Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Pavithra-Wanniarachchi.jpg

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பவித்ரா வன்னியாராச்சி முன்னிலை

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  பெற்று முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிட்ட  இவர் இரத்தினபுரி மாவட்டத்தில் 446,668 வாக்குகளை பெற்றுள்ளார்.

குறித்த மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 8 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இரத்தினபுரி-மாவட்டத்தில/

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி

இவ்வளவு இடியாப்ப சிக்கலுக்குள்ளும் இவரை நினைத்து சந்தோசப்படுகிறேன்.

இருந்தும் கிடைத்த ஒரேஒரு போனஸ் சீற் இவருக்கு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு இடியாப்ப சிக்கலுக்குள்ளும் இவரை நினைத்து சந்தோசப்படுகிறேன்.

இருந்தும் கிடைத்த ஒரேஒரு போனஸ் சீற் இவருக்கு தான்.

42 வருடங்கள்... மக்களின் வாக்குகளைப்  பெற்று,
பாராளுமன்றம் போனவர்... இம்முறை, போனஸ்  ஆசனம் கிடைத்து, உள்ளே போயுள்ளார். :)

அவரின்... ஜனாதிபதி கனவு நிறைவேறாமலேயே, 
அரசியல் வாழ்க்கை... முடிவிற்கு வந்துள்ளது. :grin:

போற போக்கில்... தனது கட்சியையும், குழி தோண்டிப் புதைத்த.. திறமைசாலி. 🤣

###########    ################    ###############     ############

mahindha-2.jpg

ரணிலின் சாதனையை முறியடித்தார் மஹிந்த

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

இவர்  5,27,364 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதாவது கடந்த 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அந்த சாதனையை  தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முறியடித்துள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 5ஆசனங்களே குறித்த கட்சிக்கு தேவைப்படுகின்றது. எனவே அதனை தனக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து 3/2பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரணிலின்-சாதனையை-முறியடித/

 

###############    #################    ################  ########

sampanthan-3.jpg

திருகோணமலையில் விருப்பு வாக்குகளில் முன்னிலை வகிப்போர் தொடர்பான விபரம்

திருகோணமலை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும், பொதுஜன பெரமுனவில் ஒருவரும் தெரிவாகியுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எஸ்.தௌபீக் 43,759 வாக்குகள்,(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), இம்ரான் மஹ்ரூப் 39,029 வாக்குகள் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோரும் இலங்கை தமிழ் அரசு கட்சியில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 21,422 வாக்குகள், பொதுஜன பெரமுனவில் கபில நுவான் அதுகோரலவும் 30,056 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளார்கள்.

திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே(பொதுஜன பெரமுன), பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

 திருகோணமலை மாவட்டத்தில் நால்வர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சண்டமாருதன் said:

 

 

 

தூசன வார்த்தைகளும் பறக்குது காற்றில்😂😂,

கொரோணாவும் காற்றில் பறந்துவிட்டது இவர்களின் ஆக்கிரோசத்தைப்பார்த்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சண்டமாருதன் said:

 

 

 

கூத்தமைப்பில் பல படித்த புதிய  இளைஞர்கள் கேட்கிறார்கள் ஏன் நீங்கள் அவர்களை ஆதரிக்கலாமே என்று  சொன்ன சொம்புகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் , இந்த கிழப்பெருச்சாளிகளில்  ஒன்று கூட அந்த கட்சியில் நீடிக்கும்வரை அது சாட்சாத் கூத்தமைப்பே தான் , நீங்கள் தேர்ந்தெடுக்கும் புதிய இளைஞர்களுக்கும் இதுதான் நிலைமை இந்த பெருச்சாளிகளுக்கு ஆமாம் போட்டே காலம் கழிப்பீர் இல்லை கிழித்தெறியப்படுவீர், டெமோ எப்படி ...? அனுபவமே சரியான ஆசான்... இன்னும் வரும் 

Link to comment
Share on other sites

9 minutes ago, உடையார் said:

