Jump to content

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்


Recommended Posts

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்

 

CV-1.jpg

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என  நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ” எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் கையாற்களாக மாறினார்கள். அது எதற்காக என்றால் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களினுடைய மனதை மெல்ல மெல்லமாக மாற்றி உரிமைகளை விட்டு சலுகைகளை நோக்கி செல்ல வைப்பதற்கான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்த தேர்தலில் ஒரு தீர்மானம் மக்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு போரினுடைய வலிகள், துன்பங்கள் தெரியாது. ஏனென்றால் போர் நடைபெற்ற காலத்தில் அவர்கள் சிறுவர்களாக இருந்திருப்பார்கள் இப்பொழுதுதான் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று இளைஞர்களாக உள்ளனர்.  அவர்களுக்கு என்ன தேவை களியாட்ட நிகழ்வுகளும் போதைப் பொருள் பாவனை போன்ற தற்காலிக சந்தோகங்களில் இருக்கின்றார்களே தவிர வருங்காலத்திலே தமிழ் மக்களுக்கு என்ன நடைபெறப் போகின்றது, தமிழனின் கலாசாரம், பண்பாடு, மொழி இவை அனைத்தையும் அழிக்க துடிக்கின்றார்கள் போன்றவை பற்றிய எந்த சிந்தனையும் கிடையாது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே மக்கள் தீர்மானம் தரப்பட்டிருக்கின்றது. ஆகவே, எமது இளைஞர்கள் இதிலிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் பல விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களுடைய குறிக்கோள்களை மாற்ற வேண்டும். சமூக புரட்சி ஒன்றை ஏற்படுத்த தவறுவோமாக இருந்தால் நாங்கள் அழிந்தவராகிவிடுவோம்.

வெகுவிரைவிலே இந்த நாட்டிலே சர்வதிகாரம் திளைக்கப் போகின்றது. அதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய அத்திவாரம் இடப்பட்டு விட்டது. ஆனாலும் எமது உரிமைகளை நாம் கேட்டே தீருவோம். ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் அதிகார பலம் அவர்களிடம் சென்றதன் பின்னர் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்ன என்ற நினைக்கின்றார்கள்.

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவரும் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.” என்றார்.

   by : Vithushagan

http://athavannews.com/சலுகையா-உரிமையா-என்ற-போர/

Link to comment
Share on other sites

விக்கி ஒரு இடத்தில கூறுகிறார் இப்போதுள்ள இளையோருக்கு போரின் வலி தெரியாது என்று. அவருக்கு அந்த வலி தெரியுமோ தெரியவில்லை. கொழும்பில் சொகுசு வாழக்கை வாழ்ந்தவர்கள் எல்லாம் யுத்தத்தை பற்றி பேசுகிறார்கள். காலத்தின் கொடுமை.

இருந்தாலும் என்ன, இன்னுமொரு ஐந்து வருடங்கள் இருக்கின்றது. அதட்குள் துரோகி படடம் எடுக்காமல் இருந்தால் சரிதான். இதட்கு முதலும் கொழும்பிலிருந்து வந்து உங்கள் மாணவனிட்கு இணையதள போராளிகள் அந்த படடம் வழங்கி இருக்கிறார்கள். இணைய போராளிகள் அவதானத்துடன் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

பாராளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்து சலுகைகளைப் பெற்று வேலை வாய்ப்புகளை வழங்கும்போது அதுவே உரிமையாகத் தெரியும்.😄

Link to comment
Share on other sites

Just now, Iraivan said:

பாராளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்து சலுகைகளைப் பெற்று வேலை வாய்ப்புகளை வழங்கும்போது அதுவே உரிமையாகத் தெரியும்.😄

சரியாக சொன்னீர்கள். ஐயாவுக்கு துரோகி படடம் கிடைக்கவிடடால் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் மனவோட்டத்தை எடை போடாமல் விட்டது உங்கள் தவறு.டக்கி மேல் உள்ள மக்களின் நிலைப்பாட்டால்தான் கூட்டமைள்கு எதிரான வாக்குகள் வேறு திசை நோக்கிச் சென்றது.உங்களை மாதிரி கறை படியாத ஆக்கள் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் நிலமை வேறு.

Link to comment
Share on other sites

1 minute ago, சுவைப்பிரியன் said:

மக்களின் மனவோட்டத்தை எடை போடாமல் விட்டது உங்கள் தவறு.டக்கி மேல் உள்ள மக்களின் நிலைப்பாட்டால்தான் கூட்டமைள்கு எதிரான வாக்குகள் வேறு திசை நோக்கிச் சென்றது.உங்களை மாதிரி கறை படியாத ஆக்கள் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் நிலமை வேறு.

அவருடன் சேர்ந்து கேடடவர்கள் 90 % கறைபடிந்தவர்கள்தான். அவர் இனி அரசியல் தீர்வு பற்றியே பேச வேண்டும், செயல்பட வேண்டும். இல்லாவிட்ட்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாடடார்கள். அபிவிருத்தி பற்றி பேசி அரசியலுக்கு வந்தவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடடார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் டக்கிளஸ் அங்கிள் தனது சரணாகதி ஆயுத அரசியல் மூலம்.. நெடுந்தீவை சிங்கிப்பூராக்கி.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி வாங்கிக் கொடுத்த திருப்தியில் தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிப் போட்டுள்ளனர்.

