Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

மற்றது, வியாழேந்திரன் பொதுசன பெரமுனவில் நின்று வென்றும் விட்டார். 3 இல் இரண்டுக்கு ஏற்கனவே அவரும் உள்ளெடுக்கப்பட்டு விட்டார்.

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149. மிச்சம் 1... முக்காமல், முனகாமல் வரும். :grin:

றிசாட்டினை உள்ள போடபோகினம். அவரது கட்சி இரண்டாவது எம்பி மரைக்கார் பாயலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எந்த வகையான விமர்சனம் இது? ஆதாரம்???

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

4 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149.

150 உம் இருக்கின்றது.

145 +
ஈபிடிபி - 2

பிள்ளையான் - 1

அங்கயன் - 1

அதாவுல்லா - 1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

பொறுத்திருந்து பார்த்தால் போச்சு 😀

Link to comment
Share on other sites

11 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

ரஞ்சித்

Advanced Member

கருத்துக்கள உறவுகள்

 1,580

5,736 posts

Gender:Male

Location:Sydney

Interests:Politics, music, sports.

Report post

 

Posted November 30, 2009

எதற்கு எல்லாரும் அவசரப்படுகிறீர்கள்? சிறிதுகாலம் போனால் எல்லாம் வெளிக்கும்.

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

அவர் குதிரை ஓடி பல்கலைக்கழகம் வந்ததாக அதில் எந்த ஆதாரமும் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் சொல்கிறேன் என்றால் பல ஆண்டுகளாக ஐக்கியமாக இருந்த மக்கள் தற்போது  விலக ஆரம்பித்துள்ளார்கள்

தேசிய உணர்வால் எதிர்ப்பரசியல் செய்து எதையும் பெறவில்லை. இணக்க அரசியல் செய்து முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் அடிமட்டத்தில் இல்லாமல் முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள் என்று இளைஞர்களே ( இளைஞர்கள்தான் எதிர்ப்பு அரசியல் செய்வதில் முன்னின்றவர்கள்) கூட்டமைப்புக்கு, தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களின் பின்னால் போகும்போது மீண்டும் தேசியத்தைக் கட்டி எழுப்புவது இலகுவானதல்ல.

ஆனால் சிங்களவர்களால் கிழக்கு கபளீகரம் செய்யப்படும்போது காலங்கடந்து இதை உணரும் நிலையும் வரும். அப்போது வடக்கிலும் பெரும்பகுதி கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

அதற்காக தான் ஆதாரம் கேட்டேன். எல்லோரும் சொல்கிறார்கள் என்று நாமும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

 

விக்கியர் மீதும் மக்கள் பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை. முதலமைச்சராக இருந்தபோது அபிவிருத்தியை முன்னெடுத்து, வேலைவாய்ப்புக்களை வழங்கி இருக்கவேண்டும். உள்குத்து அரசியலில் காலத்தை செலவழித்தார். நேர்மையும், கறைபடியாத கரங்களும் அவர் பலம். மிச்சமெல்லாம் பலவீனம்.

 

தமிழரிடம் தேசிய உணர்வு தற்போது மக்களிடம் இல்லை அல்லது அருகிவருகின்றது. ஆனால் புலிகளின் தொடர்ச்சியாக மக்கள் முன்னணியை முன்னிறுத்துவதால் தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தோடு அவர்கள் பார்க்கப்படுகின்றார்கள்.  புலம்பெயர் தமிழரின் ஒரு பகுதியினரால் செய்யப்பட்ட புரஜெக்ட்டில் சின்ன வெற்றி கிடைத்துள்ளது.

அப்படியிருந்தும் யாழில் மட்டும்தான் மக்கள் முன்னணி ஒரு ஆசனம் எடுத்தது. புலிகளின் ஆளுகைக்குள் இருந்து வன்னியில் ஒரு ஆசனம் ஈபிடிபிக்கு கிடைத்துள்ளது. ஆனால் மக்கள் முன்னணிக்கோ, மக்கள் கூட்டணிக்கோ மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை. கிழக்கில் என்ன நடந்தது என்று சொல்லவும் தேவை இல்லை. 

