Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அபலைப்பெண்  அழுத கண்ணீர் சுமந்திரனை சும்மா விடாது.

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா ரவிராஜ் தொடர்ந்து கூட்மைப்பிலிருந்தவாறு போராட வேண்டும்.

தவறு செய்வோர் திருத்தப்பட வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அபலைப்பெண்  அழுத கண்ணீர் சுமந்திரனை சும்மா விடாது.

உலகின் மேலிருந்து கீழ்வரை அராஜகவாதிகளின் காலம். சும் இன்னும் 5வருடம் இருந்து முடியேக்கை த.தே.கூ இருககாது. கூ என்ற ஓசைமட்டும்தான் கேட்கும் சம் சிலநேரம் விடைபெற்றிடுவர்.  கண்ணீரெல்லாம் இப்ப ஒன்றும் செய்யாது கு.சா ஐயா.  அப்பிடியென்றால் ராயபக்சயாக்கள் அப்படியே இருக்கிறார்கள். அத்தியடி  முரளீதரன் என்று நீண்ட பட்டியலே போடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

மாஸ்க் போட்டு இருப்பது நல்ல வசதி ஆட்களுக்கு 😃யார் என்ன செய்தது ,சொன்னது என்று கண்டு பிடிக்கேலா tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மாஸ்க் போட்டு இருப்பது நல்ல வசதி ஆட்களுக்கு 😃யார் என்ன செய்தது ,சொன்னது என்று கண்டு பிடிக்கேலா tw_lol:

இது என்ன கும்மானின் இடமோ, கத்தியவனை கலைச்சு அடிக்க. 

சுத்துமாத்திரன் சற்று பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் 

வடக்கில் ஓர் அரசியல்வாதிக்கு எதிர்ப்புக் காட்டக் கூட தமிழனுக்கு இடம் இல்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இது என்ன கும்மானின் இடமோ, கத்தியவனை கலைச்சு அடிக்க. 

சுத்துமாத்திரன் சற்று பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் 

வடக்கில் ஓர் அரசியல்வாதிக்கு எதிர்ப்புக் காட்டக் கூட தமிழனுக்கு இடம் இல்லையோ

கும்மான்  கலைத்து  அடித்ததற்கு ஆதாரம் இருக்குதா?...அப்பன் சொன்னான் ,சுப்பன் சொன்னான் என்று வந்து எழுத வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

கும்மான்  கலைத்து  அடித்ததற்கு ஆதாரம் இருக்குதா?...அப்பன் சொன்னான் ,சுப்பன் சொன்னான் என்று வந்து எழுத வேண்டாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, MEERA said:

 

இது ஆதாரமோ?...ஏன் வீடியோ எடுக்க முடியவில்லையாமா?...உங்களை பார்க்க அழுகை தான் வருது போய் படுங்கோ ...குட் நைட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

இது ஆதாரமோ?...ஏன் வீடியோ எடுக்க முடியவில்லையாமா?...உங்களை பார்க்க அழுகை தான் வருது போய் படுங்கோ ...குட் நைட் 

எல்லாரும் கும்மான் மாதிரி விடியோவும் நாலு பேருமாகவா திரியினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?

எப்பிடி எங்கட சும்மின்  கேம் 
இப்படி Pawn காய்களை கொண்டு வந்து கேட்க வைத்ததே , தேவையான நேரம் தட்டி தூக்கத்தான் 
சும்மை நம்பி வந்து கேட்ட அவிங்களுக்கு  இதைவிட நல்லா வேணும் 
அம்பிகா இதைப்பார்த்து தப்பித்தது தலை Bloody Criminals  என்று அவுஸிற்கு ஓட்டம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள், தன்னை நிராகரித்தால்....   அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பலமுறை தெரிவித்த சுமந்திரன்...  மீண்டும், மீண்டும் குறுக்கு வழியால் பாராளுமன்றத்துக்குள் போவது கேவலம்.

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீருடன் விடைபெற்றார் மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி..! நீதி கோருவேன் என ஊடகங்களுக்கு கருத்து..

