Jump to content

தேர்தலுக்கு பின்னர் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் – மனித உரிமை கண்காணிப்பகம் கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு பின்னர் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் – மனித உரிமை கண்காணிப்பகம் கவலை

August 8, 2020

தேர்தலுக்கு பின்னர் மாற்றுக்கருத்துடையவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் முரண்படுபவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்கள் சட்டத்தரணிகள் மற்றும் அரசாஙகத்தின் கொள்கைகளுக்கு சவால்விடுபவர்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் அச்சத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

Human-Rights-Watch-300x181.jpg

 

சமீபகாலங்களில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட நடவடிக்கை இதற்கு உதவியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக அச்சுறுத்தலகள் உடல்ரீதியான தாக்குதல்கள்,கண்மூடித்தனமான கைதுகள் இடம்பெற்றுள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

2020 இல் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்சவின் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த தேர்தல் முடிவுகள் அரசாங்கம் இனசிறுபான்மையினர்மதசிறுபான்மையினருக்கு எதிரான கொள்களை தீவிரப்படுத்தும், இலங்கையின் 26 வருட உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் விடயங்களுக்காக நீதிகோரும் மக்களின் மீதான ஒடுக்குமுறையை அதிகரிக்கும் என்ற கரிசனைகளை அதிகரித்துள்ளது என சதெரிவித்துள்ளது.

Meenakshi-Ganguli-DPS-20-Oct-2011-8-300x

கடந்த கால துஸ்பிரயோகங்களுக்காக பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள்களை கடந்த காலங்களில் விடுத்திருந்த ஐக்கியநாடுகளும் உலக நாடுகளும் நீதியை கோருபவர்களை இலக்குவைப்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டு;ம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேகமாக முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்ட ஒடுக்குமுறைகளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன மீண்டும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றால் பதில்நடவடிக்கை எடுக்கும் என்பதை இலங்கை அரசாங்கம் செவிமடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/60911

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன தேவை இல்லாத குற்றச்சாட்டு. அவர் நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். நீங்கள் வேற நாட்டில பதட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இவர்களது வேலையென்ன அறிக்கையிடுவதா? அல்லது தீர்வு தேடுவதா என்று புரியமலுள்ளது. இலங்கைதொடர்பாக விட்ட அறிக்கைகட்டுகளை வைக்கவே பெரிய களஞ்கியம் தேவைப்படலாம். அறிக்கையைக் கடந்து ஆக்கபூர்வமாக  ஏதாவது செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அடக்குமுறை என்றால் என்ன என்றே தெரியாது இவையள் சும்மா குற்றம் சாட்டுகிறார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன மீண்டும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றால் பதில்நடவடிக்கை எடுக்கும் என்பதை இலங்கை அரசாங்கம் செவிமடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

201605030825319874_Get-into-the-habit-Th

நீங்க எதுக்கு இருக்குறியள்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.