Jump to content

கொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ரீதியான தந்திரோபாயமாக ஒற்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்.

 

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது.

இன்று (7) காலை யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உருவாகியுள்ள சவால் மிக்க ஆட்சிக்காலத்தை எதிர்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்ப தொடர்பில் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமாகவும், அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும், செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆகவே அரசியல் ரீதியான தந்திரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும்.

ஏதோ ஒரு அரசியல் ரீதியான தந்திரோபாயமாக நாங்கள் எல்லோரும் சேர வேண்டும், நாங்கள் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை.

இதுவரை காலமும் எங்களுடைய கொள்கை ரீதியான விடயங்களை புறக்கணித்து, அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர்கள்தான சுமந்திரன் போன்றவர்கள். அவர்கள் திடீரென மாறுவார்கள் என்று எங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் எங்ளிடையே கொள்கை ரீதியான ஒன்றுமை அவசியம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்றார்.

https://www.pagetamil.com/139182/

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! உங்களால் தனித்து நின்றோ, சேர்ந்து நின்றோ எதுவும் சாதிக்க முடியாது. எழுபது வருடங்களாக கூடியிருந்து சிக்கடிச்சதை நீங்கள் விடுவித்து விடுவீர்களோ, தாங்கள் மாட்டுப்படுவிடுவோமோ என்கிற பயத்தாலேயே உங்களை தூக்கி எறிந்தவர்கள். அவர்களுக்கு விட்டெறிந்து காரியம் சாதித்தவன் சிங்களவன். கஜேந்திரகுமார் வென்றதுடன் நின்று விடுவாரா? அல்லது சாதகமாக தொடர்ந்து செயற்படுவாரா? சிங்களவன் வளைப்பானா? எதுவும் தெரியவில்லை.. உங்களுக்கு சோதனையான காலம் காத்திருக்கு  ரொம்ப அவமானப் படவேண்டி வரலாம். முன்னெச்செரிக்கையுடன்  செயற்படுங்கள்.

Link to comment
Share on other sites

இந்த மானா சுமந்திரன் முனா விக்கியை அரசியலுக்கு கொண்டுவந்தது மகா பெரிய தவறு. மனா , முனா என்னவென்று விளங்குமென்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

Link to comment
Share on other sites

15 minutes ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர்களே, சிங்களவனோடு கூடிக் கொண்டாடிய  மயக்கத்தில் எல்லாவற்றையும் இழந்த நம்ம தலைமைகள் தாமே. நேற்று வந்த விக்கினேஸ்வரனை குற்றம் கூறுவது எந்த வகையில் நிஞாயம்? 

Link to comment
Share on other sites

Just now, satan said:

அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர்களே, சிங்களவனோடு கூடிக் கொண்டாடிய  மயக்கத்தில் எல்லாவற்றையும் இழந்த நம்ம தலைமைகள் தாமே. நேற்று வந்த விக்கினேஸ்வரனை குற்றம் கூறுவது எந்த வகையில் நிஞாயம்? 

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலிக்கு, மேடைக்கு, வாக்குக்கு தேசியம் பேசியவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

போலிக்கு, மேடைக்கு, வாக்குக்கு தேசியம் பேசியவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. 

 

4 minutes ago, putthan said:

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

நல்ல பதில், சாத்தான் & புத்தன்.  👍:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை மக்கள் 

 1) மத்தியில் கூட்டாட்சி  மாநிலத்தில் சுயாட்சி
2) ஒரு நாடு இரு தேசம்
3) 13 ஆம் திருத்ததையும் தாண்டி அதிகார  பகிர்வு ..இந்தியாவின் உதவியுடன்
4) தமிழர்கள் சம உரிமையுடன் வாழ சகல நடவடிக்கை (அங்கஜன்)
 
இப்படி சகலரையும் அனுப்பி இருக்கின்றனர்.....எ

மாகாணசபை இல்லாமல் செய்யப்பட்டு  தொகுதிவாரியான தேர்தல்கள் அறிமுகப்படுத்துவார்கள் ....எம்.பி க்கள் தொகுதியைஅபிவிருத்தி செய் ய வேண்டும் என அறிவிப்பார்கள்

அங்கஜன் உடுப்பிட்டி தொகுதியை (வடமாராட்சியை) சிங்கப்பூராக மாற்றுவார்...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள்.

