Jump to content

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விவரம்:

இரா. சம்பந்தன்

விக்னேஸ்வரன்

சித்தார்த்தன்

செல்வம் அடைக்கலநாதன்

டக்ளஸ் தேவானந்தா

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மனோ கணேசன்

சுமந்திரன்

சிவஞானம் ஶ்ரீதரன்

அங்கஜன ராமநாதன்

சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஜெயராஜலிங்கம்

குலசிங்கம் தீபன்

பிள்ளையான் - சந்திரகாந்தன்

சாணாக்கிய ராகுலன்

கோவிந்தன் கருணாகரன்

வேலுகுமார்

வியாழேந்திரன்

பழனி திகம்பரம்

வேலுச்சாமி ராதாகிருஷ்ணன்

உதயகுமார்

ஜீவன் தொண்டமான்

மருதபாண்டி ராமேஸ்வரன்

வடிவேல் சுரேஷ்

அரவிந்தகுமார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விவரம்:

இரா. சம்பந்தன்

விக்னேஸ்வரன்

சித்தார்த்தன்

செல்வம் அடைக்கலநாதன்

டக்ளஸ் தேவானந்தா

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மனோ கணேசன்

சுமந்திரன்

சிவஞானம் ஶ்ரீதரன்

அங்கஜன ராமநாதன்

சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஜெயராஜலிங்கம்

குலசிங்கம் தீபன்

பிள்ளையான் - சந்திரகாந்தன்

சாணாக்கிய ராகுலன்

கோவிந்தன் கருணாகரன்

வேலுகுமார்

வியாழேந்திரன்

பழனி திகம்பரம்

வேலுச்சாமி ராதாகிருஷ்ணன்

உதயகுமார்

ஜீவன் தொண்டமான்

மருதபாண்டி ராமேஸ்வரன்

வடிவேல் சுரேஷ்

அரவிந்தகுமார்

ப்ளீஸ்... நாதமுனி,
சுமந்திரன்.. சிங்களத் தமிழன்.  
அவரை, இந்த லிஸ்ட்டிலிருந்து நீக்கி விடுங்கோ. :grin:

இப்ப... 24 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது. ❤️ 👍 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ப்ளீஸ்... நாதமுனி,
சுமந்திரன்.. சிங்களத் தமிழன்.  
அவரை, இந்த லிஸ்ட்டிலிருந்து நீக்கி விடுங்கோ. :grin:

இப்ப... 24 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது. ❤️ 👍 🤣

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

நாதமுனி நீங்கள் யதார்த்மாகச் சொல்கிறீர்கள். ஆனால் நடைமுறையிற் பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. ஆனால்,   சுமந்திரன் தமிழருக்காக் குரல் கொடுப்பாரென நான்நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

சம்பந்தன் ஐயா... எதிர்க் கட்சித்  தலைவர் பதவியில் இருந்த போது... 
தமிழ்த்  தேசிய கூட்டமைப்புக்கு... மட்டும் 22 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றில் இருந்து வந்த,
விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் உட்பட...
மலையகத் தமிழர் கட்சிகளிலிருந்து.. தேர்தெடுக்கப் பட்ட  தமிழர்கள்...
நாற்பது தமிழ் உறுப்பினர்களை... தாண்டி இருக்கும்.

எதிர்க் கட்சித்  தலைவர் பதவி போன்ற...
ஒரு பிரதமருக்கு.. சமமான பதவியை,  வைத்துக் கொண்டு...

அந்த,  முக்கியமான கால கட்டிடத்தில்....  தனது  இனத்திற்காக செயல் படாதவர்கள்,

"வெள்ளம்... தலைக்கு,  மேலே போன பின்பு",
(சர்வதேச போர்க் குற்ற விசாரணை போன்றவை) 
இனியும்...  ஒற்றுமையாக செயல் படுவார்கள் என்று நினைக்க முடியவில்லை.

ஆனாலும்... நீங்கள் கூறியது போன்று...
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார்... போன்றவர்கள்...
தமது, குரலை... கொடுத்தே ஆக வேண்டும்.

இல்லையேல்... அவர்களின் கட்சியும்,  தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு போன்று..
அடுத்த தேர்தலில், தாயக மக்களால்  நிராகரிக்கப் படும்,  
என்ற பயம்... இருக்கும், என்பதை.. கவனத்தில் எடுப்பார்கள்.

டிஸ்கி: சிவாஜி லிங்கமும்.. பாராளுமன்றம் போயிருந்தால்.. இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். :grin:
டிஸ்கிக்கு டிஸ்கி: சிவாஜியின் குறிக்கோள்... ஸ்ரீ லங்காவின் அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் ஐயா... எதிர்க் கட்சித்  தலைவர் பதவியில் இருந்த போது... 
தமிழ்த்  தேசிய கூட்டமைப்புக்கு... மட்டும் 22 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றில் இருந்து வந்த,
விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் உட்பட...
மலையகத் தமிழர் கட்சிகளிலிருந்து.. தேர்தெடுக்கப் பட்ட  தமிழர்கள்...
நாற்பது தமிழ் உறுப்பினர்களை... தாண்டி இருக்கும்.

