Jump to content

அவன் ஒரு விமானி,


Recommended Posts

என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி, கடைசியாக கோழிக்கோடு வானூர்தி நிலையத்துக்கு துபாயிலிருந்து பெருந்தொற்றுக் காலத்தில் சிக்குண்டிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான்.
தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா...அதற்காக...
ஊர்தி நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அணைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இது கடைசிப் பறத்தல் என்று, ஆனாலும் ஏறத்தாழ பத்து குழந்தைகள் உட்பட 180 சக பயணிகளைக் காப்பாற்றிய நிமமதியோடு சிதைந்த காக்பிட்டின் நடுவே முதுகெலும்பு உடைந்து கிடந்தான். ஆனாலும், அவன் கம்பீரமாக இருந்தான்.
தீபக் சாதே 36 வருட பறப்பு அனுபவம் கொண்டவன், தேசியப் பாதுகாப்பு மையத்தில் இருந்து வந்தவன், மதிப்பு மிக்க வீரவாள் விருது பெற்றவன், தேசிய வானுர்திப்படையில் 21 ஆண்டுகள் பணிறாற்றிய பிறகு ஏர் இந்தியாவின் வணிக விமானியாக மாறினான்.
ஒரு வாரத்துக்கு முன்பு நான் அவனை அழைத்துப் பேசிய போது, அதே சிரிப்போடு பேசினான், நான் "வந்தே பாரத்" குறித்துக் கேட்டபோது, பெருமையாகவும், நிறைவாகவும் இருப்பதாகச் சொன்னான்.
உரையாடலின் போது நான் கேட்டேன்,
"தீபக், அரபு நாடுகள் இப்போது பயணிகளை அனுமதிப்பதில்லேயே?
நீ காலி வானுர்திகளையா ஓட்டிச் செல்கிறாய்?"
அவன் சொன்னான்,
"நிலேஷ், நான், மலர்களையும், பழங்களையும், காய்கறிகளையும் அந்த நாட்டு மக்களுக்காகக் கொண்டு செல்கிறேன், ஒருபோதும் காலி விமானங்களோடு போவதில்லை."
90 களின் துவக்கத்தில் ஒரு விபத்தின் போது கடுமையான தலைக்காயங்களோடு, இனி பிழைப்பது கடினம் என்று மருத்துவர்களே நினைத்திருந்த காலத்தில், பறப்பதன் மீதிருந்த காதலில் மீண்டு மறுபடி பறந்தான்.
நாக்பூரில் பிறந்த கலோனல் வசந்த் சாதேயின் மகனான தீபக் சாதே, தன் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுப் போய்விட்டான். சகோதரன் கேப்டன் விகாஸ், ஜம்முவில் விமானப்படையில் பணியாற்றி நாட்டுக்காக முன்னரே மரித்துப் போனவன்.
இந்த துயரான நேரத்தில் ஒரு படை வீரனின் கவிதை என் நினைவில் வருகிறது.....
"நான் போரில் இறந்து போனால், பெட்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்புங்கள்.
என் பதக்கங்களை என் நெஞ்சில் வைத்துவிட்டு அம்மாவிடம் சொல்லுங்கள், அவன் தன்னால் இயன்றதையும், சிறந்ததையும் நாட்டுக்காக செய்தானென்று.....
என் தந்தையின் முழங்கால்கள் என் முன்னால் மண்டியிட வேண்டாம், அவருக்கு இனி ஒருபோதும் நான் கவலையளிக்க மாட்டேன்.
என் தம்பியிடம் சொல்லுங்கள், நன்றாகப் படி என்று, என் பைக் சாவியை இனி நிரந்தரமாக அவனே வைத்துக் கொள்ளலாம்.
என் தங்கையிடம் கவலையடையாதிருக்கச் சொல்லுங்கள், நாளைய உதயத்தின் கதிர்களாக அவளிடம் நான் சேர்ந்து கொள்வேன்...
என் அன்பானவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள், "நான் ஒரு போர் வீரன், இறப்பதற்காகவே பிறந்தவன் என்று.....
மூலம் - நிலேஷ் சதே
தமிழில் - கை.அறிவழகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லையே. விபத்துக்கு காரணம் லாண்டிங்க் கியர் இல்லாமல் பெலி லாண்டிங்க் செய்தமையா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:
என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி, கடைசியாக கோழிக்கோடு வானூர்தி நிலையத்துக்கு துபாயிலிருந்து பெருந்தொற்றுக் காலத்தில் சிக்குண்டிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான்.
தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா...அதற்காக...
ஊர்தி நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அணைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இது கடைசிப் பறத்தல் என்று,

தமது இறுதிக்கணங்களிலும் மனிதத்தை  நேசிக்கும் மாந்தர்களால் இவ்வுலகு அசைகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அன்பானவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள், "நான் ஒரு போர் வீரன், இறப்பதற்காகவே பிறந்தவன் என்று.....

 

—-வீரவணக்கம் தீபக்—-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓடுபாதை நீளம் போதாமை 2011 லேயே பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தும் 
அவர்கள் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. டேபிள் டாப்  ஓடுபாதைகள்(Table Top Runways)  சரியான தெளிவான 
தூர பார்வை இல்லாவிட்டால் இறங்குவது ஆபத்தானது .... குறித்த இடத்தில் இறங்க முடியாது 
கொஞ்சம் தூரம் கடந்துவிடால் கூட ... பிரேக் கொண்டு பிளேனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர 
எஞ்சிய தூரம் போதாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2020 at 08:30, அபராஜிதன் said:

என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி,

இதே விமானி இலங்கையில் தமிழர்கள் மேல் குண்டுகள் போட்டதாக சொல்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதே விமானி இலங்கையில் தமிழர்கள் மேல் குண்டுகள் போட்டதாக சொல்கிறார்களே?

இனி நாம் அதெல்லாம் மறந்திட வேணுமாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.