Jump to content

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kidnap.jpg

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வெள்ளை-வானில்-20-வயது-யுவதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Robinson cruso said:

வெள்ளை வான்? அப்படி என்றால்  --------------------

ஒருக்கா தூக்கினால்த் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி எழுதப்பட்ட விதம் ஒருவித தெழிவில்லாத,  மயக்கம் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

1 hour ago, MEERA said:

spacer.png

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Robinson cruso said:

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன. எனி சீனக்கடன் தான் சொறீலங்கர்களின் தலையில் சுமையாக ஏறும். ஏற்கனவே உள்ள கடனுக்கு மேலதிகமாக. 

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன.

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

இதைத்தானே 70 வருடமாக பேசுகிறோம். இனி என்ன தேசியம். இந்த 70 வருடத்தில் தமிழ் தேசியம் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையும் கிழக்கு , வன்னி என 50 % இட்கும் மேட்படட இடங்கள் சிங்களமயமாயும், சிங்களவர்களாயும் மாற்றி விடடார்கள். இன்னும் ஒரு 50 வருடத்தில் முழு இலங்கையும் சிங்கள மயமாயும் சிங்களவர்களாகவும் இருக்கப்போகின்றது. அப்படி என்றால் கடந்த 70 வருடமாக உங்கள் தமிழ் தேசியம் என்ன செய்தது? மக்களை தேசியம் தேசியம் எண்டு பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். இன்று தமிழர்களின் தலை நகராம் திருகோணமலையின் நிலவரம் என்ன? தமிழன் ஒரு சந்தை திறக்க முடியாமல் அவதிப்படுகின்றான். இப்படி தமிழனின் நிலைமையை நிர்யாவே எழுதலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது கருது எழுதுவது நல்லதாக தெரியவில்லை. மக்களுக்காக அரசியல் செய்யவேண்டும் ஒழிய , அரசியலுக்காக மக்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்குத்தான் இங்குள்ள நிலைமைகள் தெரியும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Robinson cruso said:

இதைத்தானே 70 வருடமாக பேசுகிறோம். இனி என்ன தேசியம். இந்த 70 வருடத்தில் தமிழ் தேசியம் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையும் கிழக்கு , வன்னி என 50 % இட்கும் மேட்படட இடங்கள் சிங்களமயமாயும், சிங்களவர்களாயும் மாற்றி விடடார்கள். இன்னும் ஒரு 50 வருடத்தில் முழு இலங்கையும் சிங்கள மயமாயும் சிங்களவர்களாகவும் இருக்கப்போகின்றது. அப்படி என்றால் கடந்த 70 வருடமாக உங்கள் தமிழ் தேசியம் என்ன செய்தது? மக்களை தேசியம் தேசியம் எண்டு பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். இன்று தமிழர்களின் தலை நகராம் திருகோணமலையின் நிலவரம் என்ன? தமிழன் ஒரு சந்தை திறக்க முடியாமல் அவதிப்படுகின்றான். இப்படி தமிழனின் நிலைமையை நிர்யாவே எழுதலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது கருது எழுதுவது நல்லதாக தெரியவில்லை. மக்களுக்காக அரசியல் செய்யவேண்டும் ஒழிய , அரசியலுக்காக மக்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்குத்தான் இங்குள்ள நிலைமைகள் தெரியும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தளங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

நாங்கள் அரசுடன் சேர்ந்தவர்களை மட்டும் இதட்கு குற்றம் சாடட முடியாது. ஒன்றை கூறுகின்றேன். இதட்கு முன்னரும் எழுத்து இருக்கிறேன். நான் இதில் சம்பந்தப்படட படியால் எழுதுகிறேன்.

இரணைமடு திடத்தில் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டுபோவதட்கான திடடம் இருந்தது. அதாவது நீர்த்தேக்கத்தை உயர்த்தி அதில் கிடைக்கும் மேலதிக நீரை சேமித்து அங்கு கொண்டு செல்வது. அது மட்டுமல்ல யாழில் ராட்சத குழாய்கள் மூலம் யாழில் கிடைக்கும் கழிவு நீரை , சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து மீண்டும் நிலத்திட்க்குள் அனுப்புவது. அதாவது நிலத்தடி நன்னீரின் கொள்ளளவை அதிகரிப்பது.

அப்படியான ஒரு திடடம் வந்த பொது ஸ்ரீதரன் எம்பீ அதை சுய நலத்துடன் எதிர்த்தார். மாகாண சபையின் கீழ் உள்ள அந்த இரணைமடுக்குல திட்ட்துக்கு அரசியல் காரணுங்கலுக்காக விக்கியும் சம்மதிக்கவில்லை. அங்கு ஸ்ரீதரனுக்கு நூற்று கணக்கில் வெள்ளாமை காணிகள்  இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அந்த திடடம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதட்கு முக்கிய காரணம் தமிழ் தேசிய கட்சிகளே.

