Jump to content

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின், மகள் பிரவீனா ரவிராஜ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

விருப்புத்தெரிவு வாக்குகளை எண்ணும்போது மாலை 6 மணியளவில் தமது தாயார் இரண்டாம் இடத்தில் இருந்தார். எனினும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அவர் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

இறுதி முடிவு அறிவிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டநிலையில் அங்கு வந்த சுமந்திரனும் அவருடைய ஆதரவு அரசியல்வாதியான சயந்தனும் விருப்பு வாக்கு எண்ணும் அறைக்குள் அமர்ந்திருந்ததாக பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணும் அறைக்குள் செல்லமுடியாதபோது சுமந்திரனும், சயந்தனும் அந்த அறைக்குள் அமர்ந்திருந்தாக பிரவீனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பின்னரே இறுதிமுடிவு தமது தாயாருக்கு பாதமான வகையில் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது தமது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அறிவிக்க முயற்சித்தபோதும் அவர் தமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் பிரவீனா ரவிராஜ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுமந்திரன், பிரவீனா ரவிராஜ் அவரரை சுற்றியுள்ளவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறினார்.

விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றியமைக்க வழி இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

விருப்புத்தெரிவு கணக்கெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் சசிக்கலா ரவீராஜ் இரண்டாவது இடத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இறுதி எண்ணிக்கையின்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை விருப்புத்தெரிவு வாக்குகள் எண்ணப்படும்போது தான் ஒருபோதும் எண்ணும் மையத்திற்குள் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/special/01/252953?ref=rightsidebar-lankasrinews

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சிங்கள எஜமானர்களின் செல்லப் பிள்ளைகள்.. எங்கும் போய் எதிலும் வெல்வார்கள் சொறீலங்காவில்.. அவர்கள் பெரியாக்கள். தெரியாமல்.. இவர்களின் பின்னால் போய் ஏமாந்து தான் இவர்களைப் பற்றிப் படிக்க வேண்டியதானது கவலைக்குரிய விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

கூலிப்படை விட்டிருக்குமா அவருக்கு அடிக்க? இதே சாட்டாக அப்பகுதி இளைஞரை தூக்கி உள்ளுக்கை போட்டிருக்கமாட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அறிவிக்க முயற்சித்தபோதும் அவர் தமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அது ஒருகாலமும் ரெலிபோன் எடுக்காது. ஆக மிஞ்சினால் ரெலிபோனை தூக்கி வைச்சிட்டு கிடந்துடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதை மூடிக்கொண்டு படுத்திருந்திருப்பார். கோவிக்கக் கூடாது  நேரம் அப்பிடியான நேரம். எதிர்பாராத முடிவுகள் கேட்க சக்தி இருந்திருக்குமா. மாரடைப்பு வராமல் தப்பியதே பெரும் பிழைப்பு. இன்னும் ஐந்து வருடம் தேரோடவேண்டுமே? யமன் கண்ணில் தப்பி. 

Link to comment
Share on other sites

 

1 hour ago, satan said:

கூலிப்படை விட்டிருக்குமா அவருக்கு அடிக்க? இதே சாட்டாக அப்பகுதி இளைஞரை தூக்கி உள்ளுக்கை போட்டிருக்கமாட்டார். 

 

6 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்... 
கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள்.
அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...  
என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. :grin:

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் சசிகலா ரவிராஜ்

முன் கதவால் போக பின் கதவால் போகுமாறு சொன்னார்கள்.ஆனால் பின் கதவால் போன போது உள்ளே விடவில்லை.அந்த நேரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளே இருந்தார்.அவர் எப்படி உள்ளே இருக்கிறார் என்ற கேள்விக்கு யாருமே பதிலளிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.
மேலே உள்ளதில் இரண்டாவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கற்பகதரு said:

 

 

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

இங்கு எல்லோருமே கள்ளர்கள்தான். நல்ல(?) கள்ளரை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அது சரி ஏன் மாரு வாக்கு எண்ணிக்ககைக்கு போக முடியாது? துணிவிருந்தால் அதட்குரிய நடவடிக்கை எடுக்கலாமே? அப்படி இல்லாவிடடாள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அரசாங்க அதிபரும் கூட அங்கு எவ்விதமான முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சாவகச்சேரி வாக்குகள் முதல் என்னப்பட்டிருக்கலாம் , அதைவைத்துக்கொண்டு இவர்கள் முடிவெடுத்துவிடடார்கள்.

