்பொன்றதே நாம் எமது கடலையும் அதன் சூழலையும் கையாளும் நிலை. ஆகவே கடலட்டைப் பிடிப்பதை தடை செய்யாது விடினும் கடல்தொழிலில் புதிய ஒழுங்குமுறை இலங்கைத்தீவில் கொண்டுவருதவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.

பங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.

Link to comment
Share on other sites

12 hours ago, nilmini said:

தகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும். 

சிங்கப்பூரில் இலங்கை நண்டின் விலை அண்ணளவாக 100கிராம் 45S$

Link to comment
Share on other sites

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

தோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில்  கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

தோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில்  கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......!   👍

உந்தக்  கறுமத்தை... சட்டியில் போட்டு, சமைத்து  சாப்பிடுவதை விட....
பட்டினியால்... கிடந்து, சாகலாம்.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

சிறித்தம்பி! உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு :grin:

polnische-weisse3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு :grin:

polnische-weisse3.jpg

குமாரசாமி அண்ணை... இதை, ஜேர்மன்  "பிறாட் வூஸ்ற்" உடன் ஒப்பிடாதேயுங்கோ. 😎
எங்கடை... வூஸ்ற், வேறை லெவல், ரேஸ்ற். ❤️

இந்தக் கடல் அட்டையை  பார்த்தாலே.. குமட்டிக் கொண்டு, வருகுது. 🤢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

பங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.

சிங்கள (மத்திய) அரசின் முகவர்கள்தான் எங்கடை அரசியல்வாதிகள் என்பதை நம்புவதற்கு உங்களுக்கு கொஞ்சம் கஷ்ரமாகத்தானிருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இவர்களுக்கு எதிராக ஒரு இறகும் பிடுங்க முடியாது யாராலும்.

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

இதை நீங்கள் உயிருடன் பார்க்கும்போது பெரிதாக இருக்கும். அதை சுத்தப்படுத்தி , பதப்படுத்திய பின்னர் பார்த்தால் மிகவும் சிறிதாகிவிடும். இலங்கையில் உணமைவாக பாவிக்கவிடடாலும் வெளி நாடுகளில் மிகவும் பிரபலமானது. பொதுவாக சூப் வைத்து குடிப்பார்கள். அப்படி சூப் வைக்கும்போது அதனை துண்டு துண்டாக வெட்டிபோடும்போது பெரிதாகிவிடும். பொதுவாக இது ஆண்களின் பாலியல் தொழிட்பாடடை தூண்டிவிடும் என்று சொல்லுகிறார்கள் . எனவே இதன் விலையும் மிக அதிகம்.

மேலும் சிங்களவர்கள் வந்து இதைப்பிடிப்பதாக எழுதி இருக்கிறார்கள். உண்மையில் இங்கு வந்து கடல் தொழில் செய்வதட்கு உடப்பு தமிழ் மீனவர்களுக்கு உரிமை இருப்பதாகவும், ஆனால் அவர்கள் இதனை சிங்களவர்களுக்கு கொடுத்து விட்ட்தாகவும் அறிய முடிகின்றது. எனவே இது தமிழர்களால் செய்யப்படட தவறு என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் ஒருடடவை பார்த்துவிடுங்கள்

 

https://www.businessinsider.com/why-sea-cucumbers-so-expensive-seafood-2019-1?r=US&IR=T

Link to comment
Share on other sites

16 hours ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

நிழலி,

புரதம் அபரீதமாகவுள்ள கடலட்டை, காட்டுப்பன்றியின் தோல், மற்றும் ஆமையின் மேல் தோல் போன்ற வார் என அழைக்கப்படும் புரத உணவு போல சுவையானது. அமெரிக்காவில் விலை கூடிய உணவு வகைகளில் ஒன்று. கொரிய, ஜப்பானிய அல்லது சீன வணிகநிறுவனங்களிலே தான் கிடைக்கிறது. எலும்புகளோ, கழிவுகளோ அதிகம் இல்லாத, இலகுவாக வெட்டி வதக்கி சாப்பிடக்கூடிய உணவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2020 at 07:51, vanangaamudi said:

கடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

தமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில்  இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

சகல மட்டங்களிலும் நடக்கிறது  இதுதான் உன்மையும் இங்குள்ளவர்கள் கனபேர் விரைவா பணக்காரனாக நினைக்கிறார்கள் 

அண்மையில் ஆலயடிவேம்பு டி. எஸ் ம் அங்கு பணி புரியும் ஒருவரும் லஞ்சம் வாங்கும் போது கைதானார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.