Tn-sasi.jpg

மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ராவிராஜ் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 2ம் இடத்தில் இருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியானபோதும்,

அவர் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதுடன், வாக்கெண்ணும் நிலையத்திற்குள் இடம்பெற்ற குழப்பத்தினால் அவருடைய மருமகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல் நடத்தியிருந்ததை தொடர்ந்து,

அவரும் அவருடைய பிள்ளைகள், உறவினர்கள், ஆதரவாளர்கள் கண்ணீருடன் விடைபெற்று சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அங்கிருந்த பலருடைய மனங்களை உறுத்தும் சம்பவமாக அமைந்திருந்தது.

பின்னர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சசிகலா விருப்பு வாக்கில் 2ம் இடத்தில் உள்ளதாக வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து அறிவிக்கப்பட்டபோதும்,

பின்னர் தாம் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கூறியதுடன், இது குறித் கட்சி தலைவர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரிடம் முறையிட்டு நீதியை கோரவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

https://jaffnazone.com/news/19779

Link to comment
Share on other sites

6 hours ago, Dash said:

விகிதாசார வாக்கெடுப்பு தான் மிக சிறந்த முறை ; தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மிகவும் தவறானமுறை. இந்த முறையின் கீழ் ஒரு கட்சி பெற்ற வாக்குகளுக்கும் அதுன்பெற்ற ஆசனங்களுக்கும் நேரடி தொடர்புமிருக்கும்.

புதிதா அரசியலைப்பில் தொகுதிவாரியான பழைய முறைமை கொண்டு வரப்படும். புதிய அரசின் முக்கிய தீர்மானங்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக இது மலையக தமிழர்களையும் , முஸ்லிம்களையும் பாதிக்கும். 

27 minutes ago, தமிழ் சிறி said:

மக்கள், தன்னை நிராகரித்தால்....   அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பலமுறை தெரிவித்த சுமந்திரன்...  மீண்டும், மீண்டும் குறுக்கு வழியால் பாராளுமன்றத்துக்குள் போவது கேவலம்.

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

ரோசம் பாத்து விலகினால், எஜமானை யார்?  எப்படி பயங்கரவாதி பட்டத்தில் இருந்து விலத்தி மனித நேய காப்பாளனாய், இலங்கையின் பொக்கிஷமாய் தூக்கி நிறுத்துகிறது? சிங்களவனுக்கு எப்போதும்  கேடயமாக இருப்பது மானங்கெட்ட, சோரம்போன  தமிழனே. இதுக்கு மேல நல்லாய் வருகுது வாயில,  பெற்றோரின் வளர்ப்பு, கற்ற கல்வி தடுக்குது.  உது ஒரு ஊத்தை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இலங்கையில் எப்போதாவது இரண்டாவது முறை அதுவும் சாமம்  12 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுவது உண்டா ?  சுமத்திறனை வெறியாளர்  என்று அறிவிக்கினம் அவரும் வருகிறார் மாவையின்  மகனுக்கும் அடி விழுது எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலின்படி .

இனி என்ன வீட்டை இரண்டாய் உடைப்பது தானே 

அமாவாசை சிறீதரனும் மணிவண்ணன் மாவையும்..

samakaalamc-scaled.jpg

அமைதிப்படை தமிழ் நாட்டு அரசியலின் கேலிக்கூத்துக்களை தத்துருபமாக பதிவு செய்த திரைப்படம். இன்றும் தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள் எல்லாம் அமைதிப்படை வழியாக மீம் செய்யப்படுகின்றது. ஆனால் அவ்வளவு வேகமாக இது இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருந்திவிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசியலிலும் அமாவாசை என்ற கச்சிதாமான பாத்திரம் ஒன்று உருவாகியிருக்கிறது.

