Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

 

இதுவும் ஒரு மனிதப்பிறவி. அன்று கிழக்கில் மனோகணேசன் காப்பாற்றி அனுப்பினார். இன்று வடக்கில் சிங்களத்தின் படைகளே பெரும்பாடுபட்டு காப்பாற்றுது. இப்படி ஒரு பிழைப்பு வேண்டுமா? தேசியத்தலைவன் வாழ்ந்த மண்ணிலும் சில கேடுகெட்ட பிழைப்புகள் இதுக்கு பின்னால் எதுக்கோ ஆசைப்பட்டு நிக்கிதுகள். இது போதுமடா எவ்வளவு சிங்களம் சுற்றி நின்றாலும் “டேய் கள்ளா” “டேய் சுமந்திரன்” “கள்ளன் ஓடுடா” என காது கிழிய கத்தும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ப. தெய்வீகன் முகநூலில் எழுதியது. வாசிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேகமாக scroll செய்யவும்😀

 

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை. 

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர் 
மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, "அமைதிப்படை" படத்தில் 
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல - நிலமை மாறி - கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது. 

ஆனால், இவரது ஆத்திரம் ஆரோகணிப்பதற்கு காரணமாக அங்கு இன்னொரு சம்பவமும் நடத்துவிட்டது. 

கொழும்பிலிருந்துகொண்டு உள்ளடி வேலைகளினால் தனது வெற்றியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறார் என்று எதிர்த்தரப்பினர் மத்தியில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சாரத்தை பொய் என்று நிரூபிப்பதற்காக, தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிட்டார் என்ற தகவல் உறுதியான பின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிலிருந்த சுமந்திரன், மத்திய கல்லூரி வளாகத்துக்கு வந்தார். 

இந்த நேரத்தில், தான் நம்பியிருந்த வெற்றி கைதவறிப்போன விரக்தியிலிருந்த சசிகலா அவர்களும் அவரது மகளும் வாக்கெண்ணுமிடத்திலிருந்து கோபத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். தங்கள் தோல்விக்கு சுமந்திரனே பொறுப்பென்று பொரிந்து தள்ளிவிட்டுப்போயிருக்கிறார்கள். 

மத்திய கல்லூரி வளாகத்திற்குள் சசிகலா அவர்கள் கூறியதுபோலவும் - பின்னர் அவரது மகள் முகநூலில் பதிவுசெய்துள்ளதுபோலவும் - இந்த விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் - 

சுமந்திரனும் சயந்தனும் வாக்கெண்ணும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு அருகிலிருந்துகொண்டார்கள் என்றும் சுமந்திரனுக்கான வெற்றியை தன்னிடமிருந்து பறிந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 

1) யாழ் தேர்தல் களம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னதாகவே தெரிந்து, கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு பணிபுரிகின்ற அதிகாரிகள் மத்தியில் இது சாத்தியமா?

2) அப்படியே ஒரு சம்பவம் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அங்கு நிலவியது என்று எடுத்துக்கொண்டாலும், சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 27 734. அடுத்த இடத்திலுள்ள சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்குகள் 23 740. சசிகலா அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அதற்கும் கீழ்தானிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாலாயிரம் வாக்குகள் வித்தியாசம். வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவே வந்தால்கூட 4000 வாக்குகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போட்டு, வெற்றியை பறிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? 

3) அப்படியே சசிகலாவுக்கு வாக்கு முறைகேடு நடைபெற்றிருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு அருகிலிருக்கும் சித்தார்த்தன்தானே அவரது முதல் குற்றவாளியாக இருக்கமுடியும். ஏன் சுமந்திரனை குற்றப்படுத்துகிறார்?

எது எப்படியோ, சுமந்திரன் அங்கு அதிரடிப்படையினர் சமேதராக வந்து இறங்க - சுமந்திரனின் வெற்றியென்பது எப்போதும் முறைகேடாக மாத்திரமே அவருக்கு கிடைப்பதற்கு சாத்தியமுள்ளது என்று தீராத நம்பிக்கைகொண்ட "இனிய தோழர்கள் கூட்டம்" அவரைக்கண்டவுடன் குதூகலமாக -  சசிகாலா அவர்களும் மகளும் அந்தநேரம் பார்த்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேற - அத்தனை கமராக்களும் அது அறுசுவையாகிப்போனது. 

