Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

மற்றது, வியாழேந்திரன் பொதுசன பெரமுனவில் நின்று வென்றும் விட்டார். 3 இல் இரண்டுக்கு ஏற்கனவே அவரும் உள்ளெடுக்கப்பட்டு விட்டார்.

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149. மிச்சம் 1... முக்காமல், முனகாமல் வரும். :grin:

றிசாட்டினை உள்ள போடபோகினம். அவரது கட்சி இரண்டாவது எம்பி மரைக்கார் பாயலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எந்த வகையான விமர்சனம் இது? ஆதாரம்???

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

4 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149.

150 உம் இருக்கின்றது.

145 +
ஈபிடிபி - 2

பிள்ளையான் - 1

அங்கயன் - 1

அதாவுல்லா - 1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

பொறுத்திருந்து பார்த்தால் போச்சு 😀

Link to comment
Share on other sites

11 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

ரஞ்சித்

Advanced Member

கருத்துக்கள உறவுகள்

 1,580

5,736 posts

Gender:Male

Location:Sydney

Interests:Politics, music, sports.

Report post

 

Posted November 30, 2009

எதற்கு எல்லாரும் அவசரப்படுகிறீர்கள்? சிறிதுகாலம் போனால் எல்லாம் வெளிக்கும்.

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

அவர் குதிரை ஓடி பல்கலைக்கழகம் வந்ததாக அதில் எந்த ஆதாரமும் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் சொல்கிறேன் என்றால் பல ஆண்டுகளாக ஐக்கியமாக இருந்த மக்கள் தற்போது  விலக ஆரம்பித்துள்ளார்கள்

தேசிய உணர்வால் எதிர்ப்பரசியல் செய்து எதையும் பெறவில்லை. இணக்க அரசியல் செய்து முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் அடிமட்டத்தில் இல்லாமல் முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள் என்று இளைஞர்களே ( இளைஞர்கள்தான் எதிர்ப்பு அரசியல் செய்வதில் முன்னின்றவர்கள்) கூட்டமைப்புக்கு, தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களின் பின்னால் போகும்போது மீண்டும் தேசியத்தைக் கட்டி எழுப்புவது இலகுவானதல்ல.

ஆனால் சிங்களவர்களால் கிழக்கு கபளீகரம் செய்யப்படும்போது காலங்கடந்து இதை உணரும் நிலையும் வரும். அப்போது வடக்கிலும் பெரும்பகுதி கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

அதற்காக தான் ஆதாரம் கேட்டேன். எல்லோரும் சொல்கிறார்கள் என்று நாமும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

 

விக்கியர் மீதும் மக்கள் பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை. முதலமைச்சராக இருந்தபோது அபிவிருத்தியை முன்னெடுத்து, வேலைவாய்ப்புக்களை வழங்கி இருக்கவேண்டும். உள்குத்து அரசியலில் காலத்தை செலவழித்தார். நேர்மையும், கறைபடியாத கரங்களும் அவர் பலம். மிச்சமெல்லாம் பலவீனம்.

 

தமிழரிடம் தேசிய உணர்வு தற்போது மக்களிடம் இல்லை அல்லது அருகிவருகின்றது. ஆனால் புலிகளின் தொடர்ச்சியாக மக்கள் முன்னணியை முன்னிறுத்துவதால் தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தோடு அவர்கள் பார்க்கப்படுகின்றார்கள்.  புலம்பெயர் தமிழரின் ஒரு பகுதியினரால் செய்யப்பட்ட புரஜெக்ட்டில் சின்ன வெற்றி கிடைத்துள்ளது.

அப்படியிருந்தும் யாழில் மட்டும்தான் மக்கள் முன்னணி ஒரு ஆசனம் எடுத்தது. புலிகளின் ஆளுகைக்குள் இருந்து வன்னியில் ஒரு ஆசனம் ஈபிடிபிக்கு கிடைத்துள்ளது. ஆனால் மக்கள் முன்னணிக்கோ, மக்கள் கூட்டணிக்கோ மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை. கிழக்கில் என்ன நடந்தது என்று சொல்லவும் தேவை இல்லை. 

