Jump to content

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும்

8 ஆகஸ்ட் 2020
  • அ. நிக்ஸன், மூத்த ஊடகவியலாளர்
  • பிபிசி தமிழுக்காக 
மஹிந்த ராஜபக்ஷ - கோட்டாபய ராஜபக்ஷ

Getty Images

 

மஹிந்த ராஜபக்ஷ - கோட்டாபய ராஜபக்ஷ

(இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)

மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் நினைத்ததைச் சாதிக்கவில்லை. 

பதவிக்கு வந்த மூன்றாம் மாதம் ஆரம்பித்த மைத்திரி - ரணில் முரண்பாடு ராஜபக்ச குடும்பத்திற்கும் அந்தக் குடும்பத்தை நம்பி அரசியலில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களுக்கும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. அதன் பெறுபேற்றை 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இருநூறுக்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றி ராஜபக்ச அணி வெளிப்படுத்தியது. தமது அதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் துணிவோடு தூக்கி எறிந்து விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியோடு சங்கமித்து மைத்திரிபால சிறிசேன ஆட்சியை அமைத்ததால் ராஜபக்ச குடும்பத்துக்கு கோபம் இருந்திருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்று கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதும் அவருடைய தந்தையார் ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஏற்பட்ட அதிருப்தியும் வெறுப்புமே 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2ஆம் திகதி ராஜபக்ச குடும்பம் தங்களுக்கொன்று என்று தனியொரு கட்சியை ஆரம்பிக்க உந்து சக்கதியானது. 

அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செப்ரெம்பர் மாதம் 2ஆம் திகதியன்றே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி பசில் ராஜபக்சவினால் அங்குராட்பணம் செய்யப்பட்டது.

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூலம் 2005ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த மகிந்த ராஜபக்ச அந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதிவியேற்றபோது கூறிய வாசகத்தை 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நிறைவேற்றியிருக்கிறார். 
 

spacer.png

Getty Images

சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது பெரும் இழுபறிகள். முரண்பாடுகளுக்கு மத்தியில் அன்று ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றிருந்ததும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் புணரமைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். 2010ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தபோது. அம்பாந்தோட்டையை மையப்படுத்திய புதிய கட்சி ஒன்றின் உருவாக்கம் பற்றியும் பிரஸ்தாபித்திருந்தார். 

மூன்றாவது முறையாகவும் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனக் குறிப்பிட்டு ராஜபக்சவின் அரசாங்கம் 2014இல் உருவாக்கிய 18ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தோல்வியென அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் உள்ள மெதமுன இல்லத்திற்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச நேராடியாகவே இந்தியா மீது குற்றம் சுமத்தியதோடு மீண்டும் வருவேன் எனவும் சூளுரைத்திருந்தார். 

அன்று மகிந்த ராஜபக்சவுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஓன்று போர்க்குற்றம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவது. அதற்கேற்றமுறையில் சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கத்தின் பக்கம் வரவைப்பது. இரண்டாவது. சந்திரிகாவுக்கு எதிரான போராட்டம். அதாவது சந்திரிகாவின் தந்தையார் எஸ்டபிள்யுஆர்டி. பண்டாரநாயக்கா உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி அதற்கு மாற்றீடாக ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி அதனைத் தேசியக் கட்சியாக மாற்ற வேண்டும் என்பது.

spacer.png

Getty Images

ஆனால் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட தோல்வி மகிந்தவுக்கு அந்த முயற்சிகளின் அடைவை எட்டமுடியாமல் போய்விட்டது. ஆனாலும் நல்லாட்சி என்று மார்தட்டிய மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் பலவீனங்களை நன்கு பயன்படுத்திய மகிந்த ராஜபக்ச இன்று இலங்கை அரசியலின் கதாநாயகநாக மாறிவிட்டார். 

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய நாளில் இருந்தே தனது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி மீண்டும் அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். அந்தச் சிந்தனை வெளிப்பட்ட சில மாதங்களிலேயே மைத்திரி- ரணில் முரண்பாடு உருவானமை மகிந்தவுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்ததெனலாம். 

