Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

 

இதுவும் ஒரு மனிதப்பிறவி. அன்று கிழக்கில் மனோகணேசன் காப்பாற்றி அனுப்பினார். இன்று வடக்கில் சிங்களத்தின் படைகளே பெரும்பாடுபட்டு காப்பாற்றுது. இப்படி ஒரு பிழைப்பு வேண்டுமா? தேசியத்தலைவன் வாழ்ந்த மண்ணிலும் சில கேடுகெட்ட பிழைப்புகள் இதுக்கு பின்னால் எதுக்கோ ஆசைப்பட்டு நிக்கிதுகள். இது போதுமடா எவ்வளவு சிங்களம் சுற்றி நின்றாலும் “டேய் கள்ளா” “டேய் சுமந்திரன்” “கள்ளன் ஓடுடா” என காது கிழிய கத்தும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ப. தெய்வீகன் முகநூலில் எழுதியது. வாசிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேகமாக scroll செய்யவும்😀

 

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை. 

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர் 
மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, "அமைதிப்படை" படத்தில் 
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல - நிலமை மாறி - கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது. 

ஆனால், இவரது ஆத்திரம் ஆரோகணிப்பதற்கு காரணமாக அங்கு இன்னொரு சம்பவமும் நடத்துவிட்டது. 

கொழும்பிலிருந்துகொண்டு உள்ளடி வேலைகளினால் தனது வெற்றியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறார் என்று எதிர்த்தரப்பினர் மத்தியில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சாரத்தை பொய் என்று நிரூபிப்பதற்காக, தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிட்டார் என்ற தகவல் உறுதியான பின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிலிருந்த சுமந்திரன், மத்திய கல்லூரி வளாகத்துக்கு வந்தார். 

இந்த நேரத்தில், தான் நம்பியிருந்த வெற்றி கைதவறிப்போன விரக்தியிலிருந்த சசிகலா அவர்களும் அவரது மகளும் வாக்கெண்ணுமிடத்திலிருந்து கோபத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். தங்கள் தோல்விக்கு சுமந்திரனே பொறுப்பென்று பொரிந்து தள்ளிவிட்டுப்போயிருக்கிறார்கள். 

மத்திய கல்லூரி வளாகத்திற்குள் சசிகலா அவர்கள் கூறியதுபோலவும் - பின்னர் அவரது மகள் முகநூலில் பதிவுசெய்துள்ளதுபோலவும் - இந்த விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் - 

சுமந்திரனும் சயந்தனும் வாக்கெண்ணும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு அருகிலிருந்துகொண்டார்கள் என்றும் சுமந்திரனுக்கான வெற்றியை தன்னிடமிருந்து பறிந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 

1) யாழ் தேர்தல் களம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னதாகவே தெரிந்து, கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு பணிபுரிகின்ற அதிகாரிகள் மத்தியில் இது சாத்தியமா?

2) அப்படியே ஒரு சம்பவம் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அங்கு நிலவியது என்று எடுத்துக்கொண்டாலும், சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 27 734. அடுத்த இடத்திலுள்ள சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்குகள் 23 740. சசிகலா அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அதற்கும் கீழ்தானிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாலாயிரம் வாக்குகள் வித்தியாசம். வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவே வந்தால்கூட 4000 வாக்குகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போட்டு, வெற்றியை பறிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? 

3) அப்படியே சசிகலாவுக்கு வாக்கு முறைகேடு நடைபெற்றிருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு அருகிலிருக்கும் சித்தார்த்தன்தானே அவரது முதல் குற்றவாளியாக இருக்கமுடியும். ஏன் சுமந்திரனை குற்றப்படுத்துகிறார்?

எது எப்படியோ, சுமந்திரன் அங்கு அதிரடிப்படையினர் சமேதராக வந்து இறங்க - சுமந்திரனின் வெற்றியென்பது எப்போதும் முறைகேடாக மாத்திரமே அவருக்கு கிடைப்பதற்கு சாத்தியமுள்ளது என்று தீராத நம்பிக்கைகொண்ட "இனிய தோழர்கள் கூட்டம்" அவரைக்கண்டவுடன் குதூகலமாக -  சசிகாலா அவர்களும் மகளும் அந்தநேரம் பார்த்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேற - அத்தனை கமராக்களும் அது அறுசுவையாகிப்போனது. 