இப்படியான நிலையில் கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தைக் கொடுத்து தேசியம் வளர்க்க வெளிக்கிட்டால் அடுத்த தடவை இருக்கிறதும் போய்விடும்.
 
புலம்பெயர் தமிழரின் அரசியலுக்கும் தாயகத்தில் இருப்பவர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் பின்னணிகளைப் பார்த்தாலே இது புரியும்.

சனத்தொகை வீதத்தில் தமிழர்கள் குறைந்து வருவதால் மக்கள் தேசிய உணர்வில் இருந்து வெளியேறி பொருளாதாரம், அபிவிருத்தி என்று சிந்திக்கவெளிக்கிட்டுள்ளார்கள் என்றுதான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

ஆகவே, தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்யவேண்டியது என மக்கள் எதிர்பார்ப்பது.

Regenaration 
Rebuilding 
Rehabilitation

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

கூட்டமைப்பின் போக்கு எப்போதுமே பிழையாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் சம்பந்தர் வெல்லவே கூடாது (அதாவது அம்பாறை போல திருமலையும் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்தத் தேர்தலில் வரவேண்டும் என்றுதான் விரும்பியிருந்தேன்).

அவர்கள் இனப்படுகொலை நடந்தது என்பதை முன்னிறுத்தாமல் தமிழ் மக்களுக்கு தீர்வாக சமஷ்டியை முன்வைப்பது முரண்பாடானது.

 கட்சிகளாகப் பிரியாமல் ஒரு பொது உடன்பாட்டில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும். இதற்காககத்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை உடைத்து, சிதைத்து செய்யும் தேசிய அரசியல்  வெற்றிபெறாது. தொடர்ந்தும் ஒன்றிரண்டு ஆசனங்களைப் பெற்று உதிரிகளாகத்தான் வந்துகொண்டிருப்பார்கள். இது சிங்களம் தனது நிகழ்ச்சிநிரலை எதுவித எதிர்ப்புக்களுமின்றி முன்னெடுக்க தொடர்ந்தும் உதவும்.

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

நுணா, தமிழ் மக்களை விற்றவர்கள் என்று தனிப்பட எவரும் இல்லை. 1950 களில் இருந்து அரசியல் செய்த, போராட்டம் தொடர்காக முடிவுகளை எடுத்த எல்லோருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. தனிப்பட எவரையும் கூற முடியாது.

பாராளுமன்றத்தில் இவ்வாறு தமிழ் பிரதிநிதி வன்முறை பேச்சை பேசும் போது அதை சர்வதேசரீதியில் எமக்கு எதிராக பாவிக்கும் வல்லமை ஶ்ரீலங்கா அரசிற்கு உள்ளது என்று தெரிந்தும் அவ்வாறு முட்டாள்தனமாக கஜேந்திரன்  பேசியதை நீங்கள் ஆதரிப்பது விந்தையாக உள்ளது.  

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

2 hours ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

தாடிமாம்ஸ் தெரிவு செய்யப்பட்டது பற்றி ஒரு சிறு வரி எழுதுங்கள் பார்க்கலாம்😁

Link to comment
Share on other sites

20 minutes ago, nunavilan said:

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

 நுணா, முதலாவது  நான் கஜேந்திரகுமாரை பற்றி எதுவும் தவறாக்க்  கூறவில்லை. அவர் தெரிவு செய்யப்பட்டது எனக்கு மகிழ்சசி என்றே குறிப்பிட்டேன். சென்ற முறையே அவர் தெரிவு செய்யப்படவேண்டும் என்றே விரும்பியிருந்தேன். 

