Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:

சுமந்திரன் தான் இரண்டாவது  இடத்தை பிடித்து வென்றுவிட்டதாக  10 நிமிடத்துக்கு முதல் கூறினார் 

அவர் புத்திஜீவி என்று அவர் மீது கொஞ்ச நம்பிக்கை இருந்தது ...எப்ப ஒரு அபலை பெண்ணை ஏமாத்தி பதவி தக்க வைத்துக் கொண்டாரோ அப்பவே சொறி நாயிலும் கேவலமாய் போயிட்டார் 
 

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இப்படி சொல்லும் நீங்கள் தான் அம்பாறையில் கூட்டமைப்பின் தோல்விக்கு கருணாவை சாடுகிறீர்கள்....சீப்பான அரசியல் இது ...கூட்டமைப்பு எங்கே பிழை விட்டது தேடாமல் ,மக்கள் ஏன் கருணாவுக்கும் ,சிங்களவனுக்கும் வோட் போட்டார்கள் என்று ஆராயாமல் கருணாவை குறை சொல்றது ....கருணா அங்கு கேட்டு இருக்காட்டிலும் அங்கு கூட்டமைப்பு வந்திருக்காது ...இன்னுமொரு சிங்கள அல்லது முஸ்லீம் எம்பி வந்திருப்பார்.
அடுத்தவருக்கு அட்வைஸ் சொல்லும் முன் உங்களைத் திருத்துங்கள் 

அது ரதி👍

Mudhalvan tamil Movie - Overview

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

கஜேந்திரகுமாருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தையிட்டு சந்தோசம்.

 

25 minutes ago, உடையார் said:

எனக்கும் தான் பார்ப்போம் என்ன செய்கின்றார் என்று

இந்தத் தேர்தலில்

ரணிலின் தோல்வியும்

கஜேந்திரகுமாரின் வெற்றியும்

கொஞ்சம் ஆறுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய சொந்த வோட்டை கூட போட முடியாமல் ஜெயிலில் இருந்து கொண்டு வென்ற பிள்ளையானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அங்கயன் ,ஜனா,டக்ளசுக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியினருக்கு தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. சைக்கிள் இரட்டைச் சில்லுடன் பாராளுமன்றத்திற்கு செல்கிறது......

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல்  எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல்  எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.

நல்லா பிளன் பண்ணி செய்திருக்கின்றார்கள் மகி & கோ

இதை ஐனநாயக தேர்தல் என்று சொல்ல தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Dash said:

என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல்  எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.

ரணிலுக்கோ ,சஜித்திற்கோ வராத சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வருது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

ரணிலுக்கோ ,சஜித்திற்கோ வராத சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வருது 

இரண்டு பேரிண்டை குடும்பியும்  IMG-0751.jpg இவற்ர கையில...

Link to comment
Share on other sites

12 minutes ago, MEERA said:

இரண்டு பேரிண்டை குடும்பியும்  IMG-0751.jpg இவற்ர கையில...

ரணிலின் குடுமி அவரின் கையில் இருக்கலாம் ஆனால் சஜித்தின் குடுமி அவரின் கையில் இருக்க வேண்டிய அவசியன் இல்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

இப்படி சொல்லும் நீங்கள் தான் அம்பாறையில் கூட்டமைப்பின் தோல்விக்கு கருணாவை சாடுகிறீர்கள்....சீப்பான அரசியல் இது ...கூட்டமைப்பு எங்கே பிழை விட்டது தேடாமல் ,மக்கள் ஏன் கருணாவுக்கும் ,சிங்களவனுக்கும் வோட் போட்டார்கள் என்று ஆராயாமல் கருணாவை குறை சொல்றது ....கருணா அங்கு கேட்டு இருக்காட்டிலும் அங்கு கூட்டமைப்பு வந்திருக்காது ...இன்னுமொரு சிங்கள அல்லது முஸ்லீம் எம்பி வந்திருப்பார்.
அடுத்தவருக்கு அட்வைஸ் சொல்லும் முன் உங்களைத் திருத்துங்கள் 

கடந்த முறை கூட்டமைப்புக்கு கிடைத்த வோட்டுக்களையும் , இந்த தடவை கிடைத்த வோட்டுக்களையும் ஒப்பிட்டு பாருங்கள் 
 

நான் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். நான் எங்கு கருணாவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று எழுதியிருக்கின்றேன்? நான் எழுதியது கருணாவால் தமிழர் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று தான் எழுதியிருக்கின்றேன். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு இருப்பது புரியவில்லையா?
மகிந்த அணி கருணாவை அம்பாறையில் களமிறக்கியதே தமிழர் வாக்குகளை பிரித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதற்காக (என அன்றும் எழுதியிருந்தேன்). அது தான் இன்று நிறைவேறி இருக்கின்றது.