இங்கு சத்தமிடடவர்கள், கோசம் போடடவர்கள் எல்லாம் சிவாஜி , காந்த போன்ற பிரபல(?) அரசியல்வாதிகளின் கூலிப்படைகள் என்று அறிந்தேன். உண்மை தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கற்பகதரு said:

எப்பவவும் இந்த கிரிமினல் புத்திதானா? கள்ளன் என்று கத்தியவர்கள் றோவின் கூலிப்படையாம்.

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

32 minutes ago, Robinson cruso said:

இங்கு எல்லோருமே கள்ளர்கள்தான். நல்ல(?) கள்ளரை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அது சரி ஏன் மாரு வாக்கு எண்ணிக்ககைக்கு போக முடியாது? துணிவிருந்தால் அதட்குரிய நடவடிக்கை எடுக்கலாமே? அப்படி இல்லாவிடடாள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அரசாங்க அதிபரும் கூட அங்கு எவ்விதமான முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சாவகச்சேரி வாக்குகள் முதல் என்னப்பட்டிருக்கலாம் , அதைவைத்துக்கொண்டு இவர்கள் முடிவெடுத்துவிடடார்கள்.

இங்கு சத்தமிடடவர்கள், கோசம் போடடவர்கள் எல்லாம் சிவாஜி , காந்த போன்ற பிரபல(?) அரசியல்வாதிகளின் கூலிப்படைகள் என்று அறிந்தேன். உண்மை தெரியவில்லை.

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

Link to comment
Share on other sites

14 minutes ago, பெருமாள் said:

 

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் சுமத்திரன் தான் இருக்கவில்லை என்று பகிரங்கமாக ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார். தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் சுமத்திரன் இருந்தார் என்று சொல்பவர்கள் தாம் எடுத்த படங்கள், வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு பிரபலமாக அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. செய்யலாமே?😄

15 minutes ago, பெருமாள் said:

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

வரதராஜ பெருமாள் றோவின் ஆள் என்பதை உலகறியும். என்னை யாரறிவார்? 😀

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

நேற்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் சசிகலா ரவிராஜ்

முன் கதவால் போக பின் கதவால் போகுமாறு சொன்னார்கள்.ஆனால் பின் கதவால் போன போது உள்ளே விடவில்லை.அந்த நேரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளே இருந்தார்.அவர் எப்படி உள்ளே இருக்கிறார் என்ற கேள்விக்கு யாருமே பதிலளிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.
மேலே உள்ளதில் இரண்டாவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நான் கேட்டேன். அங்கே தான் சங்கதியே இருக்கிறது. உள்ளே போவதற்கு சட்டரீதியான முறைகள் உள்ளன. அவற்றை தெரிந்தவர்கள் போக முடிகிறது. அந்த உள்ளே என்பது வாக்கு எண்ணும் இடமும் அல்ல. இவவையும் பின்னர் அடையாளம் கண்டு உள்ளே விட்டதால் தான் உள்ளே இருந்தவரிடம் எப்படி வந்தீர்கள்? என்று கேட்டுவிட்டு பதில் கிடைக்காமல் வெளியே வந்ததாக சொல்கிறா. இவ பாராளுமன்றம் போனால் என்ன பயன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

நான் கேட்டேன். அங்கே தான் சங்கதியே இருக்கிறது. உள்ளே போவதற்கு சட்டரீதியான முறைகள் உள்ளன. அவற்றை தெரிந்தவர்கள் போக முடிகிறது. அந்த உள்ளே என்பது வாக்கு எண்ணும் இடமும் அல்ல. இவவையும் பின்னர் அடையாளம் கண்டு உள்ளே விட்டதால் தான் உள்ளே இருந்தவரிடம் எப்படி வந்தீர்கள்? என்று கேட்டுவிட்டு பதில் கிடைக்காமல் வெளியே வந்ததாக சொல்கிறா. இவ பாராளுமன்றம் போனால் என்ன பயன்? 

சரி இப்படியானவர்களை தெரிவு செய்தது யார்?
மக்களா?

நானறிந்தவரை சித்தார்த்தரை 4வதாக போட முயற்சி செய்ய இளைஞர்களிடம் எதிர்ப்பு கிழம்ப தான் சசிகலா ரவிராஜ்சில் கை வைத்திருக்கிறார்கள்.

இனி என்ன எல்லாம் முடிந்து முடிவும் அறிவித்தாகி விட்டது.

