Jump to content

என் வெற்றியை பறிக்க கட்சிக்குள் சூழ்ச்சி நடந்தது – கருணாகரம் (மட்டக்களப்பு MP)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது வெற்றிக்கு தோள்கொடுத்த அனைவருக்கும் இந்தவேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது. மிகவும் போராடியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வித்தியாசமான பாதையினை விரும்புகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது சென்று கொண்டிருக்கின்ற பாதையில் ஒரு மாற்றம்வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவ கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் இருந்துவருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரையில் இருக்கும் ஒரேயொரு கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இருந்துவருகின்றது.

வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியில் உட்பட கிடைத்த பத்து ஆசனங்களில் மூன்று தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ரெலோ கொண்டுள்ளது.

விரைவில் எமது தலைமைக்குழு கூடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் எமது நடவடிக்ககைள் குறித்தும் மக்கள் அதிகளவானோர் அபிவிருத்தியை விரும்புவதன் காரணமாக அது தொடர்பிலும் கூடி ஆராய்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை அவசரமாக நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவினை கூட்டி அது தொடர்பில் ஆராயவேண்டும்.

தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை வேண்டி நிற்கும்வேளையில் வித்தியசமான முறையில் தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர்.

அந்தவகையில் தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டிய தேவையுள்ளது.அந்தவகையில் தமிழீழ விடுதலை இயக்கம் கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்து அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமர்ப்பித்து அதற்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை எமக்கிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.1994ஆம் ஆண்டு இந்த நிலைமை ஏற்பட்டது.அதேநிலைமை இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஓரு தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைத்துள்ளது.அதனை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கும் ஆலோசனையினை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் வழங்குவோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் போராட்ட காலங்களில் பல வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள்.போராட்ட ரீதியாகவும்,இனரீதியாகவும் பல்வேறு வகையிலான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களாக உள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் கடந்த காலத்தில் இல்லாமல்செய்யப்பட்டுள்ளன.

அந்த நிலைமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டு அம்பாறை மாவட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய அக்கறை செலுத்தவேண்டும்.அதேபோன்று எனது நாடாளுமன்ற சேவையின் ஒரு பகுதி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

https://newuthayan.com/என்-வெற்றியை-பறிக்க-கட்ச/

Link to comment
Share on other sites

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

Link to comment
Share on other sites

59 minutes ago, Robinson cruso said:

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

bf4cdd367488ce4b49ba48dd70a227a4-prev.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது. மிகவும் போராடியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

கிழக்கிலும்... ஒரு சுமந்திரன், உருவாக... பார்த்திருக்கிறார். :grin:
உசாராகி.. தடுத்து நிறுத்தியுள்ளனர்.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்?...உங்கட சுமத்திரன் மாதிரி என்று நினைத்து விட்டீர்களோ?
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரை பிடிக்காது...ஆனால் தேர்தலுக்கு முதலே அங்குள்ள மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது...அவர் அவ் மக்களது நம்பிக்கையை குலைக்காமல்  இனி மேலும் நடந்து கொள்வார் என்றே எதிர் பார்க்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

 அவர் சொந்த வாகனம் பிரேதம் ஏற்றுவது அவசர சேவைகளை  மக்களுக்கு செய்வது   செய்வது குறிப்பா எழைகளுக்கு அதனால் மக்கள் விரும்பி வாக்களித்துள்ளார்கள் கிராம மக்கள் படுவான்கரையும் பட்டிருப்பு தொகுதியும் 

அவரை துரத்த கட்சிக்குள் ஆயிரம் பேர் இருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடிப்பவர்கள் வெல்கிறார்கள் 

6 hours ago, ரதி said:

உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்?...உங்கட சுமத்திரன் மாதிரி என்று நினைத்து விட்டீர்களோ?
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரை பிடிக்காது...ஆனால் தேர்தலுக்கு முதலே அங்குள்ள மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது...அவர் அவ் மக்களது நம்பிக்கையை குலைக்காமல்  இனி மேலும் நடந்து கொள்வார் என்றே எதிர் பார்க்கிறேன் 

முன்னை நாள் ரெலோ உறுப்பினர் பழைய வரலாறுகள் போகட்டும் ......................................... 

மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 அவர் சொந்த வாகனம் பிரேதம் ஏற்றுவது அவசர சேவைகளை  மக்களுக்கு செய்வது   செய்வது குறிப்பா எழைகளுக்கு அதனால் மக்கள் விரும்பி வாக்களித்துள்ளார்கள் கிராம மக்கள் படுவான்கரையும் பட்டிருப்பு தொகுதியும் 

அவரை துரத்த கட்சிக்குள் ஆயிரம் பேர் இருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடிப்பவர்கள் வெல்கிறார்கள் 

முன்னை நாள் ரெலோ உறுப்பினர் பழைய வரலாறுகள் போகட்டும் ......................................... 

மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர் 

எனக்குத் தெரியும் தனி 
 

Link to comment
Share on other sites

On 8/8/2020 at 16:43, ரதி said:

உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்?...உங்கட சுமத்திரன் மாதிரி என்று நினைத்து விட்டீர்களோ?
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரை பிடிக்காது...ஆனால் தேர்தலுக்கு முதலே அங்குள்ள மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது...அவர் அவ் மக்களது நம்பிக்கையை குலைக்காமல்  இனி மேலும் நடந்து கொள்வார் என்றே எதிர் பார்க்கிறேன் 

என்ன செய்வது கொலை , கொள்ளை, கட்பளிப்பு செய்தவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாக தெரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Robinson cruso said:

என்ன செய்வது கொலை , கொள்ளை, கட்பளிப்பு செய்தவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாக தெரிகிறார்கள்.

நீங்கள் கண்ணை மூடி கொண்டு சுமத்திரன் பின்னால் போவதை விடவா😀 ...முதலாவது நான் ஒன்றும் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் இல்லை . உங்களை போல tw_lol:...இரண்டாவது அவர் கொலை ,கொள்ளை,பலாத்காரம் செய்தவர் என்று தெரிந்தும் அவருக்கு தேர்தலில் இடம் கொடுத்தது உங்கட கட்சி🙂...இப்ப சொல்லுங்கோ யாரில் பிழை?
 

Link to comment
Share on other sites

Just now, ரதி said:

நீங்கள் கண்ணை மூடி கொண்டு சுமத்திரன் பின்னால் போவதை விடவா😀 ...முதலாவது நான் ஒன்றும் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் இல்லை . உங்களை போல tw_lol:...இரண்டாவது அவர் கொலை ,கொள்ளை,பலாத்காரம் செய்தவர் என்று தெரிந்தும் அவருக்கு தேர்தலில் இடம் கொடுத்தது உங்கட கட்சி🙂...இப்ப சொல்லுங்கோ யாரில் பிழை?
 

என்னைப்பொறுத்த வரைக்கும் அடைக்கலம், வினோ, கருணாகரன் போன்றோருக்கு இடம் கொடுத்ததது கட்சியின் பிழை. மக்கள் அதட்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போல கருணாகரமும் மக்கள் சேவை செய்வார்க இருந்தால் கடந்த காலத்தை மறந்து ஆதரவளிக்கலாம். ஆனால் இவர் தமிழ் தேசியத்துக்குள் இருந்துகொண்டு எதை செய்வாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

என்னைப்பொறுத்த வரைக்கும் அடைக்கலம், வினோ, கருணாகரன் போன்றோருக்கு இடம் கொடுத்ததது கட்சியின் பிழை. மக்கள் அதட்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போல கருணாகரமும் மக்கள் சேவை செய்வார்க இருந்தால் கடந்த காலத்தை மறந்து ஆதரவளிக்கலாம். ஆனால் இவர் தமிழ் தேசியத்துக்குள் இருந்துகொண்டு எதை செய்வாரோ தெரியவில்லை.

உப்ப வாங்கோ வழிக்கு ...உதைத் தான் என் முதலாவது கருத்தில் சொன்னேன் 

Link to comment
Share on other sites

20 minutes ago, ரதி said:

உப்ப வாங்கோ வழிக்கு ...உதைத் தான் என் முதலாவது கருத்தில் சொன்னேன் 

நான் எப்போவும் உங்களோடதான் ரதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.