2016இல் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன என்ற புதிய அரசியல் கட்சி அந்த நம்பிக்கையின் மற்றுமொரு தளமாக மாறியது. ஏனெனில் பாராம்பரியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐம்பதுக்கும் அதிகமான மூத்த உறுப்பினர்கள் பலர் வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டனர். ஆகவே 2015இல் ஏற்பட்ட தோல்வியோடு துவண்டுபோகாமல் அன்றில் இருந்தே தன்னைத் திடப்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்ச 2015இல் இழந்த அவமானத்தையும் தோல்வியையும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி தனது இளைய சகோதாரர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கிப் பெரும் எழுச்சியோடு ஈடுசெய்தார். 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியுடன் அந்த எழுச்சியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். தனது மேற்படி இரு நோக்கங்களையும் அவர் நிறைவேற்றியுமுள்ளார். 

அந்த இரண்டு நோக்கமும் நிறைவேறுவதற்கு மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவகையில் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர் என்றால் அதற்கு மாற்றுக் கருத்தில்லை. மைத்திரி-ரணில் அரசாங்கம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட திர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதற்கு ஒத்துழைத்தது. இதன் பெறுபேறாக சர்வதேச விசாரணை அல்லது இனப்படுகொலை என்று கூறிக் கொண்டு ராஜபக்ச குடும்பத்தையும் அவருடைய சகாக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்சி தற்காலிகமாகவேணும் நிறுத்தப்பட்டது. அது உள்ளக விசாரணையாக அல்லது சர்வதேசத்தையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையாகவும் பரிந்துரைக்கப்பட்டது. 
 

spacer.png

Getty Images

இதனை மகிந்த தரப்பு வெளிப்படையாகக் கண்டித்திருந்தாலும் இச் செயற்பாட்டின் மூலம் தாங்களும் இலங்கை அரசும் காப்பாற்றப்படுகின்றது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். கலப்புமுறை அல்லது உள்ளக விசாரணைக்குக்கூட ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கவில்லை. கால அவகாசம் கேட்டுக் கேட்டுக் காலத்தைக் கடத்தியிருந்தார். இதனால் திருப்தியடைந்தது ராஜபக்ச குடும்பம்தான். சிலவேளை மகிந்த மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தால் நிலைமை வேறாக அமைந்திருக்கும். 

ஆனால் நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றுவது என்பதைவிட இலங்கை அரசு மீதான சர்வதேசக் குற்றச்சாட்டையும் அவப்பெயரையும் நீக்க வழி சமைத்ததெனலாம். அதேவேளை. சந்திரிகாவுக்கு எதிரான மேற்படி கட்சி உருவாக்கம் மற்றும் அம்பாந்தோட்டையை மையப்படுத்திய புதிய அரசியல் கலச்சாரம் ஆகிய மேற்படி இரு விடயங்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதித்தித்தும் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டும் மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது ராஜபக்ச குடும்பம். 

விகிதாசாரத் தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறவே முடியாது. ஆனால் ராஜபக்ச குடும்பம் அறுதிப் பெறும்பான்யைப் பெற்றிருக்கிறது. ஆகவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கப்போவது என்ன என்ற கேள்விகளே தற்போது விஞ்சியுள்ளன. 2005ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பதவியில் இருந்தபோது நடந்த அதே விடங்கள்தான் தொடருமா அல்லது புதிய மாற்றுச் சிந்தனையோடு அரசியல். 

பொருளாதார வியூகங்கள் வகுக்கப்படுமா என்பதுதான் பலருடைய கேள்வி. எழுபது ஆண்டுகால அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதுதான் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு. அதிகாரத் துஷ்பிரயோகம் ஊழழற்ற ஆட்சி வேண்டுமென்பது முற்போக்கான சிங்கள மக்களின் எதிர்ப்பார்ப்பு. ஆனால் இந்த இரண்டு எதிர்ப்பார்ப்புகளையும் ராஜபக்ச ஆட்சி முழுமைப்படுத்துமா என்ற சந்தேகங்களும் எழாமலில்லை. 

