Jump to content

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.


Recommended Posts

அரசியலில் பெண்கள் 

ஒரு தோழியின் எண்ணங்களில்...

பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும்  அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது.  இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட அரசியலில் ஆர்வம் காட்டத் தயங்குகிறார்கள்.  இலங்கையின் வரலாற்றில் பல திறமையும் ஆளுமையும் உள்ள பெண்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள்.

இதில் பலராலும் அனுபவம் சார்ந்து எடுத்துரைக்கப்பட்ட சில விடயங்கள் நிச்சயமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பொது வெளிக்கு, அதுவும் குறிப்பாக அரசியலுக்கு வரும் பெண்களை இழிவு படுத்துபவையாக வும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஆண்கள் அரசியலில் எதிர்நோக்குகின்ற சவால்களை விட அதிகமான சிக்கல்களைக் கொண்டதாகவும்  அமைந்துள்ளது.  இந்தப் பதிவில் நான்  எழுதுகின்றவை இக்கலந்துரையாடல் மூலம் கிடைத்த தகவல்களோடு எனது தனிப்பட்ட கருத்துக்களையும்  அடக்குகின்றன.  இவ்வுரையாடலில் கலந்து கொண்டவர்களின்  பெயர்கள்  தவிர்க்கப்பட்டாலும்,   இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை  மேற்கொண்டவர்களின் பெயர்கள் இதன் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

சிக்கல் 1

ஆண்கள் போலல்லாது ஒரு பெண்ணானவள் பொது வெளிக்கு சேவை செய்ய வருவதற்கு முன்னரும் சரி அல்லது சேவை செய்யும் போதும் சரி, சமையல், குழந்தைகள் பராமரிப்பு, பொருளாதாரத் தேவைகள்  எனப் பலவகையான  குடும்பச் சுமைகளை சுமந்தவாறே தான் வர வேண்டியுள்ளது. அதிகமான பெண்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாகவேஅமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிக்கல் 2

அநேகமான கட்சிகளில் ஒரு பெண் வேட்பாளர் தனக்காக சேர்க்கும் வாக்குகளை  தனது கட்சிக்கு வளங்குவதற்காகவே  பயன்படுத்தப்படுகிறார், அது மட்டுமல்ல ஒருவாறு அவர் அந்த கட்சியில் சேர்ந்து இயங்குகின்ற சந்தர்ப்பம் கிடைத்தாலும்  அவர் தான் மக்களுக்கு செய்ய வேண்டும் என முயற்சிக்கின்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இழந்து விடுகிறார். அனேகமான திட்டங்கள் ஆண் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.  தமது குடும்ப அமைப்பிலிருந்து பல சவால்களை முறியடித்து, பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து பொது வெளிக்கு வந்து, அதன் பின்னர் அரசியலில் காலூன்றும் போது,  பெண்கள் தமது குரலை இங்கு இழந்து விடுகிறார்கள். பெண்கள் வெறும்  பொம்மைகளாகவே இருக்க வேண்டிய நிர்பந்தம் பல கட்சிகளிலும் ஏற்படுத்தப்படுகின்றது.

 சிக்கல் 3

அரசியலுக்கு வரும் பெண்களைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்புவதும், அதன் மூலம் அவர்களை அரசியலுக்கு வராமல் தடுப்பதும் தான் எமது சமூகத்தில்  பெரும்பான்மையான அரசியல் சார்ந்து நிற்கும் ஆண்களின்  தந்திரங்களில் பிரதானமானதாக இருக்கிறது.   எமது சமூகம் என்று சொல்கின்ற போது முக்கியமாக ஆண் ஆதிக்கங்களும் ஊடகங்கங்களும் சேர்ந்தே இப்படியான இழி செயலைச் செய்வது என்பது கவலைக்குரியது. இலண்டனிலுள்ள பி சி ஒளி / ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தின் 'டீக்கடை' நிகழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வெறுமே அரசியல் நையாண்டிகள் போல அல்லாது ஊடக தர்மம் மீறி இப்படியான ஒரு ஒளிபரப்பு செய்தவர்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள்  தாம் நையாண்டி செய்த  இக்குறிப்பிட்ட பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது அவசியம்.  அரசியலுக்கு வரும் பெண்களின் குரல் வளையை நசுக்கப் பார்ப்பது அநாகரீகமானது மட்டுமல்ல பெண்களுக்கான அரசியல் உரிமைகளை மழுங்கடிக்கப் பார்க்கும் சட்ட விரோத செயலுமாகும். 

