Jump to content

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

உங்களால் ,பிள்ளையான் தேர்தலுக்கு இவ்வளவு செலவழித்தார் என்று காட்ட முடியாததால் இணையங்களை தூக்கி குப்பையில் போட வேண்டும் ...நாளைக்கே தேவை என்றால் இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டு வந்து இணைப்பீர்கள் அதை நாங்கள் ஏற்க  வேண்டும் 

ஏற்கனவே பதில் தந்தாகிவிட்டது, 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

இன்றைய  தேர்தல் வெற்றி  செய்திகளோடு அன்றைய செய்திகள் 

Quote

 

டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய - பிறேமினி கதறக் கதறக் சிந்துயனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். 14 கருணா குழு உறுப்பினர்கள் இந்த கொடிய வல்லுறவில் ஈடுபட்டனர்.

( சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய எனும் கட்டுரையில் இருந்து முக்கிய பகுதிகள் இவைகள்)

 

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7 பணியாளர்கள் வெலிகந்தையில் வைத்துக் கடத்தப்பட்டு ஒரு வருடம் ஆகி விட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் நாள் மட்டக்களப்பில் இருந்து கிளிநொச்சி செல்வதற்கு வெலிகந்தை ஊடாக பயணம் செய்த 5 புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்டார்கள். அதில் மூவர் உடனடியாகவே விடுதலை செய்யப்பட்டார்கள். அடுத்த நாள் மீண்டும் வெலிகந்தையில் வைத்து புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் 15 பேர் கடத்தப்பட்டார்கள். அதில் ஆரம்பகட்ட பணியாளர்களாக இருந்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு முதல்நாள் இருவரும் அடுத்த நாள் ஐவருமாக மொத்தம் 7 பணியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள். இந்தக கடத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இவர்களை விடுவிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்தக் கடத்தலைக் கண்டித்துக் குரல் கொடுத்தன. அமெரிக்க அரசின் வெளிவிவகாரத்துறையின் துணை அதிகாரியான கிறிஸ்ரீனா றொக்காவும் 7 பணியாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து மார்ச் மாதம் ஒரு விசேட அறிக்கை வெளியிட்டதோடு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தது. அத்துடன் சர்வதேச நடுகளிடமும் நிறுவனங்களிடம் சிறிலங்காவின் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் மாஅதிபர் போன்றோருக்கு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அமெரிக்கா தொடங்கி பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வரை வேண்டுகோள் விடுத்தும் எதுவும் நடக்கவில்லை.

 

மனித உரிமை மீறல் சம்பந்தமான 15 விடயங்களை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரித்தது. இந்த விசாரணையில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தல் சம்பவம் இடம்பெறவில்லை. புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் கடத்தல் சம்பவத்தையும் இந்த ஆணைக்குழுவின் விசாரணையில் இணைக்கும்படி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்த வேண்டுகோளும் கண்டுகொள்ளப்படவில்லை.

 

இந்த கடத்தில் சம்பவத்திற்கு கருணா குழுவே பொறுப்பு என்று பல தரப்பினரால் சந்தேகிக்கப்பட்டது. அத்துடன் கடத்தலின் போது விடுதலையான இருவர் தம்மை விசாரணை செய்த இடத்தில் கருணா குழுவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.

 

அது மட்டும் அன்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுதலைப்புலிகளே கடத்தினார்கள் என்று புதிய ஒரு கதையும் பரப்பப்பட்டது. விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு அமைதியாக இருக்கும்படியும், இந்தக் கடத்தல் ஒரு நாடகம் என்றும், கடத்தப்பட்டவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றும் செய்தி அனுப்பி உள்ளதாகவும் கதைகள் பரப்பப்பட்டன. ஆனால் கடத்தப்பட்டவர்கள் திரும்பவில்லை.

 

பலரால் இந்தச் சம்பவம் மறக்கப்பட்டு விட்டது. ஆனால் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், உறவினர்கள் இச் சம்பவத்தை மறக்கவில்லை. கடந்த வாரம் கிளிநொச்சியில் கடத்தப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கடத்தப்பட்டவர்களின் இரு உறவினர்கள் பேசினார்கள். கடத்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும், அவர்கள் வீடு திரும்புவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து பேசினார்கள்.

 

எத்தனை பேர்தான் இவர்கள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாலும் கூட, உண்மை என்பது அதுவாக இல்லை. ஒரு எழுத்தாளர் மூலம் கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்களின்படி கடத்தப்பட்ட 7 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர்களில் பெண் பணியாளர் கொடுரமான வல்லுறவிற்கு பின்பு கொல்லப்பட்டிருக்கிறார். இதை செய்தவர்கள் கருணா குழுவினர்.

 

தகவலை தந்தவர் கருணா குழுவினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பவர். கருணா குழுவிற்குள் இருக்கின்ற அதிருப்தியாளர்கள் மூலம் இந்த தகவல் பெறப்பட்டது. இந்த அதிருப்தியாளர்கள் கருணா குழு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் வேட்டை நாய்களாக செயற்படுவதாக கருதுகிறார்கள். கருணா குழுவின் நடத்தைகளை அருவருப்புடன் நோக்குகிறார்கள்.

 

கடத்தப்பட்டவர்களுக்கு நடந்த கொடிய சம்பவம் மனதை பதற வைக்கக்கூடியது. தகவல் கிடைத்த பின்பும் பல வாரங்கள் இதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே இந்த துயர நிகழ்வு இங்கு பதியப்படுகிறது.

 

கருணா குழுவின் முக்கிய தலைவனாக பிள்ளையான் என்பவன் இருக்கின்றான். இந்தப் பிள்ளையானே ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைக்கும் காரணமானவன். கருணா குழுவின் பல ரகசிய நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருப்பவன். கொழும்பில் நடக்கும் வர்த்தகர்கள் கடத்தலுக்கும் பிள்ளையானே முக்கிய மூளையாக செயற்பட்டுவருவதாகவும் நம்பப்படுகிறது.

 

பொலநறுவையில் உள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் பல முகாம்கள் உண்டு. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட ஜனவரி 29 அன்று பிள்ளையானால் கருணா குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு ஒன்று வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் இருந்து வாகனம் ஒன்றில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களை வெலிகந்தைப் பகுதியில் வைத்து கடத்தும்படியும் பிள்ளையான் உத்தரவிட்டான்.

 

அதன்படி சிந்துயன் என்பவனின் தலைமையில் கருணா குழுவின் அணி ஒன்று ஒரு வெள்ளை வானில் புறப்பட்டது. இந்த சிந்துயன் பிரதீபன் என்றும் அழைக்கப்படுகிறான். தீவுச்சேனையில் இருந்து புறப்பட்ட ஆயுதம் தாங்கிய இந்த அணி வெலிகந்தையில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் வரும் வாகனத்திற்காக காத்துக் கொண்டு நின்றது. இந்த கடத்தல் அணியில் இருந்த மற்றையோர் ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன் ஆவார்கள். அனைவரும் 20ஐ நெருங்கிய வயதுடையவர்கள்.

