Jump to content

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kidnap.jpg

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வெள்ளை-வானில்-20-வயது-யுவதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Robinson cruso said:

வெள்ளை வான்? அப்படி என்றால்  --------------------

ஒருக்கா தூக்கினால்த் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி எழுதப்பட்ட விதம் ஒருவித தெழிவில்லாத,  மயக்கம் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

1 hour ago, MEERA said:

spacer.png

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Robinson cruso said:

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன. எனி சீனக்கடன் தான் சொறீலங்கர்களின் தலையில் சுமையாக ஏறும். ஏற்கனவே உள்ள கடனுக்கு மேலதிகமாக. 

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன.

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

இதைத்தானே 70 வருடமாக பேசுகிறோம். இனி என்ன தேசியம். இந்த 70 வருடத்தில் தமிழ் தேசியம் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையும் கிழக்கு , வன்னி என 50 % இட்கும் மேட்படட இடங்கள் சிங்களமயமாயும், சிங்களவர்களாயும் மாற்றி விடடார்கள். இன்னும் ஒரு 50 வருடத்தில் முழு இலங்கையும் சிங்கள மயமாயும் சிங்களவர்களாகவும் இருக்கப்போகின்றது. அப்படி என்றால் கடந்த 70 வருடமாக உங்கள் தமிழ் தேசியம் என்ன செய்தது? மக்களை தேசியம் தேசியம் எண்டு பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். இன்று தமிழர்களின் தலை நகராம் திருகோணமலையின் நிலவரம் என்ன? தமிழன் ஒரு சந்தை திறக்க முடியாமல் அவதிப்படுகின்றான். இப்படி தமிழனின் நிலைமையை நிர்யாவே எழுதலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது கருது எழுதுவது நல்லதாக தெரியவில்லை. மக்களுக்காக அரசியல் செய்யவேண்டும் ஒழிய , அரசியலுக்காக மக்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்குத்தான் இங்குள்ள நிலைமைகள் தெரியும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Robinson cruso said:

இதைத்தானே 70 வருடமாக பேசுகிறோம். இனி என்ன தேசியம். இந்த 70 வருடத்தில் தமிழ் தேசியம் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையும் கிழக்கு , வன்னி என 50 % இட்கும் மேட்படட இடங்கள் சிங்களமயமாயும், சிங்களவர்களாயும் மாற்றி விடடார்கள். இன்னும் ஒரு 50 வருடத்தில் முழு இலங்கையும் சிங்கள மயமாயும் சிங்களவர்களாகவும் இருக்கப்போகின்றது. அப்படி என்றால் கடந்த 70 வருடமாக உங்கள் தமிழ் தேசியம் என்ன செய்தது? மக்களை தேசியம் தேசியம் எண்டு பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். இன்று தமிழர்களின் தலை நகராம் திருகோணமலையின் நிலவரம் என்ன? தமிழன் ஒரு சந்தை திறக்க முடியாமல் அவதிப்படுகின்றான். இப்படி தமிழனின் நிலைமையை நிர்யாவே எழுதலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது கருது எழுதுவது நல்லதாக தெரியவில்லை. மக்களுக்காக அரசியல் செய்யவேண்டும் ஒழிய , அரசியலுக்காக மக்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்குத்தான் இங்குள்ள நிலைமைகள் தெரியும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தளங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

நாங்கள் அரசுடன் சேர்ந்தவர்களை மட்டும் இதட்கு குற்றம் சாடட முடியாது. ஒன்றை கூறுகின்றேன். இதட்கு முன்னரும் எழுத்து இருக்கிறேன். நான் இதில் சம்பந்தப்படட படியால் எழுதுகிறேன்.

இரணைமடு திடத்தில் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டுபோவதட்கான திடடம் இருந்தது. அதாவது நீர்த்தேக்கத்தை உயர்த்தி அதில் கிடைக்கும் மேலதிக நீரை சேமித்து அங்கு கொண்டு செல்வது. அது மட்டுமல்ல யாழில் ராட்சத குழாய்கள் மூலம் யாழில் கிடைக்கும் கழிவு நீரை , சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து மீண்டும் நிலத்திட்க்குள் அனுப்புவது. அதாவது நிலத்தடி நன்னீரின் கொள்ளளவை அதிகரிப்பது.

அப்படியான ஒரு திடடம் வந்த பொது ஸ்ரீதரன் எம்பீ அதை சுய நலத்துடன் எதிர்த்தார். மாகாண சபையின் கீழ் உள்ள அந்த இரணைமடுக்குல திட்ட்துக்கு அரசியல் காரணுங்கலுக்காக விக்கியும் சம்மதிக்கவில்லை. அங்கு ஸ்ரீதரனுக்கு நூற்று கணக்கில் வெள்ளாமை காணிகள்  இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அந்த திடடம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதட்கு முக்கிய காரணம் தமிழ் தேசிய கட்சிகளே.