இந்தப் பத்தியைப் படிப்பவர்களுக்கு நிச்சயமாக அந்த அமாவாசை இப்போதே கண்ணுக்குள் வந்துவிடுவார். அமைதிப்படைத் படத்தில், மணிவண்ணன் ஒரு அரசியல்வாதியாக ஒரு கோயிலுக்கு செல்லும் போது, அங்கே தேங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பார் அமாவாசையாக நடிக்கும் சத்தியராஜ். முதலில் கட்சி எடுபிடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட வர், ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மணிவண்ணனுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கையைக் கட்டிக் கொண்டு அடிமை போல பம்மிக் கொண்டு இருந்த அமாவாசை, அந்த தேர்தலில் வெற்றி பெற மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருப்பார். அதாவது அமாவாசை நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ஆக உருமாற்றம் பெற மணிவண்ணன் அவருக்கு எடுபிடியாக மாறுவார். அப்படியொரு படம்தான் இலங்கை தமிழ் அரசியலிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு மகாநடிகன் திரையில் இல்லை தரையில் நடிக்கிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்தான் அந்த அமாவாசை. ஆமாம். 2010ஆம் ஆண்டு கால கட்டம். அப்போது போர் முடிந்து மக்கள் நொந்துபோயிருந்த நேரம். எந்த நோவும் இல்லாமல் தர்மபுரத்துடன் அம்புலன்ஸில் ஏறி வவுனியாவுக்கு ஓடிய சிறீதரனுக்கு முள்ளிவாய்க்காலும் தெரியாது, முள்வேலி முகாமும் தெரியாது. ஆனால் மக்கள் முள்வேலி முகாங்களில் அடைக்கப்பட்ட நேரத்தில் தேர்தலில் போட்டியிட ஆசனத்திற்காக வவுனியாவில் அலைந்தார். அதாவது கோயிலில் தேங்காய் பொறுக்கும் அமாவாசை போல..

அப்போது ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கெஞ்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதும் தான் காணாத முள்ளிவாய்க்காலையும் தான் போகாத முள்வேலி முகாமையும் பற்றிப் பேசியதோடு, ஆர்பிஜியை தூக்கி அடித்தவர் போல புலிகளைப் பற்றியும் பேசி அதை வாக்குகளாக அள்ளும் நடிப்பில் ஈடுபட்டார். மட்டுமட்டான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்ற சிறீதரன் முதன் முதலில் அமாவாசை வேலையை காட்டியது சுரேஷ் பிரேமச்சந்திரனிடம்தான்.

தான் தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்றார் சிறீதரன். ஆனால் ஈபிஆர்எல்எப் ஊடாக வந்தவர், முதல் துரோகத்தை அங்கே தொடங்கி வைத்தார். தேர்தலில் வென்றவுடன் சுரேஷை கட்டிப்பிடித்து அவருடன் நின்றவர் மெல்ல மெல்ல நகர்ந்தார் மாவையின் பக்கம்.. அந்த ஒருமுறைதான் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்றும் பின்னர் அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்குவதுதான் நல்ல பண்பு என்றும் வகுப்பெடுத்த சிறீதரனை 2009இற்கு முன்பு எவருக்கும் தெரியாது. சாதாரணமான ஒரு ஆசிரியர்தான்.

அதன் பிறகு, சதா புலிகளைப் பற்றி பேசி, கைகளை கட்டி, கைகளை நீட்டி வேடங்கள் தரித்து தலைவரின் உரையை வெட்டியும் ஒட்டியும் பேசினார். இன்னும் ஒருமுறை இருந்துவிட்டு போய்விடுவேன் என்று சொன்னவர், இப்போது மூன்றாவது முறையாகவும் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலுடன் அமாவாசையின் உச்ச ஆட்டத்தையும் சிறீதரன் தொடங்கியுள்ளார். இதற்காக சுமந்திரனுடன் ஒரு கூட்டையும் டீலையும் வைத்திருக்கிறார் சிறீதரன்.

