Jump to content

ரணில் எம்.பி பதவியை இழந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் எம்.பி பதவியை இழந்தார்

spacer.png

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 42 வருடங்களின் பின்னர் தனது எம்.பி பதவியை இழந்துள்ளார்.

கொழும்பில் போட்டியிட்ட அவரின் ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையே மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது. இது 2.61 வீதமாகும். இவ்வாறான நிலைமையில் அந்த கட்சி ஆசனங்களை ஒதுக்குவதற்கான மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த கட்சிக்கு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவியுள்ளார்.

இதேவேளை இந்த மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளையும் , ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி 67,600 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/ரணில்-எம்-பி-பதவியை-இழந்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யே.ஆர் என்ற நரியால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு  ரணிலென்ற நரிக்கே ஆப்பாகிவிட்டது. இதனைத் தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதோ. பேச்சுக்கு அழைத்துத் தமிழர் தரப்பின் போராட்டசக்தியை அழித்த கட்சி இன்று இறுதி அத்தியாயத்தில் நிற்கிறது.  அதேவேளை மேலெழுந்துள்ள சிங்களப் பெருந்தேசியவாதம் இலங்கைத் தீவைச் சின்னாபின்னமாக்கப்போகிறது.  தமிழர்களின் நிலை மேலும் ஆபத்தினுள் செல்லப்போகிறது. வெற்றிவாத நாயகராக  சிங்களவர்களால் இழுத்துவரப்படும்  இவர்கள் மீணடுமொருமுறை ருவான்வெலிசாயவில் பிரதமர் பதவியேற்கலாம்.

Link to comment
Share on other sites

தமிழர் பிரச்சனையை தீர்க்க இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள் 2002லும் 2015லும் இருந்தும் அதை தவறவிட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

ரணில் எம்.பி பதவியை இழந்தார்

இந்தத் தேர்தலில்
ரணில் தோற்றதும்
கஜன் வென்றதும்
ஒரு நிம்மதி.

Link to comment
Share on other sites

34 minutes ago, Dash said:

தமிழர் பிரச்சனையை தீர்க்க இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள் 2002லும் 2015லும் இருந்தும் அதை தவறவிட்டவர்.

அவர் மட்டுமல்ல. நம்மவரும்  2002ல் இருந்து 2009 வரை சந்ததர்ப்பங்களை தவற விட்டனர் பின்னர 2015 ல் தவற விட்டனர். அவரது தோல்வி தனி மனித தோல்வி. எம்மவர் விட்ட தவறால் வந்த தோல்வி எமது இனத்தில் தோல்வி மட்டுமல்ல பேரிழப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

அவர் மட்டுமல்ல. நம்மவரும்  2002ல் இருந்து 2009 வரை சந்ததர்ப்பங்களை தவற விட்டனர் பின்னர 2015 ல் தவற விட்டனர். அவரது தோல்வி தனி மனித தோல்வி. எம்மவர் விட்ட தவறால் வந்த தோல்வி எமது இனத்தில் தோல்வி மட்டுமல்ல பேரிழப்பு.

அருமையான கருத்து. 👍🏼

Link to comment
Share on other sites

ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு.

 - நியூட்டனின் மூன்றாம் விதி

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

அவர் மட்டுமல்ல. நம்மவரும்  2002ல் இருந்து 2009 வரை சந்ததர்ப்பங்களை தவற விட்டனர் பின்னர 2015 ல் தவற விட்டனர். அவரது தோல்வி தனி மனித தோல்வி. எம்மவர் விட்ட தவறால் வந்த தோல்வி எமது இனத்தில் தோல்வி மட்டுமல்ல பேரிழப்பு.

2002 இலிருந்து 2009 வரை சந்தர்ப்பங்கள் வந்ததாக ஏமாற்றப்பட்டோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்படுத்தப்பட்டது ஒரு மாயை. 

Link to comment
Share on other sites

6 hours ago, Dash said:

தமிழர் பிரச்சனையை தீர்க்க இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள் 2002லும் 2015லும் இருந்தும் அதை தவறவிட்டவர்.

போராட்டத்தை உடைத்து கருணாவை வெளியேற்றிய மனிதர். மிகவும் தந்திரமான அரசியல்வாதி. ஒரு வகையில் யுத்தத்தை நிறுத்த சந்தர்ப்பதை வழங்கி மக்களுக்கு நிம்மதியை கொடுத்தார். இருந்தாலு அரசியல் தீர்வையும் வழங்கி இருந்தால் தமிழ் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். சிங்கள மக்களை பொறுத்த வரைக்கும் ரணில் கிராம சபையை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாடடார்கள். ஆனால் ராஜபக்சேக்கள் வட கிழக்கை இணைத்து சுயாட்சி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

Link to comment
Share on other sites

8 hours ago, செந்தமிழாளன் said:

2002 இலிருந்து 2009 வரை சந்தர்ப்பங்கள் வந்ததாக ஏமாற்றப்பட்டோம். 

எமது திறமையீனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து எப்போதும் மற்றவன் ஏமாற்றிவிட்டான் என்று கூறுவது எமது வழமை தானே. கத்தியால் என் விரலை நானே வெட்டிக்கொண்டுவிட்டேன் என்று கூறாமல் ‘கத்தி வெட்டிவிட்டது’ என்று கூற பழக்கப்படுத்தி விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எமது திறமையீனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து எப்போதும் மற்றவன் ஏமாற்றிவிட்டான் என்று கூறுவது எமது வழமை தானே. கத்தியால் என் விரலை நானே வெட்டிக்கொண்டுவிட்டேன் என்று கூறாமல் ‘கத்தி வெட்டிவிட்டது’ என்று கூற பழக்கப்படுத்தி விட்டார்கள். 

Super Thumbs Up GIF - Super ThumbsUp Vadivelu GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அவரின் அரசியல் வாழ்வையும், கட்சியையும் சூனியமாகி, ராஜபக்சே களின் பொறுப்பு  கூறலாய் தடுத்து இருக்கிறார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.