இப்போது என்ன நடக்கின்றது? மகாவலி நீர் திசை திருப்பும் திடடம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அந்த நீர் இரணைமடு குளத்துக்கு கொண்டுவரப்படும். யாழ்ப்பாணத்துக்கு நீர் கொண்டுசெல்லப்படும்.

இங்குதான் பிரச்சினை இருக்கின்றது. மகாவலி நீர் வந்தவுடன் இக்குளம் மத்திய அரசின் கீழ் வந்து விடும். அதன்பின்னர்தான் முழு வீச்சில் நெடுங்கேணி முதல் இரணைமடுக்குளம் வரைக்கும் சிங்கள குடியேற்றம் நடைபெறும்.

இதட்கு யார் பொறுப்பு கூறுவது. தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் இதட்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்போது நெடுங்கேணி வரைக்கும் குடியேற்றம் வந்து விட்ட்து. எனவே அரசை சார்ந்தவர்களை மட்டும் குற்றம் சாடட முடியாது.

Link to comment
Share on other sites

இது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் விபரங்களையும் திரட்டி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகளையும் இலக்கு வைத்து மிகவும் நெருக்கடியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது ஈழத்தில் நடக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்தி ஊடகங்களில் பதிவு செய்வதற்கு தடைகளை விதித்து வருகின்றனர். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தில் நடக்கும் கைதுகள் மற்றும் கொலைகள் தொடர்பான செய்திகள் சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டிலேயே வாழுகின்ற மக்களுக்கும் சென்றடையாதவாறு மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வு துறையினர். எது எப்படி இருப்பினும் சில கைது நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.

 

http://www.tamilpower.com/2020/08/blog-post_10.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அபிவிருத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய முதல், தனக்கு சாதகமான திட்டத்தை முன்வைத்தே சிங்களம் செய்யும். நாங்கள் அதில் மூழ்கி இருக்க, கனகச்சிதமாய் அந்த திட்டத்தில் பயனடைவோர் சிங்களவரே. இழப்பு மட்டுமே தமிழருக்கு மிஞ்சியது. இது கடந்தகால அனுபவம். எங்கள் பூர்வீக நிலங்கள் இவ்வாறே அபகரிக்கப்பட்டன. சிங்களவன் ஒரு திட்டம் வைத்தால், அது சரியில்லை என்று ஒரு சாரார் எதிர்த்தால் மறுத்திட்டம் அதைவிட மோசமானதாய் இருக்கும். நமக்கிடையே பிளவுகள் ஏற்படும். அதை சிங்களவன் சாதகமாக்கி நம்மையே கூறு போடுகிறான். இந்த நரித்தனத்தை வெல்ல முயற்சி எடுத்தால், நமக்கு வேண்டியதை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் ஆளையாள் குற்றம் சொல்லி அடிபட்டுக்கொண்டு, அவனுக்கு சேவகம் செய்து, அவனது திட்டத்தை நாமே நிறைவேற்றியவர்களாவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

ஒரு அபிவிருத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய முதல், தனக்கு சாதகமான திட்டத்தை முன்வைத்தே சிங்களம் செய்யும். நாங்கள் அதில் மூழ்கி இருக்க, கனகச்சிதமாய் அந்த திட்டத்தில் பயனடைவோர் சிங்களவரே. இழப்பு மட்டுமே தமிழருக்கு மிஞ்சியது. இது கடந்தகால அனுபவம். எங்கள் பூர்வீக நிலங்கள் இவ்வாறே அபகரிக்கப்பட்டன. சிங்களவன் ஒரு திட்டம் வைத்தால், அது சரியில்லை என்று ஒரு சாரார் எதிர்த்தால் மறுத்திட்டம் அதைவிட மோசமானதாய் இருக்கும். நமக்கிடையே பிளவுகள் ஏற்படும். அதை சிங்களவன் சாதகமாக்கி நம்மையே கூறு போடுகிறான். இந்த நரித்தனத்தை வெல்ல முயற்சி எடுத்தால், நமக்கு வேண்டியதை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் ஆளையாள் குற்றம் சொல்லி அடிபட்டுக்கொண்டு, அவனுக்கு சேவகம் செய்து, அவனது திட்டத்தை நாமே நிறைவேற்றியவர்களாவோம். 