தூசன வார்த்தைகளும் பறக்குது காற்றில்😂😂,

கொரோணாவும் காற்றில் பறந்துவிட்டது இவர்களின் ஆக்கிரோசத்தைப்பார்த்து

 

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

சண்டமாருதன்,  கீழுள்ள இணைப்பை... பாருங்கள். 
உங்கள் சந்தேகங்களுக்கு, பதில் கிடைக்கும்.  :)

 

Link to comment
Share on other sites

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பில் பல படித்த புதிய  இளைஞர்கள் கேட்கிறார்கள் ஏன் நீங்கள் அவர்களை ஆதரிக்கலாமே என்று  சொன்ன சொம்புகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் , இந்த கிழப்பெருச்சாளிகளில்  ஒன்று கூட அந்த கட்சியில் நீடிக்கும்வரை அது சாட்சாத் கூத்தமைப்பே தான் , நீங்கள் தேர்ந்தெடுக்கும் புதிய இளைஞர்களுக்கும் இதுதான் நிலைமை இந்த பெருச்சாளிகளுக்கு ஆமாம் போட்டே காலம் கழிப்பீர் இல்லை கிழித்தெறியப்படுவீர், டெமோ எப்படி ...? அனுபவமே சரியான ஆசான்... இன்னும் வரும் 

இந்த தேர்தலில் கொள்கைகளோ மக்கள் நலனோ அதுசார்ந்த அரசியலோ முன்போல் இல்லை, முடிந்தளவு அதிகாரங்களை கைப்பற்றும் போட்டியே மேலோங்கி நின்றது. இனிமேல் இப்படித்தான் போகும.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

கிருபன் உட்பட பலர் சவால் விட்டிருந்தனர் இம்முறை சுத்துமாத்திரன் ஒரு இலட்சம் வாக்குகளால் வெல்வார் என்று.

சுமந்திரன் வெல்வார் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு இலட்சம் வாக்கு அவருக்குக் கிடைக்கும் என்று ஒருபோதும் எழுதியதில்லை.

சுமந்திரன் தனது பேட்டியில் ஒரு இலட்சம் கிடைக்கும் என்று ஒருமுறை சொல்லியிருந்தார். ஆனால் அப்படி போடுமளவிற்கு மக்கள் தொகையே யாழ்ப்பாணத்தில் இல்லை ( முன்னர் குதிரை கஜேந்திரனுக்கு அள்ளி அள்ளி செருகி அவர் ஒரு இலட்சம் எடுத்திருந்தார், கிடைத்த வாக்குகளுக்கு 40,000 சவப்பெட்டிக் கதையை பாராளுமன்றத்தில் சொல்லியிருந்தார்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சண்டமாருதன் said:

 

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

ஆளும் கட்சிக்கு அவர் தேவை - பின் கதவு அவருக்கு புதிதல்ல, விளையாட்டு காட்டிவிட்டார்🙈,

மிக கேவலமான செயல்😡; மக்கள் இதை மறந்துவிடுவார்கள் இன்னும் சில வருடங்களில், அவரும் முகத்தில் பட்ட எச்சியை வழித்துக்கொண்டு மீண்டும் கை கூப்பி வருவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:
45 minutes ago, சண்டமாருதன் said:

 

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

ஆளும் கட்சிக்கு அவர் தேவை - பின் கதவு அவருக்கு புதிதல்ல, விளையாட்டு காட்டிவிட்டார்🙈,

மிக கேவலமான செயல்😡; மக்கள் இதை மறந்துவிடுவார்கள் இன்னும் சில வருடங்களில், அவரும் முகத்தில் பட்ட எச்சியை வழித்துக்கொண்டு மீண்டும் கை கூப்பி வருவார்

ஏதோ நிகழ்ச்சி நிரல் நடக்கப் போகுது பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