 

புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் வாகனம் இராணுவ சோதனைச் சாவடியைத் தாண்டி வெலிகந்தையை அடைந்தது. கருணா குழுவின் வாகனம் அவர்களை பின்தொடந்து சென்றது. இரவு 8.30 மணியளவில் கருணா குழுவிற்கு சாதகமான ஒரு இடத்தில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் வாகனம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பின்பு பணியாளர்களோடு வாகனமும் தீவைச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

வடக்கு கிழக்கு மாகணத்தின் முன்பள்ளி அபிவிருத்தி செயலாளராகிய காசிநாதர் கணேசலிங்கமும், மண்முனை வடக்கின் முன்பள்ளி அபிவிருத்தி இணைப்பாளராகிய செல்வி டோசினியும், முன்பள்ளி ஆசிரியைகளான புண்ணியமூர்த்தி நடேஸ்வரி, சித்திரவேல் சிவமதியும், மற்றும் வாகன ஓட்டுனர் கதிர்காமர் தங்கராசாவும் கடத்தப்பட்ட ஐவரும் ஆவார்கள்.

 

கடத்தப்பட்டவர்கள் தீவுச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் ஆண்களும் பெண்களும் பிரிக்கப்பட்டார்கள். ஆண்களிடம் சிந்துயனே நேரடியாக விசாரணை நடத்தினான். பெண்களிடம் கருணா குழுவின் புலனாய்வுப்பிரிவுக்கு பொறுப்பான சித்தா என்று அழைக்கப்படும் பிரதீப் என்பவன் வேறு இருவருடன் இணைந்து விசாரணை நடத்தினான்.

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மீதான படுகொலையை சித்தாவே நடத்தியிருந்தான். 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். சித்தாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அடையாளம் கண்டு கொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடமும் சித்தா குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் தற்பொழுது அச்சத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்.

 

மூன்று பெண்களும் சித்தாவாலும் சச்சி என்று அழைக்கப்படும் சாந்தனாலும், ஜீவா என்று அழைக்கப்படும் திலகனாலும் விசாரிக்கப்பட்டார்கள். ஒரு நேரத்தில் சித்தா டோசினியை மற்ற பெண்களிடம் இருந்து பிரித்து தனியாக விசாரிப்பதற்கு அழைத்துச் சென்றான். சச்சியும் ஜீவாவும் மற்ற இரு பெண்களையும் தொடர்ந்து விசாரித்தனர்.

 

சிந்துயன் தொடர்ந்து இரு ஆண்களையும் விசாரணை செய்து கொண்டிருந்தான். கணேசலிங்கம் யாழ்பாணத்தில் உள்ள தெல்லிப்பழையை சேர்ந்தவர். தங்கராசா கிளிநொச்சியை சேர்ந்தவர். கடத்தப்பட்ட இரண்டு ஆண்களுக்கும் வடக்கை சேர்ந்தவர்களாக இருக்க, மூன்று பெண்களும் கிழக்கை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இரண்டு ஆண்களும் சிந்துயனால் பொட்டுஅம்மானின் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அவர்கள் வடக்கை சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் தூசிக்கப்பட்டார்கள். பின்பு இருவரும் சிந்துயனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

 

இதே வேளை நடேஸ்வரியும் சிவமதியும் விசாரணை முடிந்து சிந்துயனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று சச்சியும் ஜீவாவும் சிந்துயனிடம் தெரிவித்தார்கள். சச்சியும் ஜீவாவும் விசாரணையின் போது இந்த இரு பெண்களிடமும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்கள். அடுத்த நாள் இரு பெண்களும் சிந்துயனால் விடுவிக்கப்பட்டார்கள்.

 

டோசினி விடயம் சற்று மாறுபாடாக இருந்தது. டோசினியின் நெருங்கிய உறவினன் ஒருவன் கருணா குழுவின் முக்கிய உறுப்பினாக உள்ளான். இது டோசினிக்கு சாதகமான விடயமாக இருந்தது. அத்துடன் சித்தவிற்கு டோசினி மீது ஒரு பிடிப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் டோசினியை தனிமையில் வைத்து விசாரித்தான். அவளை மிரட்டி அழச் செய்து ஆறுதல் படுத்தினான். பின்பு டோசினியை சித்தாவே தன்னுடைய வாகனத்தில் வீட்டில் கொண்டு போய்விட்டான்.

 

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி டோசினி தற்பொழுது சித்தாவுடன் மனைவியாக வாழ்கிறாள். டோசினி மீது எந்த விசாரணையும் வராதபடி சக்தி மிக்க மனிதர்களால் காக்கப்படுகிறாள்.

 

ஆனால் நடேஸ்வரியும் சிவமதியும் பொலிஸாரினால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒரு நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டார்கள். பின்பு இருவரும் தாமாகவே கொழும்பிற்கு சென்று மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் டோசினி அவ்வாறான வாக்குமூலம் எதையும் வழங்கவில்லை.

 

அடுத்த நாள் ஜனவரி 30 மதியமளவில் பிள்ளையானிடம் இருந்து சிந்துயனிற்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. புனர்வாழ்வுக் கழகத்தின் இன்னும் ஒரு வாகனம் வருவதாகவும் அதையும் கடத்தும்படியும் பிள்ளையான் உத்தரவிட்டான். முதலில் வந்த வாகனத்தை கடத்திய அதே அணி மீண்டும் புறப்பட்டது. அதே பாணியில் இரண்டாவது வாகனத்தையும் 4.15 மணியளவில் கருணா குழு வழி மறித்தது.

 

புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 15 பேர் அந்த வாகனத்தில் இருந்தார்கள். வாகன ஓட்டுனர் கருணா குழுவால் தாக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டார். யோகன் அந்த வாகனத்தை பொறுப்பேற்றுக் கொண்டான். மற்றைய கருணா குழுவினர் தமது வெள்ளை வானில் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனத்தை பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் வாகனம் நிறுத்தப்பட்டது. புலேந்திரனும் சிரஞ்சீவியும் 15 பணியாளர்களின் கண்களையும் கட்டிவிட்டனர். பின்பு இரு வாகனங்களும் பல குறுக்குப்பாதைகளால் பயணித்து தீவுச்சேனையை அடைந்தன.

 

15 பேரும் சிந்துயன், சச்சி, ஜீவா ஆகியோரால் விசாரிக்கப்பட்டனர். அதில் 11 பேர் ஆரம்பநிலை உறுப்பினர்கள் என்றும் பயிற்சிக்காக வவுனியா செல்வதும் தெரியவந்தது. மற்றைய நால்வரும் களிநொச்சியில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவகப் பணிமனைக்கு சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால் ஆரம்பநிலை உறுப்பினர்களில் ஒருவர் மீது கருணா குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வுப்பிரிவின் தலைவரான கீர்த்தியோடு தொடர்புடையவர் என்று கருணா குழு குற்றம் சாட்டியது.

 

மிகுதி பத்துப் பேரும் மீண்டும் கண்கள் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டார்கள். வாகனத்தில் குமார், யோகன், ஜெயந்தன் ஆகியோர் இருந்தார்கள். வாகனம் ஏ11 வீதியால் பயணித்தது. அப்பொழுது ஒரு பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. ஜெயந்தன் "முன்னால பொலிஸ் ஜீப்" என்று கத்தினான். "அது பிரச்சனை இல்லை" என்று அமைதியாக யோகன் சொன்னான்.

 

பின்பு கருணா குழுவினர் பத்துப் பேரையும் விடுவிக்கும் போது மிகுதி 5 பேருக்கும் கடைசிக் காரியங்களை செய்யலாம் என்று அவர்களுடைய குடும்பத்தவர்களுக்கு சொல்லும்படியும் சொன்னார்கள்.