மாவையை தோற்கடித்து, தமிழரசுக் கட்சியின் பதவியை கைப்பற்றுவதுதான் சிறீதரனின் அமாவாசை ஒப்பிரேசன். அத்துடன் அதேவேளையை தன்னைக் கொண்டு வந்த சம்பந்தனை தோற்கடித்து, கூட்டமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்ற சுமந்திரன் திட்டம் தீட்டியுள்ளார். ஒருமுறையுடன் போய் விடுவேன் என்றவர் இப்போது என்ன ஆட்டம் போடுகிறார் பார்த்தீர்களா?

இந்தப் பதவி ஆசை காரணமாகத்தான் தமிழினத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசியலை முன்னெடுத்துவரும் சுமந்திரனை சிறீதரன் ஆதரிக்கிறார். இந்த அமாவாசை ஓப்பிரேசனுக்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மோசமாக சித்திரித்து பரப்புரை செய்யும் சுமந்திரனை ஆதரிக்க சிறீதரன் தீர்மானித்துள்ளார். இதுவரை காலமும் புலிப் புராணம் பாடிவிட்டு, இப்போது புலிகளையும் அதன் தலைமையையும் பிழையாக காட்ட சிறீதரன் முற்படுகிறார். சுமந்திரனுக்காக இன்னொரு நடிப்பு. இன்னொரு படம் காட்டுகிறார்.

பதவிக்கும் சுகபோகத்திற்கும் சுமந்திரனை ஆதரிக்க தீர்மானித்த சிறீதரன், சாதாரணமான அமாவாசையல்ல. பதவிக்கும் சுகபோகத்திற்கும் பிரபாகரனை எதிர்க்கும் ஒரு சிங்கள மனநிலை கொண்ட சுமந்திரனை ஆதரிக்கும் சிறீதரன் நாளை சிங்கள அரசிடம் இணைந்தால்கூட ஆச்சரியமல்ல. இந்த அமாவாசையின் ஆட்டம் வெல்லுமா? வென்றால் பெரும் பாதிப்பு தமிழர்களுக்குத்தான். அமாவாசையின் திட்டத்தை தோற்கடிக்க மணிவண்ணன் நிலையில் இருக்கும் மாவை என்ன செய்யப் போகிறார்? அமாவாசை ஒப்பிரேசன் நிறைவேறினால் அடுத்த அமாவாசை ஒப்பிரேசன் சுமந்திரனுக்கு எதிராகத்தானாம்..

-ஆசைமுத்து சங்கரன்

https://thamilkural.net/thesathinkural/views/52456/

டிஸ்கி :

IMG-20200807-084348.jpg

தோழர் ..மிக சரியாக கணித்த தாங்கள் உண்மையிலே ஒரு தீர்க்க தரிசி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 

நாங்கள் சின்னனில்  படித்த சைவசமய கதை ஒன்று அரசனை கொல்லனும்  அதுக்கு ஒரே வழி  அந்த அரசன் சிறந்த சிவபக்தன் கொலையாளி சிவபக்த வேடத்தில் உடல் முழுக்க திருநீறு பூசியபடி போய்  அரசனை சந்தர்ப்பம் வாய்க்கும்போது   குத்தியாயிற்று அந்த இக்கட்டான நேரத்திலும் அரசர் கொலையாளியை நோக்கி பாயும் தனது  பாதுகாவலரை நோக்கி கட்டளையிடுகிறார்  வந்தவன் சிவபக்தன் பொதுமக்களால்  இடையூறு ஏற்படா வண்ணம் ஆளை ஊர் எல்லை தாண்டி பாதுகாப்பாய்  கொண்டுபோய் விட்டு விடும்படி கடடளையிட்டுவிட்டு அரசர் உயிரை விடுகிறார் இது கதை நீதி பொய்யுக்கு சிவனின் திருநீறு அணிந்தாலும் கொல்ல வந்தாலும் அவன் சிவனின் பெயரால் பாதுகாக்க படவேண்டிய ஒருத்தர் .