எதிர்க் கட்சித்  தலைவர் பதவி போன்ற...
ஒரு பிரதமருக்கு.. சமமான பதவியை,  வைத்துக் கொண்டு...

அந்த,  முக்கியமான கால கட்டிடத்தில்....  தனது  இனத்திற்காக செயல் படாதவர்கள்,

"வெள்ளம்... தலைக்கு,  மேலே போன பின்பு",
(சர்வதேச போர்க் குற்ற விசாரணை போன்றவை) 
இனியும்...  ஒற்றுமையாக செயல் படுவார்கள் என்று நினைக்க முடியவில்லை.

ஆனாலும்... நீங்கள் கூறியது போன்று...
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார்... போன்றவர்கள்...
தமது, குரலை... கொடுத்தே ஆக வேண்டும்.

இல்லையேல்... அவர்களின் கட்சியும்,  தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு போன்று..
அடுத்த தேர்தலில், தாயக மக்களால்  நிராகரிக்கப் படும்,  
என்ற பயம்... இருக்கும், என்பதை.. கவனத்தில் எடுப்பார்கள்.

டிஸ்கி: சிவாஜி லிங்கமும்.. பாராளுமன்றம் போயிருந்தால்.. இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். :grin:
டிஸ்கிக்கு டிஸ்கி: சிவாஜியின் குறிக்கோள்... ஸ்ரீ லங்காவின் அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைக்கின்றேன். 🤣

கூட்டமைப்பு ஒரு தேசிய பட்டியலில் யாரு போகப்போகினம் எண்டு தெரியவில்லை. 

அடிச்ச மகிந்தா காத்தில, அம்மி... சா.... ரணிலே பறந்துபோனார்....

அவரும் தேசிய பட்டியல் தானாம்... தோல்வி அடைந்தவர்கள் தேசிய பட்டியல் ஊடாக வர கூடாது என்று நியாயம் பிளந்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

எல்லோருக்கும் விளங்கினால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wanni

ஐக்கிய மக்கள் சக்தி

 

  • ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

 

இலங்கை தமிழரசு கட்சி

 

  • சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

 

  • செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

 

  • நோதராதலிங்கம் – 15,190 வாக்குகள்

 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

 

  • காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

 

  • குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

The Losers

8 ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 24 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை.

இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன...

  1. ரணில் விக்ரமசிங்க,
  2. சதுர சேனரத்ன,
  3. விஜித் விஜயமுனி சோய்சா,
  4. சுனில் ஹந்துன்நெத்தி
  5. ரவி கருணாநாயக்க,
  6. நிரோஷன் பிரேமரத்னே,
  7. லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
  8. வஜிரா அபேவர்தன,
  9. நலிந்த ஜெயதிஸ்ஸ,
  10. பாலித தேவரப்பெரும,
  11. சுசந்த புஞ்சினிலமே,
  12. நவின் திசாநாயக்க,
  13. தயா கமகே,
  14. அகிலா விராஜ் காரியவசம்,
  15. அசோகா அபேசிங்க,
  16. ஜே.சி. அலவதுகொட,
  17. பாலித ரங்கே பண்டார,
  18. மனோஜ் சிறிசேன,
  19. தலதா அத்துகோரல,
  20. ஹிருனிகா பிரேமச்சந்திர,
  21. அர்ஜுன ரனதுங்க,
  22. ருவன் விஜேவர்தன,
  23. AHM பௌசி
Link to comment
Share on other sites

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர் மங்கள.... ரவி அறிவித்ததாக எனக்கு தெரியவில்லை.

நான் பதிவு செய்த, ஹிருனிகாவின் புதிய படம் பார்த்து.... மருதர் நொந்து நூடில்ஸ் ஆகிப் போட்டார். 

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர் மங்கள.... ரவி அறிவித்ததாக எனக்கு தெரியவில்லை.

நான் பதிவு செய்த, ஹிருனிகாவின் புதிய படம் பார்த்து.... மருதர் நொந்து நூடில்ஸ் ஆகிப் போட்டார். 

அட...நீங்கள் சொல்வது சரி நாதம்.

ஹிருணிகா தோற்றுவிட்டார் என்ற கவலையிலா அல்லது லைட்டா எனக்கு வயசு போகின்றதாலோ தெரியவில்லை,,, பெயர்களில் குழம்பி விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அட...நீங்கள் சொல்வது சரி நாதம்.

ஹிருணிகா தோற்றுவிட்டார் என்ற கவலையிலா அல்லது லைட்டா எனக்கு வயசு போகின்றதாலோ தெரியவில்லை,,, பெயர்களில் குழம்பி விட்டேன். 