 

கருணா குழுவால் தடுத்து வைக்கப்பட்ட ஐவரில் கைலாயப்பிள்ளை ரவீந்திரன், சண்முகநாதன் சுயேந்திரன், தம்பிராஜா வசந்தராஜன் ஆகியோர் சிறுவர் இல்லங்களின் கணக்காளர்களாவும், அருணேஸ்வரராஜா சதீஸ்வரன் கணக்காள பயிற்சி பெறுபவராகவும் செல்வி பிறேமினி தனுஸ்கோடி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிழக்கு மாகாண கணக்காளராகவும் பணியாற்றியவர்கள் ஆவார்கள். பிறேமினி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் மாணவியாகவும் இருந்தார்.

 

சித்தாவினால் ஐவரும் மிகக் கடுமையாக விசாரிக்கப்பட்டார்கள். சிந்துயனும் விசாரணையில் பங்கு கொண்டான். ஆண்கள் நால்வரும் கடுமையாக தாக்கப்பட்டார்கள். சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். அதன் பிறகு சித்தாவும் மற்றவர்களும் அந்த முகாமை விட்டுச் சென்றார்கள். செல்கின்ற போது சிந்துயனிடம் "இனி உங்கட பொறுப்பு" என்று கூறிச் சென்றார்கள்.

 

பின்பு நான்கு ஆண்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அவர்களின் கண்கள் கட்டப்பட்டது. அவர்களை கண்கள் கட்டிய நிலையிலேயே காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒரு இடத்தில் அவர்களின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. அங்கே பெரிய குழி ஒன்றை தோண்டும்படி அவர்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அவர்கள் குழியை தோண்டிய பிற்பாடு, நால்வருயும் வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

 

பிறேமினிக்கு ஏற்பட்ட கதி மிகக் கோடுரமானது. பிறேமினி கதறக் கதறக் சிந்துயனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மற்றைய கருணா குழு உறுப்பினர்களாலும் வல்லுறவிற்கு உப்படுத்தப்பட்டார். 14 கருணா குழு உறுப்பினர்கள் இந்த கொடிய வல்லுறவில் ஈடுபட்டனர். சில கருணா குழு உறுப்பினர்களுக்கு அங்கு நடந்தது உடன்படில்லாத போதும், அதை தடுப்பதற்கு வலு அற்றவர்களாக இருந்தார்கள்.

 

அதிகாலையில் பிறேமினி காட்டுக்குள் கருணா குழுவால் அழைத்துச் செல்லப்பட்டார். பிறேமினி ஒரு நடைப்பிணம் போல் அவர்களுடன் சென்றார். பிறேமினி எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்று முன்னாள் கருணா குழு உறுப்பினர் தெரிவிக்கின்றார். காட்டில் வைத்து பிறேமினி வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடைய உடல் ஒரு பற்றைக்குள் வீசப்பட்டது.

http://www.nitharsanam.com/?art=22040

 

 

 

 

இந்த அப்பாவிப் பெண்ணை கற்பளித்துக் கொன்றது, நிச்சயமாக கிழக்கின் விடிவுக்கான ஒரு முதற்படியே!!!!! ....... "நெஞ்சு பொறுக்குதில்லையே" ..... இன்று பாரதி இருந்திருந்தால் நெஞ்சே வெடித்து இறந்திருப்பான்!!! நல்லது இல்லாமல் போய் விட்டான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சண்டமாருதன் said:

இன்றைய  தேர்தல் வெற்றி  செய்திகளோடு அன்றைய செய்திகள் 

இவை குற்றமில்லை  ...குதிரை ஒடினால் தான் குற்றம் பாராளுமன்றம் செல்லக்கூடாது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

இவை குற்றமில்லை  ...குதிரை ஒடினால் தான் குற்றம் பாராளுமன்றம் செல்லக்கூடாது.....

அண்ணோய், இப்ப நீங்கள் எங்க இருக்கிறியள்?

தமிழ்த்தேசியம் எல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சு கண்டியளோ? இப்ப ட்ரெண்ட் என்னவெண்டால், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தானாம். அதுக்காக உந்த இனக்கொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு எண்டு கேட்கிறதை எல்லாம் விட்டு விடவேணுமாம். 
அண்ணை, ஆதரிக்கிறது எங்கள அழிச்சவங்களைத்தான் எண்டு வந்தபிறகு உதெல்லாம் பேச ஏலுமே? கருணா பிள்ளையான் கற்பழித்ததும் கொன்றதும் பற்றி நீங்கள் கேள்வி கேட்க ஏலாது, ஏனெண்டால், அவையள் வன்னிப் புலிகளுக்கு ஆதரவான ஆட்கள் கண்டியளோ? அவையள அப்படிச் செய்ததில ஒரு குற்றமும் இல்லை. 

மகிந்தவும் கோத்தாவும் வடமாகாணச் சனத்துக்குச் செய்ததையே சரியெண்டு ஏற்றுக்கொண்டு இண்டைக்கு அவையின்ர ஆள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பின்னால போறமாம், உதையெல்லாம் இன்னமும் தூக்கிபிடிச்சுக்கொண்டு?!

ஆனாலும் அண்ணை, இன்னும் ஒண்டு ரெண்டு பேர் தமிழ்த் தேசியம் எண்டு கொண்டு நிக்கினம். உவையையும் அழிச்சுப்போட்டுத்தான் இனி மிச்ச வேலை கண்டியளோ. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு துரோகம் என்றதெல்லாம் நல்ல விஷயம் எண்டு சனத்தை நம்பவைச்சு வாறம், உவை இன்னமும் தமிழும், தேசியமும், பூர்வீக தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுக்கொண்டு திரியினம். விசர் தான் வரூது கண்டியளோ? 

Link to comment
Share on other sites

20 minutes ago, putthan said:

இவை குற்றமில்லை  ...குதிரை ஒடினால் தான் குற்றம் பாராளுமன்றம் செல்லக்கூடாது.....

இலங்கையின் அதி விசேஷ ஜனநாயகம் !! 

 

‘சாராயம்’ விலையும் அதிகரிப்பு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

அண்ணோய், இப்ப நீங்கள் எங்க இருக்கிறியள்?

தமிழ்த்தேசியம் எல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சு கண்டியளோ? இப்ப ட்ரெண்ட் என்னவெண்டால், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தானாம். அதுக்காக உந்த இனக்கொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு எண்டு கேட்கிறதை எல்லாம் விட்டு விடவேணுமாம். 
அண்ணை, ஆதரிக்கிறது எங்கள அழிச்சவங்களைத்தான் எண்டு வந்தபிறகு உதெல்லாம் பேச ஏலுமே? கருணா பிள்ளையான் கற்பழித்ததும் கொன்றதும் பற்றி நீங்கள் கேள்வி கேட்க ஏலாது, ஏனெண்டால், அவையள் வன்னிப் புலிகளுக்கு ஆதரவான ஆட்கள் கண்டியளோ? அவையள அப்படிச் செய்ததில ஒரு குற்றமும் இல்லை. 

மகிந்தவும் கோத்தாவும் வடமாகாணச் சனத்துக்குச் செய்ததையே சரியெண்டு ஏற்றுக்கொண்டு இண்டைக்கு அவையின்ர ஆள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பின்னால போறமாம், உதையெல்லாம் இன்னமும் தூக்கிபிடிச்சுக்கொண்டு?!

ஆனாலும் அண்ணை, இன்னும் ஒண்டு ரெண்டு பேர் தமிழ்த் தேசியம் எண்டு கொண்டு நிக்கினம். உவையையும் அழிச்சுப்போட்டுத்தான் இனி மிச்ச வேலை கண்டியளோ. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு துரோகம் என்றதெல்லாம் நல்ல விஷயம் எண்டு சனத்தை நம்பவைச்சு வாறம், உவை இன்னமும் தமிழும், தேசியமும், பூர்வீக தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுக்கொண்டு திரியினம். விசர் தான் வரூது கண்டியளோ? 