16 காவலுடன் வரும் சுமந்திரன் இன்னும் 4 காவல்படை கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு ராஜபக்க்ஷ குழுவினரால் தமிழ் தே கூட்டமைப்புக்குள் நுழைக்கப்பட்ட கறுப்பாடு சுமந்திரன். தட்டிக்கேட்க வக்கில்லாமல், சம்பந்தன் என்கிற பெருச்சாளியை  வாங்க  வைத்து  கட்டிப்போட்டு விட்டார்.தமிழனின் தலையெழுத்து எழுபது வருடங்களாக இதுகளை சுமந்து பணக்காரராக்கி, நலிந்து போய் சேடம் இழுத்துக்கொண்டிருக்கு. அடுத்த தேர்தலுக்கிடையில் விதியோ, சுமந்திரனோ முந்திக்கொண்டு  முடிவு எழுதி துப்புக்கெட்ட தலைவருக்கு பிரியாவிடை நடைபெறலாம். அப்போது "துரோகி எழுபது வருடங்களாக எமது இனத்தை அனாதைகளாக்கி, அடிமைகளாக விற்று விட்டு ஊர்கோலம் போறானே." என்று ஒரு கூட்டம் ஒப்பாரி வைக்கும். 

Link to comment
Share on other sites

37 minutes ago, ஈழப்பிரியன் said:

நானறிந்தவரை சித்தார்த்தரை 4வதாக போட முயற்சி செய்ய இளைஞர்களிடம் எதிர்ப்பு கிழம்ப தான் சசிகலா ரவிராஜ்சில் கை வைத்திருக்கிறார்கள்.

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள்  ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ?

நீங்கள்  எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?

யார் இருந்தார்கள், இருக்கவில்லை என்பது பிரச்சினை இல்லை. அப்படி பிரச்னை என்றால் அந்த இடத்தில அதை எழுப்பி இருக்கலாம். பதியப்படட வாக்குகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு தங்களில் நம்பிக்கை இருந்தால் நீதிமன்றம், சடடம் இருக்கின்றது. நீதிமன்றத்தை நாடி நீதியை பெற்றுக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இப்படி செய்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நேர்மையான, நல்மனசாட்சி இருக்குமாக இருந்தால் அதுதான் ஒரே வழி. சுமந்திரனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எனக்கு தெரியும் யாருமே நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு உண்மை தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

தேர்தல் ஆரவாரத்தில் நிதானம் தவறுகிறார்கள். ஆரவாரம் அடங்கியபின் சிந்திப்பதற்கு நேரம் வரும். ஆனால் அதற்குள் முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்திவிடுவார்கள். ☹️

Link to comment
Share on other sites

37 minutes ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

சுமந்திரன் மீதுள்ள காழ்ப்புணர்வின் காரணமாகத்தான் இப்படி பொய் புரளி எல்லாம் எழுப்புகிறார்கள். மற்றப்படி எந்த நடவடிக்கையும் தோற்றுப்போகுமென்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

மீண்டும் எண்ணினாலும் , நீதிமன்றம் போனாலும் என்ன நடக்குமென்று இந்த கள்ளர் கூட்ட்த்துக்கு தெரியும்.

போற போக்கை பார்த்தால் விரைவில் ஈழம் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

மீள வாக்குகளை எண்ணுவதற்கான வழிகள் இன்னமும் இருக்கின்றன. தாமதிக்காமல் செயற்பட்டால் பிழை செய்தவர்கள் வெளிப்படுவார்கள்.  இதை சசிகலாதான் செய்ய வேண்டும். அவர்தான் முறைப்பாட்டாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

சில கேள்விகள்:

1. சசிகலாவிலும் பார்க்க சித்தார்த்தனுக்கு 700 வாக்குகளே அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராகவுள்ள சசிகலா மீள எண்ணுமாறு கேட்கும் உரிமையும் வழிமுறைகளும் உள்ளன. இதுவரை அவர் மீள எண்ண கேட்கவில்லை ஏன்? சுமந்திரன் இப்படி கேட்டு, மீள எண்ணப்பட்டே அவரது வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீள எண்ணப்பட்டால், தானும் வெற்றி பெற்று பாராளுமன்றம் போகலாம் என்று தெரிந்தும் ஏன் சசிகலா மீள எண்ணுமாறு கேட்கவில்லை? 

2. சசிகலாவையும்,சித்தார்த்தனையும், பிளொட்டையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர வேறு எவரும் சுமந்திரனின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு பற்றி கருத்து எதுவும் கூறாததன் மர்மம் என்ன? குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

3. மகளீர் அமைப்புகள் எதுவுமே சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையே, ஏன்?