சிங்கள மக்களைப் பெறுத்தவரை அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை வாக்குகள் மூலம் கொடுத்தால் அதிகாரத் தூஸ்பிரயோகம் ஊழல் மோசடி நடைபெறாது என்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால் தமிழ்மக்களைப் பொறுத்தவரை தங்களுக்கென்றிருந்த சர்வதேசப் பிடியும் 2015ஆம் ஆண்டோடு தளர்ந்துவிட்ட நிலையில் மீண்டும் ராஜபக்ச ஆட்சி அமைத்துள்ளதால் அரசியல் திர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றவொரு அச்சம் உருவாகலாம். 2015இல் நல்லாட்சி என்ற பெயரில் நிலைமாறுகால நீதியை வழங்குவதைவிட ராஜபக்ச குடும்பத்தையே மைத்திரி-ரணில் காப்பாற்றியுள்ளனர் என்ற ஆதங்கமும் தமிழர் மத்தியில் உண்டு. உள்ளதையும் இழந்து விடுவோமோ என்ற ஏக்கத்தில் முஸ்லிம் மக்கள் உள்ளனர். மண் சரிவுக்கான இழப்பீடுகள். காணி வழங்குதல் சம்பள உயர்வுகள் இனிமேல் கிடைக்குமா என்ற சந்தேகம் மலையகத் தமிழர்கள் மத்தியில். 
 

spacer.png

Getty Images

மலையக மக்களைப் பிரநிதித்துவப்படுத்தி ராஜபக்ச அணியில் ஜீவன் தொண்டமான் வெற்றிபெற்றாலும். எந்தளவு தூரத்துக்கு மலையகத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என்ற சந்தேகங்களும் எழாமலில்லை. வடக்குக் கிழக்கில் ராஜபக்ச அணியில் அல்லது அந்த ராஜபக்சவுக்குச் சார்பான முறையில் ஒன்றிரண்டு பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தாலும் ஈழத்தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் உரிமைகளுக்கான தீர்வு அபிவிருத்திகள் அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுமா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் உண்டு. 

மறுபுறத்தில் எப்போதுமே சீனாவின் பக்கம் நிற்கும் ராஜபக்ச அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றதால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமா என்ற சந்தேகங்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளுக்கு ஏற்படலாம். 

ஏனெனில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இராணுவ நிர்வாகி அரசியல்வாதியல்ல. அத்துடன் சீனா பாக்கிஸ்தான் இராணுவக் கட்டமைப்புகளோடு நெருங்கிய உறவைப் பேணுபவர். யாருக்குமே கட்டுப்படாதவர் என்பதைத் தெரிந்துகொண்ட இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை விவகாரத்தில் திடீர் மாற்றங்களைச் செய்யும் நிலை உருவாகலாம். ஆனால் இந்தோ- பசுபிக் பிராந்திய நலனின் அக்கறை கொண்ட அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் அடுத்து வரும் நாட்களில் ராஜபக்ச ஆட்சியைத் தம் பக்கம் ஈர்க்க ஈழத்தமிழர் விவகாத்தை மீண்டும் கையில் எடுக்கும் என்று கூற முடியாது. 

முடிந்தவரை நிதியுதவிகளை வழங்கியும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டும் எதிர்க்காலத்தில் இலங்கையோடு பயணித்துத் தம் பக்கம் ஈர்க்கலாம். 

ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்க்க 2015ஆம் ஆண்டு எடுத்த முயற்சியும் அதன் சாதகமற்ற பெறுபேறுகளையும் கண்டுணர்ந்த இந்த நாடுகள் முடிந்தவரை உதவிகள் மூலமே இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும். 