தேவநாயகம்  எம் பி யாகவும் அமைச்சராகவும் கல்குடா தொகுதியில் பல வருடங்களாக இருந்தவர்....அவர் செய்யாத அபிவிருத்தி....ராஜதுரை செய்யாத அபிவிருத்தி ,கனகரத்தினம் செய்யாத அபிவிருத்தி, செல்லையா குமாரசாமி செய்யாத அபிவிருத்தி,ராஜன் செலவநாயகம் செய்யாத அபிவிருத்தி ,நம்ம டக்கிளஸ் செய்யாத அபிவிருத்தியையா இவர்கள் செய்யப்போகின்றார்கள் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

இன்றைய  தேர்தல் வெற்றி  செய்திகளோடு அன்றைய செய்திகள் 

உங்கள் கருத்துக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன் ...நீங்களும்,மூன்றாம் தர சீப்பான கருத்தாளர் என்று உங்களை நிரூபித்து விட்டீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் கருத்துக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன் ...நீங்களும்,மூன்றாம் தர சீப்பான கருத்தாளர் என்று உங்களை நிரூபித்து விட்டீர்கள்.
 

நடந்த விடயத்தை எழுதினால் சீப்பான கருத்தாளர். மற்றவர்களுக்கு சொம்பு துக்க முன்னர் கருத்தை எதிர் கொள்ள பழகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, MEERA said:

நடந்த விடயத்தை எழுதினால் சீப்பான கருத்தாளர். மற்றவர்களுக்கு சொம்பு துக்க முன்னர் கருத்தை எதிர் கொள்ள பழகுங்கள்.

கருத்தை எதிர் கொள்ள உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் ....இதற்கு முதலில் சண்டமாருதன் பதில் சொல்லட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

கருத்தை எதிர் கொள்ள உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் ....இதற்கு முதலில் சண்டமாருதன் பதில் சொல்லட்டும் 

அது தான் நேற்று எனக்கு பிரதேசவாதம் பூச முற்பட்டு ஓடி ஒழிந்தீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

எங்கே உது தானா அந்த பதில்?...பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இணையங்களில் வரும் செய்திக்காய் யாழில் சண்டை பிடித்து நேரத்தை வீணாக்குகிறீர்கள் ....உங்களுக்கு சார்பான செய்தி என்றால் ஏற்பீர்கள் இல்லாட்டில் தூக்கி போட வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எங்கே உது தானா அந்த பதில்?...பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இணையங்களில் வரும் செய்திக்காய் யாழில் சண்டை பிடித்து நேரத்தை வீணாக்குகிறீர்கள் ....உங்களுக்கு சார்பான செய்தி என்றால் ஏற்பீர்கள் இல்லாட்டில் தூக்கி போட வேண்டும் 

அதே இணையங்களில் வந்த செய்தியை தான் தாங்கள் தூக்கிப்பிடிப்பது

😜

Link to comment
Share on other sites

23 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

சரியாக சொன்னீர்கள். விக்கி ஐயா இனி கம்பன்வாருதி ஜெயராஜுடன் கமபன் சொட்பொலிவாற்றுவார். கஜன்கள் பஜனை பாடுவார்கள்.

பிள்ளையானின் போராட்டகால வாழ்க்கை பிழையாக இருந்தாலும் , முதலமைச்சரான பின்னர் தமிழ் மக்களுக்காக முடிந்த சேவையை வளங்களினார்.

வடமாகாண சபை கதிரைகளை சூடேற்றிக்கொண்டிருந்தபோது இவர் தமிழ் மக்களுக்காக சூடாக வேலை செய்தார். மக்கள் அதை மறக்கவில்லை.

மற்றவர்களைப்போல் அந்தளவுக்கு படிக்கவிடடாலும் அதிகாரிகளின் துணையுடன் மக்கள் சேவையை வழங்கினார். வாழ்த்துக்கள் பிள்ளையான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

வடமாகாண சபை கதிரைகளை சூடேற்றிக்கொண்டிருந்தபோது இவர் தமிழ் மக்களுக்காக சூடாக வேலை செய்தார். மக்கள் அதை மறக்கவில்லை.

வங்காலையன், பிள்ளையான் முதலமைச்சராக இருந்தது 16/05/2008-27/06/2012

வடமாகாணசபை தோற்றம் பெற்றது  21/09/2012

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாழ் அரியன் said:

 ராஜா, 

பலதடவைகள் பிணை கேட்கப்பட்டது உண்மைதான். கடந்த நான்கு தவணைக் காலங்களில்  எப்போதாவது பிணை கேட்கப்பட்டதா ? ஏன் கேட்கவில்லை. இலங்கை சட்டவாளர்களை யாராவது கேட்டு தெளிவுபடுத்துங்கள் தேவையென்றால்..பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அல்லது அவசரகால சட்டத்திற்கு மட்டும் இந்த விதி செல்லாது. தவிர பிள்ளையான் அரசியல் கைதியும் இல்லை அவர் ஒரு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிணைவழங்க அனுமதி உண்டு. அவரது வழக்கு டயல்அட்பார் சேம்பரில் நடக்கவில்லை. சாதாரண வழக்குதான்.

பிள்ளையான் குழு செய்த கொலைகளையும் கடத்தல்களையும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவற்றைவிட கிழக்கின் பிரச்சனைகள் வேறானவை என்பது எல்லோருக்கும் புரியும். கிழக்கில் தமிழ்  அரசியல் பேசுகின்ற அனைவரும் சேருகின்ற ஒருபுள்ளி என்றால் அது முஸ்லீம் எதிர்ப்பு. மற்றது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு.  பிள்ளையான் மக்களுக்கு செய்த  சேவைகளை குறைத்து மதிப்பிடவில்லை நண்பா. அதேபோல பிள்ளையானில் எதுவித கோபமோ காழ்ப்போ இல்லை. 

ஆனால் ஞானம் மாஸ்டர் இன்னும் பேசுகின்ற யாழ் மேலாதிக்கம் தேவையற்றது. யாழின் மேலாதிக்கம் சுருண்டு படுத்துவிட்டது நண்பா. வேட்க்கையில் பிள்ளையான் கிழக்கில் முஸ்லீம் முதலமைசர் வராதிருக்க தமிழ் தேசியக் கூடடமைப்போடு டீல் பேசியதாக எழுதியிருக்கிறார். 

அதனால் தான் சொல்கிறோம் சந்தர்ப்பவாதம் வேண்டாம், மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுபோதும் 

பிணை கோரப்பட்டதை நான் காட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள் இரண்டாம் மாதம் கோரப்பட்டது ஏன் விடுதலையாகிறார் எனா செய்தியும் வந்தது கோட்டா ஜனாதிபதியானதும் ஆனால் பிணையானது கொழும்பு கோட்ஸ் தான் தீர்மானிக்கும் சிறையில் பசில் , நாமல் , மகிந்தவும் பார்த்து சென்று விட்டு போனார்கள் மீதமானதை நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள் .