இப்போது என்ன நடக்கின்றது? மகாவலி நீர் திசை திருப்பும் திடடம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அந்த நீர் இரணைமடு குளத்துக்கு கொண்டுவரப்படும். யாழ்ப்பாணத்துக்கு நீர் கொண்டுசெல்லப்படும்.

இங்குதான் பிரச்சினை இருக்கின்றது. மகாவலி நீர் வந்தவுடன் இக்குளம் மத்திய அரசின் கீழ் வந்து விடும். அதன்பின்னர்தான் முழு வீச்சில் நெடுங்கேணி முதல் இரணைமடுக்குளம் வரைக்கும் சிங்கள குடியேற்றம் நடைபெறும்.

இதட்கு யார் பொறுப்பு கூறுவது. தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் இதட்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்போது நெடுங்கேணி வரைக்கும் குடியேற்றம் வந்து விட்ட்து. எனவே அரசை சார்ந்தவர்களை மட்டும் குற்றம் சாடட முடியாது.

Link to comment
Share on other sites

இது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் விபரங்களையும் திரட்டி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகளையும் இலக்கு வைத்து மிகவும் நெருக்கடியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது ஈழத்தில் நடக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்தி ஊடகங்களில் பதிவு செய்வதற்கு தடைகளை விதித்து வருகின்றனர். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தில் நடக்கும் கைதுகள் மற்றும் கொலைகள் தொடர்பான செய்திகள் சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டிலேயே வாழுகின்ற மக்களுக்கும் சென்றடையாதவாறு மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வு துறையினர். எது எப்படி இருப்பினும் சில கைது நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.

 

http://www.tamilpower.com/2020/08/blog-post_10.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அபிவிருத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய முதல், தனக்கு சாதகமான திட்டத்தை முன்வைத்தே சிங்களம் செய்யும். நாங்கள் அதில் மூழ்கி இருக்க, கனகச்சிதமாய் அந்த திட்டத்தில் பயனடைவோர் சிங்களவரே. இழப்பு மட்டுமே தமிழருக்கு மிஞ்சியது. இது கடந்தகால அனுபவம். எங்கள் பூர்வீக நிலங்கள் இவ்வாறே அபகரிக்கப்பட்டன. சிங்களவன் ஒரு திட்டம் வைத்தால், அது சரியில்லை என்று ஒரு சாரார் எதிர்த்தால் மறுத்திட்டம் அதைவிட மோசமானதாய் இருக்கும். நமக்கிடையே பிளவுகள் ஏற்படும். அதை சிங்களவன் சாதகமாக்கி நம்மையே கூறு போடுகிறான். இந்த நரித்தனத்தை வெல்ல முயற்சி எடுத்தால், நமக்கு வேண்டியதை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் ஆளையாள் குற்றம் சொல்லி அடிபட்டுக்கொண்டு, அவனுக்கு சேவகம் செய்து, அவனது திட்டத்தை நாமே நிறைவேற்றியவர்களாவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

ஒரு அபிவிருத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய முதல், தனக்கு சாதகமான திட்டத்தை முன்வைத்தே சிங்களம் செய்யும். நாங்கள் அதில் மூழ்கி இருக்க, கனகச்சிதமாய் அந்த திட்டத்தில் பயனடைவோர் சிங்களவரே. இழப்பு மட்டுமே தமிழருக்கு மிஞ்சியது. இது கடந்தகால அனுபவம். எங்கள் பூர்வீக நிலங்கள் இவ்வாறே அபகரிக்கப்பட்டன. சிங்களவன் ஒரு திட்டம் வைத்தால், அது சரியில்லை என்று ஒரு சாரார் எதிர்த்தால் மறுத்திட்டம் அதைவிட மோசமானதாய் இருக்கும். நமக்கிடையே பிளவுகள் ஏற்படும். அதை சிங்களவன் சாதகமாக்கி நம்மையே கூறு போடுகிறான். இந்த நரித்தனத்தை வெல்ல முயற்சி எடுத்தால், நமக்கு வேண்டியதை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் ஆளையாள் குற்றம் சொல்லி அடிபட்டுக்கொண்டு, அவனுக்கு சேவகம் செய்து, அவனது திட்டத்தை நாமே நிறைவேற்றியவர்களாவோம். 