ஹிருணிகாவின் அப்பருக்கு வெடி வைத்தவருக்கு, விரைவில் ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கும். 

image_725b33b53b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

 

நாதம்ஸ் உங்களை நான் இந்த லெவெலுக்கு யோசிக்கவில்லை! நல்லாத்தான் செம்பு தூக்கிறீர்கள்! யாழில் எல்லோரையும் முட்டாள்களென்ற சுமந்திரன்  எடுபிடிகளின் பாணியிலேயே பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

நிழலி,  
தேவரப் பெருமா....   என்பது தமிழராக இருந்து, சிங்களவராக வந்த பெயர் என்று,
நாதமுனி... வேறு ஒரு பதிவில், சில மாதங்களுக்கு, முன் எழுதியிருந்தார்.

அவரின் உண்மையான,  பூர்வீக  தமிழ்ப் பெயர்.. தேவாரப்  பெருமாள் என்றே வருமாம்.
அவர்.. எழுதிய கருத்து.. என்னை பல நாட்கள், சித்திக்க வைத்தது.

இப்படித்தான்... எமது, வருங்கால சந்ததியும்.. காணாமல் போய் விடுமோ..
என்ற, பயமும்... வந்து, எனது நினைவைகளை குழப்பிக் கொண்டே இருந்தது. 
அதனை... நீங்கள், சொல்லி...  எனது மன ஓட்டத்திற்கு, வடிகால்.. அமைத்துத் தந்து விட்டீர்கள்.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Wanni

ஐக்கிய மக்கள் சக்தி

 

  • ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

 

இலங்கை தமிழரசு கட்சி

 

  • சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

 

  • செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

 

  • நோதராதலிங்கம் – 15,190 வாக்குகள்

 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

 

  • காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

 

  • குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

The Losers

8 ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 24 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை.

இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன...

  1. ரணில் விக்ரமசிங்க,
  2. சதுர சேனரத்ன,
  3. விஜித் விஜயமுனி சோய்சா,
  4. சுனில் ஹந்துன்நெத்தி
  5. ரவி கருணாநாயக்க,
  6. நிரோஷன் பிரேமரத்னே,
  7. லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
  8. வஜிரா அபேவர்தன,
  9. நலிந்த ஜெயதிஸ்ஸ,
  10. பாலித தேவரப்பெரும,
  11. சுசந்த புஞ்சினிலமே,
  12. நவின் திசாநாயக்க,
  13. தயா கமகே,
  14. அகிலா விராஜ் காரியவசம்,
  15. அசோகா அபேசிங்க,
  16. ஜே.சி. அலவதுகொட,
  17. பாலித ரங்கே பண்டார,
  18. மனோஜ் சிறிசேன,
  19. தலதா அத்துகோரல,
  20. ஹிருனிகா பிரேமச்சந்திர,
  21. அர்ஜுன ரனதுங்க,
  22. ருவன் விஜேவர்தன,
  23. AHM பௌசி

நாதம் தலதா அத்துக்கோரள வென்றதாக போட்டிருந்தது

இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பவித்ரா வன்னியாராச்சி – 200,977
பிரேமலால் ஜயசேகர – 104,237
ஜானக வக்கும்புர – 101,225
காமினி வலேபொட – 85,840
அகில எல்லாவல – 71,179
வாசுதேவ நாணயக்கார – 66,991
முதிதா பிரியாந்தி – 65,923
ஜோன் செனவிரத்ன – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷான் விஜய விதானகே – 60,426
வருண பிரியந்த லியனகே – 47,494
தலதா அதுகோரல – 45,105

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66 வாக்குகளால் பிள்ளையானின் கட்சி தேசிய பட்டியலை இழந்ததாமே, உண்மையா?
 

5 hours ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

அவர் வீட்டில் இருக்கும் மட்டும் அவரது வாக்குகள் குறைந்து இருந்தது..அவர் அங்கு வந்து உள்ளே போய் கதைத்ததும் வாக்குகள் டக்கென்று கூடிட்டுது எப்படி  என்று மட்டும் சொல்லுங்கோ.
அடுத்தது நன்கு படித்த சிங்கள ,ஆங்கில சட்ட புலமை கொண்ட சுமத்திரன் இது வரை பாராளுமன்றத்தில் தமிழர் பிரச்சனை தொடர்பாக ஏதாவது ஆக்க பூர்வமாய் கதைத்து உள்ளாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நாதம்ஸ் உங்களை நான் இந்த லெவெலுக்கு யோசிக்கவில்லை! நல்லாத்தான் செம்பு தூக்கிறீர்கள்! யாழில் எல்லோரையும் முட்டாள்களென்ற சுமந்திரன்  எடுபிடிகளின் பாணியிலேயே பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.🙏

இதற்கு முந்திய அவரது பல கருத்துக்களை வாசித்து இருந்தால் படித்தவர்கள் மட்டும் ஏதோ கிழிப்பார்கள் என்கிற மாதிரி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

ஒரு கிரெ கூஸ் வொட்க்காவை அடிச்சிட்டு இருக்கிறன் 
இதை மட்டும் எதிர்பார்க்கவில்லை 

Buy Grey Goose 6 Liters (France) Big Bottles online

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.