Jump to content

90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி !

தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக  வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது.

1.jpg

தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது.

தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று  சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

2.jpg

இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி இன்று 91 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.

இலங்கையின் ஊடக வரலாற்றில் ஆலவிருட்சம் போல் இருக்கும் வீரகேசரி தமிழ்ப்­பேசும் மக்­களின் இத­யங்­களில் தனக்­கென தனி­யி­டத்­தைப்­பி­டித்துள்ளது.

3.jpg

வீர­கே­சரி பல சவால்கள் மிக்க  ஊட­கப்­ப­ய­ணத்தில் 90 ஆண்­டு­களை பூர்த்­தி­செய்து 91 ஆவது அக­வையில் மிடுக்குடன் காலடி எடுத்து வைக்­கின்­றது.

4.jpg

v1.jpg

ஊடகத்துறையில் வீரகேசரி உள்ளூரில் மாத்திரமல்லாமால் உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் அதன் நாமத்தை உச்சரிக்கும் அளவுக்கும் ஆலவிருட்சம் போல்வளர்ந்துள்ளது. 

அந்தவகையில், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே  ஸ்தாபிக்கப்பட்டவீரகேசரி நாளிதழ் பலதரப்பட்ட அரசியல் பொருளாதாரம் உட்பட பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது, தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தன்னை பலமாக வைத்துதொடர்ந்து அவர்களுக்கு பக்கபலமாகவே இருந்து வந்துள்ளதுடன் தற்போதும் இருந்து வருகின்றது.

5.jpg

இலங்கையில் முதன்மையான ஊடகங்கள் பல உருவாகிய காலத்தில் ஆணித்தரமாக தனது 91 ஆவது வயதில் கால்த்தடம் பதிக்கும் போது இன்னும் அதன் வளர்ச்சி திடகாத்திரமாக இருக்கின்ற அதேவேளை, டிஜிட்டலிலும் தனியிடத்தைப் பிடித்துள்ளமையை இங்கு மறந்துவிட முடியாது.

தற்போதைய டிஜிட்டல் உலகிலும் வீரகேசரி தனக்கென தனியிடத்தைப் பிடித்து வைத்துள்ளதென்று சொன்னால் அதுவும் மிகையாகது.

6.jpg

நவீன உலகில் ஊடகத்துறையில் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் வளர்ச்சிகளுக்கு மத்தியில் வீரகேசரியின் கம்பீரமான பயணம் என்பது அபரிமிதமாகவேயுள்ளது.

7.jpg

குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்து வழங்கி வரும் செய்திச் சேவை, இன்று பலராலும் பாராட்டப்பட்டதாகும். இதன் மூலம் சிறந்த இணையதளம் என்ற விருதையும்  பல தடவைகள் வீரகேசரி தட்டிக் கொண்டது .

 இவை அனைத்திற்கும் மேலாக புதிதாக அறிமுகம் செய்துள்ள செய்தி ஒலி ஒளிபரப்பு சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் , நம்பகரமான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதிலும் virakesari.lk இணையத்தளம் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

8.jpg

அச்சு ஊட­கங்­க­ளுக்கு இணையாக இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் செல்­வாக்கு செலுத்­தி­வரும் இந்நேரத்திலும் அவற்­றுக்கு எதிராக முகம்கொடுத்து  தனது அபிமான வாச­கர்­களின்  இதயம் கவர்ந்த வீரகேசரி தேசிய தமிழ் நாளி­த­ழா­கவும் வாராந்த வெளியீடாகவும்  வெளிவந்து வந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. 

9.jpg

தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­க­ளிலும், சமூக, கலை கலாசாரத்திலும் மக்களிக் நலனிலும் நாட்டு நலனிலும் கடந்த 90 வருடங்களாக தனது பங்­க­ளிப்­பினையும் செல்வாக்கையும் வீரகேசரி செலுத்தி வருகின்றது.

10.jpg

இலங்கையின் ஊட­கத்­து­றையில் வியக்­கத்­தக்க சாத­னைகளைப் புரிந்­து வரும் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ்  ஸ்தாபனம், தனது வெற்­றி­க­ர­மான பய­ணத்தில் வீர­கே­சரி நாளிதழ், வீர­கே­சரி வார­வெ­ளி­யீடு, மித்­திரன் செய்தித்தாள்களை வெளி­யிட்டு வருகின்றது. 

11.jpg

எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ இயக்­குநர் குமார் நடே­ச­னி­னதும் பணிப்­பாளர் சபை­யி­னதும் வழி­காட்­டல்­க­ளி­னாலும் புதிய முயற்­சி­க­ளி­னாலும் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களைக் கண்டு ஆல­வி­ருட்­சம்போல் இலங்கையின் தலை­ந­கரில் தலைநிமிரந்து நிற்கும் வீரகேசரி, டிஜிட்டல் உலகிலும் தனக்கு நிகர் தானே  என்ற வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

12.jpg

இதுவும் தமிழ்ப்­பேசும் மக்­க­ளுக்கும் இளந்த தலைமுறையினருக்கும் பெருமை சேர்க்கும் விட­ய­மாகும். 

v2.jpg

ஊட­கத்­து­றையில் மாத்­தி­ர­மன்றி, அச்­ச­கத்­து­றை­யிலும் இன்று வீர­கே­சரி தன்­னி­க­ரற்ற நிறு­வ­ன­மாக விளங்­கி­வ­ரு­கின்­ற நிலையில், கொழும்பு - ஏக்­கலை பிர­தே­சத்தில் தனது நவீன ஊடக (Digital Media ) காரி­யா­ல­யத்­தையும் அச்சு இயந்­திரத் தொகு­தி­யையும் நிறுவி அதன்­மூலம் டிஜிட்டல் ஊடகத்துறையிலும் அச்­ச­கத்­து­றை­யிலும் நவீன மாற்­றங்­களை உள்­வாங்கி நாட்டின் "ஊடக நிறு­வன அபி­வி­ருத்தி"யிலும் முன்­னணி நிறு­வ­ன­மாக விளங்­கு­கி­றது.

