Jump to content

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kidnap.jpg

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வெள்ளை-வானில்-20-வயது-யுவதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Robinson cruso said:

வெள்ளை வான்? அப்படி என்றால்  --------------------

ஒருக்கா தூக்கினால்த் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி எழுதப்பட்ட விதம் ஒருவித தெழிவில்லாத,  மயக்கம் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

1 hour ago, MEERA said:

spacer.png

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Robinson cruso said:

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன. எனி சீனக்கடன் தான் சொறீலங்கர்களின் தலையில் சுமையாக ஏறும். ஏற்கனவே உள்ள கடனுக்கு மேலதிகமாக. 

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன.

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

இதைத்தானே 70 வருடமாக பேசுகிறோம். இனி என்ன தேசியம். இந்த 70 வருடத்தில் தமிழ் தேசியம் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையும் கிழக்கு , வன்னி என 50 % இட்கும் மேட்படட இடங்கள் சிங்களமயமாயும், சிங்களவர்களாயும் மாற்றி விடடார்கள். இன்னும் ஒரு 50 வருடத்தில் முழு இலங்கையும் சிங்கள மயமாயும் சிங்களவர்களாகவும் இருக்கப்போகின்றது. அப்படி என்றால் கடந்த 70 வருடமாக உங்கள் தமிழ் தேசியம் என்ன செய்தது? மக்களை தேசியம் தேசியம் எண்டு பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். இன்று தமிழர்களின் தலை நகராம் திருகோணமலையின் நிலவரம் என்ன? தமிழன் ஒரு சந்தை திறக்க முடியாமல் அவதிப்படுகின்றான். இப்படி தமிழனின் நிலைமையை நிர்யாவே எழுதலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது கருது எழுதுவது நல்லதாக தெரியவில்லை. மக்களுக்காக அரசியல் செய்யவேண்டும் ஒழிய , அரசியலுக்காக மக்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்குத்தான் இங்குள்ள நிலைமைகள் தெரியும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Robinson cruso said:

இதைத்தானே 70 வருடமாக பேசுகிறோம். இனி என்ன தேசியம். இந்த 70 வருடத்தில் தமிழ் தேசியம் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையும் கிழக்கு , வன்னி என 50 % இட்கும் மேட்படட இடங்கள் சிங்களமயமாயும், சிங்களவர்களாயும் மாற்றி விடடார்கள். இன்னும் ஒரு 50 வருடத்தில் முழு இலங்கையும் சிங்கள மயமாயும் சிங்களவர்களாகவும் இருக்கப்போகின்றது. அப்படி என்றால் கடந்த 70 வருடமாக உங்கள் தமிழ் தேசியம் என்ன செய்தது? மக்களை தேசியம் தேசியம் எண்டு பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். இன்று தமிழர்களின் தலை நகராம் திருகோணமலையின் நிலவரம் என்ன? தமிழன் ஒரு சந்தை திறக்க முடியாமல் அவதிப்படுகின்றான். இப்படி தமிழனின் நிலைமையை நிர்யாவே எழுதலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது கருது எழுதுவது நல்லதாக தெரியவில்லை. மக்களுக்காக அரசியல் செய்யவேண்டும் ஒழிய , அரசியலுக்காக மக்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்குத்தான் இங்குள்ள நிலைமைகள் தெரியும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தளங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

நாங்கள் அரசுடன் சேர்ந்தவர்களை மட்டும் இதட்கு குற்றம் சாடட முடியாது. ஒன்றை கூறுகின்றேன். இதட்கு முன்னரும் எழுத்து இருக்கிறேன். நான் இதில் சம்பந்தப்படட படியால் எழுதுகிறேன்.

இரணைமடு திடத்தில் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டுபோவதட்கான திடடம் இருந்தது. அதாவது நீர்த்தேக்கத்தை உயர்த்தி அதில் கிடைக்கும் மேலதிக நீரை சேமித்து அங்கு கொண்டு செல்வது. அது மட்டுமல்ல யாழில் ராட்சத குழாய்கள் மூலம் யாழில் கிடைக்கும் கழிவு நீரை , சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து மீண்டும் நிலத்திட்க்குள் அனுப்புவது. அதாவது நிலத்தடி நன்னீரின் கொள்ளளவை அதிகரிப்பது.

அப்படியான ஒரு திடடம் வந்த பொது ஸ்ரீதரன் எம்பீ அதை சுய நலத்துடன் எதிர்த்தார். மாகாண சபையின் கீழ் உள்ள அந்த இரணைமடுக்குல திட்ட்துக்கு அரசியல் காரணுங்கலுக்காக விக்கியும் சம்மதிக்கவில்லை. அங்கு ஸ்ரீதரனுக்கு நூற்று கணக்கில் வெள்ளாமை காணிகள்  இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அந்த திடடம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதட்கு முக்கிய காரணம் தமிழ் தேசிய கட்சிகளே.

