Jump to content

உரிமைக்கும் அபிவிருத்திக்கும் சம அந்தஸ்து கொடுத்து தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ள வடக்கு,கிழக்கு மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்கும் அபிவிருத்திக்கும் சம அந்தஸ்து கொடுத்து தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ள வடக்கு,கிழக்கு மக்கள்

August 9, 2020
  • தாயகன்

லங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள்,விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டங்களிலும் தோல்வி கண்டவர்கள் திண்டாட்டங்களிலும் உள்ளனர். இப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத பல சாதனைகள், சோதனைகள், வேதனைகளுடனேயே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் வாக்காளர்களான மக்களும் விடுபடுவதற்கு முன்பாகவே புதிய பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கப்போகும் அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார்.

000-36-1024x576.jpgஇந்த தேர்தலைப் பொறுத்த வரையில் மக்களின் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல செய்திகளை எச்சரிக்கைகளை ,தண்டனைகளை கொடுப்பதாகவே அமைந்துள்ளது. இதில் இலங்கையின் பழமைவாய்ந்த கட்சியும் பிரதான இரு கட்சிகளில் ஒன்றுமான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒருநாள் நீதிபதிகளான வாக்காளர்கள் மரண தண்டனையே கொடுத்து விட்டனர்.

 

இதில் வடக்கு, கிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புத் தொடர்பில் மட்டும் பார்ப்போம் ,

மக்களின் தீர்ப்பு தொடர்பில் முதலில் வடக்கு மாகாணத்தை பார்த்தால் அங்கும் பிரதான கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களின் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அக்கட்சி வடக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 13 ஆசனங்களில் 9 ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை 6 ஆசனங்களை மட்டுமே வெற்றிகொண்டுள்ளது. 3 ஆசனங்களை இழந்துள்ளது. அத்துடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தாய்க்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்தவருமான மாவை சேனாதிராஜா கூட மக்களால் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

 

அதேவேளை இம்முறை வடக்கில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் வெற்றிபெற்ற ஸ்ரீதரன்,சுமந்திரன்,சித்தார்த்தன் ஆகியோருக்கான வாக்குகளில் கூட பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் ஸ்ரீதரன் 72058 விருப்பு வாக்குகளைப்பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தார் .ஆனால் இம்முறை ஸ்ரீதரன் பெற்ற வாக்குகள் 35,884.சுமந்திரனுக்கு கடந்த முறை 58043 வாக்குகள். இம்முறை 27,834வாக்குகள்.சித்தார்த்தனுக்கு கடந்த முறை 53740 வாக்குகள் . இம்முறை 23,840 வாக்குகள். கடந்த முறை 58782 விருப்பு வாக்குகளிப்பெற்று இரண்டாமிடத்தை பெற்றிருந்த மாவை சேனாதிராஜா,43289 விருப்பு வாக்குளைப் பெற்றிருந்த சரவணபவன் ஆகியோர் இம்முறை படு தோல்வியடைந்துள்ளனர்.

 

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட அங்கயன் கடந்த முறை தேர்தலில் 17309 வாக்குகளைப்பெற்று தோல்விகண்ட நிலையில் இம்முறை 36,365 விருப்பு வாக்குகளைப்பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோன்று கடந்த தேர்தலில் 16399 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றிருந்த ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம்முறை 32,146 விருப்பு வாக்குகளிப்பீர் மீண்டும் வெற்றியடைந்துள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் மிகக்குறைந்தளவான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்முறை 31,658 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். அது மட்டுமன்றி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை மட்டுமே வடக்கில் பெற்றிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி இம்முறை 2 ஆசனங்களையும் கடந்த முறை எந்தவொரு ஆசனத்தையும் பெறாத கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இம்முறை 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

 

அது மட்டுமன்றி இம்முறை தேர்தலில் புதிதாக களமிறங்கிய வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது. அதேவேளை கடந்த முறை ஒரு ஆசனத்தைப்பெற்றிருந்த ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை படு தோல்விகண்டுள்ளது.

வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறை ஒரு ஆசனத்தை இழந்துள்ளது. அத்துடன் வாக்குகளிலும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த தேர்தலில் 34620 வாக்குளைப் பெற்றிருந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் இம்முறை 25,668 வாக்குகளையும் கடந்த தேர்தலில்26397 வாக்களைப்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் இம்முறை 18,563 வாக்களையுமே பெற்றுள்ளனர். கடந்த முறை இக்காட்சியில் போட்டியிட்டு 25027 வாக்குகளை பெற்றிருந்த சிவசக்தி ஆனந்தன் இம்முறை கட்சி மாறி தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் போட்டியிட்ட நிலையில் தோல்வி கண்டுள்ளார். அதேவேளை கடந்த முறை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்விகண்டிருந்த வினோநோகராதலிங்கம் இம்முறை போட்டியிட்டு 15,190 வாக்குகளைப்பெற்று வெற்றியடைந்துள்ளார்.

 

அத்துடன் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. இம்முறை வன்னி மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு-தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியிடமிருந்தே இந்த ஆசனத்தை ஈ.பி.டி.பி.வெற்றி கொண்டுள்ளது. முஸ்லிம் மக்களை பொறுத்த வரையில் கடந்த முறை வெற்றி பெற்ற ரிசாத் பதியுதீன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ரிசாத் கடந்த முறை 26291 ஆக்குகளிப்பெற்ற நிலையில் இம்முறை 28,203வாக்குகளையும் கடந்த முறை 7298 வாக்குகளை பெற்றிருந்த காதர் மஸ்தான் இம்முறை 13,454 வாக்குகளைப் பெற்றுள்ளார்.இவ்விருவரும் கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட இம்முறை அதிகமாகவே பெற்றுள்ளனர்.