வீரகேசரி அச்சு ஊடகத்துறையில் பல பத்திரிகைகளை பிரசுரித்து வருகின்ற போதிலும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் பேசும் மக்களுக்கு தனது இணையத்தளத்தையும் ஆரம்பித்து தற்போதும் அதனை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. 

இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் செய்தி இணையத்தளம் என்ற பெருமையும் இலங்கையில் முதல் முதலாக செயற்படுத்தப்பட்ட மின்னிதழ் (e-paper) என்ற பெருமையும் வீரகேசரியையே சாரும்.

அந்தவகையில் தற்போது வீரகேசரி டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தன்னை பக்குவப்படுத்திக்கொண்டுள்ளதோடு இணையத்தள செய்தி சேவைகளையும் தனது வாசகர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதேவேளை, நவீன இலத்திரனியல் ஊடகங்களும் தொழில்நுட்பங்களும் உலகில் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் வேளையில், தனது அபிமான வாசகர்களின் தேவைகளை அறிந்து வீரகேசரி எதிர்காலத்தில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளது. 

இலங்கை வர­லாற்றில் தமிழ்ப் பத்­தி­ரி­கைத்­து­றையின் வளர்ச்­சிக்கு வீரகேசரி ஓர் பல்கலைக்கழகமாக விளங்­குகின்றதென்றால் அது மிகையாகது. 

கடந்த 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீர­கே­சரி நிறு­வனம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.  

அந்­த­வ­கையில்,  ஈழத்துப் பத்­தி­ரிகை வளர்ச்­சியில் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் ஆற்­றிய மகத்­தான பணிகள்  வர­லாற்றில் பொன் எழுத்­துக்­களால் பொறிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­ன­வாகும். 

இலங்கைப் பத்­தி­ரிகை நிறு­வ­ன­மொன்று தொடர்ச்­சி­யாக நீண்­ட­காலம் செயற்­பட்டு தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு ஆற்­றிய மகத்­தான பணிகள் காலத்தால் அழி­யா­தவை. 

91 ஆவது ஆண்டில் தனது காலடியை எடுத்து வைக்கும் வீரகேசரி, ­நி­று­வ­னத்தை  ஆரம்­பித்த சுப்­பி­ர­ம­ணியம் செட்­டியார் மற்றும் அவ­ரோடு தோளோடு தோள் நின்று பணி­யாற்­றிய சகல அறி­ஞர்­க­ளையும் கல்­வி­மான்­க­ளையும் இப்­பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­யர்­க­ளையும் இந்­நி­று­வ­னத்தின் தலை­வர்­க­ளாக விளங்­கிய பெரு­மக்­க­ளையும் மற்றும் வீர­கே­ச­ரியின் வளர்ச்­சிக்கு ஆக்­கமும் ஊக்­கமும் அய­ராது நல்­கிய எழுத்­தா­ளர்­க­ளையும் வாச­கர்­க­ளையும்  வாடிக்­கை­யா­ளர்­க­ளையும்  நாம் நினைவுகூர வேண்­டி­யது இந்நாளில் அவ­சி­ய­மாகும். 

ஒரு பத்­தி­ரி­கையின் வளர்ச்­சிக்கு முக்­கிய பங்­காற்­றி­ய­வர்கள் வாச­கர்­க­ளே­யாவர். இவர்­களின் ஊக்­கமும் ஒத்­து­ழைப்பும் இருந்­தால்தான் ஒரு பத்­தி­ரிகை 'ஆல்போல் தழைத்து அறு­கு போல் வேரூன்றி' வளர்ச்­சி­ய­டைய முடியும். 

வீரகேசரி தலை­நி­மிர்ந்து நின்று முக்­கி­ய­மாக தமிழ்ப்­பேசும் மக்­க­ளுக்கு ஆற்­றி­வரும் மகத்­தான பணி­க­ளுக்குக்  காரணம்  இப்­பத்­தி­ரிகை கொண்­டுள்ள பக்கச்சார்பற்ற கொள்கையும் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதரவுமாகும்.

தமிழ்ப்பேசும் மக்கள் பலரும் கடல்கடந்து வாழ்ந்தும் வீரகேசரிக்கு நல்கிவரும் ஆதரவு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் பேருதவியாக அமைந்துள்ளது என்பதே யதார்த்தம். 

வீரகேசரி பிரசுரங்களை வெளியிட்டு வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  நிறுவனம் தங்கள் வாசகர்கள், விளம்பரதாரர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இன்றைய பொன்னான தருணத்தில் மீண்டும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றது.
 

https://www.virakesari.lk/article/87425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200806-125242.jpg முதல் பதிப்பு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.