Jump to content

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின், மகள் பிரவீனா ரவிராஜ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

விருப்புத்தெரிவு வாக்குகளை எண்ணும்போது மாலை 6 மணியளவில் தமது தாயார் இரண்டாம் இடத்தில் இருந்தார். எனினும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அவர் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

இறுதி முடிவு அறிவிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டநிலையில் அங்கு வந்த சுமந்திரனும் அவருடைய ஆதரவு அரசியல்வாதியான சயந்தனும் விருப்பு வாக்கு எண்ணும் அறைக்குள் அமர்ந்திருந்ததாக பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணும் அறைக்குள் செல்லமுடியாதபோது சுமந்திரனும், சயந்தனும் அந்த அறைக்குள் அமர்ந்திருந்தாக பிரவீனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பின்னரே இறுதிமுடிவு தமது தாயாருக்கு பாதமான வகையில் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது தமது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அறிவிக்க முயற்சித்தபோதும் அவர் தமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் பிரவீனா ரவிராஜ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுமந்திரன், பிரவீனா ரவிராஜ் அவரரை சுற்றியுள்ளவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறினார்.

விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றியமைக்க வழி இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

விருப்புத்தெரிவு கணக்கெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் சசிக்கலா ரவீராஜ் இரண்டாவது இடத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இறுதி எண்ணிக்கையின்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை விருப்புத்தெரிவு வாக்குகள் எண்ணப்படும்போது தான் ஒருபோதும் எண்ணும் மையத்திற்குள் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/special/01/252953?ref=rightsidebar-lankasrinews

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சிங்கள எஜமானர்களின் செல்லப் பிள்ளைகள்.. எங்கும் போய் எதிலும் வெல்வார்கள் சொறீலங்காவில்.. அவர்கள் பெரியாக்கள். தெரியாமல்.. இவர்களின் பின்னால் போய் ஏமாந்து தான் இவர்களைப் பற்றிப் படிக்க வேண்டியதானது கவலைக்குரிய விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

கூலிப்படை விட்டிருக்குமா அவருக்கு அடிக்க? இதே சாட்டாக அப்பகுதி இளைஞரை தூக்கி உள்ளுக்கை போட்டிருக்கமாட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அறிவிக்க முயற்சித்தபோதும் அவர் தமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அது ஒருகாலமும் ரெலிபோன் எடுக்காது. ஆக மிஞ்சினால் ரெலிபோனை தூக்கி வைச்சிட்டு கிடந்துடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதை மூடிக்கொண்டு படுத்திருந்திருப்பார். கோவிக்கக் கூடாது  நேரம் அப்பிடியான நேரம். எதிர்பாராத முடிவுகள் கேட்க சக்தி இருந்திருக்குமா. மாரடைப்பு வராமல் தப்பியதே பெரும் பிழைப்பு. இன்னும் ஐந்து வருடம் தேரோடவேண்டுமே? யமன் கண்ணில் தப்பி. 

Link to comment
Share on other sites

 

1 hour ago, satan said:

கூலிப்படை விட்டிருக்குமா அவருக்கு அடிக்க? இதே சாட்டாக அப்பகுதி இளைஞரை தூக்கி உள்ளுக்கை போட்டிருக்கமாட்டார். 

 

6 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் சசிகலா ரவிராஜ்

முன் கதவால் போக பின் கதவால் போகுமாறு சொன்னார்கள்.ஆனால் பின் கதவால் போன போது உள்ளே விடவில்லை.அந்த நேரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளே இருந்தார்.அவர் எப்படி உள்ளே இருக்கிறார் என்ற கேள்விக்கு யாருமே பதிலளிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.
மேலே உள்ளதில் இரண்டாவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கற்பகதரு said:

 

 

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

இங்கு எல்லோருமே கள்ளர்கள்தான். நல்ல(?) கள்ளரை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அது சரி ஏன் மாரு வாக்கு எண்ணிக்ககைக்கு போக முடியாது? துணிவிருந்தால் அதட்குரிய நடவடிக்கை எடுக்கலாமே? அப்படி இல்லாவிடடாள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அரசாங்க அதிபரும் கூட அங்கு எவ்விதமான முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சாவகச்சேரி வாக்குகள் முதல் என்னப்பட்டிருக்கலாம் , அதைவைத்துக்கொண்டு இவர்கள் முடிவெடுத்துவிடடார்கள்.