ஆகவே தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை எப்படித் தங்கள் பக்கம் எடுத்துக்கொள்வது என்பது குறித்த உத்திகளைக் கையாள வேண்டும். 2015இல் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றி அரசியல் தீர்வுக்கான ஆரம்பத்தை உருவாக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இந்திய அமெரிக்க அனுசரனையோடு கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு அந்தக் கடமை உண்டு என்பதை தமிழ்ப் பிரதிநிதிகள் தங்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையின் அங்கீகாரத்தின் மூலம் வலியுறுத்தலாம். 

ஏனெனில் அந்தக் கடமையில் இருந்து ஜெனீவாவும் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளும் தப்பிவிட முடியாது. ராஜபக்ச அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கைக் கட்டுப்படுத்த இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளும் ஈழத்தமிழர் விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுப்பது இந்தோ - பசுபிக் பிராந்திய நலனுக்கு உகந்ததாகலாம். 

ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்ற ரணில் பிரதமராக இருந்தபோது ஜெனீவா மனித உரிமைச் சபையில் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு நன்றியாகவே ஐக்கியதேசியக் கட்சி எந்தவொரு ஆசனங்களையும் எடுக்காத நிலையிலும் தேசியப்பட்டியல் மூலம் ஆசனம் வழங்கப்பட்டிக்கின்றது என்ற கருத்தும் உண்டு. அவ்வாறே தோல்வி நிலையில் சென்ற சுமந்திரனும் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்ற கருத்துக்களும் யாழ்ப்பாணத்தில் இல்லாமலில்லை. 

இவ்வாறான நிலையில் குறைந்தபட்சம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா ஏன் அழுத்தம் கொடுக்க முடியாது என்ற கேள்விகள் எழுகின்றன. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவையே நம்பிச் செயற்படுவதால். இந்தியா சொல்வதை அமெரிக்கா கேட்கும் என்ற நம்பிக்கை தமிழ் பிரதிநிதிகளுக்கு உண்டு. ஆனால் இந்தியா தானாக முன்வராது. தமிழ்ப் பிரதிநிதிகள் முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு அதற்கான நகர்வுகளை மேற்கொள்ளத் தலைப்பட வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல. ஆனால் கடும்போக்குக் கொண்ட ராஜபக்ச அரசாங்கத்திலேயே ஆரம்பப் புள்ளியாக அதற்கான நகர்வை மேற்கொண்டால் பதில் கிடைக்கலாம். ஏனெனில் தமது இந்தோ- பசுபிக் பிராந்திய நலனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஏற்பாடுகளை ராஜபக்ச அரசாங்கம் செய்துவிடுமோ என்ற அச்சம் இனிமேல்தான் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆரம்பிக்கப் போகின்றது. 

அத்தோடு தேசம் தாயகம். இறைமை என்பதை நிறுவ வேண்டுமானால் சர்வதேச நாடுகள் மத்தியில் உறுதியான நம்பிக்கையைத் தமிழ்ப் பிரதிநிதிகள் முதலில் கட்டியெழுப்ப வேண்டும். சாதி மாதம். பிரதேச வேறுபாடுகள் கடந்த உணர்வுகளும் வளர்ச்சியடை வேண்டும். இவ்வாறான சூழலிலேதான் தமிழர்கள் மீட்சியைக் காணமுடியும். இல்லையேல் கொழும்பை மையப்படுத்திய சிங்களக் கட்சிகளின் தமிழ்ப் பிரதிநிதிகளே வடக்குக் கிழக்கில் எதிர்காலத்தில் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றும் ஆபத்தான நிலை தோன்றலாம்.
 

https://www.bbc.com/tamil/sri-lanka-53704758

 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

ல்லையேல் கொழும்பை மையப்படுத்திய சிங்களக் கட்சிகளின் தமிழ்ப் பிரதிநிதிகளே வடக்குக் கிழக்கில் எதிர்காலத்தில் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றும் ஆபத்தான நிலை தோன்றலாம்.
 

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் சம்பந்தா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.