இப்படியான நிலையில் கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தைக் கொடுத்து தேசியம் வளர்க்க வெளிக்கிட்டால் அடுத்த தடவை இருக்கிறதும் போய்விடும்.
 
புலம்பெயர் தமிழரின் அரசியலுக்கும் தாயகத்தில் இருப்பவர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் பின்னணிகளைப் பார்த்தாலே இது புரியும்.

சனத்தொகை வீதத்தில் தமிழர்கள் குறைந்து வருவதால் மக்கள் தேசிய உணர்வில் இருந்து வெளியேறி பொருளாதாரம், அபிவிருத்தி என்று சிந்திக்கவெளிக்கிட்டுள்ளார்கள் என்றுதான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

ஆகவே, தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்யவேண்டியது என மக்கள் எதிர்பார்ப்பது.

Regenaration 
Rebuilding 
Rehabilitation

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

கூட்டமைப்பின் போக்கு எப்போதுமே பிழையாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் சம்பந்தர் வெல்லவே கூடாது (அதாவது அம்பாறை போல திருமலையும் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்தத் தேர்தலில் வரவேண்டும் என்றுதான் விரும்பியிருந்தேன்).

அவர்கள் இனப்படுகொலை நடந்தது என்பதை முன்னிறுத்தாமல் தமிழ் மக்களுக்கு தீர்வாக சமஷ்டியை முன்வைப்பது முரண்பாடானது.

 கட்சிகளாகப் பிரியாமல் ஒரு பொது உடன்பாட்டில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும். இதற்காககத்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை உடைத்து, சிதைத்து செய்யும் தேசிய அரசியல்  வெற்றிபெறாது. தொடர்ந்தும் ஒன்றிரண்டு ஆசனங்களைப் பெற்று உதிரிகளாகத்தான் வந்துகொண்டிருப்பார்கள். இது சிங்களம் தனது நிகழ்ச்சிநிரலை எதுவித எதிர்ப்புக்களுமின்றி முன்னெடுக்க தொடர்ந்தும் உதவும்.

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

நுணா, தமிழ் மக்களை விற்றவர்கள் என்று தனிப்பட எவரும் இல்லை. 1950 களில் இருந்து அரசியல் செய்த, போராட்டம் தொடர்காக முடிவுகளை எடுத்த எல்லோருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. தனிப்பட எவரையும் கூற முடியாது.

பாராளுமன்றத்தில் இவ்வாறு தமிழ் பிரதிநிதி வன்முறை பேச்சை பேசும் போது அதை சர்வதேசரீதியில் எமக்கு எதிராக பாவிக்கும் வல்லமை ஶ்ரீலங்கா அரசிற்கு உள்ளது என்று தெரிந்தும் அவ்வாறு முட்டாள்தனமாக கஜேந்திரன்  பேசியதை நீங்கள் ஆதரிப்பது விந்தையாக உள்ளது.  

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

2 hours ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

தாடிமாம்ஸ் தெரிவு செய்யப்பட்டது பற்றி ஒரு சிறு வரி எழுதுங்கள் பார்க்கலாம்😁

Link to comment
Share on other sites

20 minutes ago, nunavilan said:

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

 நுணா, முதலாவது  நான் கஜேந்திரகுமாரை பற்றி எதுவும் தவறாக்க்  கூறவில்லை. அவர் தெரிவு செய்யப்பட்டது எனக்கு மகிழ்சசி என்றே குறிப்பிட்டேன். சென்ற முறையே அவர் தெரிவு செய்யப்படவேண்டும் என்றே விரும்பியிருந்தேன். 