எல்லோரும் கூத்தமைப்பின் பின்னடைவிற்கு புறக்காரணங்களை தேடுகிறார்கள்யொழிய 
அகக்காரணங்களையும் அவர்கள் விட்ட பாரிய பிழைகளையும் சீர்தூக்கி பார்க்க விரும்பவில்லை 
இவர்கள் எல்லாம் சொல்லவருவது அவர்கள் என்ன கூத்தை ஆடினாலும் சரி தமிழர்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதே, 
இந்த ஒற்றை புள்ளியைத்தான் தமிழகர்களும் இவ்வளவு காலமும் பின்பற்றினார்கள் அதே ஒற்றை புள்ளியை தான் தங்கள் வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்ட கூத்தாடிகள்  தாம் என்ன செய்தாலும் மீண்டும் மக்கள் எங்களை தான் அனுப்பப்போகிறார்கள் என்ற அசாத்திய தன்னம்பிக்கையில் மக்கள் எதற்காக அவர்களை அனுப்பினார்களோ அதைமறந்து  அவர்களுக்கே பாடமெடுக்க தொடங்கினார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு வலிமையான பாடத்தை சொல்லியிருக்கிறது, ஒரு சில இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும் கூத்தாடிகளுக்கு ஒரு எதிர்க்கடையை போட நாங்கள் தயாராகிக்கொண்டு வருகிறோம் என்ற தெளிவான செய்தி மக்களிடமிருந்து சொல்லப்பட்டிருக்கிறது, சும்மா வெளிநாட்டு சக்திகள் ,புலம் பெயர் தமிழர்கள் என்று அழுது வடிக்காமல் இங்கு வாக்களிக்கும் மக்களின் பல்ஸை பிடித்து பாருங்கள்
இதுவே அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி 

 

தாயக மக்கள் அன்று தொடக்கம் இன்று வரை தெளிவாகத்தான் இருக்கின்றனர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் முடிவுகளுடன் தமிழருக்கான அரசியல் தீர்வுகள் எந்த காலமும் சாத்தியமில்லை என்பது உறுதியாகிவிட்டது.

அரசியல் தீர்வை தரவும் சிங்கள தலைமை யாரும் இல்லை,

அரசியல் தீர்வை பெறவும் தமிழர்களிடம் தலைமை ஏதும் இல்லை.

தாயக தமிழர்கள்  கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு என்று அடிப்படை தேவைகளை மட்டும் கவனித்துக்கொண்டு பேசாமல் சிங்களவனை பகைக்காமல் அவர்களுடன் இணக்கமாய் வாழ்வதே உசிதம்.

தமது இருப்புக்காக தமிழர்களை உசுப்பேத்திவிட்டுக்கொண்டு தாம் சிங்களவருடன் ஒட்டியுறவாடிக்கொண்டிருக்கும் தமிழ்கட்சிகளை இனியும் நம்பினால் வாழ்க்கை அவ்வளவுதான்.

தமிழர்தரப்பினால் பாராளுமன்றம் சென்றவர்கள் சிங்களவர்களுடன் கொழும்பில் ஒற்றுமையாய் வாழும்போது.

வாக்களித்த தமிழ்மக்கள்  மட்டும் எதுக்கு சிங்களவர்களுடன் பகையை வளர்த்து வடக்கு கிழக்கில் வாழவேண்டும்?

இனிமேல் இலங்கை சிங்களவனின் நாடு, அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை  என்று நினைத்துக்கொண்டு தாயக தமிழர்கள் வாழ்ந்தால் சிங்களவனிடமிருந்து தப்பித்து கொள்கிறோமோ இல்லையோ தமிழ் அரசியல்வாதிகளின் கோமாளிதனங்களிருந்து  தப்பித்துக்கொண்டு நிம்மதியாய் வாழலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 உத்தியோகபூர்வமற்ற தகவல் 
கருணா  கட்சி மாறி மொட்டில் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வர கொழும்பில்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கிறது .பார்க்கலாம் உண்மையா என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:


 உத்தியோகபூர்வமற்ற தகவல் 
கருணா  கட்சி மாறி மொட்டில் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வர கொழும்பில்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கிறது .பார்க்கலாம் உண்மையா என்று 

மகிந்த மாத்தயா விசுவாசத்திற்காக எப்படியும் தம்பி கோத்தபாயவுடன் பரிந்துபேசி அம்மான் அம்பாறை தமிழர்களின் பிரதிநிதியாக பாரளுமன்றில் இருக்க உதவுவார்😁

அப்படியே சம்சும், அம்பிகா அம்மையாரை அவுஸுக்கு ஓடாமல் பார்த்து போனஸ் ஆசனத்தைக் கொடுத்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

நாங்கள் “மீண்டும் கோமாளிகள்” நாடகத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பார்க்கலாம்!!