இந்த 72 ஆண்டுகால இலங்கை நாடாளுமன்றப் பட்டறிவில் எந்தவொரு தமிழ்க்கட்சியும்  இதனை உணரவில்லை. ஏன்  ஜீ.ஜீ.பொன்னம்பலமவர்களால் வட-கிழக்கிலே தொழிற்சாலைகளை முன்மொழிந்தபோதுகூட மாற்றணிகளால்    எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுதாகக் கூறுவதைக் கேடடிருக்கின்றேன்.  இது தமிழரிடையே உள்ள துர்ப்பாக்கி நிலை. முதலில் இவைகள் மறைந்தாலே நிறைய மாற்றங்கள் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தை வழி கொழும்பில் வளர்ந்து, கல்வி கற்று, தொழிலும் பெற்றவர்கள். பெரும்பாலானோர் போலீஸ் இலாகாவில் பணிபுரிந்தவர்கள். சிங்களம் மட்டும் என்கிற சட்டம் வந்தபோது, அத்தனை உறவுகளும் தமது போலீஸ் உத்தியோகத்தை தூக்கியெறிந்துவிட்டு ஊருக்கு வந்து, விவசாயிகளாக வாழ்ந்தார்கள். இவர்கள் மட்டுமல்ல எத்தனையோ தமிழ் இளைஞர்கள் அன்று அப்படி செய்ததாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.  ஆனால் ஒரு அரசியல்வாதியும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிங்களவனுக்காக வாதாட பிரித்தானியா சென்ற தலைமைகள், எங்கள் உரிமைக்காக வாதாட விரும்பவில்லை. சாதாரண மக்களுக்கு இருந்த தன்மானம் தலைமைகளுக்கு இல்லாமல் பண, சொகுசு மோகமே பெரிதாக இருக்க. மக்கள் தொழிலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள். சிங்களவன் அதை சாதகமாக்கி, எல்லாவற்றையும் தானே எடுத்துக்கொண்டான்.  அன்றே இவர்கள் போராட வெளிக்கிட்டிருந்தால், இவ்வளவு இழப்புகளையும், அழிவுகளையும் தடுத்திருக்கலாம். காலந்தாழ்த்திய பின் இலகுவாக கடவுளில் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் என்பது கூட்டமைப்புச் செய்யும் அரசியல்தான் என்று நம்பும் அரசியல் அடிமுட்டாள்கள் இருக்கும்வரை தமிழனுக்கு விவிவு பிறக்கப்போவதில்லை. வெறுமனே தமது கட்சியின் பெயரில் தேசியம் எனும் வார்த்தையினைத் தொங்கவிட்டு விட்டால் தேசியம் வந்திடுமா? அப்படியானால் இனத்துரோகி கருணாவோ அல்லது கொலைகாரன் பிள்ளையானோ தமது கட்சியில் இன்னும் சேர்த்து வைத்திருக்கும் புலிகள் எனும் சொல்லுக்கும் உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா? அப்படித்தான், கூத்தமைப்பெனும் கொழும்பு மேற்தட்டு வர்க்க அரசியலினைக் கொண்டு நடத்தும் சுமந்திரனின் கட்சியும் பார்க்கப்படுதல் அவசியம். அவர்களுக்கும் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

70 ஆண்டுகளாக சிங்களவன் ஆக்கிரமிக்கிறான். அதனாலேயே தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றது. ஏதோ தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றதினால்த்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்று புதிய கதையுடன் சிலர் உலாவருகிறார்கள் இப்போது. அதாவது தமிழ் ஆயுதப் போராட்டத்தினை அடக்கவே அரச ராணுவம் போரில் இறங்கியதெனும் சிங்களப் பேரினவாதத்தின் கூற்றுக்கு எந்தவிதத்திலும் குறையாத கூற்றே "உங்கட தேசியம் செய்ததெல்லாம் சிங்களவன்ர ஆக்கிரமிப்பை 70 வருஷமா உருவாக்கி வளர்த்தது" என்பது. உங்களுக்கு கூத்தமைப்பின் அரசியல் பிடிக்கவில்லையென்றால், தாராளாமாக விமர்சியுங்கள். அதற்கான தகுதி அவர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இன்று தோற்றுவிட்டது தமிழ்த் தேசியம் அல்ல, மாறாக தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் தமிழ்த்தேசிய எதிர்ப்பைச் செய்துவந்த கூத்தமைப்பெனும் தேசியவிரோத கட்சியின் அரசியலே. 

தமிழ்த்தேசியம் என்பது பாராளுமன்ற பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் செய்யப்படும் அரசியல் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

தேசியம் என்பது ஒரு மொழிபேசும் மக்கள் கூட்டம், தமது பூர்வீகத் தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான வாழ்க்கை முறையே. அதை நோக்கிச் செய்யப்படும் எந்தவித நடவடிக்கையும்ன், அரசியலாகவோ போராட்டமாகவோ இருக்கும் பட்சத்தில் தேசியம் சார்ந்த செயற்பாடாகக் கருதப்பட முடியுமே தவிர, அதுவே தேசியமாகாது. இன்று கூத்தமைப்புச் செய்வதற்கும் தேசியம் சார்ந்த செயற்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர் எதிரான செயற்பாட்டையே கூத்தமைப்பு செய்துவருகிறது.