ஆனால், இங்குள்ள மிக முக்கியமான விடயம் - சசிகலா அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர். அவரே சுமந்திரனுக்கு எதிராக இவ்வாறு நடந்துகொண்டதானது, தேர்தலில் கூட்டமைப்பு அடைந்துள்ள சரிவோடு இன்னமும் கூடுதல் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. It was truly an ugly event.

சசிகலா அவர்கள் தனக்கு உண்மையிலேயே இந்தத்தேர்தலில் துரோகமிழைக்கப்பட்டிருக்கிறது என்று கருதினால், இதனை நேரடியாக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லலாம். அவரது வாக்குப்பெட்டி மீண்டும் பிரிக்கப்பட்டு எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவைப்பெறலாம். வழியில்லாமல் இல்லை.

இவை எதையும் கிஞ்சித்தும் தெரிந்துகொள்ளாமல், அவரின் அறியாமையை தங்களது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, சுமந்திரனின் மீது சேறடிக்கும் கூட்டத்துக்கு சசிகலா அவர்கள் பலியாடாகவேண்டியதில்லை.

தேர்தல் முடிவுகளை கேட்டபடி கடைவாய்நீர் வடிய அப்படியே நித்திரையான சிலது, தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று "சுமந்திரனாம் அடியுங்கடா... அடியுங்கடா" - என்று கத்தியபடி அரைகுறையாக ஓடுவதை பார்த்தால், கொரோனாவே அஞ்சப்போகிறது.

 

 

சசிகலாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏதோ தேர்தல் நடைமுறை/சட்டங்கள் தெரியாத மாதிரியும் இலங்கையில் இதுதான் முதல் தேர்தல் என்ற மாதிரியும் கதை போகின்றது. விசயம் தெரியாத சசிகலாவும் ஆதரவாளர்களும் என புனைகின்றார் இந்த எழுத்தாளர்.

எல்லாம் ஆளுக்கொரு முகநூல் வந்ததின் வினை.

⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

 உங்கடை சகுனி செய்த சாணக்கியமானவேலை ஒன்றை கூறமுடியுமா ?

வரலாற்று பாடத்தை கற்றுக்கொடுத்தது சரி தலைவருடன் சமமாக இங்கு யாரைக்கொண்டுவந்து நிறுவுகிறீர்கள் ? சுமத்திரனா ?

சுமத்திரனை  இயங்குவதே றோ  என்ற விடயமே தெரியாத அப்பாவியாக இருக்கிறீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணெளியை பார்த்தா ஒருவருக்கு இப்ப தான் தலைவர் புலிகள் தேவைப்படுகிறார்கள்.

14 minutes ago, Kapithan said:

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

கொழும்புக்கு போனால்த் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

உங்களுக்கு விளக்கம் குறைவு.

சசிகலாவின் வீட்டில் சிவாஜிலிங்கமும் அனந்தியும் இருந்த வேளையில் அங்கஜன் என்றி கொடுத்திருக்கிறார்.

கூட்டணியினரும் அங்கஜன் தரப்பும் தூண்டில் போடுகின்றனர் சசிகலாவை தம் பக்கம் இழுக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

 

 

மெய் ஒரு நாள் வெல்லும்.
விழித்திருங்கள். பாதுகாப்புடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

 

 

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும்.

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

12 minutes ago, கற்பகதரு said:

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

ஐயா கற்பகம், நீங்கள் இன்னமும் சுத்துமாத்திரனை புரிந்து கொள்ளவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilwin.com/politics/01/253063?ref=imp-news

1 hour ago, MEERA said:

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

மீரா முழு செய்தியையும் இணைக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

117339321_1682328998596770_6422896815239

முள்ளில சேலை பட்டாலென்ன சேலையில் முள் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம். இது முள்ளில்லை கொள்ளிக்கட்டை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.