முஸ்லிம்களிடம் இருந்து கருணா காப்பாற்றி அருள் புரிவார் என்று நம்பி ஈற்றில் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவரை வெல்ல வைத்தது தான் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும் கிடைத்த பயன்.

இனியும் இதற்கு பின்னரும் கூட கருணாவால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புவது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக நான் எழுதாத ஒன்றை எழுதியதாக நினைப்பது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

முஸ்லிம்களிடம் இருந்து கருணா காப்பாற்றி அருள் புரிவார் என்று நம்பி ஈற்றில் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவரை வெல்ல வைத்தது தான் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும் கிடைத்த பயன்.


அதை அப்படியே மாற்றி போட்டு பாருங்கள் நிழலி 
கோடீஸ்வரன் பாப்பா திறந்துவிட்ட சப்பட்டையும் உருண்டையும் தான் அடுத்த ஐந்து வருடத்திற்கு அம்பாறை மாவட்ட தமிழர்களின் உரிமையை பெற்றுத்தரும் என்று நம்பி வீட்டிற்கு வாக்கு போட்டவர்களுக்கு கிடைத்திருக்கும் பயன் தான் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவர்,
கடந்த  ஐந்து வருடம் முஸ்லிம்கள் கொடுத்த டிரீட்மென்ட் 50% அம்பாறை தமிழர்  மூளையிலிருந்து கூத்தாடிகளை கழுவியிருக்கிறது,  இனிவரப்போகும் ஐந்துவருட டிரீட்மென்ட் கூத்தாடிகளை மிச்சமிருக்கும் பேர்வழிகளின்  மூளையிலிருந்தும் கழுவி யதார்த்தத்தை உணரவைக்கும், அப்படியும் திருந்தாவிடில் இன்னொமொரு ஐந்துவருடம் ஸ்பெசல் டிரீட்மென்ட் கொடுப்பான் முஸ்லீம். அயம் கரண்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 
2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.  தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும்  மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும்   இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப்  போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக்  குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில்  களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள்  சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம்,  சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட  அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில்  தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக்  கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். 
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும்  தயாராகவே  இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்  பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே  கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய  தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி

spacer.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

முன்னணியினருக்கு தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. சைக்கிள் இரட்டைச் சில்லுடன் பாராளுமன்றத்திற்கு செல்கிறது......

🚴‍♀️சைக்கிளுக்கு🚴🏻‍♂️..... இரண்டு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. 👍🏼 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nilmini said:

2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 
2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.  தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும்  மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும்   இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப்  போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக்  குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில்  களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள்  சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம்,  சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட  அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில்  தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக்  கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். 
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும்  தயாராகவே  இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்  பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே  கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய  தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி

நல்லதொரு  கட்டுரை, நில்மினி. 👍🏼

இனி வரும் காலங்கள்... மிகவும் ஆபத்தானவை என்பதனை, ஊகிக்க முடிகின்றது.

 

Link to comment
Share on other sites

ராஜபக்சேக்கள் குறைந்தது  135 இடங்கள் எடுப்பார்கள் என்று எழுதி இருந்தேன். அவர்கள் அதையும் விட அதிகமாகவே எடுத்திருக்கிறார்கள். இனி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கலாம். பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்குவார்களா என்று. நான் அறிந்த வரிக்கும் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