இப்போது என்ன நடக்கின்றது? மகாவலி நீர் திசை திருப்பும் திடடம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அந்த நீர் இரணைமடு குளத்துக்கு கொண்டுவரப்படும். யாழ்ப்பாணத்துக்கு நீர் கொண்டுசெல்லப்படும்.

இங்குதான் பிரச்சினை இருக்கின்றது. மகாவலி நீர் வந்தவுடன் இக்குளம் மத்திய அரசின் கீழ் வந்து விடும். அதன்பின்னர்தான் முழு வீச்சில் நெடுங்கேணி முதல் இரணைமடுக்குளம் வரைக்கும் சிங்கள குடியேற்றம் நடைபெறும்.

இதட்கு யார் பொறுப்பு கூறுவது. தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் இதட்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்போது நெடுங்கேணி வரைக்கும் குடியேற்றம் வந்து விட்ட்து. எனவே அரசை சார்ந்தவர்களை மட்டும் குற்றம் சாடட முடியாது.

Link to comment
Share on other sites

இது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் விபரங்களையும் திரட்டி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகளையும் இலக்கு வைத்து மிகவும் நெருக்கடியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது ஈழத்தில் நடக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்தி ஊடகங்களில் பதிவு செய்வதற்கு தடைகளை விதித்து வருகின்றனர். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தில் நடக்கும் கைதுகள் மற்றும் கொலைகள் தொடர்பான செய்திகள் சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டிலேயே வாழுகின்ற மக்களுக்கும் சென்றடையாதவாறு மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வு துறையினர். எது எப்படி இருப்பினும் சில கைது நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.

 

http://www.tamilpower.com/2020/08/blog-post_10.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அபிவிருத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய முதல், தனக்கு சாதகமான திட்டத்தை முன்வைத்தே சிங்களம் செய்யும். நாங்கள் அதில் மூழ்கி இருக்க, கனகச்சிதமாய் அந்த திட்டத்தில் பயனடைவோர் சிங்களவரே. இழப்பு மட்டுமே தமிழருக்கு மிஞ்சியது. இது கடந்தகால அனுபவம். எங்கள் பூர்வீக நிலங்கள் இவ்வாறே அபகரிக்கப்பட்டன. சிங்களவன் ஒரு திட்டம் வைத்தால், அது சரியில்லை என்று ஒரு சாரார் எதிர்த்தால் மறுத்திட்டம் அதைவிட மோசமானதாய் இருக்கும். நமக்கிடையே பிளவுகள் ஏற்படும். அதை சிங்களவன் சாதகமாக்கி நம்மையே கூறு போடுகிறான். இந்த நரித்தனத்தை வெல்ல முயற்சி எடுத்தால், நமக்கு வேண்டியதை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் ஆளையாள் குற்றம் சொல்லி அடிபட்டுக்கொண்டு, அவனுக்கு சேவகம் செய்து, அவனது திட்டத்தை நாமே நிறைவேற்றியவர்களாவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

ஒரு அபிவிருத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய முதல், தனக்கு சாதகமான திட்டத்தை முன்வைத்தே சிங்களம் செய்யும். நாங்கள் அதில் மூழ்கி இருக்க, கனகச்சிதமாய் அந்த திட்டத்தில் பயனடைவோர் சிங்களவரே. இழப்பு மட்டுமே தமிழருக்கு மிஞ்சியது. இது கடந்தகால அனுபவம். எங்கள் பூர்வீக நிலங்கள் இவ்வாறே அபகரிக்கப்பட்டன. சிங்களவன் ஒரு திட்டம் வைத்தால், அது சரியில்லை என்று ஒரு சாரார் எதிர்த்தால் மறுத்திட்டம் அதைவிட மோசமானதாய் இருக்கும். நமக்கிடையே பிளவுகள் ஏற்படும். அதை சிங்களவன் சாதகமாக்கி நம்மையே கூறு போடுகிறான். இந்த நரித்தனத்தை வெல்ல முயற்சி எடுத்தால், நமக்கு வேண்டியதை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் ஆளையாள் குற்றம் சொல்லி அடிபட்டுக்கொண்டு, அவனுக்கு சேவகம் செய்து, அவனது திட்டத்தை நாமே நிறைவேற்றியவர்களாவோம். 