ஆனால், இங்குள்ள மிக முக்கியமான விடயம் - சசிகலா அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர். அவரே சுமந்திரனுக்கு எதிராக இவ்வாறு நடந்துகொண்டதானது, தேர்தலில் கூட்டமைப்பு அடைந்துள்ள சரிவோடு இன்னமும் கூடுதல் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. It was truly an ugly event.

சசிகலா அவர்கள் தனக்கு உண்மையிலேயே இந்தத்தேர்தலில் துரோகமிழைக்கப்பட்டிருக்கிறது என்று கருதினால், இதனை நேரடியாக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லலாம். அவரது வாக்குப்பெட்டி மீண்டும் பிரிக்கப்பட்டு எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவைப்பெறலாம். வழியில்லாமல் இல்லை.

இவை எதையும் கிஞ்சித்தும் தெரிந்துகொள்ளாமல், அவரின் அறியாமையை தங்களது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, சுமந்திரனின் மீது சேறடிக்கும் கூட்டத்துக்கு சசிகலா அவர்கள் பலியாடாகவேண்டியதில்லை.

தேர்தல் முடிவுகளை கேட்டபடி கடைவாய்நீர் வடிய அப்படியே நித்திரையான சிலது, தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று "சுமந்திரனாம் அடியுங்கடா... அடியுங்கடா" - என்று கத்தியபடி அரைகுறையாக ஓடுவதை பார்த்தால், கொரோனாவே அஞ்சப்போகிறது.

 

 

சசிகலாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏதோ தேர்தல் நடைமுறை/சட்டங்கள் தெரியாத மாதிரியும் இலங்கையில் இதுதான் முதல் தேர்தல் என்ற மாதிரியும் கதை போகின்றது. விசயம் தெரியாத சசிகலாவும் ஆதரவாளர்களும் என புனைகின்றார் இந்த எழுத்தாளர்.

எல்லாம் ஆளுக்கொரு முகநூல் வந்ததின் வினை.

⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

 உங்கடை சகுனி செய்த சாணக்கியமானவேலை ஒன்றை கூறமுடியுமா ?

வரலாற்று பாடத்தை கற்றுக்கொடுத்தது சரி தலைவருடன் சமமாக இங்கு யாரைக்கொண்டுவந்து நிறுவுகிறீர்கள் ? சுமத்திரனா ?

சுமத்திரனை  இயங்குவதே றோ  என்ற விடயமே தெரியாத அப்பாவியாக இருக்கிறீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணெளியை பார்த்தா ஒருவருக்கு இப்ப தான் தலைவர் புலிகள் தேவைப்படுகிறார்கள்.

14 minutes ago, Kapithan said:

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

கொழும்புக்கு போனால்த் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

உங்களுக்கு விளக்கம் குறைவு.

சசிகலாவின் வீட்டில் சிவாஜிலிங்கமும் அனந்தியும் இருந்த வேளையில் அங்கஜன் என்றி கொடுத்திருக்கிறார்.

கூட்டணியினரும் அங்கஜன் தரப்பும் தூண்டில் போடுகின்றனர் சசிகலாவை தம் பக்கம் இழுக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

 

 

மெய் ஒரு நாள் வெல்லும்.
விழித்திருங்கள். பாதுகாப்புடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

 

 

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும்.

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

12 minutes ago, கற்பகதரு said:

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

ஐயா கற்பகம், நீங்கள் இன்னமும் சுத்துமாத்திரனை புரிந்து கொள்ளவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilwin.com/politics/01/253063?ref=imp-news

1 hour ago, MEERA said:

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

மீரா முழு செய்தியையும் இணைக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

117339321_1682328998596770_6422896815239

முள்ளில சேலை பட்டாலென்ன சேலையில் முள் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம். இது முள்ளில்லை கொள்ளிக்கட்டை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.