Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

On Aug 6, 2020

நடந்து முடிந்த தேர்தலில்  செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார்.

கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனிடையே திட்டமிட்ட படி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் மாவட்ட செயலக வாக்கெண்ணலில் நேரடியாக நின்றிருக்கின்றமையும் அவர் சுமந்திரனின் தீவீர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.thaarakam.com/news/146459

 

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த, ஒன்று.
சென்ற முறைமாதிரி... இந்த முறையும், ஜில்லாலங்கடி  வேலை செய்து, 
பாராளுமன்றதுக்குள்  போக நினைக்கின்றார். சுமந்திரன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீறு கொண்ட தமிழினத்தால்  வீழ்த்தப்பட்ட சுமந்திரன்

Last updated Aug 6, 2020

cartoon-sampanthar-sumanthiran-copy.jpgநடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டதில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதை சாணக்கியம் என்றும்  இணக்க அரசியல் என்றும் கூறி கூட்டமைப்பு தமிழ் மக்களை  இதுவரை காலம் ஏமாற்றி வந்தது.

கூட்டமைப்பிற்குள் தேசியப்பட்டிலூடாக கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்று கூட்டமைப்பையே இருந்த இடமில்லாமல் செய்திருக்கிறார்.

சுமந்திரனால் பகடைக்காயாக கொண்டு வரப்பட்ட சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கில் முன்னணியில் இருப்பதுடன் விருப்பு வாக்குகளில் மோசடி செய்து அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு சுமந்திரன் தரப்பு முயல்வதாக தெரியவருவது குறிப்பிடத்தக்கது.
 

https://www.thaarakam.com/news/146462

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகிதசார வாக்கெடுப்பு எனும் சுத்துமாத்து இன்று இரவுக்குள் முடிவுகள் தலைகீழாக்கி தமக்கு வேண்டியவர்களை வெற்றி  பெற்றதாக காலையில் அறிவிப்பார்கள் சுமத்திரன் கடைசியாக நம்புவது இந்த கோல்மாலத்தான் இந்த வாக்களிப்பு முறையை குள்ளநரி  ஜேஆர் கொண்டுவந்தவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், , ’எங்கள் கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்லும்: சம்பந்தர் mt மக்கள் *சம்பந்தர்’ எனச்சொல்லும் உரை

Link to comment
Share on other sites

40 minutes ago, பெருமாள் said:

விகிதசார வாக்கெடுப்பு எனும் சுத்துமாத்து இன்று இரவுக்குள் முடிவுகள் தலைகீழாக்கி தமக்கு வேண்டியவர்களை வெற்றி  பெற்றதாக காலையில் அறிவிப்பார்கள் சுமத்திரன் கடைசியாக நம்புவது இந்த கோல்மாலத்தான் இந்த வாக்களிப்பு முறையை குள்ளநரி  ஜேஆர் கொண்டுவந்தவர் 

விகிதாசார வாக்கெடுப்பு தான் மிக சிறந்த முறை ; தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மிகவும் தவறானமுறை. இந்த முறையின் கீழ் ஒரு கட்சி பெற்ற வாக்குகளுக்கும் அதுன்பெற்ற ஆசனங்களுக்கும் நேரடி தொடர்புமிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தற் செய்திகளில்  இந்தச்   செய்தி குறித்து ஐபீசீ மூச்சுக்கூட விடவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. மத்திய கல்லூரி வளாகத்தில் கூச்சல் குழப்பம். தகவல் ஐபீசீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இழுபறி 

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 

 

 

யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-விருப்பு-வாக்கு-எண்ணிக்கையில்-இழுபறி/175-254026

யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடப்பது என்ன? சுமந்திரன் வந்ததும்! சசிகலா சென்றதும் (காணொளி)

August 7, 2020

 

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி முன்பாக விடிய விடிய தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் வந்த எம்.ஏ.சுமந்திரன் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார்.

mq2.jpg
அதேவேளையில் சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

 


 
 
 

http://thinakkural.lk/article/60600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா தோல்வி? சித்தார்த்தனின் நிலை என்ன?

August 7, 2020

mavai-000-300x162.jpg
 

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாலை வரையில் குழப்பமான நிலை காணப்பட்ட போதிலும், மாவை தோல்வியடைந்திருப்பதை செயலக வட்டாரங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்தன.

 

கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவானதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அவர்கள் யார் என்பது இன்று அதிகாலை உரை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

எஸ்.சிறீதரன் வெற்றிபெற்றிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவரைவிட த.சித்தார்த்தன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது. சித்தார்த்தன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் நான்காது இடத்தில் இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

அவர் நான்காவது இடத்துக்கு வந்தது எப்படி என? யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை 2.00 மணிவரையில் உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
 

http://thinakkural.lk/article/60589

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கெண்ணும் மையத்திற்கு சென்ற சுமந்திரனுக்கு எதிர்ப்பு: அதிரடிப்படை தாக்குதல்; மாவையின் மகன் மீதும் தாக்குதல்!