இந்த 72 ஆண்டுகால இலங்கை நாடாளுமன்றப் பட்டறிவில் எந்தவொரு தமிழ்க்கட்சியும்  இதனை உணரவில்லை. ஏன்  ஜீ.ஜீ.பொன்னம்பலமவர்களால் வட-கிழக்கிலே தொழிற்சாலைகளை முன்மொழிந்தபோதுகூட மாற்றணிகளால்    எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுதாகக் கூறுவதைக் கேடடிருக்கின்றேன்.  இது தமிழரிடையே உள்ள துர்ப்பாக்கி நிலை. முதலில் இவைகள் மறைந்தாலே நிறைய மாற்றங்கள் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தை வழி கொழும்பில் வளர்ந்து, கல்வி கற்று, தொழிலும் பெற்றவர்கள். பெரும்பாலானோர் போலீஸ் இலாகாவில் பணிபுரிந்தவர்கள். சிங்களம் மட்டும் என்கிற சட்டம் வந்தபோது, அத்தனை உறவுகளும் தமது போலீஸ் உத்தியோகத்தை தூக்கியெறிந்துவிட்டு ஊருக்கு வந்து, விவசாயிகளாக வாழ்ந்தார்கள். இவர்கள் மட்டுமல்ல எத்தனையோ தமிழ் இளைஞர்கள் அன்று அப்படி செய்ததாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.  ஆனால் ஒரு அரசியல்வாதியும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிங்களவனுக்காக வாதாட பிரித்தானியா சென்ற தலைமைகள், எங்கள் உரிமைக்காக வாதாட விரும்பவில்லை. சாதாரண மக்களுக்கு இருந்த தன்மானம் தலைமைகளுக்கு இல்லாமல் பண, சொகுசு மோகமே பெரிதாக இருக்க. மக்கள் தொழிலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள். சிங்களவன் அதை சாதகமாக்கி, எல்லாவற்றையும் தானே எடுத்துக்கொண்டான்.  அன்றே இவர்கள் போராட வெளிக்கிட்டிருந்தால், இவ்வளவு இழப்புகளையும், அழிவுகளையும் தடுத்திருக்கலாம். காலந்தாழ்த்திய பின் இலகுவாக கடவுளில் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் என்பது கூட்டமைப்புச் செய்யும் அரசியல்தான் என்று நம்பும் அரசியல் அடிமுட்டாள்கள் இருக்கும்வரை தமிழனுக்கு விவிவு பிறக்கப்போவதில்லை. வெறுமனே தமது கட்சியின் பெயரில் தேசியம் எனும் வார்த்தையினைத் தொங்கவிட்டு விட்டால் தேசியம் வந்திடுமா? அப்படியானால் இனத்துரோகி கருணாவோ அல்லது கொலைகாரன் பிள்ளையானோ தமது கட்சியில் இன்னும் சேர்த்து வைத்திருக்கும் புலிகள் எனும் சொல்லுக்கும் உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா? அப்படித்தான், கூத்தமைப்பெனும் கொழும்பு மேற்தட்டு வர்க்க அரசியலினைக் கொண்டு நடத்தும் சுமந்திரனின் கட்சியும் பார்க்கப்படுதல் அவசியம். அவர்களுக்கும் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

70 ஆண்டுகளாக சிங்களவன் ஆக்கிரமிக்கிறான். அதனாலேயே தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றது. ஏதோ தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றதினால்த்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்று புதிய கதையுடன் சிலர் உலாவருகிறார்கள் இப்போது. அதாவது தமிழ் ஆயுதப் போராட்டத்தினை அடக்கவே அரச ராணுவம் போரில் இறங்கியதெனும் சிங்களப் பேரினவாதத்தின் கூற்றுக்கு எந்தவிதத்திலும் குறையாத கூற்றே "உங்கட தேசியம் செய்ததெல்லாம் சிங்களவன்ர ஆக்கிரமிப்பை 70 வருஷமா உருவாக்கி வளர்த்தது" என்பது. உங்களுக்கு கூத்தமைப்பின் அரசியல் பிடிக்கவில்லையென்றால், தாராளாமாக விமர்சியுங்கள். அதற்கான தகுதி அவர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இன்று தோற்றுவிட்டது தமிழ்த் தேசியம் அல்ல, மாறாக தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் தமிழ்த்தேசிய எதிர்ப்பைச் செய்துவந்த கூத்தமைப்பெனும் தேசியவிரோத கட்சியின் அரசியலே. 

தமிழ்த்தேசியம் என்பது பாராளுமன்ற பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் செய்யப்படும் அரசியல் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

தேசியம் என்பது ஒரு மொழிபேசும் மக்கள் கூட்டம், தமது பூர்வீகத் தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான வாழ்க்கை முறையே. அதை நோக்கிச் செய்யப்படும் எந்தவித நடவடிக்கையும்ன், அரசியலாகவோ போராட்டமாகவோ இருக்கும் பட்சத்தில் தேசியம் சார்ந்த செயற்பாடாகக் கருதப்பட முடியுமே தவிர, அதுவே தேசியமாகாது. இன்று கூத்தமைப்புச் செய்வதற்கும் தேசியம் சார்ந்த செயற்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர் எதிரான செயற்பாட்டையே கூத்தமைப்பு செய்துவருகிறது.