இந்த 72 ஆண்டுகால இலங்கை நாடாளுமன்றப் பட்டறிவில் எந்தவொரு தமிழ்க்கட்சியும்  இதனை உணரவில்லை. ஏன்  ஜீ.ஜீ.பொன்னம்பலமவர்களால் வட-கிழக்கிலே தொழிற்சாலைகளை முன்மொழிந்தபோதுகூட மாற்றணிகளால்    எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுதாகக் கூறுவதைக் கேடடிருக்கின்றேன்.  இது தமிழரிடையே உள்ள துர்ப்பாக்கி நிலை. முதலில் இவைகள் மறைந்தாலே நிறைய மாற்றங்கள் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தை வழி கொழும்பில் வளர்ந்து, கல்வி கற்று, தொழிலும் பெற்றவர்கள். பெரும்பாலானோர் போலீஸ் இலாகாவில் பணிபுரிந்தவர்கள். சிங்களம் மட்டும் என்கிற சட்டம் வந்தபோது, அத்தனை உறவுகளும் தமது போலீஸ் உத்தியோகத்தை தூக்கியெறிந்துவிட்டு ஊருக்கு வந்து, விவசாயிகளாக வாழ்ந்தார்கள். இவர்கள் மட்டுமல்ல எத்தனையோ தமிழ் இளைஞர்கள் அன்று அப்படி செய்ததாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.  ஆனால் ஒரு அரசியல்வாதியும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிங்களவனுக்காக வாதாட பிரித்தானியா சென்ற தலைமைகள், எங்கள் உரிமைக்காக வாதாட விரும்பவில்லை. சாதாரண மக்களுக்கு இருந்த தன்மானம் தலைமைகளுக்கு இல்லாமல் பண, சொகுசு மோகமே பெரிதாக இருக்க. மக்கள் தொழிலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள். சிங்களவன் அதை சாதகமாக்கி, எல்லாவற்றையும் தானே எடுத்துக்கொண்டான்.  அன்றே இவர்கள் போராட வெளிக்கிட்டிருந்தால், இவ்வளவு இழப்புகளையும், அழிவுகளையும் தடுத்திருக்கலாம். காலந்தாழ்த்திய பின் இலகுவாக கடவுளில் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் என்பது கூட்டமைப்புச் செய்யும் அரசியல்தான் என்று நம்பும் அரசியல் அடிமுட்டாள்கள் இருக்கும்வரை தமிழனுக்கு விவிவு பிறக்கப்போவதில்லை. வெறுமனே தமது கட்சியின் பெயரில் தேசியம் எனும் வார்த்தையினைத் தொங்கவிட்டு விட்டால் தேசியம் வந்திடுமா? அப்படியானால் இனத்துரோகி கருணாவோ அல்லது கொலைகாரன் பிள்ளையானோ தமது கட்சியில் இன்னும் சேர்த்து வைத்திருக்கும் புலிகள் எனும் சொல்லுக்கும் உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா? அப்படித்தான், கூத்தமைப்பெனும் கொழும்பு மேற்தட்டு வர்க்க அரசியலினைக் கொண்டு நடத்தும் சுமந்திரனின் கட்சியும் பார்க்கப்படுதல் அவசியம். அவர்களுக்கும் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

70 ஆண்டுகளாக சிங்களவன் ஆக்கிரமிக்கிறான். அதனாலேயே தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றது. ஏதோ தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றதினால்த்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்று புதிய கதையுடன் சிலர் உலாவருகிறார்கள் இப்போது. அதாவது தமிழ் ஆயுதப் போராட்டத்தினை அடக்கவே அரச ராணுவம் போரில் இறங்கியதெனும் சிங்களப் பேரினவாதத்தின் கூற்றுக்கு எந்தவிதத்திலும் குறையாத கூற்றே "உங்கட தேசியம் செய்ததெல்லாம் சிங்களவன்ர ஆக்கிரமிப்பை 70 வருஷமா உருவாக்கி வளர்த்தது" என்பது. உங்களுக்கு கூத்தமைப்பின் அரசியல் பிடிக்கவில்லையென்றால், தாராளாமாக விமர்சியுங்கள். அதற்கான தகுதி அவர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இன்று தோற்றுவிட்டது தமிழ்த் தேசியம் அல்ல, மாறாக தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் தமிழ்த்தேசிய எதிர்ப்பைச் செய்துவந்த கூத்தமைப்பெனும் தேசியவிரோத கட்சியின் அரசியலே. 

தமிழ்த்தேசியம் என்பது பாராளுமன்ற பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் செய்யப்படும் அரசியல் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

தேசியம் என்பது ஒரு மொழிபேசும் மக்கள் கூட்டம், தமது பூர்வீகத் தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான வாழ்க்கை முறையே. அதை நோக்கிச் செய்யப்படும் எந்தவித நடவடிக்கையும்ன், அரசியலாகவோ போராட்டமாகவோ இருக்கும் பட்சத்தில் தேசியம் சார்ந்த செயற்பாடாகக் கருதப்பட முடியுமே தவிர, அதுவே தேசியமாகாது. இன்று கூத்தமைப்புச் செய்வதற்கும் தேசியம் சார்ந்த செயற்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர் எதிரான செயற்பாட்டையே கூத்தமைப்பு செய்துவருகிறது.