Link to comment
Share on other sites

அதாவது கூத்தமைப்பு தமிழ் தேசியத்துக்கு உரியதல்ல, விக்கியும் கஜனும்தான் இப்போது தமிழ் தேசியம் செய்யப்போகிறார்கள் என்ற கண்ணோட்டம் இங்கு காணப்படுகின்றது. அப்படி என்றால் இவர்களை தெரிவு செய்ததுபோல , தமிழ் தேசியத்துக்கு எதிரான அரசு சார்பான கட்சிகளுக்கு ஏன் மக்கள் வாக்களித்தார்கள்? 

சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்பதால்தான் , தமிழ் தேசியம் உருவாகியதாம். அப்படி என்றால் அந்த ஆக்கிரமிப்பை தடுக்க முடிந்ததா? அந்த ஆக்கிரமிப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை . இது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ் தேசியம் பேசியவர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளி நாடு சென்று படிக்கவும், குடும்பத்துடன் சொகுசு வாழக்கை நடத்தினார்கள் தவிர ஆக்கபூர்வமாக எதுவுமே செய்யவில்லை. அவர்களுக்கும் தெரியும் முடியாத ஒன்றைத்தான் செய்கிறோம் என்று.

இப்போது மக்கள் கூத்தமைப்பை நிராகரித்து சில தமிழ் தேசிய (?) வாதிகளுக்கும் , அரசசார்பு வாதிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். நிச்சயமாக அடுத்தமுறை கூத்தமைப்பை காணாமல் போகும்.

அனால் மக்கள் எப்போதுமே தியாகம் செய்துகொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அரசியல் மூடத்தனம். எனவே தமிழ் தேசியத்துக்கு இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகள் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

காதல் என்றாலே (நேரம்ம்ம்ம்ம்) கடத்துதல் தானே. 

❤️எட்டு மணித்தியாலங்கள் எட்டு நிமிடமாய்க் கரைந்தே போகும். ❤️

எனது நாளை இனிதாய், பசுமையான நினைவுகளுடன் ஆரம்பிக்க உதவிய இரதிக்கு நன்றிகள் ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

 

5 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

தமிழ் இலக்கியங்களில் கரவொழுக்கம் பற்றி கற்றதில்லையா? விரும்பிய பெண்ணை கடத்தி சென்று மனைவியாக்குவது தமிழ் தேசிய பாரம்பரிய பண்பாடு. கடத்தி செல்லும் அளவுக்கு வீரம் இல்லாதவனை எந்த தமிழச்சி மணம் செய்வாள்? ரதி என்ன சொல்கிறீர்கள்? 😀 இதை காந்தர்வ திருமணம் என்றும் சொல்வதுண்டு, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

 

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

https://www.tamilwin.com/community/01/253311?ref=home-latest

 

இப்போ சொல்லுங்கோ யார் யார் இந்த வெள்ளை வான் கடத்தல் போட்டியில் 💡 வாங்கினவை.

மக்களுக்கு தமிழ் தேசிய தெளிவை கொடுங்கள், ஆனால் ரெயினில் மாடு அடிபட்டாலும், வெள்ளை வானுக்கு காத்து போனாலும் சிங்களவன் தான் காரணம் எண்டு சொல்லி தேசிய சிந்தனையை இனவெறியாக்கி கொச்சைப்படுத்தாதீங்கள்.

என்ன நான் சொல்லுறது சரிதானே.?? 😁

Link to comment
Share on other sites

10 hours ago, முதல்வன் said:

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

 

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

https://www.tamilwin.com/community/01/253311?ref=home-latest

 

இப்போ சொல்லுங்கோ யார் யார் இந்த வெள்ளை வான் கடத்தல் போட்டியில் 💡 வாங்கினவை.

மக்களுக்கு தமிழ் தேசிய தெளிவை கொடுங்கள், ஆனால் ரெயினில் மாடு அடிபட்டாலும், வெள்ளை வானுக்கு காத்து போனாலும் சிங்களவன் தான் காரணம் எண்டு சொல்லி தேசிய சிந்தனையை இனவெறியாக்கி கொச்சைப்படுத்தாதீங்கள்.

என்ன நான் சொல்லுறது சரிதானே.?? 😁

கடைசியாய் முடிவு வந்துவிட்டது. நெக்காலபோனவன் சொல்வது போலில்லை தற்போதய நிலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.