பிள்ளையானையும் , கர்ணாவையும் ஏன் கூட்டமைக்கு எதிராக யார் இறங்கினாலும் அவர்களை எப்படியாவது துரத்த கங்கணம் கட்டி திரிகிறது இது நான் பார்க்கு உன்மை சாதாரண பிரதேச ச்பை தேர்தலிலிருந்து  இப்ப வரை நடந்த எலக்சன் வரைக்கும் இப்படி இருக்கு பிள்ளையான் கருணா மீது குற்ற சாட்டுக்களை அடுக்கியே செல்வார்கள்  கட்டுரை கூட எழுதுவார்கள் ஆயுத குழுக்கள் யார் குற்றம் செய்ய வில்லை சொல்லுங்கள் 

இன்று அரசியலில் இருக்கும் பலர் முன்னை நாள் ஆயுத தாரிகள்தான் அவர்களை சேர்த்து அரசியல் கூட்டமைப்பு நடத்தும் போது பிள்ளையான் , கர்ணா நடத்தினால் தான் பாரிய பிரச்சினை .

மட்டக்களப்பு , அம்பாறை, மாவட்ட பிரச்சினைகளை கூட்டமைப்பு கையாளாமல் மைத்திரி , ரணில் அரசையும் காப்பாற்றி திரிந்ததால் மக்கள் மாற்றம் கொடுத்துள்ளார்கள் 

 

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

உங்கள் கருத்துக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன் ...நீங்களும்,மூன்றாம் தர சீப்பான கருத்தாளர் என்று உங்களை நிரூபித்து விட்டீர்கள்.
 

நான் கருத்து எதையும் முன்வைக்கவில்லை.  இத் திரியில் நான் அன்று நடந்த சம்பவம் தெடர்பான செய்தியை இணைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். நீங்கள் நடந்த சம்பவத்தை வேண்டுமானால் முதல்தரம் மூன்றாம் தரம் என்று பிரித்துப் பார்க்கலாம் தவிர எனது கருத்து எதுவும் இல்லை. நடந்த சம்பவங்கள் இல்லை என்று ஆகிவிடாது. அப்படி அணுகுவது அறமும் கிடையாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சண்டமாருதன் said:

 இத் திரியில் நான் அன்று நடந்த சம்பவம் தெடர்பான செய்தியை இணைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். நீங்கள் நடந்த சம்பவத்தை வேண்டுமானால் முதல்தரம் மூன்றாம் தரம் என்று பிரித்துப் பார்க்கலாம் தவிர எனது கருத்து எதுவும் இல்லை. நடந்த சம்பவங்கள் இல்லை என்று ஆகிவிடாது. அப்படி அணுகுவது அறமும் கிடையாது. 

 

அன்று நடந்த சம்பவங்களை, கருணா குழு, பிள்ளையான் குழுவினரின் மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளைக் கூட கிழக்கில் மக்கள் மறக்குமளவிற்கு தமிழ்த்தேசிய நோக்குள்ளவர்களின் அரசியல் செயற்பாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் மக்கள் பிரதேச அபிவிருத்திக்கும், முஸ்லிம்களின் நெருக்குவாரங்களைக் குறைக்கவும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இன்னொரு தலைமுறை தாண்டும்போது “எனது தாத்தாவிடம் ஒரு புலி இருந்தது” என்ற கதையாடலில் வந்து நிற்கும்!

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

அன்று நடந்த சம்பவங்களை, கருணா குழு, பிள்ளையான் குழுவினரின் மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளைக் கூட கிழக்கில் மக்கள் மறக்குமளவிற்கு தமிழ்த்தேசிய நோக்குள்ளவர்களின் அரசியல் செயற்பாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் மக்கள் பிரதேச அபிவிருத்திக்கும், முஸ்லிம்களின் நெருக்குவாரங்களைக் குறைக்கவும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இன்னொரு தலைமுறை தாண்டும்போது “எனது தாத்தாவிடம் ஒரு புலி இருந்தது” என்ற கதையாடலில் வந்து நிற்கும்!

 

தமிழ்த்தேசீய நோக்குள்ளவர்களின் செயற்பாட்டால் தான் கடந்த கால கொடுங்கோன்மையை  மக்கள் மறந்து கொடுங்கோலர்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது சரியான புரிதலா ? தமிழததேசீயம் என்பதே சிதைந்த நிலையில் தேசீய செயற்பாடுகளுக்கு சாத்தியமில்லை.  தேசீயத்தை கடந்த அறம் சார்ந்த ஒரு பொது புரிதல் கூட கேள்விக் குரியதாக இருப்பதை குறிக்கவே இந்த பழைய செய்தியை இணைத்தேன்.  இதற்கு காரணம் இன்னார் என்ற சுட்டிக்காட்டுதலுக்கு கூட தகுதியற்ற நிலையில்  இருக்கின்றோம். 

Link to comment
Share on other sites

9 hours ago, MEERA said:

 பிள்ளையான் முதலமைச்சராக இருந்தது 16/05/2008-27/06/2012

வடமாகாணசபை தோற்றம் பெற்றது  21/09/2012

அது சரிதான். இருந்தாலும் இப்போதுதானே இரு முதலமைச்சரும் ஒரே நேரத்தில் போட்டியிட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சண்டமாருதன் said:

நான் கருத்து எதையும் முன்வைக்கவில்லை.  இத் திரியில் நான் அன்று நடந்த சம்பவம் தெடர்பான செய்தியை இணைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். நீங்கள் நடந்த சம்பவத்தை வேண்டுமானால் முதல்தரம் மூன்றாம் தரம் என்று பிரித்துப் பார்க்கலாம் தவிர எனது கருத்து எதுவும் இல்லை. நடந்த சம்பவங்கள் இல்லை என்று ஆகிவிடாது. அப்படி அணுகுவது அறமும் கிடையாது. 

 