இங்கு சத்தமிடடவர்கள், கோசம் போடடவர்கள் எல்லாம் சிவாஜி , காந்த போன்ற பிரபல(?) அரசியல்வாதிகளின் கூலிப்படைகள் என்று அறிந்தேன். உண்மை தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கற்பகதரு said:

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

32 minutes ago, Robinson cruso said:

இங்கு எல்லோருமே கள்ளர்கள்தான். நல்ல(?) கள்ளரை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அது சரி ஏன் மாரு வாக்கு எண்ணிக்ககைக்கு போக முடியாது? துணிவிருந்தால் அதட்குரிய நடவடிக்கை எடுக்கலாமே? அப்படி இல்லாவிடடாள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அரசாங்க அதிபரும் கூட அங்கு எவ்விதமான முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சாவகச்சேரி வாக்குகள் முதல் என்னப்பட்டிருக்கலாம் , அதைவைத்துக்கொண்டு இவர்கள் முடிவெடுத்துவிடடார்கள்.

இங்கு சத்தமிடடவர்கள், கோசம் போடடவர்கள் எல்லாம் சிவாஜி , காந்த போன்ற பிரபல(?) அரசியல்வாதிகளின் கூலிப்படைகள் என்று அறிந்தேன். உண்மை தெரியவில்லை.

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

Link to comment
Share on other sites

14 minutes ago, பெருமாள் said:

 

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் சுமத்திரன் தான் இருக்கவில்லை என்று பகிரங்கமாக ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார். தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் சுமத்திரன் இருந்தார் என்று சொல்பவர்கள் தாம் எடுத்த படங்கள், வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு பிரபலமாக அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. செய்யலாமே?😄

15 minutes ago, பெருமாள் said:

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

வரதராஜ பெருமாள் றோவின் ஆள் என்பதை உலகறியும். என்னை யாரறிவார்? 😀

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

நேற்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் சசிகலா ரவிராஜ்

முன் கதவால் போக பின் கதவால் போகுமாறு சொன்னார்கள்.ஆனால் பின் கதவால் போன போது உள்ளே விடவில்லை.அந்த நேரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளே இருந்தார்.அவர் எப்படி உள்ளே இருக்கிறார் என்ற கேள்விக்கு யாருமே பதிலளிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.
மேலே உள்ளதில் இரண்டாவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நான் கேட்டேன். அங்கே தான் சங்கதியே இருக்கிறது. உள்ளே போவதற்கு சட்டரீதியான முறைகள் உள்ளன. அவற்றை தெரிந்தவர்கள் போக முடிகிறது. அந்த உள்ளே என்பது வாக்கு எண்ணும் இடமும் அல்ல. இவவையும் பின்னர் அடையாளம் கண்டு உள்ளே விட்டதால் தான் உள்ளே இருந்தவரிடம் எப்படி வந்தீர்கள்? என்று கேட்டுவிட்டு பதில் கிடைக்காமல் வெளியே வந்ததாக சொல்கிறா. இவ பாராளுமன்றம் போனால் என்ன பயன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

நான் கேட்டேன். அங்கே தான் சங்கதியே இருக்கிறது. உள்ளே போவதற்கு சட்டரீதியான முறைகள் உள்ளன. அவற்றை தெரிந்தவர்கள் போக முடிகிறது. அந்த உள்ளே என்பது வாக்கு எண்ணும் இடமும் அல்ல. இவவையும் பின்னர் அடையாளம் கண்டு உள்ளே விட்டதால் தான் உள்ளே இருந்தவரிடம் எப்படி வந்தீர்கள்? என்று கேட்டுவிட்டு பதில் கிடைக்காமல் வெளியே வந்ததாக சொல்கிறா. இவ பாராளுமன்றம் போனால் என்ன பயன்? 