4. அடுத்தாக உயர்ந்த அளவு வாக்குகளை பெற்றவர் என்ற அளவில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற அங்கத்தவராகும் சந்தர்ப்பம் இருந்தும், அதை இல்லாமல் போக செய்யும் நிலையை உருவாக்கும் வகையிலான கலவரத்தையும், கோசங்களையும், பேட்டியையும் சசிகலா வழங்கியதன் பின்னணி என்ன? யார் இவரை சுமந்திரனுக்கு எதிராக பயன்படுத்தி இவவை தனக்கு தானே அழிவை தேட வைத்தவர்கள்? சிவாஜிலிங்கம் இதன் பின்னணியில் இருப்பதை ஒரு வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. இவரை இயக்குபவர்கள் யார்?

 

 

 

சுமந்திரன்கூட, 75 கள்ள வாக்கு தானே போட்டேன் என்று கூறிய சிறீதரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.
சரி. பரவாயில்லை. “30 வோட்டுடன் ஈபிடிபி 7 எம்.பி களைப் பெற்றது” என்று இதுவரை கிண்டலாக கூறிவந்தவர்கள் இப்போது இலஙகை தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று கூற முற்படுகிறார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மோசடி செய்து வென்றார் என்று எழுதிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார் இலங்கை தேர்தலில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று. என்னத்தைச் சொல்ல.
எல்லோருக்கும் தலையில் மூளையை வைத்த கடவுள் இவனுகளுக்கு மட்டும் முழங்காலில் மூளையை வைத்து விட்டார் போல் இருக்கிறது. எல்லாத்தையும் தலை கீழாகவே சொல்லுறான்கள்.
சுமந்திரன் அவர்களே!
சசிகலா ரவிராஜ் தேர்தலுக்கு பதிது. அவருக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறை தெரியாது என்கிறீர்கள். சரி. ஏற்றுக்கொள்கிறோம். சித்தார்த்தனும் புதிதா? அவருக்கும் தேர்தல் நடைமுறைகள் தெரியாதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:
சுமந்திரன்கூட, 75 கள்ள வாக்கு தானே போட்டேன் என்று கூறிய சிறீதரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.
சரி. பரவாயில்லை. “30 வோட்டுடன் ஈபிடிபி 7 எம்.பி களைப் பெற்றது” என்று இதுவரை கிண்டலாக கூறிவந்தவர்கள் இப்போது இலஙகை தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று கூற முற்படுகிறார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மோசடி செய்து வென்றார் என்று எழுதிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார் இலங்கை தேர்தலில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று. என்னத்தைச் சொல்ல.
எல்லோருக்கும் தலையில் மூளையை வைத்த கடவுள் இவனுகளுக்கு மட்டும் முழங்காலில் மூளையை வைத்து விட்டார் போல் இருக்கிறது. எல்லாத்தையும் தலை கீழாகவே சொல்லுறான்கள்.
சுமந்திரன் அவர்களே!
சசிகலா ரவிராஜ் தேர்தலுக்கு பதிது. அவருக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறை தெரியாது என்கிறீர்கள். சரி. ஏற்றுக்கொள்கிறோம். சித்தார்த்தனும் புதிதா? அவருக்கும் தேர்தல் நடைமுறைகள் தெரியாதா?

எதோ தேவனின் சந்நிதியில் தேர்தல் நடந்தமாதிரி 
அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ....
மொத்தவாக்குகளை கூட்டிப்பாருங்கள் ......வாக்காளர் எண்ணிக்கையை பாருங்கள் 
லேசா உதைக்கும் 

Link to comment
Share on other sites

10 hours ago, Maruthankerny said:

எதோ தேவனின் சந்நிதியில் தேர்தல் நடந்தமாதிரி 
அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ....
மொத்தவாக்குகளை கூட்டிப்பாருங்கள் ......வாக்காளர் எண்ணிக்கையை பாருங்கள் 
லேசா உதைக்கும் 

அதை செய்யமாட்ட்டார்கள். ஏன் என்றால் எல்லோருக்கும் உண்மை தெரியும்.

Link to comment
Share on other sites

பிரவீனா ரவிராஜ் அவர்கள்,
லண்டனில் சடடம் படித்தாலும், சாவகச்சேரி மீன்காரி மாதிரி சடடம் கதைக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

பிரவீனா ரவிராஜ் அவர்கள்,
லண்டனில் சடடம் படித்தாலும், சாவகச்சேரி
மீன்காரி மாதிரி சடடம் கதைக்கின்றார்.

மீன்காரியுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை ☹️

ஊர்க்குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்தாக மாட்டாது என்பது இதைத்தானோ 😜

Link to comment
Share on other sites

48 minutes ago, Kapithan said:

மீன்காரியுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை ☹️

சிறுவயதில் தந்தையுடன் கள்ளியங்காட்டு சந்தைக்கு சென்ற போது ஏற்படட கசப்பான அனுபவம்.☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.