நீங்கள், உண்மையிலேயே பிறேமினிக்கும் ,அவரோடு கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், பிள்ளையான் தேர்தலில் வெல்லும் மட்டும் காத்து இருந்திருக்க மாட்டீர்கள்...குறைந்த பட்சம் அவர் தேர்தலில் நிற்கும் போதாவது உங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கலாம்...அல்லது அவருக்கு எதிராய் வழக்கு போட்டு இருக்கலாம் ...இவர் எல்லாம் எங்க வெல்லப் போறார் என்று இருந்து விட்டு வென்றவுடன் பழையதுகளை கிளறுவது பொறாமையின் உச்சம்.
பிள்ளையானோ,கருணாவோ இந்த சம்பவத்தில் நேரடியாய் பங்குபற்றியதற்கோ அல்லது அங்கு அந்த இடத்தில் நின்றதற்கோ  எந்த வித ஆதாரங்களும் இல்லை ....[இதில் இருந்து தப்பி வந்த சிலர் இன்னும் மட்டுவில் தான் இருக்கினம்.]...அப்படி இருக்கும் போது எப்படி இவர்கள் பொறுப்பாவார்கள்?
புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...அதை எல்லாம் கண்ணை மூடி கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்[உங்களை போன்றோர் ] இந்த கொலைகளை தட்டிக் கேட்க வெளிக்கிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...யாராயினும் உயிர் ,உயிர் தான் ...கொலை ,கொலை தான் என்பதை மறந்து விட  வேண்டாம் .
கருணா ,புலிகள் சண்டையின் போது , கருணாவோடு நின்ற பெண் போராளிகள் இறந்த பின் அவர்களை புலிகள்  அம்மணமாக்கினார்கள் என்று சொல்கிறார்கள் ...ஆனால் பழசை எல்லாம் கிளறுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...எது ,எப்படி இருந்தாலும் இறந்தது எல்லாம் எம் மக்களே.
வடக்கு அரசியலில் இருந்து முற்றாக வேறுபட்டது கிழக்கு ...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...முடியா விட்டால் ஒதுங்கி இருங்கள்.
உங்களுக்கு கீழ் தான் அவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.
இப்பவும் ஒன்றும்  கெட்டு போகவில்லை ...உண்மையாகவே பிறேமினியின் மரணத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு சும் போன்றவர்களுக்கு காசை கொடுத்தீர்கள்  என்றால் வழக்காடுவார்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள், உண்மையிலேயே பிறேமினிக்கும் ,அவரோடு கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், பிள்ளையான் தேர்தலில் வெல்லும் மட்டும் காத்து இருந்திருக்க மாட்டீர்கள்...குறைந்த பட்சம் அவர் தேர்தலில் நிற்கும் போதாவது உங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கலாம்...அல்லது அவருக்கு எதிராய் வழக்கு போட்டு இருக்கலாம் ...இவர் எல்லாம் எங்க வெல்லப் போறார் என்று இருந்து விட்டு வென்றவுடன் பழையதுகளை கிளறுவது பொறாமையின் உச்சம்.
பிள்ளையானோ,கருணாவோ இந்த சம்பவத்தில் நேரடியாய் பங்குபற்றியதற்கோ அல்லது அங்கு அந்த இடத்தில் நின்றதற்கோ  எந்த வித ஆதாரங்களும் இல்லை ....[இதில் இருந்து தப்பி வந்த சிலர் இன்னும் மட்டுவில் தான் இருக்கினம்.]...அப்படி இருக்கும் போது எப்படி இவர்கள் பொறுப்பாவார்கள்?
புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...அதை எல்லாம் கண்ணை மூடி கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்[உங்களை போன்றோர் ] இந்த கொலைகளை தட்டிக் கேட்க வெளிக்கிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...யாராயினும் உயிர் ,உயிர் தான் ...கொலை ,கொலை தான் என்பதை மறந்து விட  வேண்டாம் .
கருணா ,புலிகள் சண்டையின் போது , கருணாவோடு நின்ற பெண் போராளிகள் இறந்த பின் அவர்களை புலிகள்  அம்மணமாக்கினார்கள் என்று சொல்கிறார்கள் ...ஆனால் பழசை எல்லாம் கிளறுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...எது ,எப்படி இருந்தாலும் இறந்தது எல்லாம் எம் மக்களே.
வடக்கு அரசியலில் இருந்து முற்றாக வேறுபட்டது கிழக்கு ...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...முடியா விட்டால் ஒதுங்கி இருங்கள்.
உங்களுக்கு கீழ் தான் அவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.
இப்பவும் ஒன்றும்  கெட்டு போகவில்லை ...உண்மையாகவே பிறேமினியின் மரணத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு சும் போன்றவர்களுக்கு காசை கொடுத்தீர்கள்  என்றால் வழக்காடுவார்கள் 
 

அக்காநீங்கள் எல்லாம் தெரிந்துதான் கதைக்கிறீர்களா?கருணாவே புலிகள் அநாகரிகமாகநடக்கவில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விருப்பு வாக்கெடுப்புக் கணிப்பில் மோசடி செய்யலாமா?
இலங்கைப் நாடாளமன்றத்தேர்தலில் இருவகையான வாக்களிப்புச் செய்யலாம். முதலாவது கட்சி அல்லது சுயாதீனக் குழுத்தெரிவு வாக்களிப்பு. இதில் வாக்காள தனக்குப் பிடித்த கட்சி அல்லது சுயாதீனக் குழுவிற்கு எதிரே உள்ள கட்டத் துக்குள் புள்ளடியிட வேண்டும். இது கட்டாயம்.
இரண்டாவது விருப்பத்துக்குரிய வேட்பாளருக்கு வாக்களிப்பு. இதில் ஒரு வாக்காளர் தனது விருப்பத்துக் குரிய வேட்பாளர் ஒருவர், இருவர் அல்லது மூவரை அவர்களுக்குரிய இலக்கத்தின் மேல் புள்ளடியிட வேண்டும். இந்த வாக்களிப்பைச் செய்யலாம் அல்லது செய்யாமல் விடலாம்.
முதலில் கட்சித் தெரிவு வாக்குகளை எண்ணுவார்கள். எண்ணும் போது எல்லா கட்சி மற்றும் சுயாதீனக் குழுக்கள் சார்பிலும் முகவர்கள்/வேட்பாளர்கள் இருந்து வாக்கு எண்ணுவதைக் கண்காணிக்கலாம்.
பின்னர் ஒவ்வொரு கட்சியினதும்/சுயாதீனக் குழுக்களினதும் விருப்பு வாக்குகள் தனித்தனி எண்ணப்படும்.
ஒரு கட்சி/சுயாதீனக் குழுவின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் போது அந்தக் கட்சி/சுயாதீனக் குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இருக்கலாம். இதன் போது தேர்தல் ஆணையகத்திற்காக பணிபுரியும் அரச அதிபர்/அதிகாரிகள் ஊழலுக்கு ஒத்துப் போனால் மோசடி செய்யலாம். ஏதாவது கட்சிக்கு ஆதரவானவராகவோ, அவர்களிடமிருந்து பணம் பெற்றவராகவோ அல்லது அவர்களால் கடுமையாக மிரட்டப்பட்டவராகவோ விருப்பு வாக்கு எண்ணும் இடத்தில் உள்ள அரச அதிகாரி இருந்தால் மோசடி செய்யலாம். கட்சிக்கு மட்டும் வாக்களிக்கப்பட்டு விருப்பு வாக்கை அளிக்கப்படாத அல்லது மூன்றிற்கும் குறைவான விருப்பு வாக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களில் கள்ளமாக ஒரு வேட்பாளருக்கு உரிய இலக்கத்தின் மேல் புள்ளடியிட்டு அவரின் விருப்பு வாக்கு எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கச் செய்யலாம். இதனால் முன்னுக்கு இருந்தவர் பின் தள்ளப்பட்டு தோற்கடிக்கப்பட்டவரை வென்றவராக அறிவிக்கலாம்.
நன்றி தர்மா 
Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

நீங்கள், உண்மையிலேயே பிறேமினிக்கும் ,அவரோடு கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், பிள்ளையான் தேர்தலில் வெல்லும் மட்டும் காத்து இருந்திருக்க மாட்டீர்கள்...குறைந்த பட்சம் அவர் தேர்தலில் நிற்கும் போதாவது உங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கலாம்...அல்லது அவருக்கு எதிராய் வழக்கு போட்டு இருக்கலாம் ...இவர் எல்லாம் எங்க வெல்லப் போறார் என்று இருந்து விட்டு வென்றவுடன் பழையதுகளை கிளறுவது பொறாமையின் உச்சம்.
பிள்ளையானோ,கருணாவோ இந்த சம்பவத்தில் நேரடியாய் பங்குபற்றியதற்கோ அல்லது அங்கு அந்த இடத்தில் நின்றதற்கோ  எந்த வித ஆதாரங்களும் இல்லை ....[இதில் இருந்து தப்பி வந்த சிலர் இன்னும் மட்டுவில் தான் இருக்கினம்.]...அப்படி இருக்கும் போது எப்படி இவர்கள் பொறுப்பாவார்கள்?
புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...அதை எல்லாம் கண்ணை மூடி கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்[உங்களை போன்றோர் ] இந்த கொலைகளை தட்டிக் கேட்க வெளிக்கிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...யாராயினும் உயிர் ,உயிர் தான் ...கொலை ,கொலை தான் என்பதை மறந்து விட  வேண்டாம் .
கருணா ,புலிகள் சண்டையின் போது , கருணாவோடு நின்ற பெண் போராளிகள் இறந்த பின் அவர்களை புலிகள்  அம்மணமாக்கினார்கள் என்று சொல்கிறார்கள் ...ஆனால் பழசை எல்லாம் கிளறுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...எது ,எப்படி இருந்தாலும் இறந்தது எல்லாம் எம் மக்களே.
வடக்கு அரசியலில் இருந்து முற்றாக வேறுபட்டது கிழக்கு ...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...முடியா விட்டால் ஒதுங்கி இருங்கள்.
உங்களுக்கு கீழ் தான் அவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.
இப்பவும் ஒன்றும்  கெட்டு போகவில்லை ...உண்மையாகவே பிறேமினியின் மரணத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு சும் போன்றவர்களுக்கு காசை கொடுத்தீர்கள்  என்றால் வழக்காடுவார்கள் 
 

 

Quote

புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...அதை எல்லாம் கண்ணை மூடி கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்[உங்களை போன்றோர் ] இந்த கொலைகளை தட்டிக் கேட்க வெளிக்கிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...யாராயினும் உயிர் ,உயிர் தான் ...கொலை ,கொலை தான் என்பதை மறந்து விட  வேண்டாம் .