சரி இப்படியானவர்களை தெரிவு செய்தது யார்?
மக்களா?

நானறிந்தவரை சித்தார்த்தரை 4வதாக போட முயற்சி செய்ய இளைஞர்களிடம் எதிர்ப்பு கிழம்ப தான் சசிகலா ரவிராஜ்சில் கை வைத்திருக்கிறார்கள்.

இனி என்ன எல்லாம் முடிந்து முடிவும் அறிவித்தாகி விட்டது.

16 காவலுடன் வரும் சுமந்திரன் இன்னும் 4 காவல்படை கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு ராஜபக்க்ஷ குழுவினரால் தமிழ் தே கூட்டமைப்புக்குள் நுழைக்கப்பட்ட கறுப்பாடு சுமந்திரன். தட்டிக்கேட்க வக்கில்லாமல், சம்பந்தன் என்கிற பெருச்சாளியை  வாங்க  வைத்து  கட்டிப்போட்டு விட்டார்.தமிழனின் தலையெழுத்து எழுபது வருடங்களாக இதுகளை சுமந்து பணக்காரராக்கி, நலிந்து போய் சேடம் இழுத்துக்கொண்டிருக்கு. அடுத்த தேர்தலுக்கிடையில் விதியோ, சுமந்திரனோ முந்திக்கொண்டு  முடிவு எழுதி துப்புக்கெட்ட தலைவருக்கு பிரியாவிடை நடைபெறலாம். அப்போது "துரோகி எழுபது வருடங்களாக எமது இனத்தை அனாதைகளாக்கி, அடிமைகளாக விற்று விட்டு ஊர்கோலம் போறானே." என்று ஒரு கூட்டம் ஒப்பாரி வைக்கும். 

Link to comment
Share on other sites

37 minutes ago, ஈழப்பிரியன் said:

நானறிந்தவரை சித்தார்த்தரை 4வதாக போட முயற்சி செய்ய இளைஞர்களிடம் எதிர்ப்பு கிழம்ப தான் சசிகலா ரவிராஜ்சில் கை வைத்திருக்கிறார்கள்.

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

யார் இருந்தார்கள், இருக்கவில்லை என்பது பிரச்சினை இல்லை. அப்படி பிரச்னை என்றால் அந்த இடத்தில அதை எழுப்பி இருக்கலாம். பதியப்படட வாக்குகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு தங்களில் நம்பிக்கை இருந்தால் நீதிமன்றம், சடடம் இருக்கின்றது. நீதிமன்றத்தை நாடி நீதியை பெற்றுக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இப்படி செய்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நேர்மையான, நல்மனசாட்சி இருக்குமாக இருந்தால் அதுதான் ஒரே வழி. சுமந்திரனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எனக்கு தெரியும் யாருமே நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு உண்மை தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

தேர்தல் ஆரவாரத்தில் நிதானம் தவறுகிறார்கள். ஆரவாரம் அடங்கியபின் சிந்திப்பதற்கு நேரம் வரும். ஆனால் அதற்குள் முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்திவிடுவார்கள். ☹️

Link to comment
Share on other sites

37 minutes ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

சுமந்திரன் மீதுள்ள காழ்ப்புணர்வின் காரணமாகத்தான் இப்படி பொய் புரளி எல்லாம் எழுப்புகிறார்கள். மற்றப்படி எந்த நடவடிக்கையும் தோற்றுப்போகுமென்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

மீண்டும் எண்ணினாலும் , நீதிமன்றம் போனாலும் என்ன நடக்குமென்று இந்த கள்ளர் கூட்ட்த்துக்கு தெரியும்.