August 7, 2020
14ecab9b-68de-4b2c-927a-de036d549301-696

யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம் கலவர பூமியானது.

யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சற்று முன்னர் வாக்கெண்ணும் மையத்திற்கு சென்றார்.

இதன்போது, அங்கு குவிந்திருந்த பலரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வெறு கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்த்து குரல் எழுப்பினர்.

 

கோட்டாபய ராஜபக்சவின் விசேட உத்தரவில் அண்மையில் எம்.ஏ.சுமந்திரனுக்கு மேலதிக விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பெரும் படைப்பாதுகாப்புடனேயே சுமந்திரன் அங்கு சென்றார்.

1a98b8c6-cdfd-4175-b1dc-c931e6e10f17-150கூட்டத்தின்பெரும் எதிர்ப்பிலிருந்து சுமந்திரனை பாதுகாத்து அதிரடிப்படை பெரும் அரண் அமைத்தது. அத்துடன், கூட்டத்தினரை கலைந்து செல்ல பணித்தனர். எனினும், இளைஞர்கள் அங்குகுழுமியிருந்தனர்.

இதையடுத்து நிலைமை கட்டுமீறி செல்ல, இளைஞர்கள் மீது சுமந்திரனின் பாதுகாப்பு அதிரடிப்படையினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதன்போது, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனையும் அதிரடிப்படையினர் பிடித்து கொடூரமாக தாக்கினர்.

 

தாக்குதல் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து சுமந்திரனை பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேற்றினர். எனினும், இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று துரோகி என குரல் எழுப்பினர்.

137705e9-16a8-4708-887d-fa81f88a191a-150

 

எனினும், இளைஞர்கள் நெருங்காமல் சுமந்திரனின் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் அரண் அமைத்திருந்தனர்.
 

http://www.pagetamil.com/139083/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா! இவர்களின் தோல்வியை தடுத்து நிறுத்துவதற்கு பாவிக்கப்பட்ட பகடைக்காய். அனந்தி சசிதரன், முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன், இப்போது இவர். வருங் காலங்களில் இந்த வரிசை நீளும். இவர் இத்துடன் அரசியல் பாதையை நிறுத்திக்கொண்டு தன் பணியைத் தொடருவது இவருக்கு நல்லது. இல்லையேல் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டோடு, அவர் பணிகளுக்கும் தடை போட்டு, மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இவர் பெயரை  நாறடித்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வீறு கொண்ட தமிழினத்தால்  வீழ்த்தப்பட்ட சுமந்திரன்

Last updated Aug 6, 2020

cartoon-sampanthar-sumanthiran-copy.jpgநடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டதில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதை சாணக்கியம் என்றும்  இணக்க அரசியல் என்றும் கூறி கூட்டமைப்பு தமிழ் மக்களை  இதுவரை காலம் ஏமாற்றி வந்தது.

கூட்டமைப்பிற்குள் தேசியப்பட்டிலூடாக கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்று கூட்டமைப்பையே இருந்த இடமில்லாமல் செய்திருக்கிறார்.

சுமந்திரனால் பகடைக்காயாக கொண்டு வரப்பட்ட சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கில் முன்னணியில் இருப்பதுடன் விருப்பு வாக்குகளில் மோசடி செய்து அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு சுமந்திரன் தரப்பு முயல்வதாக தெரியவருவது குறிப்பிடத்தக்கது.
 

https://www.thaarakam.com/news/146462

அதே தமிழினம்தான் அங்கயனையும் அனுப்பி வைத்திருக்கிறது. 

நல்லவேளை இந்த சைக்கிள் க(g)ப்பில் முஸ்லீம் காங்கிறஸ் வடக்கில் ஒரு ஆசனமும் எடுக்கவில்லை. 

கவலை என்னவென்றால் இவ்வளவு தோல்வி (2009) அடைந்தும் ஓரணியால் நின்று பெரிய வெற்றியடைந்து தமிழரின் பலத்தை காட்ட முடியாத ஒரு கேவலங்கெட்ட இனம். சிங்ஙளவங்கள் எங்கேஐப்பார்த்து சிரிப்பார்கள். 

 

3 hours ago, தமிழ் சிறி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், , ’எங்கள் கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்லும்: சம்பந்தர் mt மக்கள் *சம்பந்தர்’ எனச்சொல்லும் உரை

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

அதுக்குள எங்களுட்ட ஒரு பழமொழி   வைச்சிருக்கிறம் “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” இதை மேடைகளில் இடைக்கிடை தூசி தட்டி பாவிக்போம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஏமாளிகளாக தொடர்ந்தும் இருந்து ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து, ஐந்து வருடம் கோமாளிகளின் கூத்தைப் பார்க்கலாம் என்றுதான் சம்பந்தர், சிறிதரன், சித்தார்த்தன்(?), சுமந்திரன்(?), கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன்(?), செல்வம்(?), பிள்ளையான், வியாழேந்திரன், சாணக்கியன், ஜனா (கோவிந்தம்
கருணாகரன்), டக்ளஸ் என்று பன்மைத்துவத்தை நிலைநாட்ட பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்.