இத்தால் நீங்கள் சொல்லவருவதாவது அப்பாவிப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தை மீள பதிவு செய்தது கூட நியாயமற்ற செயல் என்பதேயாகும். அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில் இணைய நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை  தொடர்புகொண்டு எங்கள் தலைவர் பிள்ளையான் தலமையிலான குழு முன்னர் செய்த பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள் குறித்த செய்திகள் இன்னும் இணையத்தில் இருக்கின்றது . அவை நியாயமற்ற செயல்  ஆகவே  இந்த செய்திகளை நீக்குங்கள் என்று கோருங்கள்.  நான் எதோ மட்டக்கிளப்பில் நின்று ஆர்பாட்டம் செய்வதுபோல் என்னை தட்டிகேட்பதாக கற்பனை செய்து பதிவிடுவது பொருத்தமற்ற கருத்து. நான் பழைய யாழ்பதிவை இணைத்தேன் அவ்வளவுதான். முதலில் மீனகத்தை தொடர்பு கொண்டு நீக்க கோருங்கள். 

https://www.meenagam.com/?p=12004

Quote

வடக்கு அரசியலில் இருந்து முற்றாக வேறுபட்டது கிழக்கு ...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...முடியா விட்டால் ஒதுங்கி இருங்கள்.
உங்களுக்கு கீழ் தான் அவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.

இணைத்த வன்புணர்வு கொலை தொடர்பான செய்திக்கு நீங்கள் வடக்கு அரசியலில் இருந்து கிழக்கு வேறு பட்டது என்கின்றீர்கள். இதன் அர்த்தம் மிக வில்லங்கமானது. 

யாருக்கும் கீழ் யாரும் ஏன் இருக்கவேணும்? யாருக்கு கீழ் யார் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கின்றார்கள் ? புரியவில்லை. 

Quote

புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...

கருணாவும் பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்தவர்ள் தானே ? அவர்களைத் தான் சொல்கின்றீர்களா ?

-------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

இணைத்த வன்புணர்வு கொலை தொடர்பான செய்திக்கு நீங்கள் வடக்கு அரசியலில் இருந்து கிழக்கு வேறு பட்டது என்கின்றீர்கள். இதன் அர்த்தம் மிக வில்லங்கமானது. 

யாருக்கும் கீழ் யாரும் ஏன் இருக்கவேணும்? யாருக்கு கீழ் யார் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கின்றார்கள் ? புரியவில்லை. 

இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா சண்டமாருதன்?

இவர்கள் சொல்லவருவது இதனைத்தான் என்று நினைக்கிறேன்.

1. வடக்குத் தமிழர்கள் வேறு கிழக்குத் தமிழர்கள் வேறு.

2. கிழக்குத் தமிழர்கள் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்க்கிறார்கள்.

3. வடக்குத் தமிழனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்குத் தமிழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4. வடக்கிலிருந்து வரும் எந்தத் தலைமையையும் இனிமேல் கிழக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். பிரபாகரனையே தூக்கியெறிந்துவந்தவர்கள் கிழக்கு மக்கள், இனிமேல் இது நடவாது.

5. வடக்குத் தமிழர்கள் சொல்வதுபோல் போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை ( உபயம் அண்மைய கருணாவின் செவ்வி - அது யுத்தம் மட்டும்தானாம்). அத்துடன் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தத்தில் புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பாவித்ததனாலேயே பலர் கொல்லப்பட்டிருக்கலாம். அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வடக்குத் தமிழர்கள் அல்லது வன்னிப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதால், கிழக்குத் தமிழர்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.. அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வழங்க  கிழக்கு மாகாண மக்களிடம் உதவி கேட்க முடியாது, அவர்கள் இனிமேல் இதற்கு ஆதரவு வழங்கப்போவதுமில்லை.

6. வடக்குத் தமிழர்களிடம் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் கிழக்குத் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.

7. இனிமேல் வடக்குத் தமிழர்களுக்கும், அவர்களின் மொழி, தாயக, சுயநிர்ணயப் போராட்டத்திற்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், இவை எதுவுமே கிழக்குத் தமிழர்களுக்கு ஒருபோதுமே தேவையாக இருந்ததில்லை. வடக்குத் தமிழரின் தேவைகளுக்காகவே கிழக்குப் போராளிகள் மரணிக்கவேண்டியதாயிற்று.

8. இனிமேலும் தேசியம் என்று நீங்கள் பேசினால், சிங்களவர்களுடன் சேர்ந்து அதை அழிப்பதைத்தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

On 10/8/2020 at 07:14, சண்டமாருதன் said:

தமிழததேசீயம் என்பதே சிதைந்த நிலையில் தேசீய செயற்பாடுகளுக்கு சாத்தியமில்லை.  தேசீயத்தை கடந்த அறம் சார்ந்த ஒரு பொது புரிதல் கூட கேள்விக் குரியதாக இருப்பதை குறிக்கவே இந்த பழைய செய்தியை இணைத்தேன்.  இதற்கு காரணம் இன்னார் என்ற சுட்டிக்காட்டுதலுக்கு கூட தகுதியற்ற நிலையில்  இருக்கின்றோம். 

முதலில் தேசியம் என்றால் என்னவென்று சற்றுத் தெளிவுபடுத்துங்கள் சண்டமாருதன். ஏனென்றால், இங்கு பலருக்கு தேசியம் என்றால் சுமந்திரனின் சுத்துமாத்து அரசியல் என்றுதான் விளக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் எதற்கெடுத்தாலும் சுமந்திரனின் அரசியலை எதிர்க்கிறோம் என்கிற போர்வையில் தேசியத்தை தேசியத்தை எதிர்க்கிறோம் என்று கூவுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரஞ்சித் said:

1. வடக்குத் தமிழர்கள் வேறு கிழக்குத் தமிழர்கள் வேறு.

2. கிழக்குத் தமிழர்கள் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்க்கிறார்கள்.

3. வடக்குத் தமிழனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்குத் தமிழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4. வடக்கிலிருந்து வரும் எந்தத் தலைமையையும் இனிமேல் கிழக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். பிரபாகரனையே தூக்கியெறிந்துவந்தவர்கள் கிழக்கு மக்கள், இனிமேல் இது நடவாது.

5. போர்க்குற்றங்களும், மனிதவுரிமை மீறள்களும் வன்னியிலேயே நடைபெற்றன. இதன்போது கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றில் வன்னிப் புலிகளுக்கு ஆதராவாய் நின்றவர்கள் அல்லது யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வழங்க  கிழக்கு மாகாண மக்களிடம் உதவி கேட்க முடியாது, அவர்கள் இனிமேல் இதற்கு ஆதரவு வழங்கப்போவதுமில்லை.

