Jump to content

கொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ரீதியான தந்திரோபாயமாக ஒற்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்.

 

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது.

இன்று (7) காலை யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உருவாகியுள்ள சவால் மிக்க ஆட்சிக்காலத்தை எதிர்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்ப தொடர்பில் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமாகவும், அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும், செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆகவே அரசியல் ரீதியான தந்திரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும்.

ஏதோ ஒரு அரசியல் ரீதியான தந்திரோபாயமாக நாங்கள் எல்லோரும் சேர வேண்டும், நாங்கள் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை.

இதுவரை காலமும் எங்களுடைய கொள்கை ரீதியான விடயங்களை புறக்கணித்து, அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர்கள்தான சுமந்திரன் போன்றவர்கள். அவர்கள் திடீரென மாறுவார்கள் என்று எங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் எங்ளிடையே கொள்கை ரீதியான ஒன்றுமை அவசியம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்றார்.

https://www.pagetamil.com/139182/

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! உங்களால் தனித்து நின்றோ, சேர்ந்து நின்றோ எதுவும் சாதிக்க முடியாது. எழுபது வருடங்களாக கூடியிருந்து சிக்கடிச்சதை நீங்கள் விடுவித்து விடுவீர்களோ, தாங்கள் மாட்டுப்படுவிடுவோமோ என்கிற பயத்தாலேயே உங்களை தூக்கி எறிந்தவர்கள். அவர்களுக்கு விட்டெறிந்து காரியம் சாதித்தவன் சிங்களவன். கஜேந்திரகுமார் வென்றதுடன் நின்று விடுவாரா? அல்லது சாதகமாக தொடர்ந்து செயற்படுவாரா? சிங்களவன் வளைப்பானா? எதுவும் தெரியவில்லை.. உங்களுக்கு சோதனையான காலம் காத்திருக்கு  ரொம்ப அவமானப் படவேண்டி வரலாம். முன்னெச்செரிக்கையுடன்  செயற்படுங்கள்.

Link to comment
Share on other sites

இந்த மானா சுமந்திரன் முனா விக்கியை அரசியலுக்கு கொண்டுவந்தது மகா பெரிய தவறு. மனா , முனா என்னவென்று விளங்குமென்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

Link to comment
Share on other sites

15 minutes ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர்களே, சிங்களவனோடு கூடிக் கொண்டாடிய  மயக்கத்தில் எல்லாவற்றையும் இழந்த நம்ம தலைமைகள் தாமே. நேற்று வந்த விக்கினேஸ்வரனை குற்றம் கூறுவது எந்த வகையில் நிஞாயம்? 

Link to comment
Share on other sites

Just now, satan said:

அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர்களே, சிங்களவனோடு கூடிக் கொண்டாடிய  மயக்கத்தில் எல்லாவற்றையும் இழந்த நம்ம தலைமைகள் தாமே. நேற்று வந்த விக்கினேஸ்வரனை குற்றம் கூறுவது எந்த வகையில் நிஞாயம்? 

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலிக்கு, மேடைக்கு, வாக்குக்கு தேசியம் பேசியவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

போலிக்கு, மேடைக்கு, வாக்குக்கு தேசியம் பேசியவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. 

 

4 minutes ago, putthan said:

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

நல்ல பதில், சாத்தான் & புத்தன்.  👍:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை மக்கள் 

 1) மத்தியில் கூட்டாட்சி  மாநிலத்தில் சுயாட்சி
2) ஒரு நாடு இரு தேசம்
3) 13 ஆம் திருத்ததையும் தாண்டி அதிகார  பகிர்வு ..இந்தியாவின் உதவியுடன்
4) தமிழர்கள் சம உரிமையுடன் வாழ சகல நடவடிக்கை (அங்கஜன்)
 
இப்படி சகலரையும் அனுப்பி இருக்கின்றனர்.....எ

மாகாணசபை இல்லாமல் செய்யப்பட்டு  தொகுதிவாரியான தேர்தல்கள் அறிமுகப்படுத்துவார்கள் ....எம்.பி க்கள் தொகுதியைஅபிவிருத்தி செய் ய வேண்டும் என அறிவிப்பார்கள்

அங்கஜன் உடுப்பிட்டி தொகுதியை (வடமாராட்சியை) சிங்கப்பூராக மாற்றுவார்...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள்.