வடக்கு கிழக்கிலும் தமிழ் முஸ்லீம் மக்கள் அதிக வாக்குகளை அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்திருப்பதால் இனி தமிழர் பிரச்சினை என்று பெரிதாக கதைக்க மாடடார்கள். இந்த அரசு அபிவிருத்தி சார்ந்த காரியங்களை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சம்பந்தன், சுமந்திரன், விக்கி , கஜன் போன்றோர் வழமையான பாடல்களை படுவதட்கு தடை இருக்காது. எதிர்ப்பு அரசியலை தொடருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அம்பாறையில் இருந்த ஒன்றயும் இழந்ததும் மிச்சம். சம் சும்மை தாக்கி அவர்கள் தேர்வு செய்யப்படக்கூடாது என்று நிறைய பேர் எழுதினாலும் மக்கள் அதை கணக்கில் எடுக்கவில்லை. மக்கள் அறிவாளிகளா அல்லது இணையப்போராளிகள் அறிவாளிகளா தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 
2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.  தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும்  மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும்   இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப்  போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக்  குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில்  களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள்  சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம்,  சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட  அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில்  தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக்  கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். 
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும்  தயாராகவே  இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்  பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே  கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய  தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி

எல்லோரும் கூத்தமைப்பின் பின்னடைவிற்கு புறக்காரணங்களை தேடுகிறார்கள்யொழிய 
அகக்காரணங்களையும் அவர்கள் விட்ட பாரிய பிழைகளையும் சீர்தூக்கி பார்க்க விரும்பவில்லை 
இவர்கள் எல்லாம் சொல்லவருவது அவர்கள் என்ன கூத்தை ஆடினாலும் சரி தமிழர்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதே, 
இந்த ஒற்றை புள்ளியைத்தான் தமிழகர்களும் இவ்வளவு காலமும் பின்பற்றினார்கள் அதே ஒற்றை புள்ளியை தான் தங்கள் வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்ட கூத்தாடிகள்  தாம் என்ன செய்தாலும் மீண்டும் மக்கள் எங்களை தான் அனுப்பப்போகிறார்கள் என்ற அசாத்திய தன்னம்பிக்கையில் மக்கள் எதற்காக அவர்களை அனுப்பினார்களோ அதைமறந்து  அவர்களுக்கே பாடமெடுக்க தொடங்கினார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு வலிமையான பாடத்தை சொல்லியிருக்கிறது, ஒரு சில இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும் கூத்தாடிகளுக்கு ஒரு எதிர்க்கடையை போட நாங்கள் தயாராகிக்கொண்டு வருகிறோம் என்ற தெளிவான செய்தி மக்களிடமிருந்து சொல்லப்பட்டிருக்கிறது, சும்மா வெளிநாட்டு சக்திகள் ,புலம் பெயர் தமிழர்கள் என்று அழுது வடிக்காமல் இங்கு வாக்களிக்கும் மக்களின் பல்ஸை பிடித்து பாருங்கள்
இதுவே அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

 

இந்தத் தேர்தலில்

ரணிலின் தோல்வியும்

கஜேந்திரகுமாரின் வெற்றியும்

கொஞ்சம் ஆறுதல்.

தேர்தலில் எங்களுக்கான ஆறுதல் பரிசுகள்😃

1 hour ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 

 

தோற்று 11 வருடங்கள் ஆகிவிட்டது, மீண்டும், ஒரு பிறப்பு இளைஞர்களிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எல்லோரும் கூத்தமைப்பின் பின்னடைவிற்கு புறக்காரணங்களை தேடுகிறார்கள்யொழிய 
அகக்காரணங்களையும் அவர்கள் விட்ட பாரிய பிழைகளையும் சீர்தூக்கி பார்க்க விரும்பவில்லை 
இவர்கள் எல்லாம் சொல்லவருவது அவர்கள் என்ன கூத்தை ஆடினாலும் சரி தமிழர்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதே, 
இந்த ஒற்றை புள்ளியைத்தான் தமிழகர்களும் இவ்வளவு காலமும் பின்பற்றினார்கள் அதே ஒற்றை புள்ளியை தான் தங்கள் வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்ட கூத்தாடிகள்  தாம் என்ன செய்தாலும் மீண்டும் மக்கள் எங்களை தான் அனுப்பப்போகிறார்கள் என்ற அசாத்திய தன்னம்பிக்கையில் மக்கள் எதற்காக அவர்களை அனுப்பினார்களோ அதைமறந்து  அவர்களுக்கே பாடமெடுக்க தொடங்கினார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு வலிமையான பாடத்தை சொல்லியிருக்கிறது, ஒரு சில இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும் கூத்தாடிகளுக்கு ஒரு எதிர்க்கடையை போட நாங்கள் தயாராகிக்கொண்டு வருகிறோம் என்ற தெளிவான செய்தி மக்களிடமிருந்து சொல்லப்பட்டிருக்கிறது, சும்மா வெளிநாட்டு சக்திகள் ,புலம் பெயர் தமிழர்கள் என்று அழுது வடிக்காமல் இங்கு வாக்களிக்கும் மக்களின் பல்ஸை பிடித்து பாருங்கள்
இதுவே அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி 