6. வடக்குத் தமிழர்களிடம் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் கிழக்குத் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.

7. இனிமேல் வடக்குத் தமிழர்களுக்கும், அவர்களின் மொழி, தாயக, சுயநிர்ணயப் போராட்டத்திற்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், இவை எதுவுமே கிழக்குத் தமிழர்களுக்கு ஒருபோதுமே தேவையாக இருந்ததில்லை. வடக்குத் தமிழரின் தேவைகளுக்காகவே கிழக்குப் போராளிகள் மரணிக்கவேண்டியதாயிற்று.

8. இனிமேலும் தேசியம் என்று நீங்கள் பேசினால், சிங்களவர்களுடன் சேர்ந்து அதை அழிப்பதைத்தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

ரகு  அண்ணை 
கீழே எனது பதில்கள் 

1. வடக்குத் தமிழர்கள் வேறு கிழக்குத் தமிழர்கள் வேறு.
    Correct அவனவன் உழைத்தால் தான் அவனவனுக்கு சோறு .

2. கிழக்குத் தமிழர்கள் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்க்கிறார்கள்.
    Wrong கிழக்கு தமிழர்கள் முஸ்லிம்களுடன் வடக்கு தமிழர்களை விட அதிக முன் அனுபவம்  கொண்டிருப்பவர்கள் என்பதால் சாத்தியப்படாதவை பின்னே போய்  இருப்பையும் பறிகொடுக்க தயாரில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். வடக்கு தமிழர்கள் தமக்காக  ஒரு பிரதிநிதியை கூட தெரிவுசெய்யமுடியாமல் இனவிகிதாசாரத்தில் நொண்டும் போது சிலவேளை  ஞானம் பிறக்கலாம், 

Don't Worry அப்போதும் புலம் பெயர்சினால் தமிழ் தேசியம் நீரூற்றி பேணப்படும். ஆனால்  அவர்களது பிள்ளைகளாளோ வெள்ளைகளுடனும் காப்பிலிகளுடனும் கலந்து ஜனநாயக பன்மைத்துவம் பேணப்படும்   

3. வடக்குத் தமிழனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்குத் தமிழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
     Correct- கிழக்கு தமிழர்களின் முதல் பிரட்ச்சினை முஸ்லிம்கள் + அவர்களுடன் அரசியல் செய்யத்தெரியாத தமிழ் தலைமைகள் 

4. வடக்கிலிருந்து வரும் எந்தத் தலைமையையும் இனிமேல் கிழக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். பிரபாகரனையே தூக்கியெறிந்துவந்தவர்கள் கிழக்கு மக்கள், இனிமேல் இது நடவாது.
    Correct- தேசிய தலைவர் போன்றொரு தலைவர் இனி வரப்போவதேயில்லை .Dot 

5. போர்க்குற்றங்களும், மனிதவுரிமை மீறள்களும் வன்னியிலேயே நடைபெற்றன. இதன்போது கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றில் வன்னிப் புலிகளுக்கு ஆதராவாய் நின்றவர்கள் அல்லது யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வழங்க  கிழக்கு மாகாண மக்களிடம் உதவி கேட்க முடியாது, அவர்கள் இனிமேல் இதற்கு ஆதரவு வழங்கப்போவதுமில்லை.
   Wrong- நீதி கேட்க்கும் பொறிமுறையை தெளிவாக மக்களிடம் விளக்கவேண்டியது நீதிகேட்பவர்களின் கடமை, எப்படி...? எதைவைத்து...?, யாரை வைத்து...? ,யார் கேட்பது...? என்ற இப்படியான கேள்விகளுக்கு  இந்த பத்தியை எழுதிய உங்களுக்கே பதில் தெரியாது என்பதுதான் உண்மை. உந்த அறப்படிச்ச ஜெனிவா கூத்துக்களை எல்லாம் அந்த அறப்படிச்ச கோமாளிகளிடமே விட்டு விடுங்கள், உபரி Budget வைத்துக்கொண்டு எப்படி காசை செலவழிப்பது என்று அவர்களே அவர்களை சொறிந்து  விளையாடிவிட்டு திருநாள் முடிந்ததும் அவர்களது வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்     

6. வடக்குத் தமிழர்களிடம் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் கிழக்குத் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.
   Wrong- கிழக்கு தமிழர்கள் கடைசி துரும்பாக தமது இருப்பையாவது  காப்பாற்றிவிடவேணும் என்றே பிரயத்தனப்படுகிறார்கள், சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதை விட வடக்கு தமிழர்கள் முற்றுமுழுதாக முஸ்லீம் மயாமாகிவிட்ட  கிழக்கிஸ்தானுடன் சேர்ந்து வாழும் நிலை வரக்கூடாது என்றே போராடுகிறார்கள்.  

7. இனிமேல் வடக்குத் தமிழர்களுக்கும், அவர்களின் மொழி, தாயக, சுயநிர்ணயப் போராட்டத்திற்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், இவை எதுவுமே கிழக்குத் தமிழர்களுக்கு ஒருபோதுமே தேவையாக இருந்ததில்லை. வடக்குத் தமிழரின் தேவைகளுக்காகவே கிழக்குப் போராளிகள் மரணிக்கவேண்டியதாயிற்று.
  Wrong- கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னும் தமிழ் தேசிய நீரோட்டத்தில் வடக்குடன் சேர்ந்து பங்கெடுத்தவர்கள் தான் ,ஆனால் வடக்கும் கிழக்கும் சேர்ந்து தேசியத்தை ஒப்படைத்தது கசப்போக்கிலிகளிடம், ஐந்தைந்து வருடம் குத்தகைக்கு எடுத்து இலங்கையிலே மிகவும் நலிவுற்ற இனமாக தமிழர்களை மாற்றிய சாதனையை மட்டுமே செய்திருக்கிறார்கள், சரி தேசியத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை தேசிய உணர்வாளர் நீங்கள் தான் சொல்லவேண்டும்  

8. இனிமேலும் தேசியம் என்று நீங்கள் பேசினால், சிங்களவர்களுடன் சேர்ந்து அதை அழிப்பதைத்தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.
Wrong- யாரும் உங்களை அழிக்கத்தேவையில்லை, நீங்களே உங்களை அழித்துக்கொள்வீர்கள்,இந்தியா, சர்வதேச சமூகம்,உலகநாடுகள்  ,எமக்காதரவான சக்திகள் என்று தளரும் போதெல்லாம் பீ கோ ஊசி போட்டுவிட்டு குத்தகைக்கு எடுத்தவர்கள் குடும்பம் பிள்ளைகுட்டிகள் எல்லாம் வெளிநாட்டுகளில் வசித்துக்கொண்டு  Top Uni களில் படிக்க, ஈழ தேசியவாதிகள் ஒழுக்கெடுக்கும் குடிசைகளில் பீத்தல் ,விழுந்த சோட்டி ,சாரனுடன் தேசியம் தலைக்குத்தாக விழாமல் முரட்டு முட்டை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நத்தனியாகுவுக்கு  மேற்படி போராட்டம் பிடிக்கவில்லை என்பதில் இருந்து தெரிகிறது அமெரிக்க அரசுக்கான பாரிய அழுத்தம் தன்னை  வெகுவாக பாதிக்கும் என.
    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
    • ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும்  முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US   அனுப்பி இருக்கிறது Blinken ஐ  சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.           
    • பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
    • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.  குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.   உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.  மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.  குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.  அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.  இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.  https://www.virakesari.lk/article/181712
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.