அரசியல் ரீதியான கருத்துக்களை அல்லது அவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனங்களை கிண்டல் பண்ணுவது வேறு அப்பெண்களை தனிப்பட்ட ரீதியில், பாலியல் ரீதியான அவதூறுகளைப்  பரப்பி அதன் மூலம் அவர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, தனி நபர்

தாக்குதல் நடத்துவது வேறு என்பது புரியாத ஒரு ஊடகம் கூட இருக்கிறது அதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது ஒரு சமூகத்தை, அதன் விழுமியங்களை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக மாற்றி முன்னெடுத்துச் செல்லும்?

சிக்கல் 4

தனது கட்சியின் கொள்கைகளுக்கெதிரான ஒரு சிந்தனை எழும் போது  அதைத் தைரியமாக எதிர் கொள்ளும் பெண்கள் இல்லாமல் இருப்பது மாத்திரமல்ல, அப்படியான கேள்விகள் எழுப்பும்  பட்சத்தில் அப்பெண்களும் தமது கட்சிலிருந்து விலக வேண்டுமென திரை மறைவிலிருந்து உள்கட்சியின் பயமுறுத்தல் அப்பெண்ணின் மீது விழுகிறது.  

அனேகமாகப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எந்தக் கட்சியிலும் தொடர்ச்சியான முற்போக்கான சிந்தனைகள் திட்டமிடப்படுவதில்லை. இப்படியான கட்சிகளில் இணைந்து கொள்ளும் பெண்களுக்கு கட்சிகளுக்குளேயே அவர்களுக்கான  சம உரிமைகளோ ஜனநாயகமோ பேணப்படுவதில்லை. இவர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகள் வரும் போது கூட, அப்படி அவதூறு செய்தவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் யாருமில்லாமல் போவதும் ஒரு பெரிய சவாலே.

சிக்கல்: 5

சில பெண்களே பெண்களுக்கு எதிராக ஆண்களின் திறமைகளையும் அரசியல் அனுபவங்களையும்  மட்டுமே வெளிக்கொணர வேண்டும் என்ற சிந்தனையுள்ளவர்களாக இருப்பதும் வருந்தத் தக்கது.

இது அரசியலில் அல்லது  மக்கள் உரிமை சார்ந்த சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்த சில பெண்களின் கசப்பான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கல்: 6

அறிவும்,ஆளுமையும், திறமையும் கொண்ட பல பெண்கள் எமது சமூகத்தில் இருந்தாலும் கூட அவர்கள் தாமாகவே அரசியலுக்கு வரத்  தயங்குகிறார்கள் அல்லது அரசியல் பற்றிய சிந்தனை இல்லாது இருக்கிறார்கள். இப்படியானவர்களில் சிலர்  தமது கணவர், தந்தை அல்லது சகோதரர்கள் அரசியலில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களைத் தொடர்ந்து அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்கள். இது தாம் சுயமாகச் சிந்திக்காது வெறும் அனுதாபத்தை மூலதனமாக்கியே அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பெயரையே இவர்களுக்கு கொடுக்கிறது.   பெண்களை உற்சாகமூட்டி அவர்களுக்குத் தேவையான அரசியல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்காமல் அவர்களுக்கு அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஆளுமை போதவில்லை எனக்குற்றம் சாட்டி அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் தமக்கு தேவை என வரும் போது, தமது கட்சிலிருந்து யாராவது ஒருவரின் உறவையோ நட்பையோ வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுப்பதும் நடக்கிறது. 

இத்தனை சவால்களையும் தாண்டி ஒரு பெண் அரசியலுக்கு வந்து அல்லது வரும் போது, அவளால் என்ன சாதிக்கப்பட்டாலும் அது பெண்களுக்கான ஒரு வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.  புலம் பெயர் தேசங்களில் இருக்கும் பெண்கள் தமது அரசியல் அனுபவங்களையும் திறமைகளையும் தாயகத்திலுள்ள பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். 

கட்சிகளுக்குள் ஆண் ஆதிக்கம், சம உரிமைகளும் , ஜனநாயகமும்   பேணப்படுவதில்லை போன்ற உள்கட்சி சிக்கல்களால் அதிகமான அரசியல் கட்சிகள் தமக்குள்ளேயே பிளவுபட்டிருப்பதால்,பல சுமைகளைத் தாண்டி வரும் பெண் வேட்பாளர்களுக்கு   இது எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறியே.  பெண்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முடியாமல் இருப்பதுடன் தான்  சேர்ந்த கட்சிகளில் உள்ள ஆண்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை, தமது விருப்பு இல்லா விட்டாலும் கூட அமைதியாகவே ஆதரிக்கவும்   வேண்டிவருகிறது.