 

அக்கினி மிக நல்ல முடிவும் தெளிவும் 
ஈசல் துரோகிகள் வரும் வேகத்திலேயே தொலைந்துவிடுவார்கள் 
அவர்கள் வெல்வதை பற்றி அரசியலில் பெரிதாக அலட்டிகொள்ள ஏதும் இல்லை 
காரணம் எஜமானிகளை கடந்து அவர்கள் விரும்பினாலும் எதுவும் செய்ய முடியாது 

தமிழ்நாடுபோல திருத்த முடியாத கழுதையையும் .....(தி மு க) 
அடித்தும் திருத்த முடியாத கழுதையையும் (அ  தி மு க)
ஆண்டாண்டு காலமாக வைத்து இழுப்பதைப்போல ஈழத்தமிழர்கள் இருக்க கூடாது 

மக்களை ஓரளவுக்கு மேல் ஏமாற்றுபவர்களை அகற்றிவிட வேண்டும்.   

தமிழ் பிரணித்துவத்தை வைத்து இவ்வளவு நாளும் எதோ வெட்டி புடுங்கின மாதிரி 
வெளிக்கிட்டுவிடார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, Robinson cruso said:

ராஜபக்சேக்கள் குறைந்தது  135 இடங்கள் எடுப்பார்கள் என்று எழுதி இருந்தேன். அவர்கள் அதையும் விட அதிகமாகவே எடுத்திருக்கிறார்கள். இனி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கலாம். பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்குவார்களா என்று. நான் அறிந்த வரிக்கும் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

றொபின்சன்  குரூசோ.... தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது...
நேற்றுக் காலையில்... நீங்கள் தெரிவித்த, கணிப்பை நினைத்துக் கொண்டேன்.  
மிகச் சரியாக... கணித்து இருந்தீர்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ranil-1-1.jpg

வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்ததாக தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 27 இலட்சத்து 71ஆயிரத்து 984 வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக மூன்று இலட்சத்து, 27ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் பிரதான கட்சியாக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை வரலாற்று தோல்வியைச் சந்தித்துள்ளது.

அந்த கட்சி இம்முறை ஒரேயொரு ஆசனத்தை மட்டும் பெற்றுள்ளது. இக்கட்சி மொத்தமாக இரண்டு இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு ஆசனமும் போனஸ் ஆசனமாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எந்த உறுப்பினரும் வெற்றிபெறவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் எந்த ஆசனத்தையும் பெறாமல் தோல்வியடைவது இதுவே முதல் தடவை ஆகும்.

இதேநேரம் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேரதலில் ஐக்கிய தேசியக் கட்சி 50 இலட்சத்து 98 ஆயிரத்து 916 வாக்குகளைப் பெற்று 93 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

http://athavannews.com/வரலாற்றுத்-தோல்வியை-பதிவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:
2 hours ago, Robinson cruso said:

ராஜபக்சேக்கள் குறைந்தது  135 இடங்கள் எடுப்பார்கள் என்று எழுதி இருந்தேன். அவர்கள் அதையும் விட அதிகமாகவே எடுத்திருக்கிறார்கள். இனி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கலாம். பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்குவார்களா என்று. நான் அறிந்த வரிக்கும் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

றொபின்சன்  குரூசோ.... தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது...
நேற்றுக் காலையில்... நீங்கள் தெரிவித்த, கணிப்பை நினைத்துக் கொண்டேன்.  
மிகச் சரியாக... கணித்து இருந்தீர்கள். பாராட்டுக்கள்.

நானும் அவரின் கணிப்பு தவறு என்று சொல்லியிருந்தேன்.
மன்னிக்கவும் குரூசோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.