போற போக்கை பார்த்தால் விரைவில் ஈழம் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

மீள வாக்குகளை எண்ணுவதற்கான வழிகள் இன்னமும் இருக்கின்றன. தாமதிக்காமல் செயற்பட்டால் பிழை செய்தவர்கள் வெளிப்படுவார்கள்.  இதை சசிகலாதான் செய்ய வேண்டும். அவர்தான் முறைப்பாட்டாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

சுமந்திரன்கூட, 75 கள்ள வாக்கு தானே போட்டேன் என்று கூறிய சிறீதரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.
சரி. பரவாயில்லை. “30 வோட்டுடன் ஈபிடிபி 7 எம்.பி களைப் பெற்றது” என்று இதுவரை கிண்டலாக கூறிவந்தவர்கள் இப்போது இலஙகை தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று கூற முற்படுகிறார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மோசடி செய்து வென்றார் என்று எழுதிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார் இலங்கை தேர்தலில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று. என்னத்தைச் சொல்ல.
எல்லோருக்கும் தலையில் மூளையை வைத்த கடவுள் இவனுகளுக்கு மட்டும் முழங்காலில் மூளையை வைத்து விட்டார் போல் இருக்கிறது. எல்லாத்தையும் தலை கீழாகவே சொல்லுறான்கள்.
சுமந்திரன் அவர்களே!
சசிகலா ரவிராஜ் தேர்தலுக்கு பதிது. அவருக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறை தெரியாது என்கிறீர்கள். சரி. ஏற்றுக்கொள்கிறோம். சித்தார்த்தனும் புதிதா? அவருக்கும் தேர்தல் நடைமுறைகள் தெரியாதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:
சுமந்திரன்கூட, 75 கள்ள வாக்கு தானே போட்டேன் என்று கூறிய சிறீதரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.
சரி. பரவாயில்லை. “30 வோட்டுடன் ஈபிடிபி 7 எம்.பி களைப் பெற்றது” என்று இதுவரை கிண்டலாக கூறிவந்தவர்கள் இப்போது இலஙகை தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று கூற முற்படுகிறார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மோசடி செய்து வென்றார் என்று எழுதிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார் இலங்கை தேர்தலில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று. என்னத்தைச் சொல்ல.
எல்லோருக்கும் தலையில் மூளையை வைத்த கடவுள் இவனுகளுக்கு மட்டும் முழங்காலில் மூளையை வைத்து விட்டார் போல் இருக்கிறது. எல்லாத்தையும் தலை கீழாகவே சொல்லுறான்கள்.
சுமந்திரன் அவர்களே!
சசிகலா ரவிராஜ் தேர்தலுக்கு பதிது. அவருக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறை தெரியாது என்கிறீர்கள். சரி. ஏற்றுக்கொள்கிறோம். சித்தார்த்தனும் புதிதா? அவருக்கும் தேர்தல் நடைமுறைகள் தெரியாதா?

எதோ தேவனின் சந்நிதியில் தேர்தல் நடந்தமாதிரி 
அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ....
மொத்தவாக்குகளை கூட்டிப்பாருங்கள் ......வாக்காளர் எண்ணிக்கையை பாருங்கள் 
லேசா உதைக்கும் 

Link to comment
Share on other sites

10 hours ago, Maruthankerny said:

எதோ தேவனின் சந்நிதியில் தேர்தல் நடந்தமாதிரி 
அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ....
மொத்தவாக்குகளை கூட்டிப்பாருங்கள் ......வாக்காளர் எண்ணிக்கையை பாருங்கள் 
லேசா உதைக்கும் 

அதை செய்யமாட்ட்டார்கள். ஏன் என்றால் எல்லோருக்கும் உண்மை தெரியும்.

Link to comment
Share on other sites

பிரவீனா ரவிராஜ் அவர்கள்,
லண்டனில் சடடம் படித்தாலும், சாவகச்சேரி மீன்காரி மாதிரி சடடம் கதைக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

பிரவீனா ரவிராஜ் அவர்கள்,
லண்டனில் சடடம் படித்தாலும், சாவகச்சேரி
மீன்காரி மாதிரி சடடம் கதைக்கின்றார்.

மீன்காரியுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை ☹️

ஊர்க்குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்தாக மாட்டாது என்பது இதைத்தானோ 😜

Link to comment
Share on other sites

48 minutes ago, Kapithan said:

மீன்காரியுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை ☹️

சிறுவயதில் தந்தையுடன் கள்ளியங்காட்டு சந்தைக்கு சென்ற போது ஏற்படட கசப்பான அனுபவம்.☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.