தேர்தல் காலத்துக்கு மாத்திரமல்லாமல் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான பயிற்சிகளும் அது குறித்த சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும். சில ஊடகங்களில்ப்  பெண்களை பாலியல் போகப் பொருளாகச் சித்தரிக்கும் வேளைகளில் உடனடி எதிர்ப்பை தெரிவிப்பது போன்ற விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பெண்களுக்கான ஒரு தனியான கட்சி ஒன்றே இப்படியான ஆண் ஆதிக்கம் நிறைந்த ஏனைய கட்சிகளிலிருந்து விடுபட்டு பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க உதவும் என்ற கருத்தையும் நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : உமா ஷானிக்கா, விஜியுடன் ஆனந்தி பாலசூரியன் ) 

 

- அன்புடன் தோழி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

116869924_3317599765132661_4262968825577

நானும் அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டேன்.     

இதுதானா அது தோழி

Link to comment
Share on other sites

28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

116869924_3317599765132661_4262968825577

நானும் அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டேன்.     

இதுதானா அது தோழி

நன்றி தோழி! நீங்களும் கலந்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி! 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் எம் சமூகத்தில் பெண்கள் பற்றிய மதிப்பீடு மிகவும் மட்டமாகவே இருக்கின்றது. பெண்களுக்குச் சாதகமான  சட்டவரைபுகள் உள்ள மேற்கத்தைய நாடுகளில் கூட முற்று முழுதான சுதந்திரம் இல்லாதிருக்கும்போது இலங்கையில் அத்தனை அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் அச்சரியம் அல்ல. ஆனாலும் அத்தனையிலும் துணிவுடன் நின்று தம்மை அரசியலிலும் பொது வேலைகளிலும் ஈடுபடும் பெண்கள் பாராட்டிடப்படவேண்டியவர்கள். அன்று சிலர் கூறியதுபோல பெண்களுக்கான ஒரு கடைசியை ஸ்தாபித்து பெண்கள் மட்டுமாக அடுத்த தேர்தலுக்கு அதில் போட்டியிடுவதுபோன்று ஒரு நிலையை அங்கு உருவாக்கவேண்டும். அப்போதுதான் பெண்கள் தமக்கு வேண்டியதை கூறவும் பெற்றுக்கொள்ளவும் ஓரளவு முடியும்.

தோழி நீங்கள் ஒரு பத்திவைப் போடும்போது இடைவெளிகள் இல்லாதவாறு போடுங்கள். அப்பதான் வாசிக்க ஆர்வம் வரும். 

Link to comment
Share on other sites

30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆணாதிக்கத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் எம் சமூகத்தில் பெண்கள் பற்றிய மதிப்பீடு மிகவும் மட்டமாகவே இருக்கின்றது. பெண்களுக்குச் சாதகமான  சட்டவரைபுகள் உள்ள மேற்கத்தைய நாடுகளில் கூட முற்று முழுதான சுதந்திரம் இல்லாதிருக்கும்போது இலங்கையில் அத்தனை அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் அச்சரியம் அல்ல. ஆனாலும் அத்தனையிலும் துணிவுடன் நின்று தம்மை அரசியலிலும் பொது வேலைகளிலும் ஈடுபடும் பெண்கள் பாராட்டிடப்படவேண்டியவர்கள். அன்று சிலர் கூறியதுபோல பெண்களுக்கான ஒரு கடைசியை ஸ்தாபித்து பெண்கள் மட்டுமாக அடுத்த தேர்தலுக்கு அதில் போட்டியிடுவதுபோன்று ஒரு நிலையை அங்கு உருவாக்கவேண்டும். அப்போதுதான் பெண்கள் தமக்கு வேண்டியதை கூறவும் பெற்றுக்கொள்ளவும் ஓரளவு முடியும்.

தோழி நீங்கள் ஒரு பத்திவைப் போடும்போது இடைவெளிகள் இல்லாதவாறு போடுங்கள். அப்பதான் வாசிக்க ஆர்வம் வரும். 

சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி! நீங்கள் கூறியது போல் பெண்களுக்கான, உட்பூசல்களற்ற  ஒரு கட்சி இருந்தால் மேற்சொன்ன சிக்கல்கள் கணிசமான அளவு குறையும் அல்லது இல்லாமல்ப் போகும் என எதிர்பார்க்கலாம். 