மக்கள் சாட்டில் சாயம் வெளுத்து விட்டது. இனி வீழ்ந்து போன இனத்தின் நீதிக்கான குரலை எதிர் பார்ப்பது மடைமை. அது வெறும் போலியாகவே இருக்கும். எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட விக்கினேஸ்வரனை மட்டும் கரித்துக்கொட்டுவதன் மூலம் இவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி  புரிகிறது.  "நிரபராதி வெகுசன விரோதி". விக்கினேஸ்வரனை சொன்னேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, Robinson cruso said:

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

இன்னும் சில நாள் பொறுங்கள் கோத்தபாயாவுக்கு சிறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள் இவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அங்கஜன் உடுப்பிட்டி தொகுதியை (வடமாராட்சியை) சிங்கப்பூராக மாற்றுவார்...🤣

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்து செயற்பட தயார் – விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இதற்கு நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற தேர்தரில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

  • IMG_20200808_134101.jpg?189db0&189db0
  • IMG_20200808_134115.jpg?189db0&189db0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

நாங்களும் தான் எவன் புலம் பெயர்ந்து பிச்சை எடுக்கிறது....அப்ப கடை வீதி hoppers hut road  மாறிவிடும் நாங்கள் சும்மா shorts தொப்பி போட்டு,  வெள்ளைகாரன்(கூலிக்கு) அப்பம் சுட்டு தர வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டியான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாபணம் ஒருபுறம், அரசாங்கப்பணம் மறுபுறம், கொள்ளை அடித்த பணம் இன்னொருபுறம் வேலை செய்ய, வறுமையில், கொரோனாவால் இழப்புகள் மத்தியில் இருந்த மக்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையே உயர்த்தியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

நீங்கள் சிங்கப்பூர் போய் இருக்கவேண்டுமானால் சூட்கேஸ் நிறைய கட்டு கட்டாக பணம் கொண்டு போனால் தான் முடியும். ஸ்கை பார்க் பார்க்க ஆசைபட்டு வெறுத்துவிட்டது.

6 hours ago, கிருபன் said:

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

வடமராட்சியோ யாழ்ப்பாணமோ செழிப்படைய விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் தடைகளாக இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கிளிநொச்சி யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களை யப்பான் மாதிரி ஆக்குவேன் என்றார்.நீங்கள் உங்கள் இடங்களுடன் மட்டும் அவரின் பங்களிப்பை குறுக்கிப் போடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, சுவைப்பிரியன் said:

அவர் கிளிநொச்சி யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களை யப்பான் மாதிரி ஆக்குவேன் என்றார்.நீங்கள் உங்கள் இடங்களுடன் மட்டும் அவரின் பங்களிப்பை குறுக்கிப் போடாதீர்கள்.

உந்த விசயம் இவருக்கு தெரியுமோ? :grin:

ஜப்பான் விசேட தூதுவரை இலங்கை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

சிங்களவருடன் நாம் எப்படி வாழலாம் அல்லது வாழவேண்டும்  என்பது  தொடர்பாக உங்கள் கருத்து என்ன ? 

சிறிது ஆற அமர யோசித்து நடைமுரைச் சாத்தியமான வழிமுறையைக் கூறுங்கள் 👍

11 hours ago, Robinson cruso said:

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டியது நாம்தான். அழியவிட்டாலும் எமது பிழைதான்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

சிங்களவனுடன் சேர்ந்தவாழலாம் என்று சொல்பவர்கள் தமது மேற்குலக குடியுரிமையைத் துறந்து இலங்கைக் குடியுரிமையைப் பெற்று  அவர்போனவர் நல்லா இருக்கிறார் இவர்போனவர் ஒரு பிரச்சினையும் இல்லமை இருக்கிறார் என்று சொல்லாமல் செய்து காட்டினால் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வரும்தானே? 

 சாவுகளை விசாக்காளகவும் குடியுரிமைகளாகவும் சூடியவாறு   தமிழினத்தின் இனத்தின் இருப்பு சிங்கள இனவாதத்தால்  சிதறடிக்கப்படும்  சூழலில் தமிழ்த் தேசியத்தைப் பரிகசிப்பதும் அதற்காகத்தம்மால் முடிந்தளவு செயற்படுவோரை நையாண்டி செய்ய என்றும் தமிழர்களே இருக்கிறார்கள் என்பதும் துயரம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

உங்கள் மொழிப்பிரயோகத்தைக் கொஞ்சம் அவதானத்துடன் கையாழுங்கள். ☹️

தமிழ் என்பது உங்களுக்கு பொருளற்றதாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகள் தமதி இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள்.  அந்த ஈகத்தை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை

😡

8 hours ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

மறதிக்கு மருந்தேதும் உண்டோ 😂😂 (மக்களின் மறதிக்கு மருந்து)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

நடந்து முடிந்த தேர்தல் தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி நடந்ததா ?

இல்லை போட்டியிட்ட வேட்ப்பாளர்களில் யாராவது  ஒரு வேட்ப்பாளர்தன்னும்  தமிழ்த்தேசியத்தை மறுத்து போட்டியிட்டனரா ?

ஏன் உங்களின் தமிழ்தேசிய வெறுப்பை கனவில் கண்டு வந்து இங்கு எழுதுகிறீர்கள் ?

1 hour ago, Kapithan said:

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

மறதிக்கு மருந்தேதும் உண்டோ 😂😂 (மக்களின் மறதிக்கு மருந்து)

அவர் சொன்னதை செய்யாமல் விட்டால் அடுத்த தேர்தலில்  சுமத்திரன் போல் நடுசாமத்தில் போய்  தேர்தல் அதிகாரியின் காலை பிடித்து கதறவேண்டி வரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.