Jump to content

ராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல்

August 10, 2020

ரொஷான் நாகலிங்கம்

gajan-300x275.jpg

 

னாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வி – தேர்தலில் உங்களது வெற்றி குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?

 

பதில் – கடந்த 2010 பொது தேர்தலில் எமது அமைப்புக்கு 6700 வாக்குகள் கிடைத்தன. இதன் பின்னர் 2015 இல் நடை பெற்ற தேர்தலில் எமக்கு 20இ000 வாக்குகள் கிடைத்தன.

அந்த வகையில் இத்தேர்தலில் 3 ½ மடங்கு வளர்ச்சியை காட்டக்கூடிய அமைப்பாக நாம் இருக்கின்றோம். இத்தேர்தலில் நாம் கூடுதலான எதிர்பார்ப்பு வைத்திருந்தாலும் கூட முடிவுகள் ஆரோகன வளர்ச்சியை காட்டியுள்ளது.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழருக்கு கடும் கவலையை கொண்டு வரப் போகின்றது என்பதை நாங்கள் மறைக்க முடியாது.

 

கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம்.எனவே வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்.

 

கேள்வி – உங்களுக்கு கிடைத்த தேசிய பட்டியலுக்கு யாரை நியமிக்கப் போகின்றீர்கள்?

பதில் – எமது இயக்கத்தினுடைய மத்திய குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடி தேசியப் பட்டியலை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தது. இதன் போது ஏகமனதாக கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தது.

கட்சியின் செயலாளர் என்ற வகையில் அவர் கடந்த 10 வருடங்களாக எங்களுடைய கட்டமைப்பை வடக்குஇ கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவதற்கு அயராது பங்களிப்பை ஆற்றியிருந்தார். அந்த வகையில் எமக்கு கிடைத்த தேசியப் பட்டியலை அவருக்கு வழங்குவதன் மூலம் எமது அமைப்பை இது வரைக்கும் இல்லாத அளவுக்கு பல மடங்காக பலப்படுத்த இந்த பதவி உதவும் என்ற அடிப்படையில் அவருடைய பெயர் விசேடமாக எங்களுடைய கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை இ மட்டக்களப்பு மற்றும் திருமலை மத்திய குழு உறுப்பினர்களாலும் வன்னி மத்திய குழு உறுப்பினராலும் ஆமோதித்து உறுதிப்படுத்தப்பட்டது.

 

இவ்வாறான நிலையில் அவருடைய நியமனம் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும்இ அமைப்பின் தலைவர் என்ற வகையில் நான் செய்யும் கடமைகளுக்கு மிகவும் பலமான செயற்பாடாக அமையும் என்பதாலும் அவருடைய நியமனத்திலும் நான் மிகவும் ஆறுதல் அடைகின்றேன்.

கேள்வி – 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் உங்கள் செயற்பாடு எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்?

பதில் – பாராளுமன்றத்துக்குள்ளே மிக மோசமான இனவாத கொள்கை கொண்ட தரப்பு இந்தளவு ஆதரவுடன் வந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் நியாயம் பேசி விடயங்களை கையாள்வது என்பது சாத்தியம் அற்ற விடயம்.
அதனால் தான் நாங்கள் 2/3 பெரும்பான்மை பெற்ற தரப்பை எமது பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டியதொரு நிர்ப்பந்தத்துக்கு தள்ள வேண்டும்.

 

அதை செய்யக்கூடிய வழிகளை நாங்கள் தீவிரமாக கையாளுவோம்.
முக்கியமாக தீவுக்கு வெளியிலேயே தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

தீவுக்குள்ளே தமிழ் மக்களை அணி திரட்டி ஒரு முமுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்கள் பலத்தை தவிர்க்க முடியாத ஒரு அணி திரட்டலை நாங்கள் செய்ய வேண்டும்.
இவை தான் எமக்கு இருக்க கூடிய எங்களுடைய இலக்கை அடைவதற்கான அணுகுமுறையாக இருக்கும்.

கேள்வி – வடக்கில் ஆசனங்கள் சிதறுண்டு இருப்பது குறித்து..

பதில் – கடந்த 10 வருடங்களாக வடக்கில் கண்ணை மூடி ஒரு தரப்புக்கு வாக்களித்தனர். தெற்கில் இருக்க கூடிய ஒரு அமைப்புக்கான ஒரு தலைப்பட்ச அணி திரட்டல் கடந்த 10 வருடமாக தமிழ் தரப்பில் இருந்தது.
அந்த 10 வருட அரசியல் மக்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்ததால் ஒரு மாற்றத்தை நோக்கி மக்கள் நகர தொடங்கியுள்ளனர்.

தமது மாற்று யார் என்பதை மக்கள் தீர்மானித்து அணி திரள முன்னர் தேர்தல் வந்தமையால் தெரிவுக்கான தெளிவில்லாமல் வாக்குகள் பிரிந்து போயின. இது ஒரு பின்னடைவு தான். அடுத்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணிதான் எமது தெரிவு என்று அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கின்ற நியாயங்களை மக்கள் முன்கொண்டு போய் நாம் சேர்க்கவுள்ளோம்.

கேள்வி – அடுத்த 5 வருட காலத்துக்கு எவ்வாறு செயற்பட போகின்றீர்கள்.

பதில் – எமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும். முதலாவதாக கோதபாய ராஜபக்ஷ கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மக்களை கொண்டு அமைய எதிர்ப்பதற்கு உரிய தெளிவூட்டலை செய்யும் அதே சமயம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைஇ நாட்டை பிரிக்காமல் தமிழ் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்புக்கான யோசனைகளை அடைவதற்கான உரிய அழுத்தம் கொடுக்க செயற்படுவோம்.

இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைத்த இன படுகொலைகளுக்கு ஸ்ரீலங்கா அரசை பொறுப்பு கூற வைக்கக்கூடிய ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை நடைமுறையில் கொண்டு வருவதற்கு மிக கடுமையாக உழைப்போம்.
மூன்றாவதாக தமிழ் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதாரத்தின் பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ்மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு நம்பிக்கையுடன் பயணிப்போம்.

அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டு வந்து சிறிய நடுத்தர தொழில்துறையை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளோம்.

இதன் ஊடாக தாயகத்திலுள்ள வேலை வாய்ப்பை உருவாக்குதல்இ தமிழ் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் வருமானத்தை அதிகரித்து பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் போன்றன ஏற்படும். இதன் பிரகாரம் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு செய்கின்ற தொழில்துறை ஊடாக அவர்களுக்கு லாபமும் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையிலும் நாம் திட்டங்களை நாங்கள் வகுத்து கொடுக்கவுள்ளோம்.

 

http://thinakkural.lk/article/61473

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.