நிற்க, பத்தியில் ஏன் இடைவெளி காட்டுகிறது எனத்தெரியவில்லை. நான் Google input இல் தமிழில் தட்டச்சு செய்து, அதை ஒரு word document இல் சேமித்து (save) பின் அதை யாழ் இணையத்தில் copy & paste செய்கிறேன். எனக்கு யாழில் வாசிக்கும் போது, எனது கண்ணியில் எந்த இடைவெளியும் தெரியவில்லை. என்ன செய்யலாம்?? 🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது என்பதை நன்றாக சொல்லிவிட்டு சென்றுள்ளது.. ஆக மொத்தம் 8 பெண் வேட்பாளர்களே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தென்னிலங்கையை சேர்ந்த பெண்மணிகள் என்பதும் ஒரு தழிழ் பெண் வேட்பாளர்கூட தெரிவு செய்யப்படவில்லை என்பதும் கசப்பான உண்மை.

எங்களது சமூகத்தில் பெண் என்பவள் மட்டுமே குடும்பம், பிள்ளைகள் என்பதை கவனிக்கவேண்டும் என்பது எழுதாத சட்டமாக இருந்து வருகிறது.. ஆனால் இன்றைய நிலையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகும் நிலை என்பதால் குடும்பம், பிள்ளைவளர்ப்பு என்பது இருவரது(கணவன்/மனைவி) சேர்ந்தே செய்யவேண்டிய ஒன்று எனபதை மறந்துவிடுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளின் போது ஒருவர், பெரும்பாலும் பெண்/மனைவியே விட்டுக்கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பு மேலோங்கிநிற்பதால் பிரச்சனைகள் முற்றி விவாகரத்தில் முடிந்துவிடுகிறது.. அப்பொழுதும் விவாகரத்தான பெண்ணின் மீதுதான் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இவற்றிற்கு முகம்கொடுக்க விரும்பாத, பெண்கள் சமூகத்திற்காக, குடும்பத்திற்காக விட்டுகொடுத்து மனம் ஒன்றாத வாழ்க்கையை வாழ தலைப்படும் பொழுது தேவையற்ற பிரச்சனைகளையும் எதிர்நோக்கவேண்டி உள்ளது. 

மேலும், அரசியல் என்று வரும் பொழுது இலங்கையை பொறுத்தவரை அதிலும் தமிழ் பெண்அரசியல்வாதிகளை அனுதாபவாக்கிற்காக மட்டுமே கொண்டுவரப்படுகிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த தேர்தல் சொல்லியுள்ளது.. தமிழ பெண் வாக்காளர்கள் தங்களுக்கும் பெண் வேட்பாளர்களுக்கும் எந்தவித சம்பந்தமில்லாதது போலவும், ஏதோ வாக்கு போட்டுவிட்டு வந்தால் போதும் என்ற நிலையிலும் இருந்துள்ளார்கள். 
இனி இன்றைய தேர்தலில் தோற்ற பெண் வேட்பாளர்கள் அடுத்தமுறை காணாமல் போகாமல் இருப்பதற்கான வழிகளை ஆராயவேண்டும்..

புலம்பெயர் தேசத்து தமிழ் பெண் அரசியல்வாதிகள், இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரியவில்லை.. ஏனெனில் எங்களில் அனோகமானோர் பிள்ளைகள் வைத்தியர், பொறியிலாளர், கணக்காளர் என்ற வட்டத்தைவிட்டு வெளியேறி ஒரு அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், சமூக அலுவலர், சுயதொழில் முயற்சி என்ற பரந்தளவில் யோசித்து பிள்ளைகளை வளர்ப்பதும் இல்லை. சமூகத்திலுள்ள மற்றைய தேவைகளையோ, வளங்களையோ, சொல்லிக்கொடுப்பதும் குறைவு. இனிவரும் மூன்றாவது தலைமுறையில் அரசியலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நினைக்கிறேன். 

அதே போல மாற்றங்கள் நிகழவேண்டுமாயின், பெண்கள்(புலம்பெயர்ந்த, தாயக) தங்களுக்கிடையிலான உறவை பலப்படுத்தவேண்டும். காலத்திற்கேற்ற சிந்தனைகளுடன் முயற்சிகளை  முன்னெடுக்கவேண்டும். 

அத்துடன், அரசியலில், பொது வாழ்க்கையில. ஈடுபட விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமாயின், முதலில் அவர்களை சுற்றியுள்ள ஆண்கள்/பெண்கள் மதிப்பு கொடுக்கவேண்டும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் தைரியமாக இவற்றில் ஈடுபடமுடியம். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.