11 வருஷம் பாராளுமன்றக் கதிரையில் இருக்கமுடியாமல் பின்பக்கம் நொந்திருந்த கஜேந்திரகுமார்தான் இவர்களுக்குள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்😁

கருணா அம்மானும், அம்பிகா அம்மையாரும் போயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ragaa said:

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

சிலருக்கு தூக்கம் கலைவது  இப்போதுதானாக்கும் வேலைவாய்ப்பு கேட்டு போன முன்னாள் போராளிகளை பேப்பர் படித்துக்கொண்டு ஏறெடுத்தும் பார்க்காமல் தீர்வை கேட்க்காமல்  வேலையை கேட்டால் தீர்வு தள்ளி போய் விடும் என்றவர்  கொழும்பில் சொகுசு மாளிகை சிங்கள அரசிடம் வாங்கும்போது என்ன நியாயம் சொன்னவர் ?

சுமத்திரன் எனும் கோடாலி காம்பு இதுவரை தமிழ் இனத்துக்கு செய்தது எல்லாம் துரோகம் ஒன்றே அது தவிர வேறு ஒன்றில்லை . இவர்கள் சூடு சுரணை இல்லாதவர்கள் மீண்டும் பின்கதவால் உள்ளே வருவினம் இன்னும் தமிழனுக்கு அழிவைத்தவிர  வேறொன்றுமில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எப்போதாவது இரண்டாவது முறை அதுவும் சாமம்  12 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுவது உண்டா ?  சுமத்திறனை வெறியாளர்  என்று அறிவிக்கினம் அவரும் வருகிறார் மாவையின்  மகனுக்கும் அடி விழுது எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலின்படி .

இனி என்ன வீட்டை இரண்டாய் உடைப்பது தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கேவலமான முறையில் தெரிவத்தாட்சி அலுவலர் உட்படச் செயற்பட்டுள்ளார்கள். ஒரு பெண். மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படி இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளார். வட-கிழக்கு மற்றும் புலம்பெயர் பெண்களமைப்புகள் தமது கண்டனங்களைத் தெரிவிப்பதோடு போராட்டுங்களை நடாத்தி நீதியை நிலைநாட்டுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 ம் இடத்தின் கீழ்  இருந்தார்  சம் …
2 ம் இடத்திற்கு தாவினார் குதிரையில் ….
கோத்தாவின் கையிலும் கொள்ளு கொள்ளை
குதிரைகளும் தேவை ஒன்றிரண்டு
இரண்டும் இரண்டும் நாலு …
கொழும்பில் புது வீடு …
கொரோன முடிய புஸ்பகத்தில் ஊர்கோலம் ..
கோமணத்தை தைச்சுப் போடும் ஏமாளிக்  கூட்டம்
கச்சியேகம்பனே …


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

இவர்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கைகொடுத்து தூக்கிவிட, இவர்கள் ஏத்திவிட்டவர்கள் மேலேயே சவாரி செய்ய வெளிக்கிட்டதால் விளைந்த பயன் இது. முடியாவிட்டால் பதவி விலகி மற்றவர்களுக்கு இடம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். தன் மூக்குப் போனாலும் பிறருக்கு சகுனப் பிழையாக வேண்டும் என்று அடம்பிடித்தது யார்? 

Link to comment
Share on other sites

சுமந்திரனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள வில்லை! எனக்காக பிரசாரம் செய்த தம்பி உமாகரன்
சுமந்திரனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள வில்லை! எனக்காக பிரசாரம் செய்த தம்பி உமாகரன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இழுபறி 

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 

 

 

யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-விருப்பு-வாக்கு-எண்ணிக்கையில்-இழுபறி/175-254026

யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடப்பது என்ன? சுமந்திரன் வந்ததும்! சசிகலா சென்றதும் (காணொளி)

August 7, 2020

 

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி முன்பாக விடிய விடிய தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் வந்த எம்.ஏ.சுமந்திரன் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார்.

mq2.jpg
அதேவேளையில் சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

 


 
 
 

http://thinakkural.lk/article/60600

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து சுமந்திரன் எனும் பெயருக்கேற்றாப்போல் நடந்திருக்கின்றார். இவருக்கு இனிவரும் காலங்கள் மிக கடுமையானதாகவே இருக்கப்போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?


 

நீங்கள்தானே அவர் வந்தால் நல்லது வல்லது என்றெல்லாம் முந்தநாள்  எழுதினது நாங்க சொல்றதை கொஞ்சம் காது  குடுத்து கேட்டிங்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

நீங்கள்தானே அவர் வந்தால் நல்லது வல்லது என்றெல்லாம் முந்தநாள்  எழுதினது நாங்க சொல்றதை கொஞ்சம் காது  குடுத்து கேட்டிங்களா ?

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 

இதையும் விட கேவலமாக இறங்குவார்

IMG-0750.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.