இப்போ நிஜத்துக்கு வருவம் யார் இந்த சசிகலா ? மாமனிதர் ரவிராஜின் மனைவியார் இந்த தேர்தலில் ஆனந்திக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஒருத்தர் இவவை பற்றி இன்னும் ஒன்று ஒண்டு பிரபாகரனின் மனைவியார் பல்கலை  மாணவியஆக இருந்தபோது உண்ணாவிரதம் இலங்கை அரசுக்கு எதிராக இருந்தபோது கூட இருந்த மாணவிகளில் ஒராள் இவவும் என்ற உண்மை தேர்தல் கூட்டங்களில் மக்களுக்கு பகிரப்பட்டது  சனமும்  விருப்பு வாக்குகளினால் இவவை தெரிவில் சும்மை  விட கூடுதலாக தெரிந்து எடுத்து கிடைத்த மூன்று கதிரையில் இவவுக்கு கொடுத்தது  இப்ப சின்ன பிரேக் அங்கு திருநீறு இங்கு புலிக்கதை  எங்கடை சனத்தின்ரை மைண்ட் வொய்ஸ் நன்றாக குள்ளநரி  சுமத்திரனுக்கு தெரிந்து இருக்கு . பகலில் சர்வதேச கண்காணிப்பவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை குறிப்பாக சசிகலாவின் புலி  அனுதாப வாக்குகளை விருப்ப தெரிவு வாக்குகளை நடு இரவில் வோட்டு என்னும் இடத்துக்கு சென்று சசிகலாவின் வாக்குகளை விருப்ப வாக்குகளை  தன்னுடைய பெயருக்கு மாத்திக்கொண்டு தானே வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு stf  பாதுகாப்புடன் புறப்பட்டு சென்று விட்டார் .

இவ்வளவு நாடகமும் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் நடந்து உள்ளது காரணம் மேட்குலகில் இருந்துவரும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களில் இருந்து தங்களை காப்பற்ற போவதுக்கு இவரை போல் சிங்களத்துக்கு நம்பிக்கையானவர்கள் இல்லை .

எனக்கு இன்னும் ஒரு நெருடல் என்றால் இந்த தமிழ் சிங்கள மகளீர் அமைப்புக்கள் சசிகலாவுக்கு நடந்த கொடுமையை பார்த்தபின்னும் அமைதியாக மரத்தை விட்டு இறங்காத கோழிகளாட்டம் இருக்கினம் என்ன காரணம் என்று விளங்கவில்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

நாங்கள் சின்னனில்  படித்த சைவசமய கதை ஒன்று அரசனை கொல்லனும்  அதுக்கு ஒரே வழி  அந்த அரசன் சிறந்த சிவபக்தன் கொலையாளி சிவபக்த வேடத்தில் உடல் முழுக்க திருநீறு பூசியபடி போய்  அரசனை சந்தர்ப்பம் வாய்க்கும்போது   குத்தியாயிற்று அந்த இக்கட்டான நேரத்திலும் அரசர் கொலையாளியை நோக்கி பாயும் தனது  பாதுகாவலரை நோக்கி கட்டளையிடுகிறார்  வந்தவன் சிவபக்தன் பொதுமக்களால்  இடையூறு ஏற்படா வண்ணம் ஆளை ஊர் எல்லை தாண்டி பாதுகாப்பாய்  கொண்டுபோய் விட்டு விடும்படி கடடளையிட்டுவிட்டு அரசர் உயிரை விடுகிறார் இது கதை நீதி பொய்யுக்கு சிவனின் திருநீறு அணிந்தாலும் கொல்ல வந்தாலும் அவன் சிவனின் பெயரால் பாதுகாக்க படவேண்டிய ஒருத்தர் .