எமது தவறுகளை சர்வதேசம்  முன்பு எமக்கு எதிராக பயன்படுத்தும் வல்லமை ஶ்ரீலங்கா அரசுக்கு இருக்கிறது என்பதையே குறிப்பிட்டிருந்தேன். அது உங்களுக்கும் நன்றாகத்  தெரியும். தமிழருக்கு அந்த வல்லமை இல்லாதது மட்டுமல்ல உணர்சி வசப்பட்டு அடிக்கடி  ஏதாவது சொல்லி அல்லது செய்து சிங்கள அரசின் பிரச்சாரத்திற்கு உதவிய செயல்கள் எமது தரப்பில் ஏராளம் உண்டு. ஐதார்த்தத்தில் பலவீனமான எமது தரப்பு தான் இவ்விடத்தில்  கவனமாக இருக்க வேண்டுமேயன்றி பலமாக உள்ள சிங்களத்தரப்பல்ல. 

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

என்ன காரணத்திற்காக வெறுக்கிறது???

காரணம் நியாயமானதாக இருந்தால் மாறலாம்...

நியாயமனதாக இல்லையெனில் மாறவேண்டியது உலகமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

ஜெயானந்தமூர்த்தி கிழக்கில் கும்மான் பிரிந்த போது புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தலைவரின் படத்தை கிழித்தெறிந்து காலால் மிதித்து தனது விசிவாசத்தை கும்மானுக்கு காட்டியவர். பின்னர் அந்தர் அந்தர் பல்டி அடித்து புலிகளுடன் ஒட்டியவர். 

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது குடும்ப சகிதமாக பிரித்தானியாவிற்கு வந்து முதலில்தனது குடும்பத்திற்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கேட்டார். அவர்களது அரசியல் தஞ்ச வழக்கிற்கு சாட்சி அந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள போதே மனைவியின் அரசியல் தஞ்ச விசாவில் ஒட்டிக் கொண்டார். இங்கு TCC, BTF,  நாடுகடந்த அரசாங்கம் என்று எல்லா இடமும் ஒட்டியிருந்து விட்டு தற்போது சிறீலங்கா சென்று ராஜபக்சேக்களின் காலடியில் விழுந்து மட்டக்களப்பில் மொட்டின் சார்பில் தேர்தலில் தோல்வி.

1 hour ago, கிருபன் said:

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

இறுதிப் போரின் போது புலிகளே ( புலித்தேவன்) தொலைபேசி மூலம் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். இதுவே அவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

எனக்கு தெரிந்தவரை கிழக்கில் ஒர் உறுதியான கட்டமைப்பு முன்னணியினருக்கு இல்லை. அவ்வாறானா ஓர் சூழ்நிலையில் கிழக்கு தேசியப்பட்டியல் நியமனம் என்பது இவர்களுக்கு சிலவேளைகளில் எதிராக கூட போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

நீங்கள் முதலில் மாறுங்கோ.... நாங்கள் பின்னல் வாறோம்.

சரத் பொன்சேகா, ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, பண்டாரநாயக்கா, லலித் அத்துலத் முதலி(யார்), தேவாரப்பெருமாள், வாசுதேவ(ன்) நாணயக்கார(ன்) என்று எத்தனை லட்ச்சம் பேர் மாறி இருக்கினம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

 

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.😀

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..??? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..???😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..?

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவு. இக்கட்டான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சிக்கு வித்திட்டு.. தமிழ் தேசிய உணர்வால்.. சிங்கள பெளத்த இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பால் பற்றுணர்வோடு தகாத காலங்களைக் கடந்து வர துணையாக இருந்தவர். ரவிராச் போன்றவர்களின் நட்புக்குரியவர்.  பொங்கு தமிழின் தோற்றுவாய் என்று கூடச் சொல்லலாம்.

உலகெங்கும் பொங்கு தமிழ் தமிழ் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட ஒருவர் சிங்களப் பாராளுமன்றம் போய் எதையும் செய்ய முடியாது.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக.. சர்வதேச அரங்கில் ராஜதந்திர மட்டத்தில் சில குரல்களை மக்களின் சார்ப்பாக அழுத்திச் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியும். நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்.. கோத்தா மகிந்த கும்பல் தொடர்பில் அவதானம் அவசியம்.. ஏலவே  ஈபிடிபி ஆயுத சனநாய் அக ஒட்டுக்குழுக் கும்பலின்.. கொலை முயற்சிகளில் இருந்து மயிரிழையில் தப்பித்தவர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.