மக்கள் சாட்டில் சாயம் வெளுத்து விட்டது. இனி வீழ்ந்து போன இனத்தின் நீதிக்கான குரலை எதிர் பார்ப்பது மடைமை. அது வெறும் போலியாகவே இருக்கும். எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட விக்கினேஸ்வரனை மட்டும் கரித்துக்கொட்டுவதன் மூலம் இவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி  புரிகிறது.  "நிரபராதி வெகுசன விரோதி". விக்கினேஸ்வரனை சொன்னேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, Robinson cruso said:

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

இன்னும் சில நாள் பொறுங்கள் கோத்தபாயாவுக்கு சிறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள் இவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அங்கஜன் உடுப்பிட்டி தொகுதியை (வடமாராட்சியை) சிங்கப்பூராக மாற்றுவார்...🤣

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்து செயற்பட தயார் – விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இதற்கு நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற தேர்தரில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

  • IMG_20200808_134101.jpg?189db0&189db0
  • IMG_20200808_134115.jpg?189db0&189db0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

நாங்களும் தான் எவன் புலம் பெயர்ந்து பிச்சை எடுக்கிறது....அப்ப கடை வீதி hoppers hut road  மாறிவிடும் நாங்கள் சும்மா shorts தொப்பி போட்டு,  வெள்ளைகாரன்(கூலிக்கு) அப்பம் சுட்டு தர வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டியான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாபணம் ஒருபுறம், அரசாங்கப்பணம் மறுபுறம், கொள்ளை அடித்த பணம் இன்னொருபுறம் வேலை செய்ய, வறுமையில், கொரோனாவால் இழப்புகள் மத்தியில் இருந்த மக்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையே உயர்த்தியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

நீங்கள் சிங்கப்பூர் போய் இருக்கவேண்டுமானால் சூட்கேஸ் நிறைய கட்டு கட்டாக பணம் கொண்டு போனால் தான் முடியும். ஸ்கை பார்க் பார்க்க ஆசைபட்டு வெறுத்துவிட்டது.

6 hours ago, கிருபன் said:

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

வடமராட்சியோ யாழ்ப்பாணமோ செழிப்படைய விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் தடைகளாக இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கிளிநொச்சி யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களை யப்பான் மாதிரி ஆக்குவேன் என்றார்.நீங்கள் உங்கள் இடங்களுடன் மட்டும் அவரின் பங்களிப்பை குறுக்கிப் போடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, சுவைப்பிரியன் said:

அவர் கிளிநொச்சி யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களை யப்பான் மாதிரி ஆக்குவேன் என்றார்.நீங்கள் உங்கள் இடங்களுடன் மட்டும் அவரின் பங்களிப்பை குறுக்கிப் போடாதீர்கள்.

உந்த விசயம் இவருக்கு தெரியுமோ? :grin:

ஜப்பான் விசேட தூதுவரை இலங்கை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

சிங்களவருடன் நாம் எப்படி வாழலாம் அல்லது வாழவேண்டும்  என்பது  தொடர்பாக உங்கள் கருத்து என்ன ? 

சிறிது ஆற அமர யோசித்து நடைமுரைச் சாத்தியமான வழிமுறையைக் கூறுங்கள் 👍

11 hours ago, Robinson cruso said:

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டியது நாம்தான். அழியவிட்டாலும் எமது பிழைதான்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

சிங்களவனுடன் சேர்ந்தவாழலாம் என்று சொல்பவர்கள் தமது மேற்குலக குடியுரிமையைத் துறந்து இலங்கைக் குடியுரிமையைப் பெற்று  அவர்போனவர் நல்லா இருக்கிறார் இவர்போனவர் ஒரு பிரச்சினையும் இல்லமை இருக்கிறார் என்று சொல்லாமல் செய்து காட்டினால் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வரும்தானே? 

 சாவுகளை விசாக்காளகவும் குடியுரிமைகளாகவும் சூடியவாறு   தமிழினத்தின் இனத்தின் இருப்பு சிங்கள இனவாதத்தால்  சிதறடிக்கப்படும்  சூழலில் தமிழ்த் தேசியத்தைப் பரிகசிப்பதும் அதற்காகத்தம்மால் முடிந்தளவு செயற்படுவோரை நையாண்டி செய்ய என்றும் தமிழர்களே இருக்கிறார்கள் என்பதும் துயரம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

உங்கள் மொழிப்பிரயோகத்தைக் கொஞ்சம் அவதானத்துடன் கையாழுங்கள். ☹️

தமிழ் என்பது உங்களுக்கு பொருளற்றதாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகள் தமதி இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள்.  அந்த ஈகத்தை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை

😡

8 hours ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

மறதிக்கு மருந்தேதும் உண்டோ 😂😂 (மக்களின் மறதிக்கு மருந்து)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

நடந்து முடிந்த தேர்தல் தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி நடந்ததா ?

இல்லை போட்டியிட்ட வேட்ப்பாளர்களில் யாராவது  ஒரு வேட்ப்பாளர்தன்னும்  தமிழ்த்தேசியத்தை மறுத்து போட்டியிட்டனரா ?

ஏன் உங்களின் தமிழ்தேசிய வெறுப்பை கனவில் கண்டு வந்து இங்கு எழுதுகிறீர்கள் ?

1 hour ago, Kapithan said:

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

மறதிக்கு மருந்தேதும் உண்டோ 😂😂 (மக்களின் மறதிக்கு மருந்து)

அவர் சொன்னதை செய்யாமல் விட்டால் அடுத்த தேர்தலில்  சுமத்திரன் போல் நடுசாமத்தில் போய்  தேர்தல் அதிகாரியின் காலை பிடித்து கதறவேண்டி வரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.