எமது தவறுகளை சர்வதேசம்  முன்பு எமக்கு எதிராக பயன்படுத்தும் வல்லமை ஶ்ரீலங்கா அரசுக்கு இருக்கிறது என்பதையே குறிப்பிட்டிருந்தேன். அது உங்களுக்கும் நன்றாகத்  தெரியும். தமிழருக்கு அந்த வல்லமை இல்லாதது மட்டுமல்ல உணர்சி வசப்பட்டு அடிக்கடி  ஏதாவது சொல்லி அல்லது செய்து சிங்கள அரசின் பிரச்சாரத்திற்கு உதவிய செயல்கள் எமது தரப்பில் ஏராளம் உண்டு. ஐதார்த்தத்தில் பலவீனமான எமது தரப்பு தான் இவ்விடத்தில்  கவனமாக இருக்க வேண்டுமேயன்றி பலமாக உள்ள சிங்களத்தரப்பல்ல. 

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

என்ன காரணத்திற்காக வெறுக்கிறது???

காரணம் நியாயமானதாக இருந்தால் மாறலாம்...

நியாயமனதாக இல்லையெனில் மாறவேண்டியது உலகமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

ஜெயானந்தமூர்த்தி கிழக்கில் கும்மான் பிரிந்த போது புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தலைவரின் படத்தை கிழித்தெறிந்து காலால் மிதித்து தனது விசிவாசத்தை கும்மானுக்கு காட்டியவர். பின்னர் அந்தர் அந்தர் பல்டி அடித்து புலிகளுடன் ஒட்டியவர். 

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது குடும்ப சகிதமாக பிரித்தானியாவிற்கு வந்து முதலில்தனது குடும்பத்திற்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கேட்டார். அவர்களது அரசியல் தஞ்ச வழக்கிற்கு சாட்சி அந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள போதே மனைவியின் அரசியல் தஞ்ச விசாவில் ஒட்டிக் கொண்டார். இங்கு TCC, BTF,  நாடுகடந்த அரசாங்கம் என்று எல்லா இடமும் ஒட்டியிருந்து விட்டு தற்போது சிறீலங்கா சென்று ராஜபக்சேக்களின் காலடியில் விழுந்து மட்டக்களப்பில் மொட்டின் சார்பில் தேர்தலில் தோல்வி.

1 hour ago, கிருபன் said:

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

இறுதிப் போரின் போது புலிகளே ( புலித்தேவன்) தொலைபேசி மூலம் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். இதுவே அவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

எனக்கு தெரிந்தவரை கிழக்கில் ஒர் உறுதியான கட்டமைப்பு முன்னணியினருக்கு இல்லை. அவ்வாறானா ஓர் சூழ்நிலையில் கிழக்கு தேசியப்பட்டியல் நியமனம் என்பது இவர்களுக்கு சிலவேளைகளில் எதிராக கூட போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

நீங்கள் முதலில் மாறுங்கோ.... நாங்கள் பின்னல் வாறோம்.

சரத் பொன்சேகா, ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, பண்டாரநாயக்கா, லலித் அத்துலத் முதலி(யார்), தேவாரப்பெருமாள், வாசுதேவ(ன்) நாணயக்கார(ன்) என்று எத்தனை லட்ச்சம் பேர் மாறி இருக்கினம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

 

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.😀

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..??? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..???😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..?

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவு. இக்கட்டான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சிக்கு வித்திட்டு.. தமிழ் தேசிய உணர்வால்.. சிங்கள பெளத்த இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பால் பற்றுணர்வோடு தகாத காலங்களைக் கடந்து வர துணையாக இருந்தவர். ரவிராச் போன்றவர்களின் நட்புக்குரியவர்.  பொங்கு தமிழின் தோற்றுவாய் என்று கூடச் சொல்லலாம்.

உலகெங்கும் பொங்கு தமிழ் தமிழ் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட ஒருவர் சிங்களப் பாராளுமன்றம் போய் எதையும் செய்ய முடியாது.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக.. சர்வதேச அரங்கில் ராஜதந்திர மட்டத்தில் சில குரல்களை மக்களின் சார்ப்பாக அழுத்திச் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியும். நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்.. கோத்தா மகிந்த கும்பல் தொடர்பில் அவதானம் அவசியம்.. ஏலவே  ஈபிடிபி ஆயுத சனநாய் அக ஒட்டுக்குழுக் கும்பலின்.. கொலை முயற்சிகளில் இருந்து மயிரிழையில் தப்பித்தவர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.