முடியல்ல.. சிலரின் போலி பிம்பம் காட்டல்.

வறுமைக் கோட்டில் உள்ள தீவக மக்களை அப்படியே வறுமைக் கோட்டில் வைச்சிருந்து தேர்தல் கால சலுகைகளைக் காட்டி வாக்குகளை பறித்துவிட்டு மீண்டும்.. டக்கிளஸ் வேதாளம் பழையபடி முருங்கைமரத்தில் ஏறிக்கொள்ளும். 

இந்த மக்களுக்கு உரிமை பற்றியும் கவலை இல்லை.. சலுகை பற்றியும் கவலை இல்லை. அன்றாட வாழ்க்கையை கொண்டு போவதே அவர்களுக்குப் போராட்டமாக உள்ளது. அதனை தீர்க்காமல்.. உரிமை பற்றி வகுப்பெடுத்து இவர்களின் வாக்குகளைப் பெற முடியாது.

விடுதலைப்புலிகள் ஒவ்வொரு பேச்சுக்களின் போதும் இரண்டு விடயங்களை முன்னிறுத்துவார்கள்...

1. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனையை தீர்ப்பது.

2.மக்களின் உரிமைப் பிரச்சனை குறித்துப் பேசுவது.

இந்த அணுகுமுறையால் தான் புலிகளால் பெரும்பான்மை தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல முடிந்தது.

வெறும் தமிழ் தேசிய உச்சரிப்பு மட்டும் தமிழ் தேசிய உணர்வூட்டலை செய்ய முடியாது. இந்த இடைவெளியில்.. அங்கஜன்.. குங்கஜன்.. டக்கிளஸ்.. பிள்ளையான் போன்ற காட்டேரிகளும் தமக்கான தளத்தை பாவிக்கவே செய்யுங்கள். ஆனால்.. இவர்களாலும் தொடர்ந்து மக்களின் விருப்பை தக்க வைக்க முடியாது. காரணம் இவர்களின் அரசியல் சராணாகதி ஆயுத அரசியல் என்பது மக்களுக்குத் தெரியும். அதன் மூலம் தமக்கு ஒரு சின்னப் பயனாவது கிடைக்கட்டும் என்ற ஏக்கத்துக்குள் தள்ளிய தமிழ் தேசிய உச்சரிப்புக் கட்சிகளின் தமிழர் நலன்சார்ந்த முன்னெடுப்பற்ற தன்மை தான்.. எல்லாவற்றிற்கும் காரணம்.

சிங்கள பெளத்த பெருந்தேசியத்தை சிங்கள இளைய சமூகம்.. மூத்த சமூகம் என்று மகிந்த கும்பலால் கடத்த முடியும் என்றால்..  தமிழர்களின் அடிப்படை உரிமை பற்றிய சிந்தனையோட்டத்தை ஏன் கடத்த முடியாது. முடியும்.. ஆனால் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளையும்.. கவனிச்சுக் கொண்டு உரிமை பற்றி பேச வேண்டும். அதுதான் முக்கியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் ரொபின்சன் குருசோ கொடுத்த காசுக்குமேலால கூவுகிறார் என. அவரது வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வரும் விடையங்களும் அவர் யார் என உணர்த்துகிறது. 

ரொபின்சன் குருசோ அவர்களே 

இடைக்கிடை மானே தேனே கண்ணே கலைமானே எனவும் போடவும் அப்பத்தான் நீங்கள் யார் எனத் தெரியாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

நான் நினைக்கிறேன் ரொபின்சன் குருசோ கொடுத்த காசுக்குமேலால கூவுகிறார் என. அவரது வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வரும் விடையங்களும் அவர் யார் என உணர்த்துகிறது. 

ரொபின்சன் குருசோ அவர்களே 

இடைக்கிடை மானே தேனே கண்ணே கலைமானே எனவும் போடவும் அப்பத்தான் நீங்கள் யார் எனத் தெரியாமல் இருக்கும்.

உங்கள் அனுபவத்தை இங்கு எழுதவதட்கு உரிமை இருக்கிறது. உங்கள் அனுபவம் பேசும்போது நான் ஒன்றும் செய்ய முடியாது. பணத்துக்கு சோரம் போவனர்கள் நாங்கள் இல்லை.

எனது கருத்துக்கு பதில் கருத்து எழுத முடியுமென்றால் எழுதுங்கள். ஆறறிவு, சொம்பு, பணம் இவைகளை எழுதி அதட்கு பின்னல் ஒழித்துக்கொள்ளாதீர்கள். உங்களைப்போல மற்றவர்களையும் நினைக்காதீர்கள்.

1 hour ago, Elugnajiru said:

நான் நினைக்கிறேன் ரொபின்சன் குருசோ கொடுத்த காசுக்குமேலால கூவுகிறார் என. அவரது வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வரும் விடையங்களும் அவர் யார் என உணர்த்துகிறது. 

ரொபின்சன் குருசோ அவர்களே 

இடைக்கிடை மானே தேனே கண்ணே கலைமானே எனவும் போடவும் அப்பத்தான் நீங்கள் யார் எனத் தெரியாமல் இருக்கும்.

நீங்கள் யார் என்று விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். வேறு விளக்கம் தேவைப்படாது. நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.