அடுத்த பொதுத் தேர்தலில் திருமலையில் ஒரு தமிழர்கூட தேர்தலில் வெல்லமுடியாதவாறு புதிய யாப்பு பார்த்துக்கொள்ளும். அம்பாறையில் இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்தாயிற்றுத்தானே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, அக்னியஷ்த்ரா said:


 உத்தியோகபூர்வமற்ற தகவல் 
கருணா  கட்சி மாறி மொட்டில் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வர கொழும்பில்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கிறது .பார்க்கலாம் உண்மையா என்று 

தேசியப்பட்டிலில் மகிந்தா கூப்பிட்டார் ஆனால் நான் மக்களின் ஆணையுடன் தான் வருவேன் என்றார். இப்போது பின் கதவால்.....

மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர்.

1 minute ago, கிருபன் said:

மகிந்த மாத்தயா விசுவாசத்திற்காக எப்படியும் தம்பி கோத்தபாயவுடன் பரிந்துபேசி அம்மான் அம்பாறை தமிழர்களின் பிரதிநிதியாக பாரளுமன்றில் இருக்க உதவுவார்😁

அப்படியே சம்சும், அம்பிகா அம்மையாரை அவுஸுக்கு ஓடாமல் பார்த்து போனஸ் ஆசனத்தைக் கொடுத்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

நாங்கள் “மீண்டும் கோமாளிகள்” நாடகத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பார்க்கலாம்!!

அடுத்த பொதுத் தேர்தலில் திருமலையில் ஒரு தமிழர்கூட தேர்தலில் வெல்லமுடியாதவாறு புதிய யாப்பு பார்த்துக்கொள்ளும். அம்பாறையில் இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்தாயிற்றுத்தானே!

 

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மாவைக்கு என்ற செய்தி உலவுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

தேசியப்பட்டிலில் மகிந்தா கூப்பிட்டார் ஆனால் நான் மக்களின் ஆணையுடன் தான் வருவேன் என்றார். இப்போது பின் கதவால்.....

மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர்.

தற்போதும் பின்கதவால் வருபவர்கள் தான் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா மீரா அண்ணை 
மக்களின் ஆணை கிடைத்தவர்களையே பின் கதவு காலி செய்யும் 
பின் கதவின் பவர் அப்பிடி 

Link to comment
Share on other sites

5 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் அவரின் கணிப்பு தவறு என்று சொல்லியிருந்தேன்.
மன்னிக்கவும் குரூசோ.

அதில் ஒரு தவறும் இல்லை. எல்லாம் கணிப்பீடு தானே. நான் சிங்களவர்களுடன் கதைக்கும்போது அறிந்து கொண்டதில் இருந்துதான் அப்படி எழுதினேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

நான் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். நான் எங்கு கருணாவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று எழுதியிருக்கின்றேன்? நான் எழுதியது கருணாவால் தமிழர் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று தான் எழுதியிருக்கின்றேன். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு இருப்பது புரியவில்லையா?
மகிந்த அணி கருணாவை அம்பாறையில் களமிறக்கியதே தமிழர் வாக்குகளை பிரித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதற்காக (என அன்றும் எழுதியிருந்தேன்). அது தான் இன்று நிறைவேறி இருக்கின்றது.

முஸ்லிம்களிடம் இருந்து கருணா காப்பாற்றி அருள் புரிவார் என்று நம்பி ஈற்றில் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவரை வெல்ல வைத்தது தான் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும் கிடைத்த பயன்.

இனியும் இதற்கு பின்னரும் கூட கருணாவால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புவது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக நான் எழுதாத ஒன்றை எழுதியதாக நினைப்பது தவறு.