Link to comment
Share on other sites

அதாவது கூத்தமைப்பு தமிழ் தேசியத்துக்கு உரியதல்ல, விக்கியும் கஜனும்தான் இப்போது தமிழ் தேசியம் செய்யப்போகிறார்கள் என்ற கண்ணோட்டம் இங்கு காணப்படுகின்றது. அப்படி என்றால் இவர்களை தெரிவு செய்ததுபோல , தமிழ் தேசியத்துக்கு எதிரான அரசு சார்பான கட்சிகளுக்கு ஏன் மக்கள் வாக்களித்தார்கள்? 

சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்பதால்தான் , தமிழ் தேசியம் உருவாகியதாம். அப்படி என்றால் அந்த ஆக்கிரமிப்பை தடுக்க முடிந்ததா? அந்த ஆக்கிரமிப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை . இது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ் தேசியம் பேசியவர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளி நாடு சென்று படிக்கவும், குடும்பத்துடன் சொகுசு வாழக்கை நடத்தினார்கள் தவிர ஆக்கபூர்வமாக எதுவுமே செய்யவில்லை. அவர்களுக்கும் தெரியும் முடியாத ஒன்றைத்தான் செய்கிறோம் என்று.

இப்போது மக்கள் கூத்தமைப்பை நிராகரித்து சில தமிழ் தேசிய (?) வாதிகளுக்கும் , அரசசார்பு வாதிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். நிச்சயமாக அடுத்தமுறை கூத்தமைப்பை காணாமல் போகும்.

அனால் மக்கள் எப்போதுமே தியாகம் செய்துகொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அரசியல் மூடத்தனம். எனவே தமிழ் தேசியத்துக்கு இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகள் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

காதல் என்றாலே (நேரம்ம்ம்ம்ம்) கடத்துதல் தானே. 

❤️எட்டு மணித்தியாலங்கள் எட்டு நிமிடமாய்க் கரைந்தே போகும். ❤️

எனது நாளை இனிதாய், பசுமையான நினைவுகளுடன் ஆரம்பிக்க உதவிய இரதிக்கு நன்றிகள் ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

 

5 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

தமிழ் இலக்கியங்களில் கரவொழுக்கம் பற்றி கற்றதில்லையா? விரும்பிய பெண்ணை கடத்தி சென்று மனைவியாக்குவது தமிழ் தேசிய பாரம்பரிய பண்பாடு. கடத்தி செல்லும் அளவுக்கு வீரம் இல்லாதவனை எந்த தமிழச்சி மணம் செய்வாள்? ரதி என்ன சொல்கிறீர்கள்? 😀 இதை காந்தர்வ திருமணம் என்றும் சொல்வதுண்டு, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

 

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

https://www.tamilwin.com/community/01/253311?ref=home-latest

 

இப்போ சொல்லுங்கோ யார் யார் இந்த வெள்ளை வான் கடத்தல் போட்டியில் 💡 வாங்கினவை.

மக்களுக்கு தமிழ் தேசிய தெளிவை கொடுங்கள், ஆனால் ரெயினில் மாடு அடிபட்டாலும், வெள்ளை வானுக்கு காத்து போனாலும் சிங்களவன் தான் காரணம் எண்டு சொல்லி தேசிய சிந்தனையை இனவெறியாக்கி கொச்சைப்படுத்தாதீங்கள்.

என்ன நான் சொல்லுறது சரிதானே.?? 😁

Link to comment
Share on other sites

10 hours ago, முதல்வன் said:

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

 

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

https://www.tamilwin.com/community/01/253311?ref=home-latest

 

இப்போ சொல்லுங்கோ யார் யார் இந்த வெள்ளை வான் கடத்தல் போட்டியில் 💡 வாங்கினவை.

மக்களுக்கு தமிழ் தேசிய தெளிவை கொடுங்கள், ஆனால் ரெயினில் மாடு அடிபட்டாலும், வெள்ளை வானுக்கு காத்து போனாலும் சிங்களவன் தான் காரணம் எண்டு சொல்லி தேசிய சிந்தனையை இனவெறியாக்கி கொச்சைப்படுத்தாதீங்கள்.

என்ன நான் சொல்லுறது சரிதானே.?? 😁

கடைசியாய் முடிவு வந்துவிட்டது. நெக்காலபோனவன் சொல்வது போலில்லை தற்போதய நிலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.