Link to comment
Share on other sites

அதாவது கூத்தமைப்பு தமிழ் தேசியத்துக்கு உரியதல்ல, விக்கியும் கஜனும்தான் இப்போது தமிழ் தேசியம் செய்யப்போகிறார்கள் என்ற கண்ணோட்டம் இங்கு காணப்படுகின்றது. அப்படி என்றால் இவர்களை தெரிவு செய்ததுபோல , தமிழ் தேசியத்துக்கு எதிரான அரசு சார்பான கட்சிகளுக்கு ஏன் மக்கள் வாக்களித்தார்கள்? 

சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்பதால்தான் , தமிழ் தேசியம் உருவாகியதாம். அப்படி என்றால் அந்த ஆக்கிரமிப்பை தடுக்க முடிந்ததா? அந்த ஆக்கிரமிப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை . இது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ் தேசியம் பேசியவர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளி நாடு சென்று படிக்கவும், குடும்பத்துடன் சொகுசு வாழக்கை நடத்தினார்கள் தவிர ஆக்கபூர்வமாக எதுவுமே செய்யவில்லை. அவர்களுக்கும் தெரியும் முடியாத ஒன்றைத்தான் செய்கிறோம் என்று.

இப்போது மக்கள் கூத்தமைப்பை நிராகரித்து சில தமிழ் தேசிய (?) வாதிகளுக்கும் , அரசசார்பு வாதிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். நிச்சயமாக அடுத்தமுறை கூத்தமைப்பை காணாமல் போகும்.

அனால் மக்கள் எப்போதுமே தியாகம் செய்துகொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அரசியல் மூடத்தனம். எனவே தமிழ் தேசியத்துக்கு இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகள் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

காதல் என்றாலே (நேரம்ம்ம்ம்ம்) கடத்துதல் தானே. 

❤️எட்டு மணித்தியாலங்கள் எட்டு நிமிடமாய்க் கரைந்தே போகும். ❤️

எனது நாளை இனிதாய், பசுமையான நினைவுகளுடன் ஆரம்பிக்க உதவிய இரதிக்கு நன்றிகள் ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

 

5 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

தமிழ் இலக்கியங்களில் கரவொழுக்கம் பற்றி கற்றதில்லையா? விரும்பிய பெண்ணை கடத்தி சென்று மனைவியாக்குவது தமிழ் தேசிய பாரம்பரிய பண்பாடு. கடத்தி செல்லும் அளவுக்கு வீரம் இல்லாதவனை எந்த தமிழச்சி மணம் செய்வாள்? ரதி என்ன சொல்கிறீர்கள்? 😀 இதை காந்தர்வ திருமணம் என்றும் சொல்வதுண்டு, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

 

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

https://www.tamilwin.com/community/01/253311?ref=home-latest

 

இப்போ சொல்லுங்கோ யார் யார் இந்த வெள்ளை வான் கடத்தல் போட்டியில் 💡 வாங்கினவை.

மக்களுக்கு தமிழ் தேசிய தெளிவை கொடுங்கள், ஆனால் ரெயினில் மாடு அடிபட்டாலும், வெள்ளை வானுக்கு காத்து போனாலும் சிங்களவன் தான் காரணம் எண்டு சொல்லி தேசிய சிந்தனையை இனவெறியாக்கி கொச்சைப்படுத்தாதீங்கள்.

என்ன நான் சொல்லுறது சரிதானே.?? 😁

Link to comment
Share on other sites

10 hours ago, முதல்வன் said:

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

 

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

https://www.tamilwin.com/community/01/253311?ref=home-latest

 

இப்போ சொல்லுங்கோ யார் யார் இந்த வெள்ளை வான் கடத்தல் போட்டியில் 💡 வாங்கினவை.

மக்களுக்கு தமிழ் தேசிய தெளிவை கொடுங்கள், ஆனால் ரெயினில் மாடு அடிபட்டாலும், வெள்ளை வானுக்கு காத்து போனாலும் சிங்களவன் தான் காரணம் எண்டு சொல்லி தேசிய சிந்தனையை இனவெறியாக்கி கொச்சைப்படுத்தாதீங்கள்.

என்ன நான் சொல்லுறது சரிதானே.?? 😁

கடைசியாய் முடிவு வந்துவிட்டது. நெக்காலபோனவன் சொல்வது போலில்லை தற்போதய நிலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.