நிழலி, இதுவரை அம்பாறையில் கூட்டமைப்பு தான் இருந்தது ....ஏதாவது செய்தார்களா? ...இல்லை...அதனால் தான் அம்பாறையில் நின்ற முதல் தடவையே அவருக்கு 30031 வோட்டுக்கள் கிடைத்தன ...கருணா இந்த தேர்தலில் நின்றுயிருக்கா விட்டாலும் கூட்டமைப்பு வென்று இருக்காது...அங்குள்ள தமிழர்கள் சிங்களவர்களுக்கு கணிசமான அளவு வோட் போட்டு இருக்கினம் ...இவர் நின்று இருக்கா விட்டால் அந்த வோட்டுக்கள் சிங்கள ,முஸ்லீம் கட்சிகளுக்கு போகுமேயொழிய கூட்டமைப்புக்கு இல்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

தற்போதும் பின்கதவால் வருபவர்கள் தான் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா மீரா அண்ணை 
மக்களின் ஆணை கிடைத்தவர்களையே பின் கதவு காலி செய்யும் 
பின் கதவின் பவர் அப்பிடி 

உண்மை நேற்றிரவு யாழில் நடந்ததே....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 
2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.  தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும்  மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும்   இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப்  போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக்  குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில்  களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள்  சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம்,  சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட  அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில்  தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக்  கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். 
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும்  தயாராகவே  இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்  பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே  கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய  தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி

spacer.png

 

டொக்டர் முரளி அவர்கள் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொறுப்பாக எழுதுவது அவருக்கு நல்லது...கண்ட பாட்டுக்கு எழுதுவது வேலை போனவுடன் சும்மின் காலில் விழுகிறது ....அந்த விசுவாசம் இருக்க தான் வேண்டும்...கூட்டமைப்பு எங்கே பிழை விட்டது என்று ஆராயாமல் அப்பனையும் ,சுப்பனையும் குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பது சரியில்லை .
இது வரை நன்கு படித்த ஆங்கில ,சிங்கள  அறிவும் ,சட்டத் திறமையும் கொண்ட தமிழர்கள் பாராளுமன்றம் போய் என்ன சாதித்தார்கள் சுமத்திரன் உட்பட 
சிங்கள ,முஸ்லீம் எம்பிக்கள் எல்லாம் சட்டம் படித்து தான் பார்லிமென்ட் போய் மக்களுக்காய் வேலை செய்கிறார்களா?
மக்களுக்காய் கதைப்பதற்கு கொஞ்ச்மேனும் நல்ல மனம் இருந்தால் போதும் ... டக்ளஸை பாருங்கள் கொஞ்ச்மேனும் அந்த மக்களுக்கு ஏதோ செய்வதால் தான் தொடர்ந்து எத்தனை வருடங்களாய் வென்று கொண்டு இருக்கார்.
இன்னும் உரிமையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை அதற்குள் இருப்பு ,மண்ணாங்கட்டி என்று கொண்டு போய் பேசாமல் வேலையைப் பாருங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை..

வீட்டைக் குடிசையாக்கி.. சைக்கிளை ஓடவிட்டு.. மீனை ஆத்தில விட்டு.. வீணையை மீட்டி.. கட்டுமரத்தை மிதக்க விட்டிருக்கிறார்கள். 

மக்களின் முன் பிரிந்து நின்ற நிலையில்.. மக்களும் பிரிந்து நின்று தம் விருப்புக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. அவ்வளவே.

ஆனாலும் சிலர் தமது சிங்களச் செல்வாக்கால் குறுக்கு வழியில் வென்றுள்ளனர். அது ஜனநாயகமே அல்ல. ஆனால் அவர்களுக்கு அது சனநாய் அகமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்ட குட்ட குனிபவன் மடையன்.

குனிய குனிய குட்டுபவன் மகா மடையன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பை விட இந்தியாவுக்குத்தான் அதிக கலக்கத்தை கொடுத்திருக்கும்.

திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி இருக்கும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல். பார்க்கவே நல்லா இருக்கு.

அதுக்குள்ளே முதல் ஆளாக வாழ்த்துவேற.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.