வடக்கின் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் தமது உரிமைக்கும் அபிவிருத்திக்கும் சம அந்தஸ்து வழங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.அதாவது யாழ் ,கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது உரிமைக் குரலுக்கு விக்னேஸ்வரன்,கஜேந்திரகுமார்,சுமந்திரன்,ஸ்ரீதரன், சித்தார்த்தன் ஆகியோரையும் அபிவிருத்தி புரட்சிக்கு டக்ளஸ் தேவானந்தா ,அங்கயன் ஆகியோரையும் தெரிவு செய்துள்ளனர். அதேபோன்று வன்னி மக்கள் தமது உரிமைக்குரலுக்கு சார்ள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன்,வினோநோகராதலிங்கம் ,ரிசாத் பதியுதீன் ஆகியோரையும் அபிவிருத்திக்கு காதர் மஸ்தான் ,திலீபன் ஆகியோரையும் தெரிவு செய்துள்ளனர். குறிப்பாக வடக்கு மக்களின் தீர்ப்பால் இம்முறை வடக்கிற்கு இரு அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் கிழக்கு மாகாண மக்களின் தீர்ப்பை பார்த்தோமானால் அங்கும் தமிழ் தமிழ் தேசியக்கூட்டமைப்பே தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் திருகோணமலையில் ஒரு ஆசனத்தயுமென 5 ஆசனங்களை பெற்றிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தையும் பறிகொடுத்துள்ளது. அது மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு புதியவர்களே மக்களால் தெரிவு செய்யப்பட்டுமுள்ளனர்.

கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு ஆசனங்களை பறித்தெடுத்த தமிழ் மக்கள் அதற்கு பதிலாக அரசு சார்பான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த முன்னாள் கிழக்கு முதலமைச்சரான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனையும் கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 39321வாக்குகளை பெற்று வெற்றியடைந்திருந்த நிலையில் 52 நாள் ஆட்சி மாற்றத்தின்போது மஹிந்த ராஜபக்ச தரப்புக்கு தாவிய வியாழேந்திரன் இம்முறை ”மொட்டு”சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட நிலையில் 22,218 வாக்குகளையளித்து வெற்றி பெற வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டவர்களாகவே இருந்தனர். அதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தாய்க்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா வடக்கில் யாழ் மாவட்டத்தில் படுதோல்விகண்ட நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரான துரைரட்ண சிங்கம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுதோல்வி யடைந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் போட்டி ,பிரசாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒரு ஆசனத்தையும் இல்லாமல் செய்து விட்டது. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டுமென்ற சிந்தனையில் செயற்பட்ட கருணாவினால் அம்பாறை மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவமே பறிபோயுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த வரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழர் பிரதிநிதித்துவத்தை கடும் சவாலுக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். எனினும் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 33834 வாக்குகளை பெற்றிருந்த இரா.சம்பந்தன் இம்முறை 21422 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்திலும் பெரும் வாக்கு வீழ்ச்சியைக்கண்டுள்ளது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விக்னேஸ்வரன்,சுமந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சித்தார்த்தன்,ஸ்ரீதரன், டக்ளஸ் தேவானந்தா ,அங்கயன் இராமநாதன் என தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலமானவர்களாக உள்ளநிலையில் கிழக்கு மாகாணத்தில் இரா.சம்பந்தனை தவிர ஏனைய இருவரில் ஒருவர் புதியவராகவே உள்ளார். மற்றயவரான கோவிந்தன் கருணாகரன் பல வருடங்களுக்கு முன்னர் முன்னாள் எம்.பி.யாக இருந்துள்ள நிலையில் கிழக்கு தமிழர் பிரதிநிதித்துவம் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.

கிழக்கில் முஸ்லிம் மக்களைப்பொறுத்தவரையில் கடந்த முறை போன்றே இம்முறையும் தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துள்ளனர் . மட்டக்களப்பில் கடந்த தேர்தலில் இரு ஆசனங்களை பெற்றுக்கொண்ட முஸ்லிம் மக்கள் இம்முறை ஒரு ஆசனத்தை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளனர்.திருகோணமலையில் கடந்த முறை இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இம்முறையும் இரு ஆசனங்களையும் தக்க வைத்துள்ளனர். திகாமடுல்ல மாவட்டத்தில் [அம்பாறை]கடந்த முறை 3 ஆசனங்களை பெற்றிருந்த முஸ்லிம் மக்கள் இம்முறை 4 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். மட்டக்களப்பில் இழந்த ஒரு ஆசனத்தை திகாமடுல்லவில் பெற்று சமப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரதி நிதித்துவம் கட்சிகள் மாறினாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எனவே வடக்கு,கிழக்கு மாகாணத்தைப்பொறுத்த வரையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளபோதும் வடக்கைப் பொறுத்தவரையில் அவை முன்னர் போல் ஒரு கட்சியிடமில்லாது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இது வடக்கிற்கு புதிய அனுபவம்.பிரதிநிதிதித்துவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் தெரிவுகள் சிறப்பானவை. இவர்கள் தமக்குள் உள்ள பகைமைகள்,தலைக்கனங்கள் ,போட்டிகளை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவார்களேயானால் உரிமைகள்,அபிவிருத்திகளை பெறுவது ஒன்றும் கடினமான விடயமாக இருக்காது

 

http://thinakkural.lk/article/61032

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.