இப்போ நிஜத்துக்கு வருவம் யார் இந்த சசிகலா ? மாமனிதர் ரவிராஜின் மனைவியார் இந்த தேர்தலில் ஆனந்திக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஒருத்தர் இவவை பற்றி இன்னும் ஒன்று ஒண்டு பிரபாகரனின் மனைவியார் பல்கலை  மாணவியஆக இருந்தபோது உண்ணாவிரதம் இலங்கை அரசுக்கு எதிராக இருந்தபோது கூட இருந்த மாணவிகளில் ஒராள் இவவும் என்ற உண்மை தேர்தல் கூட்டங்களில் மக்களுக்கு பகிரப்பட்டது  சனமும்  விருப்பு வாக்குகளினால் இவவை தெரிவில் சும்மை  விட கூடுதலாக தெரிந்து எடுத்து கிடைத்த மூன்று கதிரையில் இவவுக்கு கொடுத்தது  இப்ப சின்ன பிரேக் அங்கு திருநீறு இங்கு புலிக்கதை  எங்கடை சனத்தின்ரை மைண்ட் வொய்ஸ் நன்றாக குள்ளநரி  சுமத்திரனுக்கு தெரிந்து இருக்கு . பகலில் சர்வதேச கண்காணிப்பவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை குறிப்பாக சசிகலாவின் புலி  அனுதாப வாக்குகளை விருப்ப தெரிவு வாக்குகளை நடு இரவில் வோட்டு என்னும் இடத்துக்கு சென்று சசிகலாவின் வாக்குகளை விருப்ப வாக்குகளை  தன்னுடைய பெயருக்கு மாத்திக்கொண்டு தானே வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு stf  பாதுகாப்புடன் புறப்பட்டு சென்று விட்டார் .

இவ்வளவு நாடகமும் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் நடந்து உள்ளது காரணம் மேட்குலகில் இருந்துவரும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களில் இருந்து தங்களை காப்பற்ற போவதுக்கு இவரை போல் சிங்களத்துக்கு நம்பிக்கையானவர்கள் இல்லை .

எனக்கு இன்னும் ஒரு நெருடல் என்றால் இந்த தமிழ் சிங்கள மகளீர் அமைப்புக்கள் சசிகலாவுக்கு நடந்த கொடுமையை பார்த்தபின்னும் அமைதியாக மரத்தை விட்டு இறங்காத கோழிகளாட்டம் இருக்கினம் என்ன காரணம் என்று விளங்கவில்லை .

 

பெருமாள் எல்ல இடமும் குத்தி பச்சை முடிஞ்சு போச்சு 
நாளைக்கு வந்து திரியை திறக்கிறன் ஒரு குத்து குத்துறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.
 
ஈற்றில் இரண்டாவது இடத்தில் இருந்த,  சசிகலா ரவிராஜ் களத்தில் இருந்து வெளியேற்றி... சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு மோசடி என்பதற்க்கப்பால்.
 
சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒரு பெரும் நெருக்கடியாக.. உருவெடுக்கும் சுமந்திரனின் இத்தகைய அடாவடி தமிழர்களை எத்தகைய நிலைக்கு தள்ளப்போகிறது என்பதை அல்லது சுமந்திரனின் வருகை சாதகமா பாதகமா என்பதை இன்னும் குறுகிய காலத்துக்குள் உணரமுடியும்.
 
சுமந்திரனின் வருகை தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் சந்தர்ப்பத்தில், தமிழ் இளைஞர்களின் கொந்தளிப்பு வன்முறையை நோக்கி நகரலாம்.
 
இங்கு நான் சுமந்திரனையோ கூட்டமைப்பையோ குறை சொல்வதை விட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், விக்னேசுவரனையுமே குறை சொல்வேன்.
 
காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை தமது ஈகோக்களால் இட்டு நிரப்பிய இருவரும் மன்னிக்கப்பட முடியாதவர்கள் என்பது என்கருத்து. கூட்டமைப்புக்கான மாற்று என மக்கள் எண்ணியதை சீர்குலைத்தது கூட ஒரு வகையில் சமூகத் துரோகமே.

117403967_4011280208901530_4519314701381068350_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=KfojZ3pIAXAAX_WFChe&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e1d7eab687a92aedc96cb27027251b83&oe=5F51D363

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

2 hours ago, Robinson cruso said:

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  உதவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

52 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கற்பகதரு said:

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  ஷ தவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

//ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.//

//சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.//

சுமந்திரன்..  ஒரு பெண்ணை, கண்ணீர்  சிந்த வைத்து..
அதில் பாராளுமன்றம் போவதை விட....
நல்லூர் கோயில் வாசலில் இருந்து, பிச்சை எடுக்கலாம்.

சித்தார்த்தனுக்குத்தான்... முதலில், ஆப்படிக்க நினைத்தவர்கள்.
அதில்... சித்தார்த்தனின் ஆதரவாளர்கள்.. கொத்தளிக்க..

சசிகலா ரவிராஜை...  பகடைக்  காய், ஆக்கி விட்டார்கள்.

நேற்று இரவு... யாழ். மத்திய கல்லூரியில், நடந்த சம்பவங்கள்... 
செய்திகளாக, காணொளிகளாக...  உள்ளது தேடிப் பாருங்கள். :)

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

//ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.////

அப்படியா? எப்படி உங்களுக்கு பேரம் பற்றி தெரிந்தது? உங்களை போல இன்னொருவரின் கற்பனையை படித்ததில் இருந்தா? எங்கள் மக்களில் படித்தவர்கள், பெரியவர்கள் உங்களை போல சிந்திப்பவர்களாக இருந்தால், “இந்த இனத்தை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சுமந்திரனுக்கு மானிப்பாயில் கிடைத்த வாக்குகளில் ஒருபகுதி சரியாக எண்ணப்படாததால், சட்டப்படி மீள எண்ணப்பட்டதன் பின் அவருக்கு 4000 வாக்குகள் சித்தார்த்தனிலும் பார்க்க அதிகம் கிடைத்திருப்பது உறுதியானது. சசிகலாவுக்கு சித்தார்த்தனிலும் பார்க்க 700 வாக்குகளே குறைவு. தனது வாக்குகளையும் மீளவும் எண்ணவேண்டும் என்று கேட்க சட்டப்படி உரிமை இருந்தும், இதை செய்து சித்தார்த்தனை மேவி பாராளுமன்றம் போவதை விட்டு, 4000 வாக்குகளால் முன்னே நிற்கும் சுமந்திரனுக்கு எதிராக வீடியோவுக்கு ஒப்பாரி வைத்துவிட்டு வீட்டுக்கு போன சசிகலா, பாராளுமன்றம் போய் மக்களுக்கு என்னத்தை செய்திருக்க முடியும்? பரிதாபம்.
 

2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்..  ஒரு பெண்ணை, கண்ணீர்  சிந்த வைத்து..
அதில் பாராளுமன்றம் போவதை விட....
நல்லூர் கோயில் வாசலில் இருந்து, பிச்சை எடுக்கலாம்.

உங்களுக்கு பாராளுமன்றம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல தெரிகிறதே? பாராளுமன்றம் என்றால் என்ன, அங்கே என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து பாருங்கள். 

2 hours ago, தமிழ் சிறி said:

நேற்று இரவு... யாழ். மத்திய கல்லூரியில், நடந்த சம்பவங்கள்... 
செய்திகளாக, காணொளிகளாக...  உள்ளது தேடிப் பாருங்கள். :)

பார்த்தேனே? உங்களைப் போல சிலர் தமது அறிவுக்கு எட்டியபடி தேசிய விடுதலை போராட்டத்தில் ஈடுபட, சசிகலா ஒப்பாரி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி தனது தேசிய கடமையை நிறைவேற்றியதை பார்த்தேன். நல்லவேளை, இவ வெற்றி பெறவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கற்பகம், இறுதிவரை கூட்டமைப்பில் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தது சித்தர் மட்டும்தான். 

வேட்பாளர்கள் உள்நுழையக் கூடாத இடங்களில் எல்லாம் STF பாதுகாப்புடன் நுழைந்தது சுத்துமாத்திரன்.

கூடவே அடியாட்கள் மூலம் அந்த அபலை பெண்ணை மிரட்டல் வேறு.

அரசியலில் புதிதான அவருக்கு உதவ யாருமில்லை. குறட்டை புகழ் சம் கடைசிவரை சசிகலாவினது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.